Tuesday, 29 June 2021

முசுக்கட்டைச் செடி அறிந்து கொள்வோம் பகுதி- 61

அறிந்து கொள்வோம்

பகுதி- 61



முசுக்கட்டைச் செடி

 மல்பெரி (Mulberry) மரம் 


இது எபிரெய மொழியில் "bakah" "அழுதல்" என்பது இதற்குரிய அர்த்தமாகும். இது நீண்ட இலைகளையும், பழங்களையும் கொண்டது இதன் இலையைப் பறிக்கும்போது, கண்ணீரைப் போன்ற வெள்ளை நிறத் திரவம் வடியும். இதனால் இந்தச் செடிக்கு இந்தப் பெயர் வந்தது,


இதே பெயரோடு ஒரு பள்ளத்தாக்கு எருசலேமுக்குச் செல்லும் வழியில் இருக்கிறது. இது "பாக்கா" என்று குறிப்பிடுகின்றன. தமிழில் இதற்கு "அழுகையின் பள்ளத்தாக்கு" என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது (சங்.84:6).


1.வேதாகமப் பின்னணி மற்றும் இடங்கள்

அ)பாக்கா பள்ளத்தாக்கு (Valley of Baca) - சங்கீதம் 84:6

எருசலேமுக்குச் செல்லும் வழியில் வறண்ட, முசுக்கட்டைச் செடிகள் நிறைந்த ஒரு பகுதி இருந்தது.

  • 'பாக்கா' (Baca) என்றால் எபிரெய மொழியில் "அழுதல்" என்று பொருள். இந்தச் செடியின் பிசின் கண்ணீர் போல வடிவதால் இப்பெயர் பெற்றது.

  • விசுவாசிகள் இந்த "அழுகையின் பள்ளத்தாக்கை" கடந்து செல்லும்போது, தேவன் அதை "நீரூற்றாக" மாற்றுகிறார். நம்முடைய கண்ணீரின் பாதையை தேவன் ஆசீர்வாதத்தின் பாதையாக மாற்ற வல்லவர் என்பதை இது காட்டுகிறது.

ஆ) முசுக்கட்டைச் செடி நுனியில் இரைச்சல் (2 சாமுவேல் 5:22-25)

தாவீது பெலிஸ்தருடன் போரிட்டபோது நடந்த இந்தச் சம்பவம் மிக முக்கியமானது.

  • தேவன் தாவீதை நேராகப் போரிடச் சொல்லாமல், முசுக்கட்டைச் செடிகளுக்குப் பின்னால் பதிவிருக்கச் சொன்னார்.

  • அந்தச் செடிகளின் நுனியில் கேட்ட இரைச்சல், தேவதூதர்களின் சேனைகள் (Heavenly Host) முன்னால் செல்வதைக் குறித்தது.

  • நாம் எப்போதும் நம்முடைய பலத்தால் போராடாமல், தேவனுடைய "சத்தத்திற்காகக்" காத்திருக்க வேண்டும். தேவன் முன்னே செல்லும்போது மட்டுமே நமக்கு வெற்றி நிச்சயம்.


2.தாவரவியல் மற்றும் உற்பத்தி சார்ந்த ஆவிக்குரிய பாடங்கள்

அ)பட்டு நூலும் - தியாகமும்

மல்பெரி இலைகளை உண்டு பட்டுப்பூச்சிகள் கூடுகட்டுகின்றன.

  • ஒரு பட்டு நூல் உருவாவதற்கு அந்தப் புழு தன்னை ஒரு கூட்டுக்குள் ஒடுக்கிக்கொள்ள வேண்டும்.

  • நம்முடைய வாழ்வில் மேன்மையான ஆவிக்குரிய "பட்டு" போன்ற குணங்கள் உருவாக வேண்டுமென்றால், நாம் உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, தேவ சமூகத்திற்குள் ஒடுங்கி இருக்க வேண்டும்.

ஆ)பழத்தின் நிறம் - கிறிஸ்துவின் இரத்தம்

மல்பெரி பழம் கறுப்பு நிறமாக இருந்தாலும், அதைப் பிழியும்போது கிரிம்சன் (Crimson) எனப்படும் கருஞ்சிவப்பு நிறச் சாறு வரும்.

