ஆய்வு கட்டுரைகள்
வேதாகமத்தின்
ஆண் / பெண் தீர்க்கதரிகள்
வேதாகமத்தில் தீர்க்கதரிசிகள் என குறிப்பாக பலர் குறிக்கப்பட்டுள்ளனர். சிலர் குறிக்கப்படவில்லை,ஆனால் தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்கள்.
புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள், சுவிசேஷகர்கள், கர்த்தரின் உள்ளத்தை நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.
கர்த்தர் உரைத்ததை நமக்கு சொல்லியிருக்கிறார்கள்.
பெண் தீர்க்கதரிசிகள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் உள்ளனர்.எல்லா தீக்கதரிசிகளும் நிறைவாய் இதில் அடங்கி உள்ளார்களா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
பழைய ஏற்பாட்டில் 1239 தீர்க்கதரிசனங்களும்,
புதிய ஏற்பாட்டில் 578 தீர்க்கதரிசனங்களும்,
மொத்தமாக 1817 உள்ளன.
இது சம்பந்தமான வசனங்கள் 8352 ஆகும்.
இவையெல்லாம் வேத அறிஞர்களால் ஆராய்ந்து சொல்லப்பட்டவை.மொத்த தீர்க்கதரிசிகள் 80க்கும் மேற்பட்டவர்கள். இதில் பெரும்பான்மை தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன.
தீர்க்கதரிசனம் பற்றி அறிய வேண்டியது…….
2 பேதுரு 1:21
“தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை.தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.”
இன்றும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்க்கு ஆதாரமாக ஆவியானவர் அப்போஸ்தலர். யோவானிடம் சொல்லுவதை கேளுங்கள்.
வெளி: 10:11
”அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்ல
வேண்டும் என்றான்.”
பவுலின் எச்சரிப்பை பாருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:20
“தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.
ஆண் தீர்க்கதரிசிகள் பட்டியல் :
• ஆரோன் (யாத் 7: 1)
• ஆபேல் (லூக்கா 11: 50-51)
• ஆபிரகாம் (ஆதி 20: 7)
• அகபு (அப்போ 21: 10; 11: 27-28)
• ஆகூர் (நீதி 30: 1)
• அகியா (1 இராஜா 11: 29;14:2,8) (2நாளாக 9: 29)
• ஆமோஸ் ( ஆமோஸ் 1: 1, 7: 12- 15)
• ஆசாப் ( 2 நாளா 29:30); (மத் 13:35); (சங்கீ 78: 2)
• அசாரியா ( 2 நாளா 15: 1- 8)
• பாலாம் (எண் 23, 24)
• காய்பா (யோவான் 11: 49-52)
• தாவீது (சங் 16: 8-11)(அப் 2: 25-30)
• தானியேல் (தானி 12:21)(மத் 24: 15, மாற்கு 13: 14)
• எபேசு சீடர்கள் (அப் 19:6)
• எல்தாத் (எண் 11:26)
• எலியா (1 இராஜா 18: 22, 36)
( 1 இராஜா 17: 1)
• எலியேசர் ( 2 நாளா 20: 37)
• எலிசா ( 1 இராஜா 19:6, 2
இராஜா 9:1, 6: 12)
• எசக்கியேல் (எசக் 6: 1-2, 11:
4-5, 13:2,17)
• ஏனோக் -( யூதா 1: 14)
• காத் -(1 சாமு 22: 5),
(சாமு 24:11)(1 நாளா 21: 9)
• ஆபாகூக் ( ஆபாகூக் 1: 1, 3: 1)
• ஆகாய் (ஆகாய் 1: 1, 3, 12,
2:1,10) (எஸ்ரா 5: 1)
• அனானி (2 நாளா 16: 7-10; 19: 2)
• ஓசியா (ஓசியா 1: 1)
• இத்தோ (சகரியா 1: 1)
(2 நாளா 13:22, 9:29)
• ஏமான் ( 1 நாளா 25: 5)
• ஏசாயா ( 2 இராஜா 19: 2)(மத் 3: 3)
• யாக்கோபு (ஆதி 49: 1)
• யகாசியேல் ( 2 நாளாக 20:14-17)
• எதுத்தூன் ( 2 நாளாக 35: 15)
•யெகூ (1 இராஜா 16: 17, 12)
• எரேமியா (2 நாளா 36: 12,21),
(ஏரே 20: 1-2; 25: 2)
• இயேசு (மத் 13: 57; 21: 11)(லூக் 24: 19)
• யோவேல் (யோவேல் 1: 1) (அப் 2: 16)
• யோவான்ஸ்நானன்
(லூக் 7: 26-28; 1:76) (மத் 14: 15)
• யோவான் (வெளி 1: 1)
• யோனா (2 இராஜா 14:25)
(மத் 12: 39;16:4)
•யோசேப்பு -(ஆதி 37: 5-11)
• யோசுவா (1 இராஜா 16: 34)
• யூதா பர்னபா (அப் 15:32)
• மல்கியா (மல்கி 1: 1)
• மேதாத் (எண் 16: 26)
• மீகா (மீகா 1: 1) (எரேமி 26: 18)
(மத்தேயு 2: 5-6)
• மிகாயா (1 இராஜா 22: 7-8)
• மோசே (உபா 34: 10; 18: 18; (அப் 3: 22-23)
• நாகூம் (நாகூம் 1: 1)
• நாத்தான் (2 சாமு 7: 2)
(1 இராஜா 1: 10)
• ஒபேதியா (ஒபேதி 1: 1)
• ஓபேத் -(2 நாளா 28: 9)
• யூதாவிலிருந்து தீர்க்கதரிசிகள்
(1இராஜா 13: 1- 3)
(2 இராஜா 23:17-18)
• ஆகாபுக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்
(1 இராஜா 20: 13-14)
• ஆகாபுக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்
– இரண்டாம் முறை
(1 இராஜா 20: 35-42)
• அமாசியாவிற்க்கு அனுப்பின
தீர்க்கதரிசிகள்
( 2 நாளா 25:7-9)
• அமாசியாவிற்க்கு அனுப்பின.
