Posts

Showing posts from September, 2021

வாஞ்சை || அறிந்து கொள்வோம் பகுதி-82 ||

Image
  அறிந்து கொள்வோம் பகுதி-82 வாஞ்சை   " வாஞ்சித்தல் " என்பது " முழு இருதயத்தோடும் விரும்புதல் " என்று அர்த்தப்படும். " வாஞ்சை " என்ற வார்த்தையை குறிக்க "taabah"என்ற எபிரெயச் சொல் பயன்படுத்தி உள்ளார்கள். நீதி. 13:12 - ல் நாம் விரும்பியதைப் பெறும்போது, அது ஜீவவிருட்சத்தைப் பெறுவதுபோல இருக்கும் என்று பவுல் தான் ரோமாபுரியின் விசுவாசிகளைக் காண வாஞ்சிப்பதாகக் கூறியிருக்கிறார் (ரோமர் 1:11). இங்கே வாஞ்சிப்பதைக் குறிக்க "epipothed" என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இது அதிகமான விருப்பத்தைக் குறிக்கும் வார்த்தை ஆகும். இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே தனது இருதயத்தின் விருப்பம் என்றும் அவர் சொல்லுகிறார்  ரோமர் 10:1 -இங்கே விருப்பத்தைக் குறிக்க "eudokia" என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்படுகிறது. நாம் எதை வாஞ்சிக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. 1.நாம் தேவனுடைய நியாயங்களை வாஞ்சிக்க வேண்டும் -சங். 119:20. 2.நாம் தேவனை வாஞ்சிக்க வேண்டும் - ஏசா26:9.  அவரைத் தவிர நமக்கு வேறு விருப்பம் இருக்கக்கூடாது. சங். 73:25. 3.நாம் அதிகாலையி...

வேலைகள் || அறிந்து கொள்வோம் பகுதி- 81 ||

Image
  அறிந்து கொள்வோம் பகுதி- 81 வேலைகள் வேதாகமத்தில் ஆதாமுக்கு தான் முதல் வேலை கொடுக்கப்பட்டது அது ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தும் வேலை மற்றும் தோட்டத்தைக் காக்கும் பணியும் கொடுக்கப்பட்டிருந்தது.ஆதி. 2:15). வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்களில் பெரும்பாலானவர்கள் ஏதேனும் ஒரு வேலை அல்லது தொழில்செய்துவந்தவர்களாக இருந்தார்கள். வேலைசெய்வது  என்பது வேதாகம காலங்களில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. தேவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனை இஸ்ரவேலருக்கு ராஜாவாக அபிஷேகம்செய்தார். ஆண்டவராகிய இயேசு தமது இளவயதில் யோசேப்பின் தச்சுத்தொழிலில் உதவிசெய்தரர். பவுல் பல வேளைகளில் கூடாரம் செய்யும் தனது தொழிலைச் செய்து தன் தேவைகளைக் சந்தித்துக்கொண்டார் (அப். 8:3). பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு  மீன்பிடிப்பர்களாக இருந்தார்கள். மத்தேயு வரிவசூலில்லவராக வேலைசெய்தார் (மத். 9:9). வேதத்தில் ஆண்களின் வேலைகள் 1.ஆடுமேய்த்தல் ஆபிரகாமும், அவன் சந்ததியினரும் அதிகமான ஆடுமாடுகளைக் கொண்டிருந்தார்கள். எனவே ஆடு மேய்ப்பது அவர்களுடைய முக்கிய தொழிலாக இருந்தது. இவர்களுக்குக் கீழாக இவர்களோடு சேர்ந்து வாழும்...

