மக்பேலா குகை || அறிந்து கொள்வோம் || பகுதி -131 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -131


மக்பேலா குகை -Makpelah 



மக்பேலா என்னும் எபிரெய பெயருக்கு Makpelah - “இரட்டை (குகை) " "double" or "portion" என்று பொருள்.


இது ஒரு நிலமும் குகையும் ஆகும். ஆபிரகாம் தன் மனைவி சாராளை அடக்கம் பண்ணுவதற்காக இந்த இடத்தை (ஏத்தின் புத்திரர் கையில் 400 சேக்கல் வெள்ளி) விலைக்கு வாங்கினார்.இந்த இடம் மம்ரே எதிராய் எப்ரோனுக்கு கிழக்கில் அமைந்துள்ளது (ஆதி 23.19).ஆரம்பகாலத்தில் ஆபிரகாம் மம்ரேக்கு அருகில் தன் கூடாரத்தை போட்டார் (ஆதி 13.18), 


சாராளுக்கு குழந்தை பிறக்கும் என்னும் வாக்குத்தத்தத்தை இந்த இடத்தில் ஆபிரகாம் பெற்றுக்கொண்டார்.

(ஆதி 18:1-15).


ஆபிரகாம் மக்பேலாவை ஏத்தியனாகிய எப்ரோனிடமிருந்து கிரயத்திற்கு வாங்கினார்.


ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, ரெபெக்காள், யாக்கோபு, லேயாள் ஆகியோர் இங்கு அடக்கம் பண்ணப்பட்டார்கள் (ஆதி 49:31; 50.13).


இன்றும் இந்த குகை எபிரேனில் சுமார் 39அடி உயரமும் 23 அடி நீளமும் கொண்ட அழகான கட்டிடமாக எருசலேமுக்கு தெற்கில் 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இது ஏரோது மன்னரால் கட்டப்பட்டது.

_______________________

Thanks to Bro A.SASIKUMAR 



Post a Comment

0 Comments