அறிந்து கொள்வோம்
பகுதி-82
வாஞ்சை
"வாஞ்சித்தல்" என்பது "முழு இருதயத்தோடும் விரும்புதல்" என்று அர்த்தப்படும்.
"வாஞ்சை" என்ற வார்த்தையை குறிக்க "taabah"என்ற எபிரெயச் சொல் பயன்படுத்தி உள்ளார்கள்.
நீதி. 13:12 - ல்
நாம் விரும்பியதைப் பெறும்போது, அது ஜீவவிருட்சத்தைப் பெறுவதுபோல இருக்கும் என்று
பவுல் தான் ரோமாபுரியின் விசுவாசிகளைக் காண வாஞ்சிப்பதாகக் கூறியிருக்கிறார் (ரோமர் 1:11). இங்கே வாஞ்சிப்பதைக் குறிக்க "epipothed" என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இது அதிகமான விருப்பத்தைக் குறிக்கும் வார்த்தை ஆகும்.
இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதே தனது இருதயத்தின் விருப்பம் என்றும் அவர் சொல்லுகிறார்
ரோமர் 10:1 -இங்கே விருப்பத்தைக் குறிக்க "eudokia" என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்படுகிறது.
நாம் எதை வாஞ்சிக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது.
1.நாம் தேவனுடைய நியாயங்களை வாஞ்சிக்க வேண்டும் -சங். 119:20.
2.நாம் தேவனை வாஞ்சிக்க வேண்டும் - ஏசா26:9.
அவரைத் தவிர நமக்கு வேறு விருப்பம் இருக்கக்கூடாது.
சங். 73:25.
3.நாம் அதிகாலையில் தேவனைத் தேட வேண்டும். நம் ஆத்துமா அவரை வாஞ்சிக்க வேண்டும்.
சங். 63:1,
4.தேவனுக்குப் பயந்து,அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வாஞ்சிக்க வேண்டும் -பிர. 12:13.
5.கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மீது வாஞ்சையோடு இருக்க வேண்டும் - சங் 84:2 -இங்கே வாஞ்சையைக் குறிக்க "kāsaph" என்ற எபிரெயச் சொல் பயன்படுத்தி உள்ளார்கள்.
6.தேவனுடைய வல்லமையையும், அவருடைய மகிமையையும் காண வாஞ்சிக்க வேண்டும் - சங். 63:2.
7.நம்முடைய பரமவாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள வாஞ்சையுள்ளவர்களாக இருக்க வேண்டும் - 2 கொரி. 5:2.
8.சக விசுவாசிகளின் நலனைக்குறித்து வாஞ்சை யுள்ளவர்களாக இருக்க வேண்டும். பிலி. 2:26.
9.மற்றவர்கள் மீது வாஞ்சையாயிருந்து தேவனுடைய சுவிசேஷத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் - 1 தெச. 2:8.
10.தேவனுடைய இரட்சிப்புக்காக நாம் தவித்து, அவருடைய வசனத்துக்காகக் காத்திருக்க வேண்டும் - சங். 119:81.
'வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது'
(நீதி:13:19)
0 Comments