Posts

Showing posts from April, 2021

தீக்கோழி அறிந்து கொள்வோம் பகுதி -25

Image
அறிந்து கொள்வோம் பகுதி -25 தீக்கோழி நெருப்புக்கோழி (Ostrich)   தீக்கோழி குறித்து  தமிழ் வேதாகமத்தில் (லேவி.11:16; உபா.14:15; புல.4:3; யோபு 39:13) ஆகிய இந்த வசனங்களில் தீக்கோழி என்னும் சரியான பதத்தை நம்மால்  காண முடியும். ஆனால் இந்த குறிப்பிட்ட வசனங்கள் - யோபு 30:29; ஏசா.13:21, 34:13, 43:20; எரே.50:39; மீகா 1:8 ல்- நம் வாசிக்கிறது என்ன "கோட்டான்" அல்லது "ஆந்தை" என்று ஆனால்  "கோட்டான்" மற்றும் "ஆந்தை" என்ற வார்த்தைக்கு பதிலாக தீக்கோழி என்ற பதம் இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள் வேத பண்டிதர்கள். சில ஆங்கில வேதகமாத்தில் சரியாக தீக்கோழி (Ostrich) என்று இருக்கிறது. ஆப்பிரிக்கா கண்டத்திலும் அரபி தேசத்திலும் சீரியாவுக்குத் தென் கிழக்கில் உள்ள வனாந்தரங்களிலும் இந்த  தீக்குருவிகள் இருக்கின்றன. பெண் தீக்குருவி தன் முட்டைகளைப் பற்றி கவனிக்கிற தில்லை என்று யூதர்கள் நினைத்தார்கள். யோபு 39:15.  ஆனால் இந்தத் தீக்குருவியின் இயல்பைப் பற்றி படித்த அநேகர் இப்படியாக சொல்லி இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண் குருவிக்கும் மூன்று அல்லது நாலு பெண் குருவிகள் இருக்கும் என்ற...

வாற்கோதுமை - அறிந்து கொள்வோம் பகுதி -24

Image
  அறிந்து கொள்வோம் பகுதி -24 வாற்கோதுமை   வாற்கோதுமை என்பது பார்லி என்றழைக்கப்படும் தானியம் பழைய காலத்திலிருந்தே மக்கள் வாற்கோதுமை தானியத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சுமேரியர்களின் சிற்பங்களில் வாற்கோதுமை பயிரைக் நம்மால் காண முடியும். இது எகிப்திய மற்றும்  பாலஸ்தீனத்தில் தேசத்தில் அதிகமாக விளைவிக்கப் பட்டன. (யாத். 9:31,லேவி. 27:16, உபா. 8:8). கானான் தேசத்தை குறித்து   "அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ் செடிகளும் உள்ள தேசம், அது ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனும் உள்ள தேசம்,” என்று சொல்லப்பட்டிருக்கிறது. எகிப்தில் தேவன் அனுப்பிய வாதையாகிய கல் மழையால் வாற்கோதுமை பயிர் அழிக்கப்பட்டது (யாத். 9:31). யாத்திராகம நாட்களில் ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கும் நிலம் 50 வெள்ளி சேக்கல் மதிக்கப்பட்டது (லேவி. 27:16). சில குறிப்புகள் வாற்கோதுமை முதலில் குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் கொடுக்கப்படும் தீவனமாக இருந்தது (1 இரா. 4:28). பிறகு ஏழைகள் அதை உணவாக உட்கொள்ள துவங்கினார்கள் (நியா. 7:13; 2 இரா. 4:42).  இந்த வாற்கோதுமை அப்பங்களாக சுடப்பட...

