Posts

Showing posts from September, 2022

அறிந்து கொள்வோம் || பகுதி - 95 ||சங்கீதம் 119 ல் உள்ள எபிரேய எழுத்துக்களின் விளக்கம் ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி - 95 சங்கீதம் 119 ல் உள்ள எபிரேய எழுத்துக்களின் விளக்கம் 1.ஆலெப் - எருது ( ஏசாயா 1:3,நீதி 14:4) 2. பேத்-பரிசுத்தம் (சங்:119:9) 3.கிமெல் - திறக்கப்படும் (சங் 119:18) 4.டாலெத் - சோர்வு/அதைரியம் (சங் 119:28) 5.எ - லாபம் (சங்:119:36) 6.வௌ - விடுதலை (சங்:119:45) 7.சாயீன் -ஆறுதல் /தேற்றரவு (சங் 119:49,50,54) 8.கேத் -உபத்திரவம். துன்பம் இவைகளில் மேன்மை (சங்:119:61) 9.தேத் - துன்பம், பாடு தேவனுக்கு நேராக நடத்துகிறது (சங்:119:67,71)  10.யோட் - நியாயத்தீர்ப்பு, நேர்மை (சங்:119:75) 11.கப் - நம்பிக்கையற்ற அந்தகாரநிலையில் தேவனே நம்பிக்கை (சங்:119:81)  12.லாமேட்- விசுவாசத்தின் அஸ்திபாரம் (சங்:119:89,96) 13.மேம் - தியானத்தின் மகிழ்ச்சி (சங்:119:103) 14.நூன் - பிரயாணிகளின் வெளிச்சம் (சங்:119:105) 15.சாமெக் - மாறுபாடான வழி (சங்:119:113)  16.ஆயின் - உபத்திரவத்தில் ஊக்கம் (சங்:119:121,127 17.பே - ஜீவ ஒளி (சங்:119:130) 18.த்சாடே - தேவனை பற்றிய அறிவு, நேர்மை (சங்:119:137,142)  19.கோப் - கர்த்தரை பற்றிய தியானத்தினால் உண்டாகும் 'உற்சாகம்'(சங் 119:148) 20.ரே...

வசன அறிக்கை||

Image
  🕵️மத்தேயு 3:15 -இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக இப்பொழுது இடம் கொடு இப்படி எல்லாம் நீதியும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது என்றார்.அப்பொழுது அவருக்கு இடம் கொடுத்தான். 🛐ஜெபம்:- எல்லா நீதியையும் நிறைவேற்ற என்னை ஒப்புக்கொடுக்கிறேன். 🕵️மத்தேயு 5:6 - நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்,அவர்கள் திருப்தியடைவார்கள்.  🛐ஜெபம்:- நீதியின்மேல் உண்டாகிற பசி தாகத்திற்கு என்னை அர்ப்பணித்து திருப்தியடைகிறேன். 🕵️மத்தேயு 5:10 -நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 🛐ஜெபம்:- நீதியினிமித்தம் துன்பப்படுவதினால் நான் பாக்கியவான் என்றும், பரலோகராஜ்யம் என்னுடையது என்று ஏற்றுக்கொள்ளுகிறேன். 🕵️மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். 🛐ஜெபம்:- முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட என்னை அர்ப்பணிக்கிறேன். 🕵️லூக்கா 1:6  அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக...

வேத வசனத்திற்கு வேதத்தில் உள்ள வேறு சில பெயர்கள் || அறிந்து கொள்வோம்பகுதி - 94 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி - 94 வேத வசனத்திற்கு வேதத்தில் உள்ள வேறு சில பெயர்கள் 1.அப்பம் - உபா 8:3 2.பலமான ஆகாரம் - எபி 5:12,14 3.பசும் பொன் - சங் 19:10 4.புடமிடப்பட்ட வெள்ளி - சங் 12:6 5.முகம் பார்க்கும் கண்ணாடி  - யாக் 1:23,24 6.கன்மலையை நொறுக்கும் சம்மட்டி  - எரேமி 23:29 7.இரு புறமும் கருக்குள்ள பட்டயம் - எபி 4:12  8.களங்கம் இல்லாத ஞானப்பால் -  1 பேதுரு 2:3 9.கூட்டில் இருந்து ஒழுகும் தெளி தேன்- சங்19:10 10.புடமிடும் அக்கினி - எரே 23:29 11.தீபம் - சங் 119:105 12.வெளிச்சம் - சங் 119:105 13.ஆவியின் பட்டயம்  - எபேசி 6:17 14.அழிவில்லாத விதை  - 1 பேதுரு 1:23 15.மழை, பனி - உபா 32:2. 👍Thanks to Bro Sasi Kumar 👍

