அறிந்து கொள்வோம்
பகுதி -23
துருக்கியில் உள்ள பைபிள்.
1500 ஆண்டுகள் பழமையான பைபிள் ஒன்று கிடைத்திருக்கிறது.துருக்கியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் அது இன்றும் உள்ளது.
ஆனால், அதை படிக்க யாரும் ஆர்வம் காட்டவே இல்லை.
பல ஆண்டுகளாக இந்த பைபிளை அதிக ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். ஆய்வின் முடிவில் இப்புத்தகத்தை பற்றி பல்வேறு விளக்கங்கள் கொடுத்தார்கள். அதில் இப்புத்தகம் சில உண்மைகள் மற்றும் பல புனையப்பட்ட விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள்.
இந்த புத்தகம் காலத்தின் சோதனையாக நமக்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் பல வேத ஆராய்ச்சியளார்கள் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்ட கதைகள் மற்றும் வரலாறுகள் சரியானது என்றும் ஒரு கூட்டம் தவறு என்றும் பல ஆண்டுகளாக விவாதித்தும் தர்க்கம் பண்ணியும் வருகிறார்கள்.
இந்த புத்தகத்தில் உள்ளே
இந்த புத்தகத்திற்குள் சில வரலாற்று
நூல்கள் இருக்கிறது அவற்றில் இருப்பது என்னவென்றால்......
"இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது அவர் காப்பாற்றப்பட்டார் என்றும்
இயேசு சிலுவையில் துன்பப்படுவதற்கு முன்பே பரலோகத்திற்கு எழுந்து சென்றார், அவரைக் காட்டிக் கொடுத்த சீடன் யூதாஸ் தான் அவருக்கு பதிலாக சிலுவையில் அறையப்பட்டார்"
என்று இந்த புத்தகத்தில் இருப்பதாக இந்த புத்தகத்தைபடித்தவர்களின் கூறுகிறார்கள்.
"". இது நம்மால் ஏற்கமுடியாத ஒன்று...
வத்திகான் அறிவிப்பு :
வத்திகன் தரப்பு ஒரு கேள்வி எழுப்பியது.
இந்த பைபிள் உண்மையில் எழுதப்பட்டதா?அப்படி எழுதப்பட்டது என்று நம்பினால் இயேசு கிறிஸ்து மீது நம் வைத்து இருக்கும் ஆழமான நம்பிக்கைக்கு இந்த புத்தகத்தின் செய்தி என்ன?
எனவே இந்த கேள்விகள் மற்றும் குழப்பங்களுக்கு தீர்வு காண அந்த
பண்டைய பைபிளை குழப்பவாதி கூட்டமான வேத ஆராய்ச்சி குழுவுடன் படிக்கும்படிக்கும் ஆய்வு செய்யும் வத்திக்கன் தரப்பு துருக்கி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தது.
ஆனால் துருக்கி அரசாங்கம் இப்புத்தகத்தின் பக்கங்களைப் படிக்க இதிலிருந்து ஒரு நகலையும் பெற கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் டாலர்களை செலுத்த வேண்டும் என மறு அறிக்கை விடுத்துள்ளது.
எனவே இதை வத்திகன் தரப்பு
ஆராய்ச்சி செய்வார்களா? என்பது
கேள்வி குறியாய் உள்ளது.
இந்த புத்தகத்தை இன்றும் துருக்கி அருங்காட்சியகத்தில் காணலாம்.
0 Comments