சாமுவேல் முதலாம் புத்தகம் ||பழைய ஏற்பாட்டின் புத்தக சுருக்கம் ||

Image
  பழைய ஏற்பாட்டின் புத்தக சுருக்கம் சாமுவேல் முதலாம் புத்தகம் " மாற்றங்களின் புத்தகம்" " சாமுவேல் " என்ற பெயருக்கு " தேவனின் நாமம்" அல்லது "தேவன் கேட்டருளினார்" என்று பொருள். எபிரேய வேதாகமத்தில் 1,2 சாமுவேலின் புத்தகங்கள் ஒரே புத்தகமாகும் அது " சாமுவேலின் புத்தகம்" என்று அழைக்கப்படும். Septuagint என்று அழைக்கப்படும் கிரேக்க மொழிபெயர்ப்பில்தான் முதல் முறையாக இந்தப் புத்தகம் இரண்டு பத்தகங்களாக பிரிக்கப்பட்டது. ஆசிரியர் மற்றும் சில தகவல்கள் இந்த புத்தகத்தின்ல் உள்ள முக்கிய நபர்களில் சாமுவேலும் ஒருவர். இளவயதுள்ள தீர்க்கதரிசியாகவும், இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதியாகவும், சவுல், தாவீது என்னும் இராஜாக்களை அபிஷேகம் செய்த ஆசாரியராக இருந்தார். சாமுவேலின் பெயரினால் இந்த புத்தகம் அழைக்கப்பட்டாலும் இந்தப் புத்தகத்தை எழுதியவர் இன்னார் என்பது குறிப்பிடப்படவில்லை. சாமுவேல் இதை எழுதியிருக்கலாம் அல்லது 1சாமு1:4-24:22 பகுதிகள் அவரது மரணம்வரையுள்ள பகுதியை கூறுவதால் அதற்கான தகவல்களை அவர் கொடுத்திருக்கலாம். தாவீது ராஜாவின் பற்றிய குறிப்புகளை சாமுவேலும், ந...

வார் / சவுக்கு || அறிந்து கொள்வோம் பகுதி - 80 ||

Image
  அறிந்து கொள்வோம் பகுதி - 80 வார் / சவுக்கு  "வார்" அல்லது " சவுக்கு" என்பது தண்டிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. சாலொமோன் சவுக்குகளால் மக்களைத் தண்டித்தான்.1 இராஜா 12:11. ஒரு மனிதனுக்கு தண்டனை கொடுக்க  நாற்பது சவுக்கு அடிகள் கொடுக்கலாம் என்றுஉபாகமம் 25:3 வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. பிறகு அது 39ஆகக் குறைக்கப்பட்டது. இதில் 13 அடிகள் விலாப்பகுதியிலும், 26 அடிகள் முதுகிலும் கொடுக்கப்பட்டன என்று நம்பப்படுகிறது. "யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்" என்றார் பவுல்  (2 கொரி. 11:24).  ரோமக்குடிமக்கள் சவுக்கினால் அடிக்கப்படக் கூடாது என்ற கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. பவுல் ரோமக் குடிமகன் என்று தெரியாதபடியால் பிலிப்பி பட்டணத்துச் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக அநேகந்தரம் அடிக்கப்பட்டார். (அப். 16:22 37). பிறகு ரோமக் குடிமகன் என்று தெரிந்தவுடன் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது நமக்கு தெரியும். இயேசுவின்  முன் எச்சரிப்பு இயேசு தனது ஊழியர்களை ஆலோசளைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் அவர்களை வாரினால் அடிப்பார்கள் என்று (மத்....

தோப்புக்கள் || அறிந்து கொள்வோம் பகுதி - 79 ||

Image
  அறிந்து கொள்வோம் பகுதி - 79 தோப்புக்கள்  (GROVES) என்பதற்கான எபிரெய வார்த்தை “ அசேரா ” (asherah) என்பதாகும். இதற்கு " மரத்தினால் செய்த சிலை" அல்லது " மரத்தூண் " என்று பொருள். பாகாலின் சிலையோடு அசேராவையும் வைத்திருப்பார்கள். இது பாகாலின் மனைவியாகக் கருதப்படுகிறது. வேதாகமத்தின் மொழிபெயர்ப்புக்களில் அசேரா “தோப்புக்கள்” (groves) என்றே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. "அசேரா "என்னும் வார்த்தை " யசார் ” (yashar) என்னும் வினைச்சொல்லிருந்து வந்திருக்கிறது. இதற்கு " நேராக இருத்தல், நிமிர்ந்திருத்தல், நிறுத்துதல்" என்று பொருள். இந்தத் தூண் தரையிலிருந்து ஒரு கொடிமரம்போல இருக்கும். இது தளிர்த்த மரமாகவும் இருக்கலாம். மரத்தின் உயரமான உச்சிப்பகுதி வெட்டப்பட்டிருக்கலாம். மேலும், மரத்தின் தண்டில் ஒரு உருவம் செதுக்கப்பட்டிருக்கலாம். (உபா 16:21).  இந்தத் தூணானது ஒரு உருவமாகவும் இருக்கலாம்.இது தரையில் நேராக நிறுத்தப்பட்டிருக்கும். (1 இராஜா 14:15; 1இராஜா 16:33; ஏசா 17:8). பொதுவாக இந்தத் தூண் மரத்தினால் செய்யப்பட்டிருக்கும். (நியா 6:26) சில சமயங்களில் கல்லாலும...