Tuesday, 30 August 2022

பாரான் || அறிந்து கொள்வோம் || பகுதி -92 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி -92


பாரான்


(Paran - place,Mount and wilderness)


அர்த்தம்:-

(அலங்கார வேலைப்பாடு,பெரும் குகைகளின் இடம்,அழகு படுத்துதல், அழகு, மகிமை, ஆபரணம்)


உபாகமம் 1:2 -ன் படி இது ஒரு இடம்.


உபாகமம் 33:2-ன் படி இது ஒரு மலை.


எண்ணாகமம் 10:12,12:16 - ன் படி இது ஒரு வனாந்திரம்.


கானான் தேசத்திற்கு தெற்கே உள்ள ஒரு மலை தேசம். இது மோவாப்புக்கு தெற்கே இருந்த ஒரு வனாந்தரம். இதற்கு வடக்கே பெலிஸ்திய தேசம் மேற்கே ஏத்தாம் வனாந்திரம் தெற்கே சீனாய் வனாந்திரம் கிழக்கே அராபா பள்ளத்தாக்கு இவைகளின் எல்லையாக இருந்தது. இங்கு இந்த இடம் கல் பூமியும் மணல் தரையுமாய் இருந்தது,அதற்குள் தான் சீன் வனாந்திரம் சேர்ந்திருந்தது, எகிப்தில் இருந்து இஸ்ரவேலர்கள் செல்லும் வழி இதுவாக இருந்தது இதனால் இதை இந்நாள் வரைக்கும் "அலைந்து திரிகிறதின் வனாந்தரம்" என்று அழைப்பார்கள்.


🌼 ஆதியாகமம் 21:21 

 ஆகாரும் இஸ்மவேலும் இங்கு வாசம் செய்தார்கள்.இஸ்மவேல் எகிப்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.


🌼எண் 10:12,12:16,13:3,26,உபா 1:1 இஸ்ரவேலர்கள் இங்கு சில வருடங்களாக சஞ்சரித்தார்கள்.சீனாய் வனாந்தரத்திற்கு பின்பு மேகம் இந்த வனாந்தரத்தில் தான் தங்கிற்று.


🌼1 சாமுவேல் 25:1

சாமுவேலின் மரணத்திற்கு பின்பு தாவீது இங்கு சில காலம் இருந்தான்.


🌼1 இராஜ 11:17-18 

சாலமோனின் விரோதி ஆதாத் மீதியானிலிருந்து எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் போகும் வழியில் இங்கு தங்கி சென்றான்.


🌼உபா 33:2, ஆபகூக் 3:3 

தேவன் பதினாயிரங்களான  பரிசுத்தவான்களோடு இங்கிருந்து பிரசன்னமாகி பிரகாசித்தார்.


🌼எண் 13:3,26 

மோசே இங்கிருந்து தான் கானானை சுற்றிப் பார்க்க 12 மனிதர்களை அனுப்பினார்.



Tuesday, 23 August 2022

சேபா || அறிந்து கொள்வோம் || பகுதி -91 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி -91


சேபா


🔯சேபா -1(Seba)


அர்த்தம்:-

(மாண்புமிகு, நீ குடி, குடிகாரர்)


1.காமுடைய குமாரனான கூஷின் முத்த குமாரன்.இவன் சந்ததிகள் ஆப்பிரிக்க, எத்தியோப்பிய பகுதிகளில் குடியேறினர்கள்.(ஆதி10:7,1நாளா1:9) 


2.எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியிலுள்ள இத்தேசத்தில் கூஷின் சந்ததியார் குடியேறினர்.இது ஒரு செழிப்பான நல்ல பூமி. (சங்72:10, ஏசா43:3) சபேயர்கள் இதைச் சேர்ந் தவர்களாயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.


🔯சேபா-2 (Sheba) 


அர்த்தம்:-

(அனைத்து உறுதிமொழி)


 1.கூக்ஷின் குமாரனான ராமாவின் குமாரன். (ஆதி10:7,1நாளா 1:9).


2.சேமின் சந்ததியில் ஏபேரின் இரண்டாம் குமாரனான யொக்தானின் குமாரன்.(ஆதி 10:28, 1நாளா 1:22).


3.கேத்தூராளின் 2ஆம் குமாரனான யக்க்ஷனின் மூத்த குமாரன் இவன்.(ஆதி25:3, 1 நாளா1:32).


4.சேபா ஒரு தேசமாயிருக்கலாம். இதின் ராஜஸ்திரீ சாலொமோனிடம் திரளான பரி வாரங்களுடன் வந்தாள்.(1ராஜா10:1,4,10,13, 2நாளா9:1,3,9,12).


