Posts

Showing posts from February, 2023

அறிந்து கொள்வோம் - பகுதி -102 || சிலுவையும் காடியும் ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -102 சிலுவையும் காடியும்  சிலுவையில் அறையப்பட்ட இயேசுவுக்குக் காடி கொடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். ஆனால், எத்தனை முறை  கொடுக்கப்பட்டது? எப்போது கொடுக்கப்பட்டது? எப்படி கொடுக்கப்பட்டது? என்கிற குழப்பம் அநேகருக்கு உண்டு. இயேசுவுக்கு மூன்று முறை காடி கொடுக்கப்பட்டதாக வேதம் விவரிக்கின்றது. அதைத் தெரிந்துக்கொள்வோம். 1.மாற்கு 15:23  -  சிலுவையில் அறைவதற்க்கு முன்:  முக்கிய குறிப்பு: வெள்ளிப்போளம் கலந்த திராட்சைரசமான இது வலியை மறக்கக் கொடுக்கப்படும் பாணம். ஆனால், கிறிஸ்துவோ முழு வேதனையையும் சகிக்கும்படி அதை ஏற்கவில்லை. 2.லூக்கா 23:36 - சிலுவையில் மத்தியானத்திற்கு முன்: முக்கிய குறிப்பு: இது படைவீரர்கள் கிறிஸ்துவை ராஜா என எள்ளி நகையாடி கொடுத்தது. அக்காலத்தில் அரசர்கள் பதவி ஏற்றவுடன் மரியாதை நிமித்தம் இனிய பானம் வழங்குவதைப்போல இயேசுவுக்குக் கொடுத்து, நீ யூதரின் ராஜாவானால் இரட்சித்தக்கொள் என்று கிண்டல் செய்தனர் (லூக் 23:36). சிலுவையின் இரண்டாவது வாரத்திற்கு முன்பு இது நடந்தது (லூக் 23:43). அதன் பின்பு பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அந்தக...

அறிந்து கொள்வோம் - பகுதி -101 || சிலுவையின் நிலை ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -101 சிலுவையின் நிலை ( கொலோ 2:15 ) ✝️சிலுவையானது 7 அல்லது 7.5 அடியாக இருந்துள்ளது. ஏனெனில் யோவா 19:29 ன் படி இயேசுவுக்குத் தாகம் உண்டானபோது 1 அல்லது 2 நீளம் மட்டுமேயுள்ள ஈசோப்புத் தண்டில் புளித்த திராட்சைரசத்தில் ஊறின கடற் பஞ்சை பொருத்தின ஒருவன் அதை இயேசுவின் வாய்க்கு அருகே நீட்டினான் என்பதிலிருந்து, சிலுவை தரையில் நாட்டப்பட்டப் பின்பு, ஒரு ஆள் உயரத்திற்கும் சற்று உயர்வாகத்தான் இருந்திக்கும். ✝️ஒரு முழுமையான சிலுவை என்பது நான்கு விதங்களில் இணக்கப்படும்.  1.நெடுமரத்தின் நுனியில் குறுக்கு மரத்தை இணைத்தல். 2.சற்று கீழே இறக்கி இணைத்தல். 3.சரியாக நடுவில் இணைத்தல். 4.நடுபாகத்தில் பொருத்தி கூட்டல் (t) குறி போன்று, அல்லது பெருக்கல் (x) குறி போன்று வைப்பார்கள். ✝️சில சிலுவைகளில் கை மற்றும் கால்களில் அடிக்கப்படும் ஆணிகள் ஊடுறுவுவதற்க்காக ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும். ✝️சிலுவை என்பது இரண்டு மரத்துண்டுகளால் ஆனது. அவை, ஒன்று: நெடுமரம், இரண்டு: குறுக்கு மரம் என்றும் சொல்லப்படும். ✝️இயேசுவின் சிலுவை ஒருபோதும் பாலீஸ் செய்யப்பட்டது கிடையாது. அது கரடுமுரடாகத்தான் இருந்திருக்க...

