Wednesday, 4 January 2023

மிஷனெரிகளின் வாழ்விலிருந்தது || I.R.H. ஞானதாசன் ||

மிஷனெரிகளின் வாழ்விலிருந்து……

பகுதி -1


I.R.H. ஞானதாசன்




மிஷனெரி தாகத்தை ஏற்படுத்துவோம்


ஓய்வு நாள் பள்ளி பிள்ளைகள் வசனத்தைக் கேட்பதிலும், செயல்படுத்துவதினும் அதிக வாஞ்சை உள்ளவர்கள்; கற்றுக் கொண்டதை செயல்படுத்த துடிப்பவர்கள்.


பேராயர் I.R.H.ஞானதாசன் இச்சிறுவர்களை தம் ஊழியத்தில் பயன்படுத்திய விதம் அனைவருக்கும் சிறந்த எடுத்துகாட்டாகும். அவர் ஓய்வு நாள் பள்ளிக்கூடத்தில் உள்ள "பிரைமரி" பிள்ளைகளுக்கு  "மிஷனெரி டேமியன் குடும்பம்" என்று பெயரிட்டார். இந்த பிள்ளைகள் தொழுநோயாளிகளை  தாங்கினர்கள்.குளச்சல் பகுதியில் உள்ள தொழுநோய் இல்லம் இவர்களால் குதூகலமானது.


"ஜூனியர்" மாணவர்களுக்கு "மிஷனெரி சத்தியா குடும்பம்" என்று பெயரிட்டார். இவர்கள் "பாப்புவா தீவில்" நடைபெற்ற ஊழியத்தை தாங்கி உற்சாகப்படுத்தினர்கள்.


"சீனியர்"மாணவர்களை “மிஷனெரி லீச் குடும்பம்" என்று அழைத்தார். இவர்கள் "நெய்யூர் மிஷன்"பணியை வளரச் செய்தனர்கள். 


இப்படி சிறுபருவத்திலேயே குழந்தைகளுக்கு மிஷனெரி தாகத்தை ஏற்படுத்தியவர் இந்த பேராயர் ஞானதாசன். பிள்ளைகளை நடக்க வேண்டிய வழியில் நடத்திக் காட்டினார்.

இவர் 18/04/1915 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் திட்டுவிளை  என்ற இடத்தில் பிறந்தார்.16/07/1973 ஆம் ஆண்டு மாரித்தார்.


1959ம் வருடம், திருவிதாங்கூர் பேராயம் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டபோது, குமரி திருச்சபையின் முதல் பேராயராக தனது 44வது வயதில் அபிஷேகம் செய்யப்பட்டார். இவர் பிரிவினைகளை அழித்து ஐக்கியத்தை உருவாக்கினார். ஒற்றுமையை நிலை நிறுத்தினார்.


1972 ம் ஆண்டு தென்னிந்திய திருச்சபைகளின் பிரதமப் பேராயராகவும் உயர்த்தப்பட்டார்.


வீண் ஆடம்பரம் இல்லாதவர், எளிமையானவர், பழகுவதற்கு இனிமையானவர், சமுதாய அக்கறையில் மிகுந்த ஈடுபாடு உடையவர். காது கேளாதவர். பார்வையற்றவர் போன்றவர்களுக்கு பள்ளிகளை ஏற்படுத்தினார். இவருடைய காலம் திருச்சபைகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.


மிஷனெரிப் பணியின் தாகம்  நமக்குள் கொழுந்துவிட்டு எரிய வேண்டும்….


"நான் பணி செய்யும் இடமும், என் ஊதியமும் கடவுள் நிர்ணயிப்பவை. அதில் என் சுயசித்தத்திற்கு இடம் இல்லை" என்று சொன்னவர் இவர்.






Monday, 31 October 2022

கத்தோலிக்க சபைக்கு எதிராக மார்ட்டீன் லூத்தர் எழுதிய 95 காரியங்கள் ||அறிந்து கொள்வோம் பகுதி -96 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி -96


கத்தோலிக்க சபைக்கு எதிராக

மார்ட்டீன் லூத்தர் எழுதிய 95 காரியங்கள்


October 31 Reformation Day - 1571

Martin Luther 95 Theses


இதோ….….


1️⃣மனிதன் தினமும் செய்யும் பாவத்திற்கு தேவன் அனுதினமும் மனஸ்தாபப்படுகிறார்.


2️⃣பாதிரியார்கள் பாவமன்னிப்பு அளிக்க அனுமதி இல்லை. 


3️⃣பாவமன்னிப்பு உடலை வருத்திக் கொள்வதால் பெறமுடியாது.


4️⃣உள்ளான மனம் வருந்துதல் நம்முடைய வெளிப்படையான மாறுதலுக்கு வழி வகுக்கும். 


5️⃣போப்பானவருக்கு பாவங்களை மன்னிக்க அதிகாரம் இல்லை. 


6️⃣தேவன் மன்னித்தால் ஒழிய போப்பானவருக்கு மன்னிக்க அதிகாரம் இல்லை.தேவ மன்னிப்பை பற்றி அறிவிக்கவே அதிகாரம் உண்டு. 


7️⃣தன்னை தாழ்த்தி மனம் திருந்தாதவனுக்கு தேவன் பாவ மன்னிப்பை அருளுவதில்லை.


8️⃣மரித்தவர்களுக்கு தேவ வெளிபடுத்துதல் (வேதம்) எவ்வித பயனும் இருக்காது.


9️⃣போப் மரணம்,ஆபத்து,என்று யாருக்கு தீர்ப்பளித்தாலும் தேவன் நம்மீது அன்புள்ளவராகவே இருக்கிறார். 


1️⃣0️⃣அறியாமையினாலே குருமார்கள் உத்தரிப்பு ஸ்தலம் உண்டு என்று மரிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு கூறுகின்றனர். 


1️⃣1️⃣உத்தரிப்பு ஸ்தலம் என்பது திருச்சபைக்கும் அதன் சட்டத்திற்கும் எதிராக விதைக்கபட்டது.


1️⃣2️⃣மெய் மனம்திரும்புதலை கண்டறியவே தேவன் தண்டனைகளை அனுமதித்தார்.


1️⃣3️⃣சபை மரித்தவர்கள் என்று தீர்ப்பு கூறினாலும் அவர்கள் மரணத்தின் வாயிலாக எல்லா தீர்ப்புகளிலிருந்து விடுதலை ஆவார்கள். 


1️⃣4️⃣தேவபக்தி அற்று வாழ்ந்தால் உடல் நலம் குறையும்போது பயம் மேலோங்குகிறது.


1️⃣5️⃣அந்த பயமே உத்தரிப்பு ஸ்தலம் உண்டு என்று நமக்கு போதிக்கிறது வேறொன்று மில்லை. 


1️⃣6️⃣பாவமன்னிப்பின் நிச்சயம் இல்லாததால் தான் நமக்கு நரகம்,உத்தரிப்பு ஸ்தலம்,மோட்சம் என்பதை குறித்து பயம் உண்டாக்கிறது.


1️⃣7️⃣உத்தரிப்பு ஸ்தலத்தில் ஆன்மாக்களின் துன்பங்கள் குறையும் என்பது பொய்யே.