  • இது கிறிஸ்துவின் பாடுகளை நினைவூட்டுகிறது. வெளியே பார்க்கும்போது சாதாரண மனிதராகத் தெரிந்த கிறிஸ்துவின் உள்ளத்திலிருந்து சிந்தப்பட்ட இரத்தம், மல்பெரி சாற்றைப் போல நம் பாவங்களைக் கழுவ வல்லது.


3.முசுக்கட்டைச் செடியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஆவிக்குரிய பாடங்கள்

  1. காத்திருத்தல் : தாவீது முசுக்கட்டைச் செடி நுனியில் சத்தம் கேட்கும் வரை காத்திருந்தான். அவசரப்பட்டுச் செயல்படாமல், தேவனுடைய நேரத்திற்காகக் காத்திருப்பது வெற்றியைத் தரும்.

  2. கண்ணீரும் ஆசீர்வாதமும்: நம்முடைய வாழ்க்கை "பாக்கா" (அழுகை) பள்ளத்தாக்கைப் போல வறண்டு போயிருக்கலாம். ஆனால், நாம் விசுவாசத்துடன் நடக்கும்போது, தேவன் அதை ஆசீர்வாதத்தின் ஊற்றாக மாற்றுகிறார்.

  3. பயன் தரும் வாழ்க்கை: மல்பெரி மரம் நிழல் தருகிறது, பழம் தருகிறது, அதன் இலைகள் பட்டு நூலை உருவாக்குகின்றன. அதுபோல கிறிஸ்தவ வாழ்வு பிறருக்குப் பயனுள்ளதாகவும், மேன்மையான குணங்களை (பட்டு போன்ற) உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும்.




Sunday, 27 June 2021

தாவீது. அறிந்து கொள்வோம் பகுதி - 60

 அறிந்து கொள்வோம்

பகுதி - 60



தாவீது. ( அன்புக்குரியவர்,  நேசர்)*


*கர்த்தருடைய இருதயத்துக்கு ஏற்ற மனிதன் என்று கூறப்பட்ட  ஒரே மனிதர் தாவீது. இதை விட வேறு என்ன வேண்டும்?*.



*நற்பண்புகள், வெற்றிகள்*


*1. சிறுவயதிலிருந்தே தேவனை நேசித்தல்*


*2. தனது உயிரை பொருட்படுத்தாது தன் பொறுப்பிலிருந்த ஆடுகள் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காக செயல்படுதல்*


*3.இசையில் நாட்டமும், திறமையும்*.


*4.தேவனை பற்றிய வைராக்கியமும் விசுவாசத்தால் வந்த தைரியம் கொண்டு போரிடுதல்*


*5.கடமை தவறாமை*


*6 தன்னை கொலை செய்ய முனைகிறவர் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவரென்பதால் அவரைக் கொலை செய்யாமல் காப்பாற்றும் அளவிற்கு தேவன் மீது உயர்ந்த மரியாதை*.


*7.எதிரியை பழிவாங்கும் எண்ணமில்லாதபோதும் நீதியை நிலைநாட்டுவதற்காக மரணதண்டனை அளித்தல்*.


*8.மற்றவர்களின் தியாகமான செயல்களுக்கு மிகுந்த மதிப்பளித்தல்*.


*9.நட்பிற்கு இரக்கனமாக தன் பகைவனின் பேரனுக்கு உயர்வளித்தல்*.


*10. தமது பாவத்தை யாரேனும் உணர்த்தினால் தாழ்மையுடன் ஏற்றுக் கொண்டு பாவத்திற்க்காக மனந்வருந்தி, மனந்திரும்பி பாவமன்னிப்புக்காக ஊக்கமாக ஜெபித்தல், இது தேவனுடைய இதயத்துக்கு ஏற்ற செயலாகும்*.


*11.தேவனை மகிமைபடுத்துவதற்காக தேவனுக்கு ஆலயம் கட்டவேண்டுமென்ற வாஞ்சை*


*12. மாபெரும் அரசானாக இருந்த போதிலும் தேவனை தேடுவதற்கு நேரம் ஒதுக்கி அனுதினமும் பல முறை தேவனைத் துதித்தல்*.


*13.அரசாக இருந்த போதிலும் குகையிலிருந்த போதிலும்  உயிர்தப்புவதற்கென ஒடும்போதும்  எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவனைத் தேடியவர்.கவிதை எழுதியவர்*.


