அறிந்து கொள்வோம்
பகுதி- 81
வேலைகள்
வேதாகமத்தில் ஆதாமுக்கு தான் முதல் வேலை கொடுக்கப்பட்டது அது ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தும் வேலை மற்றும் தோட்டத்தைக் காக்கும் பணியும் கொடுக்கப்பட்டிருந்தது.ஆதி. 2:15).
வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்களில் பெரும்பாலானவர்கள் ஏதேனும் ஒரு வேலை அல்லது தொழில்செய்துவந்தவர்களாக இருந்தார்கள்.
வேலைசெய்வது என்பது வேதாகம காலங்களில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. தேவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனை இஸ்ரவேலருக்கு ராஜாவாக அபிஷேகம்செய்தார். ஆண்டவராகிய இயேசு தமது இளவயதில் யோசேப்பின் தச்சுத்தொழிலில் உதவிசெய்தரர்.
பவுல் பல வேளைகளில் கூடாரம் செய்யும் தனது தொழிலைச் செய்து தன் தேவைகளைக் சந்தித்துக்கொண்டார் (அப். 8:3). பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு மீன்பிடிப்பர்களாக இருந்தார்கள்.
மத்தேயு வரிவசூலில்லவராக வேலைசெய்தார் (மத். 9:9).
வேதத்தில் ஆண்களின் வேலைகள்
1.ஆடுமேய்த்தல்
ஆபிரகாமும், அவன் சந்ததியினரும் அதிகமான ஆடுமாடுகளைக் கொண்டிருந்தார்கள். எனவே ஆடு மேய்ப்பது அவர்களுடைய முக்கிய தொழிலாக இருந்தது. இவர்களுக்குக் கீழாக இவர்களோடு சேர்ந்து வாழும்படி எண்ணற்ற வேலைக்காரர்கள் இருந்தார்கள்.ஆபிரகாமின் நாட்களில் லோத்து பிடிக்கப்பட்டுச் சென்றபோது ஆபிரகாமின் வேலைக்காரர்களில் பலர் ஆயுதம் ஏந்திப் போரிட்டு, லோத்தை மீட்டுவந்தார்கள் (ஆதி. 14:14-16).
2.வேட்டையாடுதல்
ஈசாக்கின் மூத்த குமாரனாகிய ஏசா போன்ற சிலர் வேட்டையாடும் தொழிலையும் செய்து வந்தார்கள்.
3.விவசாயம்
நோவா திராட்சத்தோட்டத்தை நட்டு அதில் பயிரிடுவதைப் பார்க்கிறோம் (ஆதி. 9:20).
"தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்” என்ற வாக்குத்தத்தம் கொடுக்கப் பட்டிருக்கிறது (நீதி. 12:11).
4.செங்கல் தயாரித்தல்
துவக்கத்தில் இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைப் பட்டுக்கிடந்தபோது பார்வோனுக்காக நகரங்களைக் கட்டும்படி செங்கல் தயாரிக்கும் வேலையில் ஈடுபட வேண்டியிருந்தது (யாத். 1:24).
செங்கல் தயாரிப்புக்குத் தேவைான உபகரணங்கள் கூடக் கொடுக்கப்படாமல் அவர்கள் அதிகமாக நெருக்கப்பட்டார்கள்.பிரமிடு போன்றைகளைக் கட்டுவதற்காக
இவர்கள் பெரியபெரிய கற்களை இழுத்துச் சென்று கட்டிடங்களை அமைத்தார்கள்.
கானான் தேசத்தில் குடியேறியபிறகு இஸ்ரவேல் மக்கள் ஆடுமாடுகளை வளர்ப்பதிலும், பயிரிடுவதிலும்
ஈடுபட்டார்கள்.
லேவியர்கள் தேவனுடைய ஆராதனைக்கடுத்த வேலைகளில் ஈடுபட்டார்கள். ஆலய ஆராதனையில் மட்டுமின்றி, ஆலயத்தைச் சுத்திகரித்தல், பணிமுட்டுகளைப் பராமரித்தல் போன்ற வேலைகளையும் இவர்கள் செய்தார்கள்.
வேதபாரகர்கள் நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.
நியாயாதிபதிகளின் காலம்
நியாயாதிபதிகளின் நாட்களிலும் மக்கள் இதுபோன்ற வேலைகளைத் தொடர்ந்து செய்தார்கள்.
சில வேளையில் அவர்கள் தங்கள் நாட்டைக் காப்பாற்றிக்கொள்ளவும், புதிய பகுதிகளைப் பிடிக்கவும் போரிடும் வேலையிலும் ஈடுபட வேண்டியிருந்தது (நியா.4:14).