1️⃣8️⃣உத்தரிப்பு ஸ்தலம் என்பது வேதவசனத்தால் நிரூபிக்கபடவில்லை.


1️⃣9️⃣உத்தரிப்பு ஸ்தலத்தில் ஒரு ஆன்மா வாழும்பட்சத்தில் நம்மை (இரட்சிக்கபட்டவர்கள்) போல் முழு இரட்சிப்பின் நிச்சயம் அவர்கள் அடைந்ததாக நிரூபிக்கபடவில்லை.


2️⃣0️⃣பரிபூரண மன்னிப்பு என்னும் போப்பின் வார்த்தை செல்லுபடி ஆகாது.


2️⃣1️⃣பாவமன்னிப்பு சீட்டு என்பது 

ஒரு மனிதனையும் இரட்சிக்காது,மன்னிக்காது.


2️⃣2️⃣உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள மரித்த ஆத்துமாக்கள் போப்பாண்டவராலோ அவரது பூசையாலோ பாதர்களின் பூசையாலோ மன்னிக்கபட்டு நித்திய வாழ்வை அடை வதில்லை.அவர்கள் இந்த பூமியில் வாழும்போது பாவ மன்னிப்பு பெறவேண்டும். 


2️⃣3️⃣பூரணமாக்கபட்ட(மனம்திறும்பிய)

பரிசுத்தவான்களுக்கு பாவமன்னிப்பு அளிக்க நமக்கு அதிகாரம் உண்டு என்று கூறுவது. 


2️⃣4️⃣இப்படிபட்ட பொய் பாவமன்னிப்பால் அனேகர் ஏமாற்றபடுகிறார்கள்.


2️⃣5️⃣போப்பாண்டவருக்கு உத்தரிப்பு ஸ்தலம் மீது எந்த அதிகாரமும் இல்லை. 


2️⃣6️⃣நல்லெண்ணத்தின் அடிபடையில் போப்பாண்டவர் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆத்துமாக்களுக்காக வேண்டுதல் ஏறெடுக்கிறார்.ஆனால் அந்த வேண்டுதலை கடவுள் கேட்பதில்லை. 


2️⃣7️⃣காணிக்கை பெட்டியில் பணம் விழுகிற சத்தத்தின் அடிப்படையில் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள ஆத்துமாக்கள் விண்ணகம் செல்வதில்லை  


2️⃣8️⃣காணிக்கை பொருளாசையை பெருக வைக்கும்,பாவமன்னிப்பு தேவனால் அருளப்பட வேண்டும்.


2️⃣9️⃣புனித செவரினு,புனித பாஸ்கல் உத்தரிப்பு ஸ்தலத்தில் நீண்ட காலமாக இருக்க விரும்பினார்களா ? விலை கொடுத்து விண்ணேர.அவர்கள் விரும்பினார்கள் என்பது தவறு.


3️⃣0️⃣மனஸ்தாபம் என்பது உண்மையாது என்று எவராலும் நிச்சயமாக கூற இயலாது முழு பாவமன்னிப்பு மனஸ்தாபம் அளித்ததாக கூறவும் இயலாது. 


3️⃣1️⃣பாவமன்னிப்பு பத்திரத்தை புரிந்து கொண்டு வாங்குகிறவனை அறிவது அறிது,உண்மையான மனஸ்தாப படுகிறவனை காண்பது அறிது.


3️⃣2️⃣இப்படிபட்ட உறுதி அளிப்பவர்கள் (மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம்)ஆக்கினைக்கே உள்ளாவார்கள்.


3️⃣3️⃣இப்போதனைகளை

(மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம் )போதிக்கின்றவர்களை குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். 


3️⃣4️⃣மன்னிப்பு சீட்டு, சாத்திர மெந்துகள், பிரயா சித்தங்கள் இவை அனைத்தும் மனித ஏற்பாடுகளே.


3️⃣5️⃣மன்னிப்பு பத்திரத்தால் இரட்சிப்பு நிச்சயம் என்று போதிக்கிறவர்கள் மாறுபட்ட கிறிஸ்தவர்கள்.


3️⃣6️⃣மெய் மனஸ்தாபம் உடைய எந்த கிறிஸ்தவனும் இவை (பாவமன்னிப்பு சீட்டு) இல்லாமல் பூரண மன்னிப்பை கிறிஸ்துவினால் பெற்றிட உரிமை உண்டு. 


3️⃣7️⃣இயேசுவின் மீட்பால் மட்டுமே இறந்தவர்களும் உயிரோடு உள்ளவர்களும் பாவமன்னிப்பு சீட்டு இல்லாமலே எல்லா இறையருள் பாக்கியங்கள் பெற முடியும்.


3️⃣8️⃣இந்த உண்மையை கூறுவதால் போப்பானவர் கூறும் பாவ மன்னிப்பை கேவலப்படுத்த அல்ல. அதை விட தேவவார்த்தை முக்கியம் அல்லவா.


3️⃣9️⃣மன்னிப்பு பத்திரங்களின் மகத்துவத்தை மெய் மனஸ்தாபத்தின் அவசியத்தையும் எந்த பண்டிதர்களாலும் (ஒரே நேரத்தில்) விளக்க முடியாது.


4️⃣0️⃣மெய் மனஸ்தாபம் பாவத்தின் தண்டனையில் இருந்த நம்மை காப்பாற்றவும் அப்பாவத்தை வெறுக்கவும் வழிவகை செய்கிறது.


4️⃣1️⃣மன்னிப்பு சீட்டை எதிர்க்க நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் காரணம்.ஏனெனில் நற்செயல்கள் மூலம் விண் பாக்கியம் பெற முடியும் என்கிற தவறை அவர்கள் செய்திட நேரிடும்.


4️⃣2️⃣மன்னிப்பு சீட்டு ஒருபோதும் அறசெயலுக்கு நிகராகாது நாம் மக்களுக்கு போதிக்க வேண்டும். 


4️⃣3️⃣பக்குவமாக ஏழைகளுக்கு இறங்குவதும் தேவைப்பட்டவர்களுக்கு கடன் தந்து உதவுவதும் ஏற்று செயல்கள் எனவும் பணம் கொடுத்து பாவ மன்னிப்பு சீட்டு வாங்குவது தவறு என்று புரிய வைக்கக்வேண்டும். 


4️⃣4️⃣பாவ மன்னிப்பு சீட்டு அடிப்படையில் எவரும் சிறப்படைவதில்லை.மாறாக அன்பின் அடிப்படையிலேயே சிறப்படைகின்றனர்.


4️⃣5️⃣இக்கட்டில் உள்ளவர்களுக்கு உதவி செய்யாமல் பாவமன்னிப்பு சீட்டுக்கு பணம் செலுத்துகிறவர்கள் மேல் தேவ கோபம் வரும் என நம் விசுவாசிகளுக்கு போதிக்க வேண்டும்.


4️⃣6️⃣பணம் படைத்தவர்கள் தங்கள் குடும்ப நலனுக்காக சேமிக்க வேண்டுமே ஒழிய பாவமன்னிப்பு சீட்டுக்காக செலவழிக்க கூடாது என உபதேசிக்க வேண்டும். 


4️⃣7️⃣பாவமன்னிப்பு சீட்டு வாங்குவது அவரவர் விருப்பம் அதை வாங்க யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.