*14. ஆவியானவரால் ஏவப்பட்டு கவிதைகள் எழுதினார்*.


*15.தாவீதின் குமாரன் என்று இயேசு அழைக்கப்பட்டது தாவிதுக்கு கிடைத்த கிருபை*.



*பெலவினங்கள், தோல்விகள்*


*1. ஒரு முறை தனது கண்களின் இச்சையை பின்பற்றியதால் விபசாரம், கபடு, கொலை, போன்ற குற்றங்களுக்குள்ளானார்*.


*2.தேவன் சொல்லாமல் தானாக இஸ்ரவேலரின் மக்கள் தொகையை கணக்கெடுக்க உத்தரவிட்டார். இதன் முலம் தேவன் மீது சாந்திராமல் தனது படைபலத்தில் சார்ந்திருக்க கூடிய அபாயம் உண்டனது.


*3. தனது குடும்பத்தினரை கர்த்தரிடம் சரியாக வழிநடத்த தவறிவிட்டார்*


*பிற குறிப்புகள்*


இடம் -  இஸ்ரவேல் நாடு


சொந்த ஊரு -  பெத்லகேம்


தந்தை - ஈசாய்.


தொழில்கள்:         மேய்ப்பர்,இசைகலைஞர்,


குடும்பம் -  ஏழு சகோதரர், பல   மனைவிகள்,பல குழந்தைகள் ,பல குழந்தைகள்..






Saturday, 26 June 2021

5-ம் சங்கீதம் சங்கீத விளக்கம்

 சங்கீத விளக்கம்


5-ம் சங்கீதம் 


சங்கீத தலைப்பு:

“கர்த்தரை நம்புகிறவர்களும்

அக்கிரமகாரரும்”.


உட்பிரிவுகள்:-

  • வசனம் .1-3 காலை தியானமும், ஜெபமும்.


  • வசனம் .4-6 அக்கிரமகாரரின் நிலை.


  • வசனம் .7 நான் எப்படி இருப்பேன்.


  • வசனம் .8 வழி நடத்துதலுக்காக விண்ணப்பம்.


  • வசனம்.9-10 துன்மார்கருக்கு எதிரான ஜெபம்.


  • வசனம். 11-12 கர்த்தரை நம்புகிறவர்களின் ஆசீர்வாதங்கள்.


விளக்கங்கள்:-


வசனம் .1-3:

- தாவீது விண்ணப்பம் செய்கிறவராகவும், தியானிக்கிறவராகவும் இருந்தார். காலைதோறும் கர்த்தரின் பாதத்தில் காத்திருந்தார். நாமும் அப்படியே செய்வோமாக.


வசனம் .4-6.

- தேவன் வெறுக்கும் ஏழு காரியங்கள் இந்த பகுதியில் உள்ளது.

 

வசனம் .7-12 

- தனக்காவும் (வச.7-8) 

தனது எதிரிகளுக்காகவும் (வச.9-10) விண்ணப்பித்த தாவீது இறுதியில் தேவனை நம்புகிறவர்களுக்காகவும் விண்ணப்பித்தார்(வச.11-12). தேவனுடைய பிள்ளைகளுக்காகவும் வேண்டுதல் செய்வது நமது கடமை.

வசனம். 7:

  •  தாவீதின் காலத்தில் உடன்படிக்கை பெட்டி இருந்த கூடாரத்தை ஆலயம் என குறிப்பிட்டனர். அதற்க்கு முந்தைய காலத்தில் சீலோவில் இருந்த ஆசரிப்பு கூடாரத்தை ஆலயம் என அழைத்தனர். (சங் 27:4; 1சாமு1:9)


  •  நானோ: வச.4-5ல் கர்த்தர் எவ்வாறு தீமையை வெறுக்கிறார் என கூறிய தாவீது “நானோ” இப்படி இருக்கிறேன் என கூறியுள்ளார். “மற்றவர் அனைவரும் பொய்யராய் இருக்கலாம், நனோ உண்மையாய் இருப்பேன். மற்றவர்கள் ஏமாற்றலாம், கெட்ட வாழ்க்கை வாழலாம், அசுத்தமான நூல்களையும், காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் விரும்பலாம், நானோ அப்படி இராமல் வேதத்தை மட்டும் விரும்புவேன். மற்றவர்கள் கெட்ட வார்த்தை பேசலாம், கெட்ட சிந்தையோடு இருக்கலாம் நானோ அப்படி இருக்கமாட்டேன்” என்பவை போன்று “நானோ” கர்த்தருக்கு உகந்தவனாக நடப்பேன் என்று தீர்மானித்து வாழ்வோம்.


