அறிந்து கொள்வோம்
பகுதி -20
ராமோத் கீலேயாத்
Ramath-Gilead
"ராமோத் கீலேயாத்" என்றால்
"கீலேயாத்தின் உயரமான இடம்" என்று அர்த்தம்,
இந்தப் பட்டணம் கீலேயாத்திலுள்ள ராமோத் என்று அழைக்கிறாா்கள். (1 இரா. 4:13).
இது லேவியருக்கு ஒதுக்கப்பட்ட அடைக்கலப் பட்டணங்களில் ஒன்றாகும் (உபா. 4:42, 43).
இது காத் கோத்திரத்தின் எல்லைக்குள்ளே இருந்தது (யோசுவா 20:8; 21:38).
சீரியர் இந்தப் பட்டணத்தைப் பிடித்து வைத்திருந்தார்கள். இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் சீரியரை எதிர்த்துச் சென்ற போது தீர்க்கதரிசியாகிய மிகாயாவின் எச்சரிப்பின் வார்த்தைக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. எனவே ஆகாப் ராஜா இந்தப் போரில் காயப்பட்டு, மரித்தான்.
(1 இரா. 22:1-36).
பின்னாட்களில் யூதாவின் ராஜாவாகிய அகசியா ஆகாபின் குமாரனாகிய யோராம் கூடக் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம் பண்ணி முடிவில் சீரியர் யோராமைக் மிகவும் காயப்படுத்தினார்கள்.
(2 இரா. 8:28).
அவன் தன் காயங்களை ஆற்றிக்கொள்ளுவதற்காக யெஸ்ரயேலுக்குச் சென்றிருந்தபோது,யூதாவின் ராஜாவாகிய அகசியா அவனைப் பார்க்கச் சென்றான்.
கீலேயாத்திலுள்ள ராமோத் பட்டணத்திலிருந்த யெகூ எலிசாவின் கட்டளைப்படி தீர்க்கதரிசிகளில் புத்திரரில் ஒருவனால் இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டார்.
இவன் இஸ்ரேலின் ராஜா
யோராமைக் கொன்றுவிட்டு,
தான் இஸ்ரவேலுக்கு
ராஜாவானான்.
இப்போது இந்த இடம் மண்மேடாக காணப்படுகிறது இதற்க்கு இப்போது டெல் ராமித் என்று அழைக்க படுகிறது.
0 Comments