4️⃣8️⃣போப்பானவர் மக்களின் பணத்தை அல்ல அவர்களின் மெய்யான மனந் திரும்புதலையே விரும்பவேண்டும்.


4️⃣9️⃣பாவமன்னிப்பு சீட்டின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அதிக நன்மை அடைவார்கள். பாவமன்னிப்பு சீட்டை நிராகரித்து கடவுள் பயம் அற்றவர்கள் அதிக மோசத்திற்கு ஆளாவார்கள் என்று போதிக்கவேண்டும்.


5️⃣0️⃣இப்பத்திர முறை கேடுகளை போப்பரசர் அறிய நேர்ந்தால் பேதுரு ஆலயம் எரிந்து சாம்பலாகட்டும் என்பாரே அன்றி வேறு எந்த வகையிலும் ஆலயத்தை கட்ட முன்வரமாட்டார் என்று போதிக்க வேண்டும். 


5️⃣1️⃣புனித பேதுருவின் ஆலயத்தை விற்றாவது அந்த மக்களுக்கு பணம் தந்து அவர்கள் சுறண்டபடுவதை தடுப்பது போப்பரசரின் கடமை என்று மக்கள் அறிய வேண்டும். 


5️⃣2️⃣போப் அரசரோ அல்லது அவரது பிரதிநிதிகளே உத்தரவாதம் தந்தாலும் பாவமன்னிப்பு சீட்டு இரட்சிப்பு தறாது என்று போதிக்க வேண்டும். 


5️⃣3️⃣பாவச் சீட்டை முன்நிறுத்தி பிரசங்கத்தை தடை செய்பவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரிகள்.


5️⃣4️⃣பிரசங்கம் முக்கியமானது. அந்த நேரத்தை பாவமன்னிப்பு பத்திரத்தை பற்றி போதிக்க கூடாது.அப்படி செய்தால் ஆண்டவருடைய வார்த்தையை அவமதிப்பதுபோல ஆகும்.


5️⃣5️⃣ஒருமுறை மணியடித்தால் ஒரு ஊர்வலம் ஒரு ஆராதனை என பாவமன்னிப்புக்காக செய்யபடும் பிரயாசங்கள் ஒழிந்து நூறுமுறை சுவிஷேசம் ஆராதனை என்னும் மணியோசை முழங்குவதை நாம் பிரபலபடுத்தவேண்டும் இதுவே போப் அரசரின் கருத்தாக இருக்க வேண்டும். 


5️⃣6️⃣போப் அரசர் தானகவே பாவமன்னிப்பு தருகிறார் என்று மக்கள் புரிந்து கொள்ள வில்லை.


5️⃣7️⃣பாவமன்னிப்பு பத்திர விற்பனையாளர்கள் விற்று தங்களுடைய பண வருவாயை பெருக்கிகொண்டுள்ளார்கள்.


5️⃣8️⃣மன்னிப்பு சீட்டு எந்த பலனையும் அளிப்பதில்லை. இயேசுவின் சிலுவை மரணம் உயிர்தெழுதல் மனிதனுக்கு பாவமன்னிப்பை தருகிறது.


5️⃣9️⃣புனித லாரன்ஸ் என்பவர் அக்கால கருத்துக்கு இசைய திருச்சபையின் ஏழைகளே திருச்சபையின் செல்வங்கள் என மொழிந்தார்.


6️⃣0️⃣கிறிஸ்துவால் அருளபட்ட திறவுகோல் திருச்சபையின் செல்வம் என்று அதிகார பூர்வமாக சந்தேகமின்றி துணிந்து கூறுகிறோம்.


6️⃣1️⃣போப் அரசரால் தீர்ப்பிடபட்ட ஆக்கிணைகளை மன்னிதிட அன்னாரின் அதிகாரமே போதுமானது. 


6️⃣2️⃣கடவுளின் மகிமை, கடவுளின் கிருபை ஆகியவற்றிலான அதிபரிசுத்த சுவிஷேசமே மெய் செல்வம் ஆகும்.


6️⃣3️⃣எனினும் இச்செல்வம் மனிதனின் இயல்புபடி வெறுக்கபடுகிறது.


6️⃣4️⃣ஆனால் இச்செல்வங்களுக்கு மாறாக மன்னிப்பு பத்திரங்கள் முதல் நிலைக்கு மாற்றபட்டுள்ளது.


6️⃣5️⃣எனவே சுவிஷேசமாகிய செல்வத்தை வலையாக பயன்படுத்தி முற்காலத்தில் செல்வந்தர்களை பிடித்தனர்.


6️⃣6️⃣தற்போது மன்னிப்பு பத்திரத்தின் வலையால் மக்களின் செல்வத்தை வாரி கொள்கிறார்கள்.


6️⃣7️⃣மன்னிப்பு பத்திரங்களையெல்லாம் மகா உன்னத கிருபை என்று குதர்க்கவாதிகள் உளறுகிறார்கள்.


6️⃣8️⃣ மட்டஆயினும் அவற்றை கடவுளின் கிருபையோடும் சிலுவையின் பக்தியோடு ஒப்பிடுகையில் அவை மிகமிக மலிவான கிருபையே ஆகும்.


6️⃣9️⃣மன்னிப்பு பத்திர பிரச்சாரம் செய்பவர்களை வரவேற்க 

அத்தியட்சர்களும்,குருக்களுக்கும் கடமை உள்ளதுதான்.


7️⃣0️⃣ஆயினும் இப்படி பிரசங்கம் பண்ண வருகிறவர்கள் தங்களுடைய சுயகதைகளை எண்ணங்களை பிரசங்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.


7️⃣1️⃣பாவமன்னிப்பு பத்திரத்தின் எதார்த்தத்தின் உண்மை தன்மைக்கு மாறாக வசனிப்பவர்கள்

புறம்பார்க்கப்படனும் சபிக்கபட்டவனுமாவான்.


7️⃣2️⃣இப்படி பிரசங்கிப்பவர்கள் கொண்டுள்ள வரம்புக்கு மீறிய அதிகாரம் மற்றும் அவர்களின் பொருளாசை ஆகியவற்றை எதிர்த்து நிற்பவன் ஆசீவதிக்கபட்டவன்.


7️⃣3️⃣பாவமன்னிப்பு பத்திர வியாபாரம் பாதிப்படையும்படி சூழ்ச்சி செய்கிறார்கள் என்று கூறி அத்தகையோருக்கு எதிராக போப் அரசர் முழங்குகிறார்.


7️⃣4️⃣ஆனால் தூய இறையன்பு வாய்மை ஆகியவை பாதிப்பு உள்ளாகும் என்பவற்களுக்கு எதிராகத்தான் போப் அரசர் இடியென முழங்கவேண்டும்.


7️⃣5️⃣ஆண்டவரின் தாயாருக்கு அவபெயர் வரும்வகையில் நிந்தனை செய்வது பெரும் குற்றம் அதை மன்னிக்கும் ஆற்றல் மன்னிப்பு பத்திரத்திற்கு உண்டு என்று என்னுவது பைத்தியகாரதனமானது.


7️⃣6️⃣சுலபமாக நம் பாவங்களை மன்னிப்பு பத்திரம் மன்னித்திடாது என்பது தான் உண்மை. 