  • உமது மிகுந்த கிருபையினாலே: என்னுடைய நற்செயல்களால் அல்ல, நற்பண்புகளால் அல்ல, உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்க்குள் பிரவேசிப்பேன் என்பதை தியானியுங்கள்.


வசனம்-8.

 என்னுடைய நீதியும், வழியும் சிறந்ததல்ல. எனவே உம்முடைய நீதி, உம்முடைய வழி என்கிறார் தாவீது.

வச.9-12:- வச.9-10 ஐயும் வச.11-12 ஐயும் ஒப்பிட்டு தியானித்து தேவனை நம்புகிறவர்களின் மேல் வரும் ஆசீர்வாதங்களுக்காய்  தேவனை துதிப்போம்……




 

 


Friday, 25 June 2021

4 ம்-சங்கீதம். சங்கீத விளக்கம்

 சங்கீத விளக்கம்


4 ம்-சங்கீதம் 


தலைப்பு:-

“விசுவாசிகளின் பாதுகாப்பு”


பிரிவு:-


  • வசனம்-1 ஜெபத்தை கேட்க்கும்படி வேண்டூதல்.

  • வசனம்-2 தேவனின் இரு கேள்விகள்

  • வசனம் -3 - 5 சமாதானத்திற்க்கான செயல்கள்,

  • வசனம் -6 கர்த்தரின் முகத்தின் ஒளி பிரகாசிக்க வேண்டுதல்,

  • வசனம் -7- 8 விசுவாசத்தின் விளைவு, மகிழ்ச்சி, சமாதானம், சுகம்.


வசனங்களுக்கான

விளக்கம்:-


வசனம்.3:- கர்த்தரிடம் பக்தியாய் இருப்பவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்.அவர்களின் விண்ணப்பங்களை அவர் கேட்கிறார். “என் ஜெபத்தை கர்த்தர் கேட்பதில்லை” என்று ஒரு நாளும்  யாரும் சொல்லவும் சந்தேகபடாவும் கூடாது, பதில் வர தாமதமாகலாம் அல்லது எதிர்பார்க்காத பதில் கூட வரலாம். எதுவாயினும் நமது நண்மைகே என்பதே தான் உண்மையாகும். பக்தியுள்ளவன் கர்த்தர் அவருக்கென்று தன்னை  தெரிந்து கொண்டதற்காக  கர்த்தருக்கு நன்றி சொல்ல வேண்டும். பத்தியுள்ளவனை எதிர்க்கிறவன் கர்த்தருக்கு எதிரியாக இருப்பான்.


வசனம் 4:- கோபங்கொண்டாலும் அதை அடக்கி ஆள வேண்டும். பாவம் செய்யும் அளவிற்க்கு கோபப்பட கூடாது (எபே 4:26). வீனானதை அல்ல அடிக்கடி கர்த்தரையும், அவரின் செயல்களையும், வேதத்தையுமே சிந்துத்து கொண்டிருங்கள்.


வசனம் .5:- நீதியின் பலிகள் எவை? கர்த்தருக்கு கீழ்ப்படிதல் (1சாமு 15:22; சங் 51:17), 

கர்த்தரை துதித்தல் (எபி 13:15). கர்த்தருக்கு பயந்து பரிசுத்தமாய் வாழ்வது (ரோம 12:1), 

இரக்கம் செய்தல் (மத் 9:13; 12:7).


வசனம் .6:- கர்த்தரின் முகத்தின் ஒளி நம்மீது பிரகாசித்தல் என்றால் என்ன? அவரது ஒளி (நற்பண்புகள், ஆற்றல்) நம்மீது பிரதிபலித்து மற்றவர்களுக்கு காணப்பட வேண்டும் என்பதாகும். இப்படிபட்ட விண்ணப்பம் சிறந்ததாகும். இதை உனர்ந்து இதை செய்வோமாக.