இராஜாக்களின் காலம்
சவுல் ராஜாவைத் தொடர்ந்து ராஜாக்களின் நாட்களில் அரண்மனைப் பணியாளர்கள் அதிகமானவர்கள் வேலையில் நியமிக்கப்பட்டார்கள்.
போரிடுவதற்காகவும் ஒழுங்கான ஊதியம் பெற்ற போர்வீரர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் காலாட்படை, இரதப்படை, குதிரைப் படை என்று பிரிக்கப்பட்டிருந்தார்கள்.
அரண்மனைகளில் பானபாத்திரக்காரன், சுயம்பாகிகள் போன்றோர் வேலை செய்தார்கள். சிலர் இசைக்கருவிகளை இசைப்பவர்களாவும் பணி செய்திருக்கிறார்கள்.
மக்களிடமிருந்து வரிப்பணம் வசூலிக்கப்படத் துவங்கியபோது அதற்காக ஆயக்காரர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
ஆலயம், அரண்மனை இவைகளைக் கட்டிய போது கட்டிடக்கலைஞர்களும், கட்டிடத் தொழிலாளிகளும் தேவைப்பட்டார்கள்.
மரவேலை, தோல்வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இந்தக் காலகட்டத்தில் வணிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது, பலர் அவர்களிடம் வேலைக்காரர்களாக இருந்தார்கள்.
மக்களின் தேவைகள் அதிகரித்தபோது. மற்றவர்களுக்கு விற்கும்படி அப்பம் சுடுகிறவர்களும், தச்சுத் தொழில் செய்பவர்களும் உருவானார்கள்.
ஆபரணங்களைத் தயாரித்தல்,
சாயம் முக்குதல், சுமைதூக்கிச் செல்லுதல் போன்ற வேலை செய்பவர்களும் உருவாகினார்கள்.
சிலர் மருத்துவர்களாகவும் வேலைசெய்தார்கள்.
புதிய ஏற்பாட்டு காலத்தில் வேலைகள்.
புதிய ஏற்பாட்டிலும் இதுபோன்ற வேலைகள் தொடர்ந்தன.
மகா ஏரோதுவின் காலத்தில் எருசலேமில் இரண்டாவதாகக் கட்டப்பட்ட ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. அவன் தனக்காகவும், ரோமர்களுக்காகவும் பல அரண்மனைகளைக் கட்டினான்.இந்த வேலையில் பலர் ஈடுபட்டார்கள்.
கலிலேயாக் கடல் பகுதியில் மீன்பிடிப்பது,முக்கிய தொழிலாக இருந்தது.
வேதாகம நாட்களில் ஆண்கள் 350க்கும்
மேற்பட்ட வெவ்வேறான வேலைகளில் ஈடுபட்டார்கள் என்று கணக்கிடப்படுகிறது.
பெண்களின் வேலைகள்
துவக்கத்தில் பெண்கள் சமைத்தல், பரிமாறுதல், வீட்டைச் சுத்திகரித்தல் போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபட்டார்கள். ஆபிரகாம் போன்ற வசதிபடைத்தவர்களுக்கு இப்படிப்பட்ட வேலைகளைச் செய்ய பெண் பணியாளர்களும் இருந்தார்கள்.
தண்ணீர் எடுத்தல்
பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் தங்கள் வீட்டுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான தண்ணீரைத் தாங்களே எடுத்துவந்தார்கள் (ஆதி. 24:15).
துவைக்கும் பணி
பெண்கள் சிறிய ஓடை மற்றும் ஆறுகளில் தங்கள் ஆடைகளையும், வீட்டிலுள்ளவர்களின் ஆடைகளையும் துவைத்து, உலர வைத்து, வீட்டுக்கு எடுத்து வந்தார்கள்.
வீட்டுவேலை
வீட்டில் அடுப்புக்குத் தேவையான விறகைச் சேகரித்தல், உணவைச் சமைத்தல், சாப்பிட்ட பிறகு பாத்திரங்களைச் சுத்திகரித்தல் இவை யாவும் பெண்களின் அத்தியாவசியமான வேலைகளாக இருந்தன.
ஆடுமேய்த்தல்
ராகேல் (ஆதி. 29:6),
மோசே மணந்துகொண்ட சிப்போராள் (யாத். 2:16) போன்றோர் ஆடுகளை
மேய்க்கும் வேலையிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
தானியம் பொறுக்குதல்
அறுவடை செய்யும்போது கீழே விழும் தானியத்தை ஏழைகளும், பரதேசிகளும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. ரூத் இப்படி கோதுமை மணிகளைப் பொறுக்குவதை நாம் பார்க்க முடியும்(ரூத் 2:17).