7️⃣7️⃣தற்போதைய போப் அரசராக பேதுரு பதவி வகுத்தாலும் பெரிதான கிருபைகளை அவரால் அருள முடியாது என கூறுவது பேதுருக்கும் போப் அரசருக்கு எதிரான நிபந்தனையாகும்.


7️⃣8️⃣1 கொரிந்தியர் 12:28ன்படி பெரிதான ஈவுகளுக்காக சுவிஷேசம் ஆன்மீக ஆற்றல் மற்றும் குணபடுத்தும் வரங்கள் ஆகியவை போப்பின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை தான். 


7️⃣9️⃣போப்பரசரின் இலட்சினையில் பொரிக்கபட்டுள்ள சிலுவை சின்னம் கிறிஸ்துவின் சிலுவை சின்னம் ஒப்புமையுடையதே என்று சொல்வது தெய்வநிந்தனையாகும்.


8️⃣0️⃣இத்தகைய நிந்தனைகள் மக்கள் மத்தியில் பரப்பும் அத்தியட்சர்கள் குருமார்கள் வேத விற்பனர்கள் தேவனுக்கு பதில் கூறியே ஆக வேண்டும். 


8️⃣1️⃣தான் தோன்றிதனமான மன்னிப்பு பிரச்சார பத்திரத்தின் விளைவாக போப்பின் மீதுள்ள மதிப்பும் மரியாதைம் குறைந்து போகிறது.


8️⃣2️⃣உதாரணமாக ஆலயத்தை கட்டும் பணிக்கென பெறப்பட்டு பணத்தால் உத்தரிப்பு ஸ்தலத்தில் உள்ள 

ஆன்மாக்களை போப்பரசரால் வெளியே கொண்டுவர கூடுமானால் எல்லா 

ஆன்மாக்களையும் ஏன் வெளியே கொண்டுவர இயலாது.


8️⃣3️⃣மீட்கபட்டவர்களுக்காக ஜெபம் தேவையில்லை என்றால்,அது தவறு என்றால் இறந்தவருக்காக சடங்குகள் ஆண்டு இறுதி நினைவு கூறல் பூசைகள் ஏன் நிரூபிக்கப்படவில்லை.


8️⃣4️⃣அவபக்தி உள்ள ஒரு ஆத்துமாவை உத்தரிப்பு ஸ்தலத்தில் பணத்தால் வெளிகொணர முடியுமாகில் நல்ல ஒரு ஆத்துமாவை அன்பின் பெயரால் உத்தரிப்பு ஸ்தலத்தில் நின்று வெளிகொணர கூடாதா?


8️⃣5️⃣வேதவசனம் இப்போது செயல்படவில்லை என்றார் எப்படி பாவமன்னிப்பு பத்திரம் உயிர்பெற்றதும் செயலாற்றுவதுமாய் இருக்கும். 


8️⃣6️⃣சீசரைவி பெரும் செல்வந்தரான போப் ஏன் தன் சொந்த பணத்தை செலவிட்டு ஆலயம் கட்டாமல் ஏழை பாமர விசுவாசிகளின் பணத்தை செலவிட்டு ஆலயம் கட்ட முயற்சிக்கிறார். 


8️⃣7️⃣மெய் மனஸ்தாபத்தால் பூரண மன்னிப்பையும் பெரும் வாழ்வையும் பெற்றிடும் உரிமையாளருக்கு வேறு எதனை கொடுக்க விலைகிறார்.


8️⃣8️⃣ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே போப் அரசரால் தரப்படுகிற மன்னிப்பும் ஆசிகளும் ஒரே நாளில் நூருமுறை தரப்படுமானால் திருச்சபைக்கு இதைவிட சிறந்த சிலாக்கியம் இருக்கமுடியாது. 


8️⃣9️⃣பண வருவாயை எதிர்பார்க்காமல் ஆத்துமாக்களின் மீட்பை போப் நாடுகிறார் என்றால் எனில் சரிநிகர் திராணியுள்ளவர்களுக்கு மன்னிப்பு சீட்டைகளை ஏன் நிருத்திவைக்கிறார்.


9️⃣0️⃣தனி அதிகாரத்தை பயன்படுத்தி திருச்சபைக்கு அடக்குவது கிறிஸ்தவர்களை துக்கபடுத்துவதாகும்.


9️⃣1️⃣போப்பின் விருப்பமாகவே மன்னிப்பு பத்திரம் வழங்கப்பட்டதாக அறிவித்தால் மட்டுமே அனைத்தும் சுமூக முடிவுக்கு வரும். 


9️⃣2️⃣சமாதானம் சமாதானம் எனக் கூறியும் சமாதானம் கொடுக்க முடியாத போலி தீர்க்கதரிகள் ஒழியட்டும்.


9️⃣3️⃣சிலுவை சிலுவை என்று சொல்லி கிறிஸ்தவர்களின் துன்பம் ஒழிய செய்யும் மெய் தீர்க்கதரிகள் வாழட்டும்.


9️⃣4️⃣தண்டனை மரணம் நரகம் ஆகியவற்றையே அறிந்து கிறிஸ்துவுக்கு பின் செல்ல நாம் வழிகாட்ட வேண்டும். 


9️⃣5️⃣பல உபவத்திரவங்களோடே நாம் மோட்சத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமே தவிர போலி உத்திர வாதத்தினால் பிரவேசிக்க முடியாது என நாம் உறுதி கொள்ள வேண்டும்.


மொழிபெயர்ப்பு 

Rev.D.David (Gamaliel Bible College)





 


Tuesday, 27 September 2022

அறிந்து கொள்வோம் || பகுதி - 95 ||சங்கீதம் 119 ல் உள்ள எபிரேய எழுத்துக்களின் விளக்கம் ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 95


சங்கீதம் 119 ல் உள்ள எபிரேய எழுத்துக்களின் விளக்கம்


1.ஆலெப் - எருது ( ஏசாயா 1:3,நீதி 14:4)

2. பேத்-பரிசுத்தம் (சங்:119:9)

3.கிமெல் - திறக்கப்படும் (சங் 119:18)

4.டாலெத் - சோர்வு/அதைரியம் (சங் 119:28)

5.எ - லாபம் (சங்:119:36)

6.வௌ - விடுதலை (சங்:119:45)

7.சாயீன் -ஆறுதல் /தேற்றரவு (சங் 119:49,50,54)

8.கேத் -உபத்திரவம். துன்பம் இவைகளில் மேன்மை (சங்:119:61)

9.தேத் - துன்பம், பாடு தேவனுக்கு நேராக நடத்துகிறது (சங்:119:67,71) 

10.யோட் - நியாயத்தீர்ப்பு, நேர்மை (சங்:119:75)

11.கப் - நம்பிக்கையற்ற அந்தகாரநிலையில் தேவனே நம்பிக்கை (சங்:119:81) 

12.லாமேட்- விசுவாசத்தின் அஸ்திபாரம் (சங்:119:89,96)

13.மேம் - தியானத்தின் மகிழ்ச்சி (சங்:119:103)

14.நூன் - பிரயாணிகளின் வெளிச்சம் (சங்:119:105)

15.சாமெக் - மாறுபாடான வழி (சங்:119:113)

 16.ஆயின் - உபத்திரவத்தில் ஊக்கம் (சங்:119:121,127

17.பே - ஜீவ ஒளி (சங்:119:130)

18.த்சாடே - தேவனை பற்றிய அறிவு, நேர்மை (சங்:119:137,142) 

19.கோப் - கர்த்தரை பற்றிய தியானத்தினால் உண்டாகும் 'உற்சாகம்'(சங் 119:148)

20.ரேஷ் - வல்லமையுள்ளது (சங்:119:154,156,159) 

21.ஷின் - மீட்பு (சங்:119:166)

22. தௌ - பிரமாணத்தின் பூரணம் (சங்:119:174)





'' failed to upload. Invalid response: RpcError

Thursday, 15 September 2022

வசன அறிக்கை||

 

🕵️மத்தேயு 3:15 -இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக இப்பொழுது இடம் கொடு இப்படி எல்லாம் நீதியும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது என்றார்.அப்பொழுது அவருக்கு இடம் கொடுத்தான்.