துருக்கியில் உள்ள பைபிள் - அறிந்து கொள்வோம் பகுதி -23

Image
அறிந்து கொள்வோம் பகுதி -23 துருக்கியில் உள்ள பைபிள் . 1500 ஆண்டுகள் பழமையான பைபிள் ஒன்று கிடைத்திருக்கிறது. துருக்கியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் அது இன்றும் உள்ளது. ஆனால், அதை படிக்க யாரும் ஆர்வம் காட்டவே இல்லை. பல ஆண்டுகளாக இந்த பைபிளை அதிக ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். ஆய்வின் முடிவில் இப்புத்தகத்தை பற்றி பல்வேறு விளக்கங்கள் கொடுத்தார்கள். அதில் இப்புத்தகம் சில உண்மைகள் மற்றும் பல புனையப்பட்ட விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள். இந்த புத்தகம் காலத்தின் சோதனையாக நமக்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பல வேத ஆராய்ச்சியளார்கள்  இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்ட கதைகள் மற்றும் வரலாறுகள் சரியானது என்றும் ஒரு கூட்டம் தவறு என்றும் பல ஆண்டுகளாக விவாதித்தும் தர்க்கம் பண்ணியும் வருகிறார்கள். இந்த புத்தகத்தில் உள்ளே இந்த புத்தகத்திற்குள் சில வரலாற்று நூல்கள் இருக்கிறது அவற்றில் இருப்பது என்னவென்றால்...... "இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அவர் காப்பாற்றப்பட்டார் என்றும்  இயேசு சிலுவையில் துன்பப்படுவதற்கு முன்பே பரலோகத்திற்கு எழுந்து செ...

லவோதிக்கேயா - அறிந்து கொள்வோம் பகுதி-22

Image
அறிந்து கொள்வோம் பகுதி-22 லவோதிக்கேயா (Laodicea) இது ஆசியாமைனரில்  எபேசு பட்டணத்துக்கு கிழக்கே 40 மைல் தொலைவில் பிரிகியா, லீதியாவின் எல்லை சேருமிடத்தில் இருந்தது. லிக்கஸ் என்ற நதிக்கரையிலும் சபாகஸ் என்ற மலைச்சரிவிலும் இந்த பட்டிணம் இருந்தது.  லிக்கஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்த லவோதிக்கேயா மட்டுமின்றி, எராப்போலி, கொலோசெயர் பட்டணங்களும் இருந்தன. ஆரம்பத்தில் இந்தப் பட்டணத்திற்க்கு டயாபோலிஸ் என்றும் பிறகு ரோவாஸ் என்றும் பெயர் இருந்தது. சீரியாவின் ராஜாவாகிய இரண்டாம் அந்தியோகஸ் கி. மு. 260-இல் இந்தப் பட்டணத்தைத் திரும்பக் கட்டி தனது மனைவி லயோடிசின் பெயரில் இதற்கு லவோதிக்கேயா என்று பெயரிட்டான்.  கி. மு. 133 -ல் இது ரோமர்களின் ஆட்சிக்கு கீழ் வந்தது. இது சின்ன ஆசியாவின் முக்கியமான பட்டணங்களில் ஒன்றாக இருந்தது.  ஐபிராத்து நதியில் இருந்து எபேசு செல்லும் வாணி பாதையில் இந்தப் பட்டணம் இருந்தது.  புராதன உலகத்தின் செல்வச் செழிப்பான பட்டணங்களில் இதுவும் ஒன்றாகும்.  ரோமர்களின் மூன்று நெடுஞ்சாலைகள் இந்தப் பட்டணத்தில் சந்தித்தன. லவோதிக்கேயா பட்டணம் ஆடைகளுக்கும், கறுப்...

