முசுக்கட்டைச் செடி அறிந்து கொள்வோம் பகுதி- 61

 அறிந்து கொள்வோம்

பகுதி- 61



முசுக்கட்டைச் செடி

 Mulberry


இது எபிரெய மொழியில் "bakah" "அழுதல்" என்பது இதற்குரிய அர்த்தமாகும். இது நீண்ட இலைகளையும், பழங்களையும் கொண்டது இதன் இலையைப் பறிக்கும்போது, கண்ணீரைப் போன்ற வெள்ளை நிறத் திரவம் வடியும். இதனால் இந்தச் செடிக்கு இந்தப் பெயர் வந்தது,


இதே பெயரோடு ஒரு பள்ளத்தாக்கு எருசலேமுக்குச் செல்லும் வழியில் இருக்கிறது. இது "பாக்கா" என்று குறிப்பிடுகின்றன. தமிழில் இதற்கு "அழுகையின் பள்ளத்தாக்கு" என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது (சங்.84:6).


தாவீது பெலிஸ்தருக்கு எதிராகப் போரிடத்திட்டமிட்டபோது தேவனுடைய ஆலோசனையைக் கேட்டான். அப்போது, அவர் அவன் முசுக்கட்டைச் செடிக்கு எதிராகப் பதிவிருந்து, "முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ: அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார்" என்று கட்டளையிட்டார். தாவீது அப்படியே செய்து பெலிஸ்தரை முறியடித்தான்.இந்த இரைச்சல் ஒரு இராணுவம் புறப்பட்டுச் செல்லும் இரைச்சலாக இருக்கக்கூடும்.


மல்பெரி பழம்

ஆங்கிலத்தில் இந்த பழத்திற்கு "மல்பெரி" என்று  பெயர். இதன் தாவரப் பெயர் Morus nigra என்பதாகும

மல்பெரி பழமாகும்போது கறுப்பு நிறத்தில் இருக்கும். அதைப் பிழியும்போது கருஞ்சிவப்பு நிறத்திலான சாறு கிடைக்கும்


பட்டுப் பூச்சியின் புழுக்கள் இதன் இலைகளைத் தின்று கூடுகட்டி, கூட்டுப்புழுவாக மாறுகின்றன. இந்தக் கூட்டிலிருந்தே பட்டு நூலிழைகள் எடுக்கப்படுகிறன.



Post a Comment

0 Comments