🛐ஜெபம்:-

எல்லா நீதியையும் நிறைவேற்ற என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.


🕵️மத்தேயு 5:6 - நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்,அவர்கள் திருப்தியடைவார்கள். 

🛐ஜெபம்:-

நீதியின்மேல் உண்டாகிற பசி தாகத்திற்கு என்னை அர்ப்பணித்து திருப்தியடைகிறேன்.


🕵️மத்தேயு 5:10 -நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்;

பரலோகராஜ்யம் அவர்களுடையது.

🛐ஜெபம்:-

நீதியினிமித்தம் துன்பப்படுவதினால் நான் பாக்கியவான் என்றும், பரலோகராஜ்யம் என்னுடையது என்று ஏற்றுக்கொள்ளுகிறேன்.


🕵️மத்தேயு 6:33

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.

🛐ஜெபம்:-

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேட என்னை அர்ப்பணிக்கிறேன்.


🕵️லூக்கா 1:6 

அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.


🛐ஜெபம்:-

நான் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவனாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவனாயிருக்க என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.


🕵️ரோமர் 6:13

நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.

🛐ஜெபம்:-

நான் என் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், என்னை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவனாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, என் அவயவங்களை நீதிக்குரிய

ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறேன். 


🕵️ரோமர் 6: 16 

மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?

🛐ஜெபம்:-

நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கு அடிமையாக என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.


🕵️ரோமர் 6:19 

உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.

🛐ஜெபம்:-

அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நான் என் அவயவங்களை அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும், அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி என் அவயவங்களை நீதிக்கு

அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறேன்.


🕵️ரோமர் 8:10 

மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.

🛐ஜெபம்:-

கிறிஸ்து என்னிலிருப்பதால் என் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கிறது என்று அறிக்கையிடுகிறேன்.


🕵️1 கொரிந்தியர் 15:34

நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.

🛐ஜெபம்:-

நான் பாவஞ்செய்யாமல், நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவனாயிருக்க என்னை அர்ப்பணிக்கிறேன்.


🕵️எபேசியர் 6:14

சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;

🛐ஜெபம்:-

நான் நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவனாயிருக்கிறேன்.



🕵️எபேசியர் 2:2 

அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

🛐ஜெபம்:-

நான் முற்காலத்திலே இவ்வுலக

வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்கேற்றபடியாகவும் நடப்பதை வெறுக்கிறேன். விட்டுவிலகுகிறேன்.



🕵️எபேசியர் 2:3 

அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

🛐ஜெபம்:-

நான் முற்காலத்திலே எனது மாம்ச இச்சையின்படியே நடந்து, எனது மாம்சமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே, மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருப்பதை வெறுக்கிறேன். விட்டு விலகுகிறேன்.


🕵️தீத்து 3:3 

ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.

🛐ஜெபம்:-

முற்காலத்திலே நான் புத்தியீனரும்,

கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித

இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும்

ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர்

பகைக்கிறவர்களுமாயிருந்ததைவெறுக்கிறேன், விட்டுவிலகுகிறேன்.



🕵️1 பேதுரு 4:3

சென்ற வாழ்நாட்காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர் இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.

🛐ஜெபம்:-

சென்ற வாழ்நாட் காலத்திலே நான் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டதுபோதும்.

அப்பொழுது நான் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்ததை வெறுக்கிறேன். விட்டுவிலகுகிறேன்.


🕵️தீத்து 2:12 

நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,

🛐ஜெபம்:-

நான் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாய் ஜீவனம்பண்ண என்னை அர்ப்பணிக்கிறேன்.


🕵️எபிரேயர் 1:9 

நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்

🛐ஜெபம்:-

நான் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறேன் அதை  விட்டுவிலகுகிறேன்.


Prepared By…..

Pastor. W Samuel Selvaraj, 

 Pollachi…

Wednesday, 7 September 2022

வேத வசனத்திற்கு வேதத்தில் உள்ள வேறு சில பெயர்கள் || அறிந்து கொள்வோம்பகுதி - 94 ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 94



வேத வசனத்திற்கு வேதத்தில் உள்ள வேறு சில பெயர்கள்


1.அப்பம் - உபா 8:3

2.பலமான ஆகாரம் - எபி 5:12,14

3.பசும் பொன் - சங் 19:10

4.புடமிடப்பட்ட வெள்ளி - சங் 12:6

5.முகம் பார்க்கும் கண்ணாடி 

- யாக் 1:23,24

6.கன்மலையை நொறுக்கும் சம்மட்டி 

- எரேமி 23:29

7.இரு புறமும் கருக்குள்ள பட்டயம் - எபி 4:12 

8.களங்கம் இல்லாத ஞானப்பால் -

 1 பேதுரு 2:3

9.கூட்டில் இருந்து ஒழுகும் தெளி தேன்- சங்19:10

10.புடமிடும் அக்கினி - எரே 23:29

11.தீபம் - சங் 119:105

12.வெளிச்சம் - சங் 119:105

13.ஆவியின் பட்டயம் 

- எபேசி 6:17

14.அழிவில்லாத விதை 

- 1 பேதுரு 1:23

15.மழை, பனி - உபா 32:2.

👍Thanks to Bro Sasi Kumar 👍





Sunday, 4 September 2022

வேதத்தில் இரண்டு பெயர்கள் உள்ள நபர்கள் || அறிந்து கொள்வோம்பகுதி -93 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -93