வேதாகம பயண தூரங்கள் அறிந்து கொள்வோம் பகுதி-21

Image
அறிந்து கொள்வோம் பகுதி-21 வேதாகம பயண தூரங்கள் இயேசு கிறிஸ்து கப்பர்நகூமை மத்திய இடமாகக்கொண்டு ஊழியம் செய்தார்…. கப்பர்நகூம் to பெதஸ்தா – 9. 7 கி.மீ செசரியா, பிலிப்பி – 43.4 கி.மீ கானா –  25. 7 கி.மீ தல்மாத்தியா – 9.7 கி.மீ கெனேசரேத்து (கலிலேயா) – 3.8 கி. மீ  நாயீன்  –  35.4 கி.மீ நாசரேத் – 32.2 கி.மீ தீரு –    56.3 கி.மீ சீதோன்  – 80. 4 கி.மீ சீகார் (சமாரியா) –  88.5 கி.மீ     இயேசு எருசலேமில் இருந்து  நடை பயணம் – கடல் பயணம் செய்த தூரம்;- எருசலேம் to பெத்தானியா  –  3.2 கி. மீ பெத்லகேம்  – 9.6 கி. மீ பெத்பாகேல்  – 1.6 கி.மீ  செசாியா  – 91.5 கி. மீ  செசாியா,பிலிப்பி  – 168 கி.மீ கப்பா்நகூம்   – 136 கி. மீ சவக்கடல்   – 9.6 கி. மீ எம்மாவூர் – 25.6 கி. மீ எாிகோ  –  24 கி. மீ யோப்பா    – 56 கி.மீ யோா்தான்   – 33.6 கி. மீ மத்திய தரைகடல்   – 52.9 கி. மீ நாசரேத்    – 104 கி. மீ சாலேம்   – 80 கிமீ சமாாியா    – 57.6 கி.மீ கலிலேயா கடல்...

ராமோத் கீலேயாத் அறிந்து கொள்வோம் பகுதி -20

Image
அறிந்து கொள்வோம் பகுதி -20 ராமோத் கீலேயாத்   Ramath-Gilead "ராமோத் கீலேயாத்" என்றால் "கீலேயாத்தின் உயரமான இடம்" என்று அர்த்தம், இந்தப் பட்டணம் கீலேயாத்திலுள்ள ராமோத் என்று அழைக்கிறாா்கள். (1 இரா. 4:13). இது லேவியருக்கு ஒதுக்கப்பட்ட அடைக்கலப் பட்டணங்களில் ஒன்றாகும் (உபா. 4:42, 43).  இது காத் கோத்திரத்தின் எல்லைக்குள்ளே இருந்தது (யோசுவா 20:8; 21:38). சீரியர் இந்தப் பட்டணத்தைப் பிடித்து வைத்திருந்தார்கள். இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் சீரியரை எதிர்த்துச் சென்ற போது தீர்க்கதரிசியாகிய மிகாயாவின் எச்சரிப்பின் வார்த்தைக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை.  எனவே ஆகாப் ராஜா இந்தப் போரில் காயப்பட்டு, மரித்தான்.  (1 இரா. 22:1-36). பின்னாட்களில் யூதாவின் ராஜாவாகிய அகசியா ஆகாபின் குமாரனாகிய யோராம் கூடக் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம் பண்ணி முடிவில் சீரியர் யோராமைக் மிகவும் காயப்படுத்தினார்கள்.  (2 இரா. 8:28).  அவன் தன்  காயங்களை ஆற்றிக்கொள்ளுவதற்காக யெஸ்ரயேலுக்குச் சென்றிருந்தபோது,யூதாவின் ராஜாவாகிய அகச...

மீறாப் பட்டணம் - அறிந்து கொள்வோம் பகுதி-19

Image
  அறிந்து கொள்வோம் பகுதி-19 மீறாப் பட்டணம் பவுல் செசரியாவிலிருந்து ரோமாபுரிச் சிறையிருப்புக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, லீசியாவிலிருந்த மீறாப் பட்டணத்தில் இத்தாலியாவுக்குச் செல்லும் கப்பல் ஏறினார்கள்  (அப். 27:5).  இது தானியங்களைக் கொண்டு செல்லும் கப்பலாகும். பத்தாரா, மீறா இரண்டுமே துறைமுகப் பட்டினங்கள் என்று குறிப்பிடுகின்றன. இந்த பட்டணங்களில் பவுல் ஊழியம் செய்தாரா? இல்லையா? என்பதைக் குறித்து குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் பட்டணங்களில் யூதர்களும் வசித்தார்கள் என்று நம்பப்படுகிறது. பிந்திய காலத்தில் நிக்கோலாஸ் என்ற பேராயரின் தலைமையில் இங்கே சபை இருந்ததை குறித்து குறிப்பு கிடைத்திருக்கிறது!