வசனம் .7 - இருவித மகிழ்ச்சிகள் உண்டு. உலக பிரகாரமான மகிழ்ச்சி, ஆவிக்குரிய மகிழ்ச்சி. இதில் உங்கள் மகிழ்ச்சி எத்தகையது?


வசனம் .8:- மாலை நேரத்தில் பாடப்பட்ட சங்கீதம் இது. நம்பிக்கை நிறைந்தது. அமைதியான நேரங்களிலும் ஓய்வெடுக்கும் பொழுதும் மனகவலை, கலக்கம் அதிகமாக தாக்குகின்றன. மாலையில் உறங்குவதில் மட்டுமின்றி, நமது வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திலும் “கர்த்தர் பார்த்துக் கொள்வார்” என்ற நம்பிக்கையோடு அமர்ந்திருந்து அவருக்கு காத்திருக்க

கற்றுக்கொள்வோமாக……




Thursday, 24 June 2021

வரங்கள் வேத ஆராய்ச்சி

 வேத ஆராய்ச்சி


வரங்கள்



  • 1.வரங்களின் பெயர்களும், எண்ணிக்கையும் - 1கொரி 12:8-10.


  • 2. வரங்களை அளிக்கிறவர் யார்? -1கொரி 12:4, 8-11.


  • 3. வரங்களை செயல்படுத்துகிறவர் யார்? (1கொரி 12: 4- 51)


  • 4. வரங்களின் நோக்கம் - தேவனுடைய வார்த்தையை உறுதிபண்ணுவது.

(மாற்கு 16:17-20; யோவான் 14:12)


  • 5. வரங்களை யார் பெற்றிருக்க வேண்டும்?

எல்லா விசுவாசிகளும்,1கொரி 12:8-11; 1கொரி 1:7; ரோமர் 1:1)


  • 6.ஒருவர் எல்லா வரங்களும் பெற்றிருக்க முடியுமா? - முடியும் (மத் 17:20; மத் 21:22)


  • 7.யாராவது எல்லா வரங்களும் பெற்றிருக்கிறாரா? - பெற்றிருக்கிறார். (யோவான் 3:34; ரோமர் 15:29; அப் 5:12)


  • 8.பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வரங்களின் அநுக்கிரகம் காணப்பட்டதா? ஆம். காணப்பட்டது. (அப் 1:5; அப் 2:4)


  • 9. வரங்களை தவறாகப் பயன்படுத்த முடியுமா - முடியும். (பிர 2:9)


  • 10. பின்வாங்கிப்போன நிலைமையிலும் வரங்களைப் பயன்படுத்த முடியுமா ?- முடியும். (பிர 2:9; 1கொரி 13:1-3)


  • 11. அசுத்த ஆவியின் கிரியை வெளிப்படும்என்று பயப்பட வேண்டுமா? வேண்டாம். தேவனுடைய பிள்ளையின் மூலமாகத் தேவ ஆவியானவர் மட்டுமே கிரியை செய்வார். (லூக்கா 11:11-13)


  • 12. வரங்கள் நிரந்தரமானதா? தற்காலிகமானதா? - ஒருவர் தனிப்பட்ட ஈவாகப் பெற்றிருக்கும்போது அது நிரந்தரமானது. (ரோமர் 11:29)


  • 13. நம்முடைய சித்தத்தின் பிரகாரம் வரங்களைப் பயன்படுத்த முடியுமா? முடியும். (1கொரி 14:15,23-32


  • 14. வரங்களைப் பயன்படுத்தாமல் புறக்கணிக்க முடியுமா? - முடியும். (1தீமோ 4:14; 2தீமோ 1:6)


  • 15. வரங்களை எப்பொழுது பயன்படுத்த வேண்டும்? தேவைப்படும்போது கொரி 12:7; 1கொரி 14:3-6,12,1726)


  • 16.வரங்களை எங்கு பயன்படுத்த வேண்டும் ?- தேவைப்படும் இடங்களில் (1கொரி 12:7,12-31; 1கொரி 14:1-40)


  • 17. வரங்களை எவ்வாறு பெற்றுக் கொள்வது ?- விசுவாசத்தினாலும், ஜெபத்தினாலும் (1கொரி 12:31; 1கொரி 14:1; மத் 7:7-11)


  • 18. இன்று நமக்கு வரங்கள் தேவையா? - ஆம் தேவை. 