வேதத்தில் இரண்டு பெயர்கள்

 உள்ள நபர்கள்


1.ஆபிராம் - ஆபிரகாம்


2.சாராய் - சாராள்


3.எத்திரோ - ரெகுவேல்


4.யோசேப்பு- சாப்னாத்பன்னேயா


5.யாக்கோபு-இஸ்ரவேல்


6.ஏசா-ஏதோம்


7.யோசுவா - ஒசேயா


8.சாலொமோன் - யெதிதியா


9.உசியா - அசரியா


10.பத்சேபாள் - பத்சுவா


11.பெனோனி - பென்யமீன்


12.எஸ்தர் - அத்சாள்


13.எலியாக்கீம் - யோயாக்கீம்


14.மேரிபால் - மேவிபோசேத்


15.கிதியோன் - யெருபாகால்


16.நெகேமியா - திர்ஷாதா


17.அனனினா - சாத்ராக்


18.அசரியா-ஆபேத்நேகோ


19.மீஷாவேல் - மேஷாக்


20.தானியேல் - பெல்ஷாத்சார்


21.சவுல்-பவுல்!, மெர்க்கூரி


22.பர்னபா- யோசே, யூப்பித்தர்


23.பேதுரு - சீமோன், செலோத்தே, கேபா


24.மரியாள் - மகதலேனாள்


25.தோமா - திதிமு


26.யோசேப்பு - பர்சபா


27.யூதா, சீலா - பர்சபா


28.சிமியோன் - நீகர்


29.யுஸ்து - இயேசு


30.யூதா - ததேயு


31.தொற்காள் - தபித்தாள்


32.ததேயு - லெபேயு


33.லேவி - மத்தேயு


34.யாக்கோபு, யோவான் - பொவொர்னகேஸ்


35.நகோமி - மாராள்


36.ஸ்காரியோத் - யூதாஸ்

Thanks to Bro.Sasikumar 









அமலேக்கியர்கள் || வேதாகம ஜாதிகள் ||

 வேதாகம ஜாதிகள்


அமலேக்கியர்கள்


வேதாகமக் காலத்தின் துவக்க நாட்களிலேயே மிகவும் பிரபலமாக விளங்கியது இந்த அமலேக்கிய ஜாதி, இது முற்படுத்தப்பட்ட ஜாதியா?அல்லது பிற்படுத்தப்பட்ட ஜாதியா? அமலேக்கியர்களுக்கு ஸ்காலர்ஷிப் உண்டா இல்லையா? என்றெல்லாம் நம்மால் சொல்ல முடியவில்லை. காரணம், அரசாங்கம் பட்டியல் போட்டு ஜாதிகளை வகைப்படுத்தும் முன்பே முற்றிலும் அழிந்து போய்விட்டது இந்த அமலேக்கிய ஜாதி.

செழிப்பான மிகப்பெரிய ஜாதி:-

இவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் மிகவும் செழிப்பாக வாழ்ந்த மிகப்பெரிய ஜாதி என்பது மாத்திரம் நிச்சயம்.

செழிப்பும் நிறையக் கூட்டமும் இருந்தால் எந்தவொரு ஜாதிக்குமே முரட்டுத்தனமும், ஆணவமும், புத்தியீனமும் ஒட்டிக்கொள்வது இயல்பு இந்த இயல்புக்கு அமலேக்கியர்களும் விதிவிலக்கல்ல.இவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் அமலேக்கியர்களில் ஒரு நோயாளி கூட நெஞ்சை நாலங்குலம் நிமிர்த்தியே நடந்தான்.தங்களுக்கு ஒப்பான நிகரான ஒருவரும் இல்லை என்பதாக அமலேக்கியர்களில் ஒவ்வொருவனும் நினைத்துக் கொண்டிருந்தான்.

பூர்வ கோத்திரம்:-

இஸ்ரவேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து கானான் நாட்டிற்கு வரும் சமயத்தில் இந்த அமலேக்கியர்கள் கானானுக்கு தெற்கே உள்ள பகுதிகளிலும், சீனாய் தீபகற்பப் பகுதியிலும் திரளாகப் பரவியிருந்தனர். யார் இந்த அமலேக்கியர்கள்? இவர்களின் பூர்வீகம் என்ன என்பது பற்றி கொஞ்சம் நாம் அறிந்து கொள்ள கொஞ்சம் என் பின்னாலேயே வாருங்கள்.வேதத்தைக் சற்றுக் கவனமாக வாசித்தால் ஏசாவின் வம்சாவளியை வாசிக்கையில் அமலேக் என்ற பெயரை வாசிக்காலம்.இந்த அமலேக் ஏசாவின் மூத்த குமாரனாகிய எலிப்பாஸ் என்பவருடைய மறுமனையாட்டியாகிய திம்னாத்துக்குப் பிறந்தவர்.(ஆதி 36: 12)

ஏதோமின் பதினான்கு பிரபுக்களின் பெயர்களை வாசிக்கும்போது அதில் அமலேக்கின் பெயரும் வருகிறது. அக்காலத்திலேயே பெயர் பெற்ற செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவன் இந்த அமலேக்.

பிரபுக்களின் வாழ்க்கை முறை:-

அக்காலத்தில் பிரபுக்கள் என்றால் வழவழப்பான கற்களில் அரண்மனை கட்டி கைநிறைய மோதிரம் போட்டு ஜிகினாச் சட்டையுடன், வலது கையில் சவுக்கும், இடது கையில் மீசையை திருகியபடியும், மொட்டை போட்ட அடியாட்கள் புடைசூழ உலாவரும் சினிமாத்தனமான பண்ணையார்கள் மாதிரி கற்பனை செய்து கொள்ளக்கூடாது.வேதம் குறிப்பிடும் அக்காலத்திலெல்லாம் பிரபுக்கள் என்பவர்கள் கொஞ்சம் அதிகப்படியான ஆடுமாடுகள் ஒட்டகங்கள், நிறைய வேலையாட்கள் பல கூடாரங்கள் என்ற வைத்துக் கொண்டு வாழ்ந்த வந்த நபர்களே பிரபுக்கள்.ஒருவன் செல்வச்சீமானா? அல்லது ஏழையா? என்பதை அக்காலத்தில் அவனிடமிருந்த கால்நடைகளின் தொகையை வைத்தே கணக்கிடப் பட்டு வந்தது நியாயமாகப் பார்க்கப் போனால் இவர்களுக்கு நிரந்தரமான வீடுகள் கூட இருந்ததில்லை. எல்லாருமே கூடாரவாசிகள் தான்.மழைத்தாழ்ச்சி உண்டாகி கிணறுகள் வற்றினாலோ, அல்லது மழைத் தாழ்ச்சி உண்டாகி தங்கள் ஆடுமாடுகளுக்கு புல் கிடைக்காமல் போனாலோ இவர்கள் தங்கள் கூடாரங்களை சுருட்டிக்கொண்டு கட்கத்தில் வைத்துக்கொண்டு கூட்டமாய் தங்கள் பிள்ளைகளையும், தங்கள் பத்துப்பதினைந்து மனைவிகளையும், வேலைக்காரர் மற்றும் கால்நடைகளையும் ஊர்வலமாய் அழைத்துக் கொண்டுபோய் புல்லும் தண்ணீரும் காணப்படும் பகுதிகளில் டென்ட் அடித்துவிடுவார்கள், இதுதான் அக்காலத்திய பிரபுக்களின் வாழ்க்கை முறை.

