நாத்தான்வேல் (என்ற) பர்த்தொலொமேயு |அறிந்து கொள்வோம் || பகுதி - 113 ||
அறிந்து கொள்வோம் பகுதி - 113 நாத்தான்வேல் (என்ற) பர்த்தொலொமேயு (St.Bartholomew) புனிதர் பர்த்தொலொமேயு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.யோவான் எழுதிய நற்செய்தியின் முதலாம் அதிகாரத்திலும்,21ம் அதிகாரத்திலும் நத்தனியேல் (Nathanael) என்று அடையாளம் காணப்படும் இவர், பிலிப்புவால் கிறிஸ்து இயேசுவுக்கு அறிமுகம் செய்யப்பட்டார் இவர், இயேசுவின் பன்னிரு சீடர்களில் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர் ஆவார். இவரின் பெயர் " டாலமியின் மகன்" (Ptolemy) எனவும், " உழுசால் மகன் " என்று பொருள்படுகிறது. இது குடும்பப் பெயராய் அறியப்படுகிறது. யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நத்தனியேல் என அழைக்கப்படுகிறார். அந்நற்செய்தியில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, 'இவர் " உண்மையான இஸ்ரவேலன்" "கபடற்றவர்" என்று இவரைக் குறித்துக் சாட்சி கொடுத்தார். மேலும் மத்தேயு,மாற்கு, லூக்கா நற்செய்திகளில் சீடர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அப்போஸ்தலர் புத்தகத்தில் இயேசுவின் பரம் ஏறுதலை கண்டவர் இவர். பெந்தேகோஸ்தே நாட்களுக்குப் பிறகு ஆர்மீனியா, இந்தியா போன்ற இடங்களில் சமய பணி...