அறிந்து கொள்வோம் - பகுதி -100 || டெஃபிலின் (Tefillin)

Image
  அறிந்து கொள்வோம் பகுதி -100 டெஃபிலின் (Tefillin) யூதர்கள் ஜெப வேளையில் பயன்படுத்தும் எபிரேய காகித தோல் சூருள்களைக் கொண்ட ஒரு ஜோடி கருப்பு தோல் பெட்டிகள் தான் இவை. இந்த சின்ன பெட்டிக்குள் தோராவின் வார்த்தைகள் அல்லது தேவனுடைய நியாயப்பிரமாண வார்த்தைகள் காகித துண்டில் எழுதி வைக்கப்பட்டு இருக்கும். ✝️ பெட்டிக்குள் இருக்கும் தேவனுடைய வார்த்தைகள் இவை:- 🔯யாத்திராகமம் 13:1-10, 🔯யாத்திராகமம் 13:11-16, 🔯உபாகமம் 6:4-9, 🔯உபாகமம் 11:13-21, கையில் கட்டப்படும் பெட்டிக்கு (Shel yad)என்றும் தலையில் கட்டப்படும் பெட்டிக்கு (Shel rosh) என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள். கை மற்றும் தலையைச் சுற்றி இதை அணிந்து ஜெபிக்கும் போது தங்களுடைய சிந்தனைகள் மற்றும் இருதயத்தை ஒன்றாக இணைப்பதாக கருதுகிறார்கள். 🔯 டெஃபிலினை பயன்படுத்தும் முறைகள்: ஒவ்வொரு யூதனும் தங்களுடைய காலை ஜெபத்தின் போது இந்த டெஃபினை அணிந்து ஜெபிப்பது அவர்களின் தலையாயக் கடமையாய் இருக்கிறது. இதை வாரத்தின் ஆறு நாட்களும் தங்களின் காலை ஜெப வேலைகளில் அணிந்து ஜெபிக்கிறார்கள். குறிப்பாக ஓய்வு நாள் மற்றும் பண்டிகை நாட்களில் அவர்கள் இதை பயன்படுத்துவதி...

அறிந்து கொள்வோம் - பகுதி -99 || சிலுவையின் துவக்கம் ||

Image
  அறிந்து கொள்வோம் பகுதி -99 சிலுவையின் துவக்கம் A.சிலுவை என்பது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கிறிஸ்தவ காலத்திற்கும் முந்தினக் காலத்திருந்தே ஒரு மத சம்பந்தமான அடையாளச் சின்னமாக ஏறக்குறைய உலகலாவிய விதத்தில் சிலுவை பயன்படுத்தப் பட்டுள்ளது என்று சரித்திரத்தின் மூலம் கருதப்படுகின்றது. B.சிலுவை என்ற இந்தச் சொல் ‘லத்தின்’ மொழியின் சொல்லான “ க்ரக்ஸ் (crux)” என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். ஆதலால் இதை “குருக்ஸ் என்றும், “குரூஸ்” என்றும், அழைப்பார்கள். C.வெகு காலத்திற்கு முன்பே கிரேக்கர்களின் "பாக்கஸ்"  தீரு தேசத்தாரின் “தம்மூஸ்’, கல்தேயரின் “பெல்”, ஸ்காண்டினேவியரின் ‘ஓடின்” போன்ற விக்கிரகங்களின் அடையாளச் சின்னமாகவும் சிலுவை பயன்படுத்தப் பட்டுள்ளது. D.சிலுவை என்ற வார்த்தையைச் சொல்ல, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் “ஸ்டாரஸ்” என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். “ஸ்டாரஸ்” என்ற வார்த்தையானது "செங்குத்தானக் கம்பம்" அல்லது "கழுமரம்' என்பதைக் குறிக்கிறதாகும். E.தி இம்சீரியஸ் பைபிளின்-அகராதி சிலுவையை "கழுமரம்" என்று சொல்வதை ஒப்புக்கொ...