வேதபண்டிதர்களின் கருத்து:-

நம் அமலேக்கும் இந்த மாதிரியான வகைப் பிரபுதான் இந்த அமலேக்கின் வம்சாவளியில் தோன்றியவர்கள் தான் அமலேக்கியர்கள் என்பது பெரும்பான்மையான வேதபண்டிதர்களின் தீர்மானமான முடிவு. கொஞ்சப்பேர் மாத்திரம் இதை ஒத்துக்கொள்வதில்லை. இவர்களும் வேதப்பண்டிதர்கள் தான். "அமலேக்கியர்களுக்கும். அமலேக்கிற்கும் சம்மந்தமேயில்லை சார்" என்று நம் தலையில் ஓங்கியடித்து சொல்கிறார்கள் எப்படி அமலேக்கியர்களின் பெயரிலேயே அமலேக் இருக்கிறதே? என்று கேட்பீர்களேயானால் தொலைந்தது கதை."உட்காருங்கள் சார் பேசலாம்." என்று உங்களை அமர வைத்துவிட்டு பழனியப்பன் என்று ஒருவர் இருந்தால் அவர் பழனிக்காரராய்த்தான் இருக்க வேண்டுமா என்ன? அமலேக்கெல்லாம் பிறப்பதற்கு முன்பே அதாவது ஆபிரகாம் காலத்திலேயே அமலேக்கியர்கள் இருந்தார்கள் என்பதற்கு வசன ஆதாரம் இருக்கிறது பார்க்கிறீர்களா?" என்றபடியே தங்கள் பெரிய எழுத்து பைபிளைத் தூக்கிக் கொண்டு வந்து ஆதாரம் காட்டுவார்கள். (ஆதி 14: 7) நீங்கள் அழும்நிலைக்கு வந்து கண்களில் இரண்டு சொட்டு கண்ணீராவது காட்டுகிற வரைக்கும் ஆதாரங்களை ஊட்டிக்கொண்டேயிருப்பார்கள்.உண்மை தான். அமலேக்கியர்களுக்கும் அமலேக்கிற்கும் எழுத்தளவில் கூட சம்மந்தம் கிடையாது என்று நீங்கள் ஒத்துக்கொள்ளும் வரைக்கும் உங்களை விடமாட்டார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா?

அமலேக்கியர்கள் யார்? வேதத்தின் ஆதாரம் என்ன?

அமலேக்கியர்கள் உண்மையிலேயே அமலேக்கின் சந்ததியினர் தான் பின் ஏன் ஆபிரகாம் காலத்திலேயே அமலேக்கியர்கள் வாழ்ந்ததாக வேதம் குறிப்பிடுகிறது?ஆதியாகமத்தை மோசேதான் எழுதினார் என்பது உங்களுக்கு தெரிந்த செய்தி தான். அப்படி மோசே ஆதியாகமத்தை எழுதுகிற காலத்தில் காதேஸின் தென்புறம் மற்றும் நாகேப் பாலைவனம் ஆகியபகுதிகளில் அமலேக்கியர்களின் கைதான் ஓங்கியிருந்தது. எனவேதான் ஆதியாகமத்தில் இப்பகுதியைக் குறிப்பிட வேண்டிவந்த போது. அமலேக்கிய நாடு என்று குறிப்பிட்டாரே யொழிய, ஆபிரகாம் காலத்தில் அமலேக்கியர்கள் இருந்தார்கள் என்று குறிப்பிடவில்லை காரணம், அப்போதுதான் வேதத்தை வாசிக்கும் இஸ்ரவேலர்கள் அது எந்தப் பகுதி என்று சட்டென விளங்கிக் கொள்ள முடியும். மற்றபடி அமலேக்கியர் என்ற இனம் ஆபிரகாமின் காலத்தில் வாழ்ந்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை அதற்கான எந்தவொரு சரித்திர ஆதாரமும் இதுவரை கிடைக்கவும் இல்லை ஆக மொத்தத்தில் அமலேக்கியர் என்ற இனம் ஏசாவின் மறுமனையாட்டியின் மகனான அமலேக் என்பவரின் வம்சாவளியில் தோன்றியது என்பதே சரியான வரலாறு.

"அமலேக்" என்பதன் பொருள்

"அமலேக்" என்றால் "பள்ளத்தாக்கில் குடியிருப்பவன்" என்று பொருள். துவக்க காலத்தில் அமலேக்கியர்களின் எல்லை என்பது பாலஸ்தீனாவின் தென்பகுதியிலிருந்த காதேஸ் வனாந்திரத்தின் வரையும், மேற்கே சீனாய் மற்றும் பெனின்சுலா மலைப்பிரதேசம் வரைக்கும் வடக்கே அரேபியா வரையும் வியாபித்திருந்தது நியாயாதிபதிகளின் காலத்தில் இவர்களது எல்லை விரிவடைந்து எப்பிராயீம் மலைப்பகுதி வரையிலும் வியாபித்திருந்தது.

இஸ்ரவேலரை தடுத்த முதல் எதிரி:-

யாத்திராகம காலத்தில் இஸ்ரவேலர்கள் பயணம் செய்தபோது அவர்களுக்கு விரோதமாய் எழும்பி. அவர்களுடன் போர் செய்து அவர்கள் பயணத்திற்கு முட்டுக்கட்டை போட முயன்றவர்கள் பலர் அவர்களுள் முதன்மையானவர்கள் இந்த அமலேக்கியர்கள்தான்.தடை செய்ததில் மட்டுமல்ல, இஸ்ரவேலர்களுடன் போர் தொடுத்ததிலும் முதல் ஆட்கள் இந்த அமலேக்கியர்கள் தான். சீனாய் மலையிலுள்ள ரெவிதீமிலே இவர்கள் இஸ்ரவேலர்களை எதிர்த்தார்கள். அமலேக்கியர்கள் மிகவும் முரட்டு இனத்தினர் எது என்றாலும் அரிவாளைத் தூக்குகிற ரகம்

அமலேக்கியர்களின் தெய்வம்

அமலேக்கியர்கள் ஏசாவின் சந்ததியினர் என்றாலும், விக்கிரக வழி பாட்டையே செய்து வந்தார்கள். இவர்களது பிரதான தெய்வங்கள் "சீன்" மற்றும் "அஸ்தரோத்" என்பவையாகும். இரண்டுமே டிராகுலா வகையை சேர்ந்தவையாதலால் இவர்களது வழிபாடுகளிலும், திருவிழாக்களிலும் இரத்த வாசனை சற்றுத்தூக்கலாகவே இருக்கும் நரபலிகள் என்பது திருவிழாக்களில் சர்வ சாதாரணம். இவை தவிர சின்னச்சின்னதாய் ஏராளமான விக்கிரகங்களையும் வணங்கி வந்தனர்.தாங்கள் ஜெயித்து அடிமைகளாகப் பிடித்துக் கொண்டு வரும் மனிதர்களின் உடல் உறுப்புகளை குறிப்பாக கண், நாக்கு, விரல்கள் போன்றவற்றை கொய்து இந்த விக்கிரகங்களுக்கு காணிக்கையாக படைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். மீதி மனிதனை கருணையுடன் தகனித்து விடுவார்கள்.

அமலேக்கியர்களின் தொழில்

இவர்களுக்கு பிரதான தொழில் விவசாயம் என்றுதான் சொல்லிக் கொள்வார்கள். ஆனால் இவர்களின் முக்கிய தொழில் கொள்ளையடிப்பது. அதுவும் போர் என்ற போர்வையில் தங்களைச் சுற்றியுள்ள வேறு பல இனத்தவரின் மீது படையெடுத்து அவர்களது உடமைகள் மற்றும் கால்நடைகளை கையகப்படுத்திக் கொள்வது இவர்கள் ஸ்டைல்.

