அறிந்து கொள்வோம் - பகுதி -99 || சிலுவையின் துவக்கம் ||

 

அறிந்து கொள்வோம்
பகுதி -99

சிலுவையின் துவக்கம்



A.சிலுவை என்பது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். கிறிஸ்தவ காலத்திற்கும் முந்தினக் காலத்திருந்தே ஒரு மத சம்பந்தமான அடையாளச் சின்னமாக ஏறக்குறைய உலகலாவிய விதத்தில் சிலுவை பயன்படுத்தப் பட்டுள்ளது என்று சரித்திரத்தின் மூலம் கருதப்படுகின்றது.

B.சிலுவை என்ற இந்தச் சொல் ‘லத்தின்’ மொழியின் சொல்லான “க்ரக்ஸ் (crux)” என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். ஆதலால் இதை “குருக்ஸ் என்றும், “குரூஸ்” என்றும், அழைப்பார்கள்.

C.வெகு காலத்திற்கு முன்பே கிரேக்கர்களின் "பாக்கஸ்"
 தீரு தேசத்தாரின் “தம்மூஸ்’, கல்தேயரின் “பெல்”, ஸ்காண்டினேவியரின் ‘ஓடின்” போன்ற விக்கிரகங்களின் அடையாளச் சின்னமாகவும் சிலுவை பயன்படுத்தப் பட்டுள்ளது.

D.சிலுவை என்ற வார்த்தையைச் சொல்ல, மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் “ஸ்டாரஸ்” என்ற கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். “ஸ்டாரஸ்” என்ற வார்த்தையானது "செங்குத்தானக் கம்பம்" அல்லது "கழுமரம்' என்பதைக் குறிக்கிறதாகும்.

E.தி இம்சீரியஸ் பைபிளின்-அகராதி சிலுவையை "கழுமரம்" என்று சொல்வதை ஒப்புக்கொள்ளகிறது.









Post a Comment

0 Comments