(மாற்கு 16:15-20)


  • 19. எந்த வரங்கள் நமக்குத் தேவையென்று

நாம் தெரிந்து கொள்ள முடியுமா? - முடியும். (1கொரி 12:31; 1கொரி 14:1,12)


  • 20. நாம் வரங்களைப் பெற்றிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?

- பரிசுத்த ஆவியானவர் நம்மூலமாகக் கிரியை செய்து தமது நோக்கத்தை நிறைவேற்றுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம் .கொரி 12: 4; 1கொரி 14:1-40)


  • 21. இந்தக் காலம் முழுவதும் வரங்கள் தொடர்ந்து கிரியை செய்யுமா? - ஆம்,கிரியை செய்யும். (மத் 3:11; மத் 28:20)


வரங்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். அவையாவன:


1. வெளிப்படுத்தலின் வரங்கள்

2. ஏவுதலின் வரங்கள்

3. வல்லமையின் வரங்கள்


 வெளிப்படுத்தலின் வரங்கள்


1. ஞானத்தைப் போதிக்கும் வசனம் (1ராஜா 3:16-28; மத் 2:20)


2. அறிவை உணர்த்தும் வசனம். 

(ஆதி 1:1-2:25; 1சாமு 3:7-15)


3. ஆவிகளைப் பகுத்தறிதல் (மத் 9:4; லூக்கா 13:16; யோவான் 2:25).


ஏவுதலின் வரங்கள்


1.தீர்க்கதரிசனம் உரைத்தல்.

 (அப் 3:21; அப் 11:28; அப் 21:11)


2.பற்பல பாஷைகளைப் பேசுதல்.

 (ஏசா 28:11; மாற்கு 16:17; அப் 2:4)


3.பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல் .1கொரி 12:10; 1கொரி14: 5,13-15,27-28)


வல்லமையின் வரங்கள்


1. விசுவாசம் (ரோமர் 4:17; யாக் 1:5-8)


2. குணமாக்கும் வரங்கள் மாற்கு 16:18)


3 அற்புதங்களைச் செய்யும் சக்தி (1கொரி 15:10, 27-31; எபி 2:3-4)....



Wednesday, 23 June 2021

அரராத்து மலைத்தொடர் அறிந்து கொள்வோம் பகுதி-59

 


அறிந்து கொள்வோம்

பகுதி-59


அரராத்து மலைத்தொடர்


(Mountains of Ararat) என்பது வேதாகமத்தில் முதல் நூலாகிய  ஆதியாகமம் நூலில்

விவரிக்கப்படுகின்ற வெள்ளப் பெருக்கின் முடிவில் நோவாவின் பேழை தங்கியஇடம் ஆகும் ஆதி 8:4.


அரராத்து மலைத்தொடர் எபிரேய விவிலியத்தில் hārēy Ǎrārāṭ (הָרֵי אֲרָרָט)

என்றும், கிரேக்கத்தில் τὰ Ἀραράτ என்றும் உள்ளது.


இரு மரபுகள்:-


வேதத்தில் குறிப்பிடுகின்ற அரராத்து மலைத்தொடர் எங்குள்ளது என்பது

குறித்து இரு முக்கிய மரபுகள் உள்ளன.


சிரிய மரபு மற்றும் திருக்குரான் மரபு:


 நோவாவின் பேழை தங்கிய

"அரராத்து மலைத்தொடர்" இன்று நாக்சிவான் அல்லது வடமேற்கு ஈரான்

என்றழைக்கப்படும் இடத்தில் இருக்கும் சூடி மலை (Mount Judi) ஆகும்.


ஆர்மீனிய மரபு, மற்றும் மேலைக் கிறித்தவ மரபு:


 நோவாவின் பேழை தங்கியஇடம் இன்றைய துருக்கி நாட்டில் "அரராத்து மலை" என்றழைக்கப்படும் இடம்

ஆகும். ஆர்மீனிய உயர்நிலத்தின் (Armenian Highland) மிக உயர்ந்த

மலையுச்சி அதுவே. முன் நாட்களில் அது "மாசிசு மலை" என்று அழைக்கப்பட்டது.


