ராமா || அறிந்து கொள்வோம் || பகுதி - 138 ||

 அறிந்து கொள்வோம் 

பகுதி - 138

ராமா ​​(சாமுவேல் பிறந்த ஊர்)


""ராமா" என்பதற்கு ""உயர்ந்த மேடை" என்று பொருள். இது இராமாத் கீலேயாத் என்னும் வார்த்தையின் சுருக்கமாகும். (2நாளா 22:6).


பரிசுத்த வேதாகமத்தில் ராமா என்னும் பெயரில் ஐந்து பட்டணங்கள் உள்ளன. அவற்றின் விவரம் வருமாறு:


1.நப்தலியிலுள்ள ஒரு பட்டணம் (யோசு 19:36)


2.ஆசேரின் எல்லையிலுள்ள ஒரு பட்டணம். இது தீருவிற்கு தென்கிழக்கில் 13 மைல் தூரத்தில் உள்ளது. (யோசு 19:29)


3.பென்யமீனிலுள்ள ஒரு பட்டணம். இது எருசலேமிற்கு வடக்கே 6 மைல் தூரத்தில் உள்ளது. (யோசு 18:25; 19:13)


4. யூதாவிலுள்ள ஒரு பட்டணம். எபிரோனுக்கு தெற்கில் உள்ளது. இது சிமியோனுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது (யோசு 19:8)


5.எப்பிராயீமிலுள்ள ஒரு பட்டணம். எல்க்கானா, அன்னாள் ஆகியோர் வசித்த ஸ்தலம். சாமுவேலின் பிறந்த ஊர். எருசலேமிற்கு வடமேற்கே 30 மைல் தூரத்திலுள்ளது. புதிய ஏற்பாட்டில் இதற்கு "அரிமத்தியா" என்று பெயர் லுூக்கா 23:51. .




Post a Comment

0 Comments