அமலேக்கியர்கள் குறித்து தேவன் உரைத்த தீர்க்கதரிசனம்

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, இதை நினைவுகூரும் பொருட்டு ஒரு புத்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடி நான் நாசம் பண்ணுவேன் என்றார். (யாத் 17:14)

மேலும் பிலேயாம் மூலம் வெளிப்படுத்தும் போதும் கர்த்தர் இந்த அமலேக்கியர்களுக்கு உண்டாகப்போகும் முடிவைப்பற்றி இப்படிச் சொல்லுகிறார்.

அமலேக்கு முந்தியெழும்புவான் ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலுமாய் நாசமாவான் (எண் 24:20)

தேவனுடைய வார்த்தை அமலேக்கியர்களுக்கு விரோதமாக இருந்தாலும் கர்த்தர் அவர்களை உடனே அழித்துவிட வில்லை கொஞ்சக் காலம் விட்டு வைத்திருந்தார்.

அமலேக்கியர் படையெடுப்பு

ரெவிதீம் யுத்தத்தில் இஸ்ரவேலர்களிடம் தோற்று ஓடின அமலேக்கியர்கள் பிரச்சனையை அத்துடன் விட்டுவிடவில்லை. மீண்டும் தங்களை பலப்படுத்திக்கொண்டு ஒரு வருடத்திற்குப் பிறகு இஸ்ரவேலர்களுடன் மீண்டும் யுத்தம் செய்து அவர்களை முறியடித்து ஓர்மா மட்டும் துரத்தினர்கள் (எண் 14:42- 45) முறிந்தோடிய இஸ்ரவேலர்கள் பலகாலம் காதேஸிலேயே சுற்றித் திரிந்தனர். (உபா1:46).

பின்பு நியாயாதிபதிகளின் காலத்தில் மோவாபிய ராஜா எக்லோனின் தலைமையில் மீண்டும் அமலேக்கியர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு இஸ்ரவேலருடன் போரிட்டு ஜெயித்தனர். இஸ்ரவேலர்கள் 18 ஆண்டுக்காலம் இவர்களின் கீழ் அடிமை வாழ்க்கை வாழ்ந்தனர். (நியா 3:12,14)

அதன் பிறகு கொஞ்சக்காலம் கழித்து மீண்டும் கிதியோன் காலத்தில் பலமுறை இஸ்ரவேலர்கள் மேல் படையெடுப்புச் செய்தனர். (நியா 6:1-3)

இதில் ஒரு விசேஷம் கவனிக்க வேண்டும் இஸ்ரவேலர்கள் எப்போதெல்லாம் கர்த்தரின் வார்த்தையை மீறி பொல்லாப்பு செய்தார்களோ, அப்போது மாத்திரமே அமலேக்கியர்கள் இஸ்ரவேலர்களுக்கு விரோதமாக எழும்பி யுத்தம் செய்தனர். இஸ்ரவேலர்களுடன் பலமுறை யுத்தம் செய்துவந்த அமலேக்கியர்கள் பெரும்பாலும் யுத்தங்களில் ஜெயமே பெற்று வந்தாலும் அவை எதுவுமே நிரந்தரமான வெற்றிகள் அல்ல.

கர்த்தர் அவர்களைக் குறித்து சொன்ன சாபவார்த்தைகள் தலையின் மீது கத்தியாக தொங்கிக் கொண்டேயிருந்தது. காலங்கள் எவ்வளவுதான் கடந்தாலும் தேவன் சொன்ன வார்த்தைகள் நிறைவேறாமல் இருக்காது என்பது தான் உண்மை. காலங்கள் எவ்வளவுதான் போனாலும் கர்த்தர் தம் வார்த்தையை மறக்காமல் எப்படி நிறைவேற்றுகிறார் என்பதற்கு சான்று இந்த அமலேக்கியர்களின் வாழ்க்கையிலும் எத்தனை துல்லியமாய்க் காணப்படுகிறது பாருங்கள்.

அமலேக்கியரின் அழிவு

கர்த்தர் சாமுவேலை நோக்கி இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்த போது அவர்களை அமலேக்கியர் வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன் என்றார். 

(1சாமு 15:2)

சவுல் ராஜாவின் மூலம் அமலேக்கியர்களை மடங்கடித்து அவர்களு டைய ராஜாவாகிய ஆகாக் என்பவனையும் அழித்துப்போட்டார்.

அத்துடன் அமலேக்கியர்களின் தண்டனை முடிந்து போய்விட வில்லை. தாவீதின் நாட்களில் பலமுறை தாவீது அமலேக்கியர்களின் மீது படை யெடுத்து அவர்களது கிராமங்களையெல்லாம் அழித்தார். தாவீதின் இந்தச் செய்கையால் தாவீதை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த அமலேக்கியர்கள் சிக்லாகை தாக்கி தாவீதின் மனைவிகளையும் அவரது பொருட் களையும் கொள்ளையடித்து கொண்டு போய்விட்டனர் தாவீது தன்னுடைய ஆட்கள் 400 பேருடன் சென்று அமலேக்கியரை மடங்கடித்து தன்னுடைய உடமைகளைத் திருப்பிக் கொண்டார். யுத்த நேரத்தில் ஒட்டகங்களில் ஏறி 400 அமலேக்கிய வாலிபர்கள் தப்பி ஓடிப்போனார்கள். அவர்கள் தவிர வேறொரு வரையும் தாவீது உயிருடன் விட்டுவைக்கவில்லை.

தப்பி ஓடிய இந்த அமலேக்கியர்கள் சேயீர் மலைத்தேசத்தில் குடியேறினார்கள். அதன் பின்பு அமலேக்கியர்கள் இஸ்ரவேலரின் வழியில் குறுக்கிட வில்லை குறுக்கிடும் அளவிற்கு அவர்களுக்கு பலமும் இல்லை. ஆனாலும் கர்த்தர் அவர்களை விட்டுவிடவில்லை தான் சொன்ன வார்த்தையை நிறைவேற்றினார்.

எசேக்கியா ராஜாவின் காலத்தில் இஸ்ரவேலர்களின் எண்ணிக்கை பெருகினபோது கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் தங்களை சுற்றியிருந்த பகுதிகளின் மேல் படையெடுத்து அங்கிருந்தவர்களை ஜெயித்து,தாங்கள் ஜெயித்த அந்தந்தப் பகுதிகளில் குடியேறினார்கள்.அதன்படியே சிமியோனின் மனிதர்களில் சுமார் 500 பேரும், இஷியின் குமாரர்களான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும் சேயீர் மலைத்தேசத்திற்குப் போய் அந்தப் பகுதியைப் பிடிக்கும்படி யுத்தம் செய்தனர். அங்கு குடியிருந்தவர்களோ அமலேக்கியர்கள். இஸ்ரவேலர்களின் தாக்குதலைச் சந்திக்கப் பெலனின்றி அமலேக்கியர்கள் யாவரும் வேருடன் இஸ்ரவேலர்களின் கையில் இரையாயினர்.அதன்பின்பு அமலேக்கியர்கள் என்று ஒரு இனமே இல்லாமல் போய்விட்டது.


அமலேக்கியர்கள் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்




காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) // விழிப்புணர்வு பதிவு

ஒரு விழிப்புணர்வு பதிவு    காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño)   காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) என்பது உலகையே அச்சுறுத்தும் ஒரு ...