பண்டைக் கிறித்தவ எழுத்தாளரான புனித ஜெரோம் (கிபி 4-5 நூற்றாண்டு)

என்பவர் யோசேபுசு (கிபி முதல் நூற்றாண்டு) என்னும் யூத வரலாற்றாசிரியரின் குறிப்பைப் புரிந்துகொண்டதின் அடிப்படையில் மேற்கூறிய மரபு எழுந்தது.


நடுக்காலத்தில்(middle age) ஆர்மீனிய மரபு பரவலாக எல்லாரலும் ஏற்கப்பட்டதாய் இருந்தது கீழைக்கிறித்தவமும் மேலைக் கிறித்தவமும் நோவாவின் பேழை தங்கிய இடம் "அராரத்து

மலைத்தொடரே" என்று நம்பினர்.

இன்று, இசுலாமியக் கண்ணோட்டத்தின்படி மட்டுமே நோவாவின் பேழை தங்கிய இடம்

ஈரானிலுள்ள "சூடி மலை" என்று நம்பப்படுகிறது.


வேதாகம குறிப்பு:


ஆதியாகமம் என்னும் விவிலிய ஏடு "அரராத்து மலைத்தொடர்" எனக்

குறிப்பிடுவது ஒரு தனிப்பட்ட மலையை அல்ல, மாறாக ஒரு பொதுவான மலைப்

பிரதேசத்தையே  என்று அறிஞர்கள் விளக்குகின்றனர். விவிலியத்தில்

வருகின்ற அரராத்து அசீரிய மொழியில் "உரார்த்து" (Urartu) என்றும் பாரசீக

மொழியில் "ஆர்மீன்யா" (Arminya) என்றும் வரும். அந்த அரசு வான் ஏரிப்

பகுதியை உள்ளடக்கியிருந்தது. 

அதுவே கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரடோட்டசு (Herodotus) என்பவரின் காலத்திலிருந்து "ஆர்மீனியா" என்று

அழைக்கப்படலாயிற்று.


"யூபிலி நூல்" என்ற தள்ளுபடி ஆகமங்களில் படி நோவாவின்

பேழை அரராத்து மலைத்தொடரில் அமைந்திருந்த "லூபார்" என்னும் மலையுச்சியில் தங்கியது.


இலத்தீன் மொழிபெயர்ப்பில்;


வுல்காத்தா (கிபி 4ஆம் நூற்றாண்டு) என்னும் விவிலிய இலத்தீன்

மொழிபெயர்ப்பு "பேழை ஆர்மீனிய மலைத்தொடரில் தங்கியது.

இலத்தீனில் அது புது-வுல்காத்தா என்னும் தற்கால மொழிபெயர்ப்பில் (1979) "அரராத்து மலைத்தொடரில்" (இலத்தீன் -montes Ararat) என்று மாற்றப்பட்டது.


வரலாற்றாசிரியர் தரும் விளக்கம்:-


யோசேபசு (கிபி முதல் நூற்றாண்டு) என்னும் பண்டை யூத வரலாற்றாசிரியர்

"யூதர்கள் வரலாறு" (Antiquities of the Jews) என்னும் நூலில் நோவாவின் பேழை "ஆர்மீனியாவிலுள்ள ஒரு மலையுச்சியில் தங்கியது"  என்று குறிப்பிட்டுள்ளார்.




சர் வால்ட்டர் ராலே (16-17 நூற்றாண்டு) என்பவர் "உலக வரலாறு" என்னும் தம்முடைய நூலில் "அரராத் மலைத்தொடர்" பற்றி விரிவாக எழுதியுள்ளார். அது ஆர்மீனிய

மலைத்தொடரை மட்டுமன்றி, அதற்குக் கிழக்கே அமைந்த மலைப்பகுதியையும்

குறிக்கும் என்பது அவர் கருத்து….






Tuesday, 22 June 2021

வாயின் வார்த்தைகள்.அறிந்து கொள்வோம் பகுதி - 58

 அறிந்து கொள்வோம்

பகுதி - 58


வாயின் வார்த்தைகள்



மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 12:36)


தேவ பிள்ளைகிய நம் நியாயத்தீர்ப்பில் தப்பிக்க வேண்டுமானால் நாம் பேசும் வார்த்தைகள் கூட கிறிஸ்துவுக்கு  ஏற்றதாய் இருக்கவேண்டும்.