தீர்க்கதரிசிகள் – 2ம் முறை
(2 நாளா 25:7-9)
• ஏலிக்கு அனுப்பின தீர்க்கதரிசிகள்
(1 சாமு 2: 27-36)
• இஸ்ரவேலுக்கு அனுப்பின.
தீர்க்கதரிசிகள்
( நியாதி 6: 7-10 )
• எலியாவை அனுப்பி ஏகூவை
அபிசேகித்த தீர்க்கதரிசி
(2 இராஜா 9: 1-10)
• எலிசாவுக்கு தீர்க்கதரிசனம் உரைத்த. தீர்க்கதரிசிகள் (2 இராஜா 2: 3-5)
• சாமுவேல் (1 சாமு 3: 20; 9:18-19)
(அப் 13:20)
• சவுல் & மற்றவர்கள்
(1 சாமு 10: 5-6, 10-13; 19: 20- 24)
• இஸ்ரவேலின் 70 மூப்பர்கள்
(எண் 11: 25)
• செமாயா (2 இராஜா 12: 22)
(2 நாளா 12:5,7,15)
• சீலா (அப் 15: 32)
• சிமியோன் ( லூக்கா 2: 25-35)
• சாலமோன்
( சங்கீதம் 72: 7,10-11,17)
• இரண்டு சாட்சிகள்
(வெளி 11: 3,6,10)
• உரியா (எரேமியா 26: 20)
• சகரியா [யோவான்ஸ்நானன் தந்தை]
(லூக்கா 1: 67)
• சாதோக் (2 சாமு 15: 27)
• சகரியா (சகரியா 1: 1)
(எஸ்ரா 5: 1; 6: 4)
• சகரியா (யோய்தாவின் குமாரன்)
(2 நாளா 24: 20)
• செப்பானியா (செப் 1: 1)
பெண் தீர்க்கதரிசிகள் :
•மிரியம் (யாத் 15: 20)
•தெபோராள் (நியாதி 4: 4)
•உல்தா (2 இராஜா 22: 14)
•ஏசாயாவின் மனைவி (ஏசா 8: 3)
•அன்னாள் ( லூக்கா 2: 36-38)
•பிலிப்பின் 4 மகள்கள் (அப் 21: 8-9)
•ராக்கேல் ( ஆதி 30:24)
•அன்னாள் (1 சாமு 2: 1- 10)
•அபிகாயில் (1 சாமு 25: 28-31)
•எலிசபெத் (லூக்கா 1: 41-45)
•இயேசு கிறிஸ்துவின் தாயார் மரியாள்
(லூக்கா 1: 46- 55)
தீர்க்கதரிசி குழுக்கள்:-
•1 இராஜா 18: 4,13
•2 இராஜா 23 :2
•அப் 11 :27
•அப் 13: 1
•யூத மத தல்முத் ( யூத மத குடியுரிமை & சடங்குகள்) சாராளையும் எஸ்தரையும் தீர்க்கரிசினிகளாக இணைத்திருக்கிறார்கள்.
சில பொய் பெண் தீர்க்கதரிசிகள்:
• நொவாதியாள் (நெக 6: 14)
• யேசபேல் (வெ.விசே 2: 20)
பின்வரும் காலங்களில் உங்களது குழந்தைகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்,மூப்பர் கனவு காண்பார்கள், வாலிபர் தரிசனம் காண்பார்கள் என்று யோவேல் தீர்க்கதரிசி உரைத்திருக்கிறார்.
யோவேல் 2:28-29
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்;அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.”
ஆகவே தீர்க்கதரிசி என்பவன் கர்த்தரால் தேர்ந்து எடுக்கப்பட்டு, கர்த்தரால் அருளப்பட்ட தேவனுடைய வார்த்தைகளையும், மனிதனின் எதிர்கால செய்தியை பேசுபவன்.
நன்றி தமிழ்மணி
0 Comments