லிபர்த்தீனர் - அறிந்து கொள்வோம் பகுதி-18

 அறிந்து கொள்வோம்

பகுதி-18



லிபர்த்தீனர் (Libertines)


அப்போஸ்தலர் 6:9 வசனத்தில் மட்டும் லிபர்த்தீனர் என்ற பெயர் வருகிறது.லிபர்த்தீனர் என்றால் "அடிமையாக இராமல் விடுதலை பெற்ற ஒருவன்" என்று  அர்த்தமாகும்.


இந்த இடத்தில் சொல்லப்படும்

லிபர்த்தீனர் பாம்பே மற்றும் பிற தளபதிகள் மூலம் ரோமாபுரிக்கு கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட யூதர்களை

குறிக்கிறது. இவர்கள் பின்னால் விடுதலை பெற்றார்கள்.


கி. பி. 19 ஆம் ஆண்டு இந்த யூதர்கள் ரோமாபுரியை விட்டு வெளியே விரட்டப்பட்டார்கள். இவர்களில் பலர் எருசலேமுக்குச் சென்று அங்கே ஒரு ஜெப ஆலயத்தை உருவாக்கினார்கள்.

இவர்களில் சிலரே ஸ்தேவானோடு விவாதத்தில் ஈடுபட்டார்கள்.


லிபர்த்தீனரின் தத்துவம் 


முதலாம் நூற்றாண்டின் பிற்பாதியில் லிபர்த்தீனர் என்பவர்கள் கிறிஸ்தவ சபையில் கள்ளப் போதகங்களை பரப்ப துவங்கினார்கள்.


ஆத்துமா தேவனுடைய கிருபையினால் இரட்சிக்கப்படுகிற படியால், சரீரத்தைக் குறித்துப் நாம் கவலைப்பட வேண்டியதில்லை, விருப்பப்படி வாழலாம் என்று இவர்கள் போதித்தார்கள்.


“பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று” (ரோமர் 5:20) என்ற வசனத்தை எடுத்துக் கொண்டு, நாம் பாவம் செய்தாலும் கிருபையினால் இரட்சிக்கப்படுவோம் என்று சொல்லி, பரிசுத்த வாழ்க்கை வாழ்வதை இவர்கள் புறக்கணித்தார்கள்.


காம t:4).


நமது தேவனுடைய கிருபையை

விகாரத்துக்கேதுவாகப்புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; 

அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது” என்று யூதா தனது நிருபத்தில் கடுமையாக எச்சரித்திருக்கிறார் (யூதா:1:4)


சோதோம், கொமோராவின் மக்களைப் போல "சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டை பண்ணி, மகத்துவங்களை தூஷிக்கிறார்கள் என்றும் யூதா எச்சரித்திருக்கிறார் (வச. 8). இஸ்ரவேலரைப் பாலுறவு 

ரீதியான பாவத்தில்

விழப்பண்ணிய பிலேயாமின் தந்திரத்தை இவர்கள் பின்பற்றுகிறார்கள்!


மோட்சப் பயணம் நூலை எழுதிய ஜான் பனியனின் காலத்திலும்கூட இந்தத் தத்துவத்தை பின்பற்றியவர்கள் இருந்தார்கள். பனியன் தனக சுயசரிதை நூலில் இவர்களைக் கடிந்து கொண்டதை குறிப்பிடுகிறார்….






Post a Comment

0 Comments