நாத்தான்வேல் (என்ற) பர்த்தொலொமேயு |அறிந்து கொள்வோம் || பகுதி - 113 ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 113


நாத்தான்வேல் (என்ற) பர்த்தொலொமேயு

(St.Bartholomew) 


புனிதர் பர்த்தொலொமேயு முதலாம்

நூற்றாண்டில் வாழ்ந்தவர்.யோவான் எழுதிய நற்செய்தியின் முதலாம் அதிகாரத்திலும்,21ம் அதிகாரத்திலும் நத்தனியேல் (Nathanael) என்று அடையாளம் காணப்படும் இவர்,

பிலிப்புவால் கிறிஸ்து இயேசுவுக்கு

அறிமுகம் செய்யப்பட்டார்  இவர், இயேசுவின் பன்னிரு சீடர்களில்(அப்போஸ்தலர்களுள்) ஒருவர் ஆவார். இவரின் பெயர் "டாலமியின் மகன்" (Ptolemy) எனவும், "உழுசால் மகன்" என்று பொருள்படுகிறது. இது குடும்பப் பெயராய் அறியப்படுகிறது.


யோவான் நற்செய்தியின் முதல்

அதிகாரத்தில் இவர் நத்தனியேல் என அழைக்கப்படுகிறார். அந்நற்செய்தியில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, 'இவர் "உண்மையான இஸ்ரவேலன்" "கபடற்றவர்" என்று இவரைக் குறித்துக் சாட்சி கொடுத்தார்.


மேலும் மத்தேயு,மாற்கு, லூக்கா

நற்செய்திகளில் சீடர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அப்போஸ்தலர் புத்தகத்தில் இயேசுவின் பரம் ஏறுதலை கண்டவர் இவர். பெந்தேகோஸ்தே நாட்களுக்குப் பிறகு ஆர்மீனியா, இந்தியா  போன்ற இடங்களில் சமய பணி செய்தார் புரிந்தார் என்பது மரபுச் செய்தி என்று நம்பப்படுகிறது.


இந்தியாவில் சமயப்பணியாற்றினார் என்பதற்கான இரண்டு பண்டைய

சாட்சிகள் உள்ளன. நான்காம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலிருந்த சரித்திர ஆசிரியர் மற்றும் இறையியலாளருமான "யூசேபியஸ்

(Eusebius of Caesarea)  என்பவரும்,நான்காம் நூற்றாண்டின் இறுதியில், துறவியும், திருச்சபையின் மறை வல்லுனருமான புனிதர் "ஜெரோம்(Saint Jerome) இதை உறுதி செய்யகிறார்கள்.


பண்டைய நகரமான கல்யாண் (Kalyan)

என்று அறியப்பட்ட கொங்கன் கடலோர (Konkan coast) பகுதியில் உள்ள பம்பாய் (Bombay) பகுதியே புனிதரின்  சமயப்பணிக்கான முக்கியமான இடம் என்று அருட்தந்தைகள் : (பெருமலில்"

(Fr.C. Perumali) மற்றும் "மோராசெஸ்" (Moraes) கூறுகிறார்கள்.


பாரம்பரியபடி, இவர் ஆர்மேனியாவில்

(Armenia) உள்ள "அல்பநோபிளிஸ்"

(Albanopolis) என்னுமிடத்தில் தோலுரிக்கப்பட்டு,உயிரோடு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு

கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.


இவர் ஆர்மேனியா அரசனான 

"போலிமியஸ்"(Polymius) என்பவனை

கிறிஸ்துவை ஏற்றுகொள்ள மனம் மாற்றியதாகவும் இதனால் ஆத்திரமடைந்த அரசனது சகோதரனான "அஸ்ட்யாஜெஸ் (Astyages) என்பவர் 

பர்தொலொமேயுவிற்க்கு  மரண தண்டனை கொடுத்தாக கூறப்படுகிறது.


13- ம்  நூற்றாண்டில், இவர் மரித்த இடத்தில், பெரிய ஆர்மேனியாவின் ஒரு பகுதியில் ஒரு ஆலயம் கட்டப்பட்டது அதை

"புனித பர்த்தலமேயு துறவு மடம்"

 (Saint Bartholomew Monastery) என்று அழைக்கப்படுகிறது.இது தற்போது தென்கிழக்கு துருக்கியில் உள்ளது. 



🙏 Thanks : Golden Rathis .Y (Meyego)

Post a Comment

0 Comments