பரிசுத்த வேதம் சொல்லும் "பேசக்கூடாத பேச்சுகள்"


1. பெருமையான வார்த்தைகளை பேசக்கூடாது - யாக் 3:5


2. மேட்டிமையான வார்த்தைகளை பேசக்கூடாது - 1 சாமு 2:3


3. அகந்தையான வார்த்தைகளை பேசக்கூடாது - 1 சாமு 2:3


4. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது

    - சங் 75:4


5. அதிகமான வார்த்தைகளை பேசக்கூடாது - மத் 5:37


6. கிழவிகளின் கட்டுக்கதைகளை பேசக்கூடாது.- 1 தீமோ 4:7


7. வீணான பேச்சுகளை பேசக்கூடாது

   - மத் 12:36


8. கடுஞ் சொற்களான வார்த்தைகளை      பேசக்கூடாது - நீதி 15:1


9. நம்மை நாமே புகழ்ந்து பேசக்கூடாது

    - நீதி 27:2


10. நாம் செய்த காரியங்களை நாமே புகழ்ந்து பேசக்கூடாது - நீதி 20:6


11. தீமையை பேசக்   கூடாது

       - யோபு 27:3


12. துர்ச் செய்தியை பேசக்கூடாது

‌         - எண் 13:33


13. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது

       - எபேசி 5:4


14. புத்தியீனமானவைகளை பேசக்கூடாது - எபேசி 5:4


15. யாரையும் பரியாசம் பன்னி பேசக்கூடாது - எபேசி 5:4


16. யாரையும் சபித்தல் கூடாது

     - யாக் 3:10


17. மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேசக்கூடாது.- நீதி 12:18


18. இறுமாப்பான வார்த்தைகளை பேசக்கூடாது - யூதா:16


19. கோள் செல்லுதல் கூடாது

         - லேவி 19:16


20. நாவினால் புறங்கூறுதல் கூடாது

       - சங் 15:3


21. பிரயோஜனமில்லாத வார்த்தைகளை பேசக்கூடாது - யோபு 15:3


22. தர்க்கத்தை உண்டு பண்ணும் வார்த்தைகளை பேசக்கூடாது.- யோபு 15

 

23. ஒய்வு நாளில் சொந்த பேச்சை பேசக்கூடாது - ஏசா 58:13


24. கபடான வார்த்தைகளை பேசக்கூடாது.- சங் 120:2, 3


25. கடினமான வார்த்தைகளை பேசக்கூடாது - சங் 94:4


26. கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது - சங் 64:4


27. தகாத காரியங்களை பேசக்கூடாது

        - 1 தீமோ 5:13


28. மற்றவர்களை குற்றவாளியாக தீர்த்து பேசக்கூடாது - ரோ 2:1


29. இச்சையான வார்த்தைகளை பேசக்கூடாது - 1 தெச 2:5


30. பதற்றமுள்ள வார்த்தைகளை பேசக்கூடாது - நீதி 29:20


31. தந்திரமான வார்த்தைகளை பேசக்கூடாது - 2 பேது 2:3


32. விரோதமான பேச்சுகளை பேசக்கூடாது - 3 யோ :10


33. மாயையைக் குறித்து பேசக்கூடாது

       - சங் 144:8


34. ஆகாத சம்பாஷணைகள் கூடாது

       - 1 கொரி 15:33


35. பொய்யான வார்த்தைகளை பேசக்கூடாது - சங் 63:11


36. கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது - சங் 54:4


 எதை  பேசவேண்டும்


1.கர்த்தர் செய்த அதியசங்களை யெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

      - 1 நாளாகமம் 16:9


2.பிறனோடே உண்மையைப் பேசுங்கள்;

        - சகரியா 8:16


3.பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.

       - எபேசியர் 4:29….



நளதம் (Spikenard) // வெள்ளைக்கல் பரணி (Alabaster box) // அறிந்து கொள்வோம் பகுதி -155 //

அறிந்து கொள்வோம் பகுதி -155 நளதம் (Spikenard) மற்றும் வெள்ளைக்கல் பரணி (Alabaster box)  விவிலிய நூலில் வரும் நளதம் என்னும் தைலம் மணம் மிகுந்...