Posts

Showing posts from June, 2021

முசுக்கட்டைச் செடி அறிந்து கொள்வோம் பகுதி- 61

Image
அறிந்து கொள்வோம் பகுதி- 61 முசுக்கட்டைச் செடி   மல்பெரி (Mulberry) மரம்  இது எபிரெய மொழியில் " bakah " " அழுதல் " என்பது இதற்குரிய அர்த்தமாகும். இது நீண்ட இலைகளையும், பழங்களையும் கொண்டது இதன் இலையைப் பறிக்கும்போது, கண்ணீரைப் போன்ற வெள்ளை நிறத் திரவம் வடியும். இதனால் இந்தச் செடிக்கு இந்தப் பெயர் வந்தது, இதே பெயரோடு ஒரு பள்ளத்தாக்கு எருசலேமுக்குச் செல்லும் வழியில் இருக்கிறது. இது " பாக்கா " என்று குறிப்பிடுகின்றன. தமிழில் இதற்கு " அழுகையின் பள்ளத்தாக்கு " என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது (சங்.84:6). 1.வேதாகமப் பின்னணி மற்றும் இடங்கள் அ)பாக்கா பள்ளத்தாக்கு (Valley of Baca) - சங்கீதம் 84:6 எருசலேமுக்குச் செல்லும் வழியில் வறண்ட, முசுக்கட்டைச் செடிகள் நிறைந்த ஒரு பகுதி இருந்தது. 'பாக்கா' (Baca) என்றால் எபிரெய மொழியில் "அழுதல்" என்று பொருள். இந்தச் செடியின் பிசின் கண்ணீர் போல வடிவதால் இப்பெயர் பெற்றது. விசுவாசிகள் இந்த "அழுகையின் பள்ளத்தாக்கை" கடந்து செல்லும்போது, தேவன் அதை "நீரூற்றாக" மாற்றுகிறார். நம்முடைய கண்ணீர...

தாவீது. அறிந்து கொள்வோம் பகுதி - 60

Image
  அறிந்து கொள்வோம் பகுதி - 60 தாவீது . ( அன்புக்குரியவர்,  நேசர்)* *கர்த்தருடைய இருதயத்துக்கு ஏற்ற மனிதன் என்று கூறப்பட்ட  ஒரே மனிதர் தாவீது. இதை விட வேறு என்ன வேண்டும்?*. * நற்பண்புகள், வெற்றிகள்* *1. சிறுவயதிலிருந்தே தேவனை நேசித்தல்* *2. தனது உயிரை பொருட்படுத்தாது தன் பொறுப்பிலிருந்த ஆடுகள் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காக செயல்படுதல்* *3.இசையில் நாட்டமும், திறமையும்*. *4.தேவனை பற்றிய வைராக்கியமும் விசுவாசத்தால் வந்த தைரியம் கொண்டு போரிடுதல்* *5.கடமை தவறாமை* *6 தன்னை கொலை செய்ய முனைகிறவர் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவரென்பதால் அவரைக் கொலை செய்யாமல் காப்பாற்றும் அளவிற்கு தேவன் மீது உயர்ந்த மரியாதை*. *7.எதிரியை பழிவாங்கும் எண்ணமில்லாதபோதும் நீதியை நிலைநாட்டுவதற்காக மரணதண்டனை அளித்தல்*. *8.மற்றவர்களின் தியாகமான செயல்களுக்கு மிகுந்த மதிப்பளித்தல்*. *9.நட்பிற்கு இரக்கனமாக தன் பகைவனின் பேரனுக்கு உயர்வளித்தல்*. *10. தமது பாவத்தை யாரேனும் உணர்த்தினால் தாழ்மையுடன் ஏற்றுக் கொண்டு பாவத்திற்க்காக மனந்வருந்தி, மனந்திரும்பி பாவமன்னிப்புக்காக ஊக்கமாக ஜெபித்தல், இது தேவனுடைய இதயத்துக்கு...

