வசன அறிக்கை||

 

🕵️மத்தேயு 3:15 -இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக இப்பொழுது இடம் கொடு இப்படி எல்லாம் நீதியும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது என்றார்.அப்பொழுது அவருக்கு இடம் கொடுத்தான்.

🛐ஜெபம்:-

எல்லா நீதியையும் நிறைவேற்ற என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.


🕵️மத்தேயு 5:6 - நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்,அவர்கள் திருப்தியடைவார்கள். 

🛐ஜெபம்:-

நீதியின்மேல் உண்டாகிற பசி தாகத்திற்கு என்னை அர்ப்பணித்து திருப்தியடைகிறேன்.


🕵️மத்தேயு 5:10 -நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்;

பரலோகராஜ்யம் அவர்களுடையது.

🛐ஜெபம்:-

நீதியினிமித்தம் துன்பப்படுவதினால் நான் பாக்கியவான் என்றும், பரலோகராஜ்யம் என்னுடையது என்று ஏற்றுக்கொள்ளுகிறேன்.


🕵️மத்தேயு 6:33

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.

🛐ஜெபம்:-

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட என்னை அர்ப்பணிக்கிறேன்.


🕵️லூக்கா 1:6 

அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.


🛐ஜெபம்:-

நான் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவனாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவனாயிருக்க என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.


🕵️ரோமர் 6:13

நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.

🛐ஜெபம்:-

நான் என் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், என்னை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவனாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, என் அவயவங்களை நீதிக்குரிய

ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறேன். 


🕵️ரோமர் 6: 16 

மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?

🛐ஜெபம்:-

நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கு அடிமையாக என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.


🕵️ரோமர் 6:19 

உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.

🛐ஜெபம்:-

அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நான் என் அவயவங்களை அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும், அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி என் அவயவங்களை நீதிக்கு

அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறேன்.


🕵️ரோமர் 8:10 

மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.

🛐ஜெபம்:-

கிறிஸ்து என்னிலிருப்பதால் என் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கிறது என்று அறிக்கையிடுகிறேன்.


🕵️1 கொரிந்தியர் 15:34

நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.

🛐ஜெபம்:-

நான் பாவஞ்செய்யாமல், நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவனாயிருக்க என்னை அர்ப்பணிக்கிறேன்.


🕵️எபேசியர் 6:14

சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;

🛐ஜெபம்:-

நான் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவனாயிருக்கிறேன்.



🕵️எபேசியர் 2:2 

அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

🛐ஜெபம்:-

நான் முற்காலத்திலே இவ்வுலக

வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்கேற்றபடியாகவும் நடப்பதை வெறுக்கிறேன். விட்டுவிலகுகிறேன்.



🕵️எபேசியர் 2:3 

அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

🛐ஜெபம்:-

நான் முற்காலத்திலே எனது மாம்ச இச்சையின்படியே நடந்து, எனது மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே, மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருப்பதை வெறுக்கிறேன். விட்டு விலகுகிறேன்.


🕵️தீத்து 3:3 

ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.

🛐ஜெபம்:-

முற்காலத்திலே நான் புத்தியீனரும்,

கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித

இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும்

ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர்

பகைக்கிறவர்களுமாயிருந்ததைவெறுக்கிறேன், விட்டுவிலகுகிறேன்.



🕵️1 பேதுரு 4:3

சென்ற வாழ்நாட்காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர் இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.

🛐ஜெபம்:-

சென்ற வாழ்நாட் காலத்திலே நான் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டதுபோதும்.

அப்பொழுது நான் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்ததை வெறுக்கிறேன். விட்டுவிலகுகிறேன்.


🕵️தீத்து 2:12 

நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,

🛐ஜெபம்:-

நான் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாய் ஜீவனம்பண்ண என்னை அர்ப்பணிக்கிறேன்.


🕵️எபிரேயர் 1:9 

நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்

🛐ஜெபம்:-

நான் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறேன் அதை  விட்டுவிலகுகிறேன்.


Prepared By…..

Pastor. W Samuel Selvaraj, 

 Pollachi…

Post a Comment

0 Comments