வேத ஆராய்ச்சி
வரங்கள்
1.வரங்களின் பெயர்களும், எண்ணிக்கையும் - 1கொரி 12:8-10.
2. வரங்களை அளிக்கிறவர் யார்? -1கொரி 12:4, 8-11.
3. வரங்களை செயல்படுத்துகிறவர் யார்? (1கொரி 12: 4- 51)
4. வரங்களின் நோக்கம் - தேவனுடைய வார்த்தையை உறுதிபண்ணுவது.
(மாற்கு 16:17-20; யோவான் 14:12)
5. வரங்களை யார் பெற்றிருக்க வேண்டும்?
எல்லா விசுவாசிகளும்,1கொரி 12:8-11; 1கொரி 1:7; ரோமர் 1:1)
6.ஒருவர் எல்லா வரங்களும் பெற்றிருக்க முடியுமா? - முடியும் (மத் 17:20; மத் 21:22)
7.யாராவது எல்லா வரங்களும் பெற்றிருக்கிறாரா? - பெற்றிருக்கிறார். (யோவான் 3:34; ரோமர் 15:29; அப் 5:12)
8.பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வரங்களின் அநுக்கிரகம் காணப்பட்டதா? ஆம். காணப்பட்டது. (அப் 1:5; அப் 2:4)
9. வரங்களை தவறாகப் பயன்படுத்த முடியுமா - முடியும். (பிர 2:9)
10. பின்வாங்கிப்போன நிலைமையிலும் வரங்களைப் பயன்படுத்த முடியுமா ?- முடியும். (பிர 2:9; 1கொரி 13:1-3)
11. அசுத்த ஆவியின் கிரியை வெளிப்படும்என்று பயப்பட வேண்டுமா? வேண்டாம். தேவனுடைய பிள்ளையின் மூலமாகத் தேவ ஆவியானவர் மட்டுமே கிரியை செய்வார். (லூக்கா 11:11-13)
12. வரங்கள் நிரந்தரமானதா? தற்காலிகமானதா? - ஒருவர் தனிப்பட்ட ஈவாகப் பெற்றிருக்கும்போது அது நிரந்தரமானது. (ரோமர் 11:29)
13. நம்முடைய சித்தத்தின் பிரகாரம் வரங்களைப் பயன்படுத்த முடியுமா? முடியும். (1கொரி 14:15,23-32
14. வரங்களைப் பயன்படுத்தாமல் புறக்கணிக்க முடியுமா? - முடியும். (1தீமோ 4:14; 2தீமோ 1:6)
15. வரங்களை எப்பொழுது பயன்படுத்த வேண்டும்? தேவைப்படும்போது கொரி 12:7; 1கொரி 14:3-6,12,1726)
16.வரங்களை எங்கு பயன்படுத்த வேண்டும் ?- தேவைப்படும் இடங்களில் (1கொரி 12:7,12-31; 1கொரி 14:1-40)
17. வரங்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது ?- விசுவாசத்தினாலும், ஜெபத்தினாலும் (1கொரி 12:31; 1கொரி 14:1; மத் 7:7-11)
18. இன்று நமக்கு வரங்கள் தேவையா? - ஆம் தேவை.
(மாற்கு 16:15-20)
19. எந்த வரங்கள் நமக்குத் தேவையென்று
நாம் தெரிந்து கொள்ள முடியுமா? - முடியும். (1கொரி 12:31; 1கொரி 14:1,12)
20. நாம் வரங்களைப் பெற்றிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?
- பரிசுத்த ஆவியானவர் நம்மூலமாகக் கிரியை செய்து தமது நோக்கத்தை நிறைவேற்றுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம் .கொரி 12: 4; 1கொரி 14:1-40)
21. இந்தக் காலம் முழுவதும் வரங்கள் தொடர்ந்து கிரியை செய்யுமா? - ஆம்,கிரியை செய்யும். (மத் 3:11; மத் 28:20)
வரங்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். அவையாவன:
1. வெளிப்படுத்தலின் வரங்கள்
2. ஏவுதலின் வரங்கள்
3. வல்லமையின் வரங்கள்
வெளிப்படுத்தலின் வரங்கள்
1. ஞானத்தைப் போதிக்கும் வசனம் (1ராஜா 3:16-28; மத் 2:20)
2. அறிவை உணர்த்தும் வசனம்.
(ஆதி 1:1-2:25; 1சாமு 3:7-15)
3. ஆவிகளைப் பகுத்தறிதல் (மத் 9:4; லூக்கா 13:16; யோவான் 2:25).
ஏவுதலின் வரங்கள்
1.தீர்க்கதரிசனம் உரைத்தல்.
(அப் 3:21; அப் 11:28; அப் 21:11)
2.பற்பல பாஷைகளைப் பேசுதல்.
(ஏசா 28:11; மாற்கு 16:17; அப் 2:4)
3.பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல் .1கொரி 12:10; 1கொரி14: 5,13-15,27-28)
வல்லமையின் வரங்கள்
1. விசுவாசம் (ரோமர் 4:17; யாக் 1:5-8)
2. குணமாக்கும் வரங்கள் மாற்கு 16:18)
3 அற்புதங்களைச் செய்யும் சக்தி (1கொரி 15:10, 27-31; எபி 2:3-4)....
1 Comments
Useful to all the church believer's
ReplyDelete