வேதத்தில் இரண்டு பெயர்கள் உள்ள நபர்கள் || அறிந்து கொள்வோம்பகுதி -93 ||

Image
அறிந்து கொள்வோம் பகுதி -93 வேதத்தில் இரண்டு பெயர்கள்  உள்ள நபர்கள் 1.ஆபிராம் - ஆபிரகாம் 2.சாராய் - சாராள் 3.எத்திரோ - ரெகுவேல் 4.யோசேப்பு- சாப்னாத்பன்னேயா 5.யாக்கோபு-இஸ்ரவேல் 6.ஏசா-ஏதோம் 7.யோசுவா - ஒசேயா 8.சாலொமோன் - யெதிதியா 9.உசியா - அசரியா 10.பத்சேபாள் - பத்சுவா 11.பெனோனி - பென்யமீன் 12.எஸ்தர் - அத்சாள் 13.எலியாக்கீம் - யோயாக்கீம் 14.மேரிபால் - மேவிபோசேத் 15.கிதியோன் - யெருபாகால் 16.நெகேமியா - திர்ஷாதா 17.அனனினா - சாத்ராக் 18.அசரியா-ஆபேத்நேகோ 19.மீஷாவேல் - மேஷாக் 20.தானியேல் - பெல்ஷாத்சார் 21.சவுல்-பவுல்!, மெர்க்கூரி 22.பர்னபா- யோசே, யூப்பித்தர் 23.பேதுரு - சீமோன், செலோத்தே, கேபா 24.மரியாள் - மகதலேனாள் 25.தோமா - திதிமு 26.யோசேப்பு - பர்சபா 27.யூதா, சீலா - பர்சபா 28.சிமியோன் - நீகர் 29.யுஸ்து - இயேசு 30.யூதா - ததேயு 31.தொற்காள் - தபித்தாள் 32.ததேயு - லெபேயு 33.லேவி - மத்தேயு 34.யாக்கோபு, யோவான் - பொவொர்னகேஸ் 35.நகோமி - மாராள் 36.ஸ்காரியோத் - யூதாஸ் Thanks to Bro.Sasikumar 

அமலேக்கியர்கள் || வேதாகம ஜாதிகள் ||

Image
  வேதாகம ஜாதிகள் அமலேக்கியர்கள் வேதாகமக் காலத்தின் துவக்க நாட்களிலேயே மிகவும் பிரபலமாக விளங்கியது இந்த அமலேக்கிய ஜாதி, இது முற்படுத்தப்பட்ட ஜாதியா?அல்லது பிற்படுத்தப்பட்ட ஜாதியா? அமலேக்கியர்களுக்கு ஸ்காலர்ஷிப் உண்டா இல்லையா? என்றெல்லாம் நம்மால் சொல்ல முடியவில்லை. காரணம், அரசாங்கம் பட்டியல் போட்டு ஜாதிகளை வகைப்படுத்தும் முன்பே முற்றிலும் அழிந்து போய்விட்டது இந்த அமலேக்கிய ஜாதி. செழிப்பான மிகப்பெரிய ஜாதி:- இவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் மிகவும் செழிப்பாக வாழ்ந்த மிகப்பெரிய ஜாதி என்பது மாத்திரம் நிச்சயம். செழிப்பும் நிறையக் கூட்டமும் இருந்தால் எந்தவொரு ஜாதிக்குமே முரட்டுத்தனமும், ஆணவமும், புத்தியீனமும் ஒட்டிக்கொள்வது இயல்பு இந்த இயல்புக்கு அமலேக்கியர்களும் விதிவிலக்கல்ல.இவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் அமலேக்கியர்களில் ஒரு நோயாளி கூட நெஞ்சை நாலங்குலம் நிமிர்த்தியே நடந்தான்.தங்களுக்கு ஒப்பான நிகரான ஒருவரும் இல்லை என்பதாக அமலேக்கியர்களில் ஒவ்வொருவனும் நினைத்துக் கொண்டிருந்தான். பூர்வ கோத்திரம்:- இஸ்ரவேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து கானான் நாட்டிற்கு வரும் சமயத்தில் இந்த அமலேக்கியர்கள்...