ஆடை தயாரித்தல்
நூல் திரித்தல், ஆடைகளை நெய்தல், சித்திர வேலைப்பாடுகளைச் செய்தல் இவைகளும் பெண்களின் வேலைகளாக இருந்தன. சாமுவேலின் தாயாகிய அன்னாள் அவனுக்காகச் சிறிய சட்டையைத் தயாரித்துவந்தாள் என்று நாம் பார்க்கின்றோம்.
நீதிமொழி 31:10-31 வசனங்களில் குணசாலியான ஒரு பெண்ணின் வேலைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இவள் தனது கணவனின் தொழிலில் அவனுக்கு உதவுவது மட்டுமின்றி தானாகவே பல வேலைகளைச் செய்துவந்தாள்.
திராட்சத் தோட்டத்தை நடுதல்,
வாணிபம் செய்தல், நூல் நூற்றல், மெல்லிய புடைவைகளை உண்டுபண்னி விற்பனை செய்தல்.
தொற்காள் ஆடைகளைத் தைத்து, மற்றவர்களுக்கும் கொடுத்துவந்தாள் (அப் 9:36).
தியத்தீரா பட்டணத்தைச் சேர்ந்த லீதியாள் என்பவள் சாயம் தோய்த்த ஆடைகளை பிலிப்பி பட்டணத்தில் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தாள் (அப்.16:14).
தனது கணவன் ஆக்கில்லாவோடு சேர்ந்து பிரிஸ்கில்லாள் கூடாரம் இடம் பணியைச் செய்து வந்தாள் (அப்.18:2, 3). பவுல் அப்போஸ்தலனும் இவர்களுடைய வீட்டில் தங்கி இதே வேலையைச் செய்து உள்ளார்.
வேசிகள்
எரிகோ பட்டணத்து ராகாப் போன்றவர்கள் பிழைப்புக்காக வேசித்தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள்.
இது அவர்களுக்கு ஆதாயம் தரும் ஒரு வேலையாக இருந்தது.
(நீதி, 2:16-22 5:3-8).
சில விக்கிரகக்கோவில்கள் தாசிகள் என்னப்பட்ட கோவில்தொடர்புடைய வேசிகளும் இருந்தார்கள்.
தேவ கட்டளைப்படி ஓசியா தீர்க்கதரிசி மணந்துகொண்ட கோமேர் என்ற பெண் இப்படிப்பட்டவளாக இருந்திருக்க வேண்டும் (ஓசியா 1:3).
சபை ஊழியர்கள்
ஆதிச் சபையின் காலத்தில் பெபேயாள் போன்ற பெண் ஊழியக்காரர்கள் சபை ஊழியத்தைக் கவனித்து வந்தார்கள். இவள் கெங்கிரேயா பட்டணத்துச் சபையில் ஊழியக்காரியாக இருந்தாள் (ரோமர் 16:1).
வேலைசெய்வதைக் குறித்த வேத கட்டளைகள்
நம் எல்லோருமே சோம்பேறியாய் இல்லாமல் ஏதே ஒரு வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டளை வேதாகமத்தில் உள்ளது.
வேலைசெய்யாதவனுக்குச் சாப்பாடு கொடுக்கக் கூடாது என்று பவுல் கட்டளையிட்டிருகிறார் (2 தெச. 3:10). கர்த்தருடைய வருகை சமீபமாயிற்று என்று சொல்லி, வேலைசெய்யாமல் சபையில் பகிந்துகொடுக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு, வீண்வம்பு பேசித் திரிந்தவர்கள் அந்த நாட்களில் இருந்தார்கள். இவர்கள் வேலைசெய்து, சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிட வேண்டும் என்ற அவர் கட்டளை இட்டார்.
"உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலை செய்யவும்வேண்டுமென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறோம்" என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
(1 தெச. 4:12). அவர் தனது சொந்தக் கைகளினால் வேலைசெய்து பாடுபட்டிருக்கிறார் (1 கொரி.4:12).
வேலை செய்யாமலிருத்தல் திருடுவதற்கு வழிநடத்துகிறது. "திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்” என்று பவுல் ஆலோசனை கூறுகிறார் (எபே. 4:28).
ஓய்வுநாளில் எந்த வேலையும் செய்யக் கூடாது. என்ற கட்டளை ஆதிகாலத்திலேயே கொடுக்கப் பட்டிருந்தது (யாத். 20:8-10).
"வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்;" (பிர. 5:12)
0 Comments