அறிந்து கொள்வோம் - பகுதி -98 || சிலுவைக்காக ஆறு குற்ற விசாரணைகள் ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -98 சிலுவைக்காக ஆறு குற்ற விசாரணைகள்: அவரை இருவகை குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தினர். ஒன்று மதசம்பந்தமானது. இன்னொன்று அரசு சட்ட சம்பந்தமானது.  மதத்தின் தொடர்பில் மூன்று விசாரணைகள் .  1.அன்னா, 2.காய்பா, ஆகியோர் முன்,  3.சனகெரிப் சங்கம் முன், அரச சட்ட சம்பந்தமான விசாரணைக்கள். 1. பிலாத்து, 2.ஏரோது, 3.மீண்டும் பிலாத்து முன்பு. அன்னாவும், காய்பாவும், பிரதான ஆசாரியர்களாகக் கூறப்படுகின்றனர். இஸ்ரவேலில் ஒருதடவை ஒரு பிராதன ஆசாரியர்தான் இருக்க முடியும். ஆனால் கால ஒட்டத்தில் ஆண்டவரைவிட்டு அரசியல் கலந்த மதமாக அது மாறியதால் இத்தகைய நிலை ஏற்பட்டது. (மத் 26:57-68; மாற் 14:53-65; லூக் 22:54,63-65: யோவா 18:13-24) இருவர் முன்பும் விசாரிக்கப்பட்ட பின்பு யூதர்களின் நீதிமன்றமாக கருதப்பட்ட  70 பேர் அடங்கிய ஆலோசனைச் சங்கத்திற்குக் கொண்டு செல்ல ப்படுகிறார்.அங்கும் விசாரனை நடக்கிறது.  (மத் 27:1; மாற் 15:1; லூக் 22:66-71) அதன்பின்பு சட்ட முறையிலான விசாரணைக்காக பிலாத்துவின் முன்பு கொண்டு செல்லப்படுகிறார். ஆலோசனைச் சங்கத்தில் மரண தண்டனையை தீர்ப்பளித்தாலும் ரோம அரசாங்...

அறிந்து கொள்வோம் பகுதி -97 || சிலுவையில் ஒரே நாளில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -97 சிலுவையில் ஒரே நாளில் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்: ✝️சங் 41:9 - காட்டிக்கொடுக்கப்படுவார் (மத் 10:4; 26:49,50) ✝️சகரியா 11:12,13 -முப்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்படுவார் ( மத் 26:15) ✝️சகரியா 11:13 -அந்தக் காசு தேவாலயத்தில் எறியப்படும். ( மத் 27:5) ✝️சகரியா 11:13 -அந்தக்காசினால் குயவன் நிலத்தை வாங்குவர். ( மத் 27:7) ✝️சகரியா 13:7 - சீடர்களால் கைவிடப்படுவார்.( மாற் 14:50) ✝️சங்கீதம் 35:11 - பொய்க் குற்றம் சாட்டப்படுவார்.( மத் 26:59,60) ✝️ஏசாயா 53:7 -குற்றம் சாட்டப்படும்போது மௌனமாக இருப்பார்.( மத் 27:12) ✝️ஏசாயா 53:5 - காயப்படுத்தப்படுவார் (யோவா 20:25) ✝️ஏசாயா 50:6 - அடிக்கப்படுவார். துப்பப்படுவார்.( மத் 26:67) ✝️மீகா 5:1- கன்னத்தில் அடிக்கப்படுவார். (மாற் 14:65) ✝️சங்கீதம் 22:7,8 -பரியாசம் பண்ணப்படுவார். (மத் 27:31) ✝️ சங்கீதம் 109:24,25 - மிகவும் தள்ளாடுவார்.(யோவா 19:17; லூக் 23) ✝️சங்கீதம் 22:16; சகரியா 12:10  கரங்கள் துளைக்கப்படும்.(லூக் 23:33) ✝️ ஏசாயா 53:12- அக்கிரமக்காரருடன் தீர்ப்பிடப்படுவார், அக்கிரமக்காரருக்காகவும் வேண்டுதல் செய்வார். ( மத் 27:38...