Posts

Showing posts from July, 2022

ஹனுக்கா || அறிந்து கொள்வோம் || பகுதி - 87 ||

Image
  அறிந்து கொள்வோம் பகுதி - 87 ஹனுக்கா - Hanukkah தீபத் திருநாள் அல்லது ஒளி விழா (Festival of Lights) என்று பொருள் படும்.இது யூதர்களின் கொண்டாட்டங்களில் ஒன்று. எட்டு நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகை கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எருசலேமில் நடந்த மக்கேபியப் புரட்சியின் போது, யூதர்களின் புனிதக் கோவில் (இரண்டாம் கோவில்) மீண்டும் வழிபாட்டுக்கென அர்பணிக்கபட்டதை நினைவு கூற கொண்டாடப்படுகிறது. எட்டு இரவுகளும் எட்டு பகல்களும் கொண்டாடப்படும் இந்த பண்டிகை. கி.மு. 167-ல் இஸ்ரவேல் நாடு சீரியா தேசத்தின் கீழ் இருந்து வந்தது. அப்போது, மத்தியாஹூ (Mattiyahu) என்னும் யூத ஆசாரியரை அவருடைய ஊராகிய மோடி என்னுமிடத்தில் சீரிய இராணுவம் பிடித்து, தங்கள் தெய்வமாகிய ஜீயஸ் (Zeus) என்னும் கடவுளுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, மத்தியாஹூவையும், அவருடய ஐந்து மகன்களையும் அதை வணங்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். அதற்கு மத்தியாஹூ மறுத்ததுமன்றி, அந்த பலிபீடத்தை தைரியமாக இடித்துப் போட்டு, வற்புறுத்திய வீரனையும் கொன்று விட்டு, பக்கத்தில் இருந்த மலைக்கு தன் மகன்களோடும் இன்னும் சில யூதர்களோடும் தப்பி ஓடினார். இந்த சிறிய குழுவினர் ...

சாராள் நவ்ரோஜி |அறிந்து கொள்வோம் ||பகுதி -86|

Image
  அறிந்து கொள்வோம் பகுதி -86 அம்மையார் சாராள் நவ்ரோஜி   சாராள் நவ்ரோஜி ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது பெற்றோருக்கு கடைசி பிள்ளை. அவருடைய தந்தை இசை சொல்லி கொடுக்கும் ஆசிரியராக லூத்தரன் குருகுல கல்லூரியில் பணி புரிந்தார். அவருடைய தாயார் பள்ளியில் ஆசிரியையாக பணியில் இருந்தார்.சாராள் நவ்ரோஜி 10 வயதாக இறுக்கும் பொது அவருடைய தந்தை தவறிவிட்டார்.சாராள் நவ்ரோஜி தன்னுடைய 15வது வயதில் கர்த்தரை சொந்த ரட்சகராக ஏற்று கொண்டார்.  1956களில் அவர் சிலோன் பெந்தேகோஸ்தே மிஷனில் உறுப்பினர் ஆனார். அந்த கால கட்டத்தில் அவர் மெட்ராஸ் மின்சார வாரியத்தில் பணியில் இருந்தார். 1959களில் கர்த்தரிடமிருந்து ஊழியத்திற்கு அழைப்பு வந்தது. வேலையை உதறிவிட்டு ஒரு சகோதிரியாக இணைந்தார். வீட்டில் எல்லோரும் இதை கடுமையாக எதிர்த்தனர். நான் கர்த்தர்ருக்காக என் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்திருக்கிறேன். எல்லாம் கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்று சொல்லி வீட்டில் யாருக்கும் சொல்லாமல் வேலையை விட்டு விட்டு, ஊழியத்திற்காக சிலோன் போக இரயில் ஏறிவிட்டார்கள். இவங்க கடைசிப் பிள்ளை என்பதால் அம்மாவிற்கு ரொம்ப செல்லமாம்...