🔯சேபா-3 (Sheba)


அர்த்தம்:-

(ஆணை, உறுதிமொழி, ஏழு, ஏழுதரம், வாரம், புனிதமான பூரண மான ஒன்று, ஆணையிடு, பூரணமான, உடன்படிக்கை, நிச்சயமில் லா எண், உடன்படிக்கை செய்த இடம், உடன்படிக்கைக்கு).


1.சிமியோனுக்குக் கிடைத்த பட்டணங்களில் ஒன்று. இதன் மறுபெயர் பெயெர்செபா ஆகும். (ஆங்கிலத்தில் Beersheba or Sheba=அல்லது சேபா) (யோசு19:2).


2.தாவீதுக்கு விரோதமாய் எழும்பி, பெத்மாக்காவாகிய ஆபேல் ஊர் மக்கள் மூலம் தலையைப் பறி கொடுத்த பேலியாளின் மகனான இவன் பென் யமீனனான பிக்கிரியின் குமாரன். (2சாமு:20:1,2, 6,7,10,13,21,22).


3.காத் புத்திரரின் வீட்டாரில் மூன்றாவதாகிய ஒருவன். (1 நாளா5:13).



🔯சேபா -4 (Shebah)


அர்த்தம்:-

(ஆணை, உறுதிமொழி, ஏழு, ஏழுதரம், வாரம், புனிதமான பூரணமான ஒன்று, ஆணையிடு, பூரணமான, நிச்சயமில்லா எண். உடன்படிக்கை செய்த இடம், உடன்படிக்கைக்கு)


ஈசாக்கின் வேலைக்காரர் நான்காவதாக வெட்டின  பெயர்செபாவிலுள்ள ஒரு துரவின் பெயர் இது.(ஆதி26:33)


🔯சேபா-5 (Zebah)


அர்த்தம்:-

(பாதுகாப்பிலிருந்து கவரப்பட்டது, (யாதொரு) பலி)


கிதியோனின் சகோதரரைக் கொன்றுபோட்ட மீதியானியரின் இரு ராஜாக்களில் ஒருவனாகிய இவனைக் கிதியோன் கொன்றுபோட்டு அவனுடைய ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக்காறைகளை அதாவது வாசனைத் திரவியங்கள் உள்ளுக்குள்ளே அடைக்கப்பட்ட ஆபரணங்களை எடுத்துக் கொண்டான்.

(நியா 8:5,6,7,10,12,15,18,21.சங்:83:11)


Friday, 19 August 2022

சேலா || அறிந்து கொள்வோம் || பகுதி -90 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி -90


சேலா 


🕎சேலா -1 (Sela)


அர்த்தம்:-

(கன்மலை, பாறை; குன்று(அ)உயரமான செங்குத்துப்பாறை, அரணான யெகோவாபோன்ற செங்குத்துப்பாறை, பாதுகாப்பான)


💡பட்டணம்:-

யுதாவின் 9-ம் ராஜா அமத்சியா  ஏதோம் தேசத்தில் உள்ள இந்த "சேலா" பட்டணத்தைப் பிடித்து அதற்கு "யொக்தியேல்" என்று பேரிட்டான்.(2ராஜா 14:7,ஏசா 16:1) 

இதன் மறுபெயர் (Petra)"பெட்ரா". 

இது உப்புக்கடலுக்கும் அகாபா வளைகுடாவுக்கும் மத்தியில் உள்ளது.


🕎சேலா-2 (Shelah)


அர்த்தம்:-

(கோரிக்கை,விண்ணப்பம், அமைதியுடைமை,சமாதானம்)


💡 மனிதன்:-

யாக்கோபின் குமாரனாகிய யூதாவுக்கும் சூவாவின் குமாரத்திக்கும் கெசீபிலே பிறந்த மூன்றாவது மகன் தான் இந்த "சேலா".(ஆதி38:5,46:12) 

ஆனால் 1 நாளா4:21ல் யூதாவின்  குமாரன் "சேலா" என்ற பெயர் பிழையாக "சேலாக்" எனக் கொடுக்கப்பட்டுள்ளது.


🕎சேலா -3 (Zelah) 


அர்த்தம்:-

(நொண்டி நடத்தல், விழுதல், இன்னல், துன்பம், கெட்டகாலம், இடுக்கண்; நிற்குமிடம், விலாஎழும்பு, வளைவு, தடைக்கல், ஒரு பக்கமாக, சரிவு)


💡பட்டணம்:-

பென்யமீனுக்குக் சுதந்திரமாக கிடைத்த ஒரு பட்டணம் தான் "சேலா"

இப்பட்டணத்தில் தான் தாவீதின் காலத்தில் சவுல்,யோனத்தானின் எலும்புகள் கொண்டுவரப்பட்டு கீசின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டது.(யோசு18:28, 2சாமு 21:14) இவைகள் கி.மு.1056 ல் நடந்தது என்று நம்பப்படுகிறது.


