அறிந்து கொள்வோம்
பகுதி - 139
அழுகையின் பள்ளத்தாக்கு
( The valley of BACA)
பொருள்:- weeping,weeper.
அழுதல்; அழுகிறவர்,கண்ணீர் வடிக்கிறவர்.
ஆங்கிலத்தில் "BACA" என்று சொல்லப்பட்ட இந்த இடம் எதுவென்று, எங்கோ என்று கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் இந்த பெயரில் பாலஸ்தீனத்தில் ஒரு இடம் இருக்கிறது என்கிறார்கள்.
பலரின் கருத்து என்னவென்றால் சீயோன் மலைக்குக் கீழேயுள்ள இன்னோம் பள்ளத்தாக்கு தான் இது என்றும் இன்னோம் பள்ளத்தாக்கும் ரெப்பாயிம் பள்ளத்தாக்கும் பிரியும் இடத்தில் இது இருக்கிறது என்றும் சொல்லுகின்றர்கள்.
இங்கு இருக்கும் ஒருவகை செடியின் இலைகளைப் பறிக்கும்போது கண்ணில் கண்ணீர் சுரப்பதுபோன்ற ஒரு திரவம் சுரக்கும், வட்டவடிவப் பெரிய பழங்கள் காய்க்கும் குங்கிலிய வகைப்புதர்ச்செடி இருப்பதாகக் கூறப்படுகிறது.
கண்ணீர் போன்று பிசினை வடியப்பண்ணும் weeper என்னும் பெயருடைய மரத்தை BACA என்னும் இவ்வார்த்தை குறிக்கிறது .
இந்தப்பள்ளத்தாக்கில் இருந்து புறப்பட்டு வரும் 5 நீரூற்றுகள் வெகுதூரமாக கடைசி மட்டும் பாய்ந்து செல்லாமல் கண்ணிலிருந்து வடிந்து கன்னங்களிலேயே (மறைந்து) சுவறிப்போகும், கண்ணீர்போல குறுகிய தூரத்திலேயே காய்ந்து சுவறிப் போய்விடும் என்று சொல்லப்படுகிறது. நாம் அடிக்கடி துயரத்தால் திரும்பத் திரும்பக் கண்ணீர் வடிக்கும் போது அது வழிந்தோடி நமது கன்னங்களிலேயே சுவறிப் போகிறதை இந்த அழுகையின் பள்ளத்தாக்கு சுட்டிக்காட்டுகிறது. குங்கிலியப் பிசின் வடிக்கும் குங்கிலிய மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கு என்றும் மூலபாஷை விளக்கமளிக்கிறது.
எப்படியே சீயோனுக்குச் செல்லும் வழியில் குறுக்கிடும் இப்பள்ளத்தாக்கு கண்களில் கண்ணீர் வடியப்பண்ணும் அளவுக்குக் கடப்பதற்கு மிகவும் கஷ்டமானதும் பலத்தின்மேல் பலம் அடையப்பண்ணும் என்பதும் குறிப்பிடத்தக்கது (சங்84:6)
0 Comments