வாற்கோதுமை || அறிந்து கொள்வோம் || பகுதி -135 ||
அறிந்து கொள்வோம் பகுதி -135 வாற்கோதுமை வாற்கோதுமை புல் வகையை சார்ந்த ஒரு தாவரம் இது மனிதனின் உணவாகவும், கால்நடை தீவனமாகவும் பயன்படுகிறது. உலகத்திலேயே அதிகமாக பயிரிடப்படும் தாவரங்களில் ஐந்தாவது இடத்தில் இது உள்ளது. இந்த வாற்கோதுமை தானியத்தில் இருந்து தான் பார்லி (Barly) என்ற அரிசியை எடுக்கிறார்கள்.கோதுமையை விட வாற்கோதுமை அதிக சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. கானான் தேசத்தில் கோதுமை மற்றும் வாற்கோதுமை என்று இரண்டு வகை கோதுமைகள் உண்டு.வேதாகமத்தில் கோதுமை என்ற வார்த்தை 40 இடத்திலும், வாற்கோதுமை என்ற வார்த்தை 34 இடத்திலும் வருகிறது. இதற்கு வாற்கோதுமை என்ற பெயர் வர காரணம் இதனுடைய கதிரில் குறைவான தானியமும் நீளமான வால் இருப்ப தால் இது வாற்கோதுமை என்றும் அழைக்கப்படுகிறது.கோதுமையில் கதிரில் தானியம் அதிகமாக இருக்கும் வால் குட்டையாக இருக்கும். உபாகமம் 8:8 -அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; இது எபிரேயர்களின் மிக முக்கியமான ஒரு உணவு ஆகும்.பொதுவாக பட்டணங்களில் கோதுமையையும், கிராமங்களில் வாற்கோதுமை மக்கள் உணவுக்காக பயன்படுத்தினார்க...