லிபர்த்தீனர் - அறிந்து கொள்வோம் பகுதி-18

Image
  அறிந்து கொள்வோம் பகுதி-18 லிபர்த்தீனர் (Libertines) அப்போஸ்தலர் 6:9 வசனத்தில் மட்டும் லிபர்த்தீனர் என்ற பெயர் வருகிறது.லிபர்த்தீனர் என்றால் " அடிமையாக இராமல் விடுதலை பெற்ற ஒருவன்" என்று  அர்த்தமாகும். இந்த இடத்தில் சொல்லப்படும் லிபர்த்தீனர் பாம்பே மற்றும் பிற தளபதிகள் மூலம் ரோமாபுரிக்கு கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட யூதர்களை குறிக்கிறது. இவர்கள் பின்னால் விடுதலை பெற்றார்கள். கி. பி. 19 ஆம் ஆண்டு இந்த யூதர்கள் ரோமாபுரியை விட்டு வெளியே விரட்டப்பட்டார்கள். இவர்களில் பலர் எருசலேமுக்குச் சென்று அங்கே ஒரு ஜெப ஆலயத்தை உருவாக்கினார்கள். இவர்களில் சிலரே ஸ்தேவானோடு விவாதத்தில் ஈடுபட்டார்கள். லிபர்த்தீனரின் தத்துவம்  முதலாம் நூற்றாண்டின் பிற்பாதியில் லிபர்த்தீனர் என்பவர்கள் கிறிஸ்தவ சபையில் கள்ளப் போதகங்களை பரப்ப துவங்கினார்கள். ஆத்துமா தேவனுடைய கிருபையினால் இரட்சிக்கப்படுகிற படியால், சரீரத்தைக் குறித்துப் நாம் கவலைப்பட வேண்டியதில்லை, விருப்பப்படி வாழலாம் என்று இவர்கள் போதித்தார்கள். “பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” (ரோமர் 5:20) என்ற வசனத்தை எடுத்துக் கொண்டு...

ரோது தீவு - அறிந்து கொள்வோம் பகுதி-17

Image
அறிந்து கொள்வோம் பகுதி-17 ரோது தீவு    "ரோது"  என்றால் ''ரோஜா என்று அர்த்தமாகும். இது  ஆசியா மைனரின் மேற்குக் கரையில் மத்தியதரைக் கடலில் உள்ள ஒரு தீவாகும். இது கோஸ் தீவுக்கும் பத்தாராவுக்கும் நடுவில் இருக்கிறது. இது 75km நீளமும், 29km அகலமும் கொண்ட ஒரு முக்கியமான துறைமுகமாய் இருந்தது. பவுல் அப்போஸ்தலன் தனது மூன்றாவது ஊழிய பயணத்தில் கிரேக்க நாட்டிலிருந்து சீரியாவிலுள்ள அந்தியோகியா வுக்குக் கடல் வழியாக பயணம் செய்தபோது இந்த தீவின் வழியாக தான் சென்றார் (அப். 21:1). ரோது தீவு பற்றி சில குறிப்புகள் இந்த தீவு மத்திய தரைக்கடல் பகுதியில் மிகவும் முக்கியமான துறைமுகமாக இருந்தது. இந்தத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹீலியோஸ் என்ற புறஜாதி தெய்வத்தின் கொலாசஸ் என்ற 100அடி உயரமான வெண்கலச் சிலை பழங்கால ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்டது.  இந்த சிலையானது கி. மு. 290-ல் உருவாக்கப்பட்டது பின்பு கி. மு. 225 இல் ஒரு பூகம்பத்தின் போது விழுந்து விட்டது இந்தத் தீவை சேர்ந்தவர்கள் தீரு பட்டணத்தோடு  வாணிபத்தில் தொடர்பு கொண்டிருந்தார்கள். (ஏசேக் 27:15 -இல் இவர்கள் தேதான் புத்திரர...