5-ம் சங்கீதம் சங்கீத விளக்கம்

Image
  சங்கீத விளக்கம் 5-ம் சங்கீதம்   சங்கீத தலைப்பு : “கர்த்தரை நம்புகிறவர்களும் அக்கிரமகாரரும்”. உட்பிரிவுகள் :- வசனம் .1-3 காலை தியானமும், ஜெபமும். வசனம் .4-6 அக்கிரமகாரரின் நிலை. வசனம் .7 நான் எப்படி இருப்பேன். வசனம் .8 வழி நடத்துதலுக்காக விண்ணப்பம். வசனம்.9-10 துன்மார்கருக்கு எதிரான ஜெபம். வசனம். 11-12 கர்த்தரை நம்புகிறவர்களின் ஆசீர்வாதங்கள். விளக்கங்கள் :- வசனம் .1-3: - தாவீது விண்ணப்பம் செய்கிறவராகவும், தியானிக்கிறவராகவும் இருந்தார். காலைதோறும் கர்த்தரின் பாதத்தில் காத்திருந்தார். நாமும் அப்படியே செய்வோமாக. வசனம் .4-6 . - தேவன் வெறுக்கும் ஏழு காரியங்கள் இந்த பகுதியில் உள்ளது.   வசனம் .7-12  - தனக்காவும் (வச.7-8)  தனது எதிரிகளுக்காகவும் (வச.9-10) விண்ணப்பித்த தாவீது இறுதியில் தேவனை நம்புகிறவர்களுக்காகவும் விண்ணப்பித்தார்(வச.11-12). தேவனுடைய பிள்ளைகளுக்காகவும் வேண்டுதல் செய்வது நமது கடமை. வசனம். 7:  தாவீதின் காலத்தில் உடன்படிக்கை பெட்டி இருந்த கூடாரத்தை ஆலயம் என குறிப்பிட்டனர். அதற்க்கு முந்தைய காலத்தில் சீலோவில் இருந்த ஆசரிப்பு கூடாரத்தை ஆலயம் என அழைத்தனர...

4 ம்-சங்கீதம். சங்கீத விளக்கம்

Image
  சங்கீத விளக்கம் 4 ம்-சங்கீதம்   தலைப்பு:- “விசுவாசிகளின் பாதுகாப்பு” பிரிவு:- வசனம்-1 ஜெபத்தை கேட்க்கும்படி வேண்டூதல். வசனம்-2 தேவனின் இரு கேள்விகள் வசனம் -3 - 5 சமாதானத்திற்க்கான செயல்கள், வசனம் -6 கர்த்தரின் முகத்தின் ஒளி பிரகாசிக்க வேண்டுதல், வசனம் -7- 8 விசுவாசத்தின் விளைவு, மகிழ்ச்சி, சமாதானம், சுகம். வசனங்களுக்கான விளக்கம்:- வசனம்.3: - கர்த்தரிடம் பக்தியாய் இருப்பவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்.அவர்களின் விண்ணப்பங்களை அவர் கேட்கிறார். “என் ஜெபத்தை கர்த்தர் கேட்பதில்லை” என்று ஒரு நாளும்  யாரும் சொல்லவும் சந்தேகபடாவும் கூடாது, பதில் வர தாமதமாகலாம் அல்லது எதிர்பார்க்காத பதில் கூட வரலாம். எதுவாயினும் நமது நண்மைகே என்பதே தான் உண்மையாகும். பக்தியுள்ளவன் கர்த்தர் அவருக்கென்று தன்னை  தெரிந்து கொண்டதற்காக  கர்த்தருக்கு நன்றி சொல்ல வேண்டும். பத்தியுள்ளவனை எதிர்க்கிறவன் கர்த்தருக்கு எதிரியாக இருப்பான். வசனம் 4:- கோபங்கொண்டாலும் அதை அடக்கி ஆள வேண்டும். பாவம் செய்யும் அளவிற்க்கு கோபப்பட கூடாது (எபே 4:26). வீனானதை அல்ல அடிக்கடி கர்த்தரையும், அவரின் செயல்களைய...

வரங்கள் வேத ஆராய்ச்சி

Image
  வேத ஆராய்ச்சி வரங்கள் 1.வரங்களின் பெயர்களும், எண்ணிக்கையும் - 1கொரி 12:8-10. 2. வரங்களை அளிக்கிறவர் யார்? -1கொரி 12:4, 8-11. 3. வரங்களை செயல்படுத்துகிறவர் யார்? (1கொரி 12: 4- 51) 4. வரங்களின் நோக்கம் - தேவனுடைய வார்த்தையை உறுதிபண்ணுவது. (மாற்கு 16:17-20; யோவான் 14:12) 5. வரங்களை யார் பெற்றிருக்க வேண்டும்? எல்லா விசுவாசிகளும்,1கொரி 12:8-11; 1கொரி 1:7; ரோமர் 1:1) 6.ஒருவர் எல்லா வரங்களும் பெற்றிருக்க முடியுமா? - முடியும் (மத் 17:20; மத் 21:22) 7.யாராவது எல்லா வரங்களும் பெற்றிருக்கிறாரா? - பெற்றிருக்கிறார். (யோவான் 3:34; ரோமர் 15:29; அப் 5:12) 8.பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வரங்களின் அநுக்கிரகம் காணப்பட்டதா? ஆம். காணப்பட்டது. (அப் 1:5; அப் 2:4) 9. வரங்களை தவறாகப் பயன்படுத்த முடியுமா - முடியும். (பிர 2:9) 10. பின்வாங்கிப்போன நிலைமையிலும் வரங்களைப் பயன்படுத்த முடியுமா ?- முடியும். (பிர 2:9; 1கொரி 13:1-3) 11. அசுத்த ஆவியின் கிரியை வெளிப்படும்என்று பயப்பட வேண்டுமா? வேண்டாம். தேவனுடைய பிள்ளையின் மூலமாகத் தேவ ஆவியானவர் மட்டுமே கிரியை செய்வார். (லூக்கா 11:11-13) 12. வரங்கள் நிரந்தரமானதா? தற்க...

