ஐந்து விரல் ஜெபம் || அறிந்து கொள்வோம் || பகுதி -85 ||
அறிந்து கொள்வோம் பகுதி -85 ஐந்து விரல் ஜெபம் நாம் அனைவரும் ஜெபிக்க வேண்டும் என்று விரும்பபடுகிறோம். ஆனால் எப்படி ஜெபிப்பது??? சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாதலால் நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் ஜெபிக்க எளிதான முறையில் ஞாபகம் வைக்க சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம். அதை பின்பற்றி நாம் எளிதாக ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் ஜெபிக்கலாம். நாம் கார் ஓட்டும் போது சிக்னலுக்காக காத்திருக்கும்போதோ, வேலையிடத்தில் சிறிது ஓய்வெடுக்கும்போதோ, இந்த சிறிய ஜெபத்தை நாம் செய்யலாம். நமது கரத்தை எடுத்து கொள்வோம். அதை ஜெபிக்க கூப்பும்போது, 1.முதலாவது நமக்கு அருகில் இருப்பது பெருவிரல்: பெருவிரல் நமக்கு அருகில் இருப்பதால், நமக்கு நெருங்கிய உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், நமக்கு நெருங்கிய ஊழியர்கள் என்று நெருங்கியவர்களுக்காக ஜெபிக்கலாம். நமது ஞாபகத்தில் அவர்கள் இருப்பதால் அவர்களை நினைத்து எளிதாக ஜெபிக்கலாம். மற்றும் பெருவிரல் முதல் விரலாக இருப்பதால், தேவன் ஏற்ப்படுத்திய ஊழிய முறைப்படி முதல் ஊழியமாகிய அப்போஸ்தல ஊழியத்தை செயபவர்களுக்காக ...