அரராத்து மலைத்தொடர் அறிந்து கொள்வோம் பகுதி-59

Image
  அறிந்து கொள்வோம் பகுதி-59 அரராத்து மலைத்தொடர் (Mountains of Ararat) என்பது வேதாகமத்தில் முதல் நூலாகிய  ஆதியாகமம் நூலில் விவரிக்கப்படுகின்ற வெள்ளப் பெருக்கின் முடிவில் நோவாவின் பேழை தங்கியஇடம் ஆகும் ஆதி 8:4. அரராத்து மலைத்தொடர் எபிரேய விவிலியத்தில் hārēy Ǎrārāṭ (הָרֵי אֲרָרָט) என்றும், கிரேக்கத்தில் τὰ Ἀραράτ என்றும் உள்ளது. இரு மரபுகள்:- வேதத்தில் குறிப்பிடுகின்ற அரராத்து மலைத்தொடர் எங்குள்ளது என்பது குறித்து இரு முக்கிய மரபுகள் உள்ளன. சிரிய மரபு மற்றும் திருக்குரான் மரபு:  நோவாவின் பேழை தங்கிய "அரராத்து மலைத்தொடர்" இன்று நாக்சிவான் அல்லது வடமேற்கு ஈரான் என்றழைக்கப்படும் இடத்தில் இருக்கும் சூடி மலை (Mount Judi) ஆகும். ஆர்மீனிய மரபு, மற்றும் மேலைக் கிறித்தவ மரபு:  நோவாவின் பேழை தங்கியஇடம் இன்றைய துருக்கி நாட்டில் "அரராத்து மலை" என்றழைக்கப்படும் இடம் ஆகும். ஆர்மீனிய உயர்நிலத்தின் (Armenian Highland) மிக உயர்ந்த மலையுச்சி அதுவே. முன் நாட்களில் அது "மாசிசு மலை" என்று அழைக்கப்பட்டது. பண்டைக் கிறித்தவ எழுத்தாளரான புனித ஜெரோம் (கிபி 4-5 நூற்றாண்டு) என்பவர் யோசே...

வாயின் வார்த்தைகள்.அறிந்து கொள்வோம் பகுதி - 58

Image
  அறிந்து கொள்வோம் பகுதி - 58 வாயின் வார்த்தைகள் மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 12:36) தேவ பிள்ளைகிய நம் நியாயத்தீர்ப்பில் தப்பிக்க வேண்டுமானால் நாம் பேசும் வார்த்தைகள் கூட கிறிஸ்துவுக்கு  ஏற்றதாய் இருக்கவேண்டும். பரிசுத்த வேதம் சொல்லும் "பேசக்கூடாத பேச்சுகள்" 1. பெருமையான வார்த்தைகளை பேசக்கூடாது - யாக் 3:5 2. மேட்டிமையான வார்த்தைகளை பேசக்கூடாது - 1 சாமு 2:3 3. அகந்தையான வார்த்தைகளை பேசக்கூடாது - 1 சாமு 2:3 4. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது     - சங் 75:4 5. அதிகமான வார்த்தைகளை பேசக்கூடாது - மத் 5:37 6. கிழவிகளின் கட்டுக்கதைகளை பேசக்கூடாது.- 1 தீமோ 4:7 7. வீணான பேச்சுகளை பேசக்கூடாது    - மத் 12:36 8. கடுஞ் சொற்களான வார்த்தைகளை      பேசக்கூடாது - நீதி 15:1 9. நம்மை நாமே புகழ்ந்து பேசக்கூடாது     - நீதி 27:2 10. நாம் செய்த காரியங்களை நாமே புகழ்ந்து பேசக்கூடாது - நீதி 20:6 11. தீமையை பேசக்   கூடாது ...