🕎சேலா -4 (Selah)


அர்த்தம்:-

(இசையை நிறுத்துதல், இடைநிறுத்துதல், தூக்கிப்பாடுதல். உயர்த்திப்பாடுதல், மென்மையாக்குதல், ஒருபுறமாக இங்குமங் குமாக அசைத்தல், அசையைத் தூக்கிப்பாடுதல்)


💡இசை குறியீடு:

சங்கீதப் புஸ்தகத்திலும்,ஆபகூக் புத்தகத்திலும் உள்ள பாடல்களில் கையாளப்பட்டுள்ள இந்த வார்த்தை தொங்குதல், எடை(hung up,i.e.,weight) என்று பொருள்தரும் வார்த்தையிலிருந்து வந்தது. (சங்3:2முதல் ஆபகூக் 3:13 வரை) 74 இடங்களில் இவ்வார்த்தை வருகிறது. இதைப் பற்றிய அர்த்தங்கள்:-


1.இடையில் சிறிது நிறுத்துதல்.

2.பாடியதைத் திரும்பப் பாடுதல்.

3.ஒரு பாடற்கூறின் முடிவு.

4.முழு பலத்துடனும் இசைத்தல்.

5.வணக்கமுறையில் தலையில் அல்லது உடலை வளைத்தல்.

6.திரும்பத் திரும்ப பாடும் குறுகிய சுரம் அதாவது இசை பாவனை அல்லது மெல்லிசையில் இருந்து வில்லிசைக்கும் மாற்றிக் கொள்ளுதல்.(Piano to Forte)

7.பாடலை நிறுத்தி அதை திரும்ப சிந்தித்தல்.

8. மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்துதல்.(சங்கீதம் 3:2,4,8.4:2,.9:16…ஆபகூக் 3:3,9,13.) முதலிய 74 இடங்களில் இவ்வார்த்தை வருகிறது.


🕎சேலா அம்மாலிகோத்:-

 (selah hammahlekoth)


அர்த்தம்:-

(பிரிவுகளின்/ பிரிதலின் செங்குத்து பாறை, அல்லது கன்மலை.தப்பிக் கொள்ளுதலின் செங்குத்தான கன்மலை)


💡மலை:-

யூதாவுக்கு தெற்கே மோவாப் தேசத்தில் உள்ள இந்த மலையில் தான் தாவீது தொடர்ந்த வந்த சவுல் அவனை விட்டு திரும்பி போனபடியினால் இந்த மலைக்கு "சேலா அம்மாலிகோத்" என்ற பெயர் உண்டானது.

(1 சாமுவேல் 23:28)


🕎சேலாவியர்:-

 (Shelanites)


💡மக்கள் கூட்டம்:

யூதாவின் மூன்றாம் குமாரனான சேலாவின் சந்ததியார்கள்.(எண் 26:20)


Thursday, 18 August 2022

தெகாவியர் || அறிந்து கொள்வோம் || பகுதி -89 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி -89



தெகாவியர் 

(Dehavites)

பெயரின் பொருள்

(the sickly-வியாதியான)


சிறை இறப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்கள் ஆலயங்கட்டுவதற்கு எதிராக பெர்சிய ராஜாவிடம் மனு எழுதினவர்களில் இவர்களும் ஒருவர். சமாரியாவில் குடியேறின இந்த ஜாதியாரின் பூர்வீகம் காஸ்பியன் கடலின் கிழக்கே இருக்கும் "தைக்கா" (Daikh)வாகும் இது இந்த நாட்களில் (Dehistan)"தெஹிஸ்தான்" என்று அழைக்கப்படுகிறது.


இவர்கள் ஆரிய இனம் என்று சிலர் கருதுகிறார்கள். ஏரோதுத்துஸ் (Herodotus) என்ற‌ ஆசிரியர் இவர்ளை "தாய்" (Dai or Dahi) எனப்படும் பெர்சிய நாடோடி இனத்தவர் என்று எழுதுகிறார். "காஸ்பியன்"(Caspian Sea) கடலுக்குக் கிழக்கே 'ஆசோப்"(Azof) கடலருகே இவர்கள் வசித்தவர்கள். ( எஸ்ரா 4:9)


மார்ஸ் மேடை || அறிந்து கொள்வோம் || பகுதி - 88 ||

 அறிந்து கொள்வோம்

பகுதி - 88


மார்ஸ் மேடை


Mars Hill - பெயரின் பொருள்:-

(rock of Ares, Areios Pagos,

Areopagus,a martial peak-

யுத்த தெய்வத்தின் கன்மலை, போர்சம்பந்தமான சிகரம்)


அத்தேனே பட்டணத்தைத் தோற்றுவித்த "செக் ரோப்ஸ்" தான் (Cecrops)"அரியோபகஸ்"(Areopag as) என்று அழைக்கப்பட்ட இந்த உச்ச நியாயவிசாரணை மன்றம் உருவாகக் காரணமாயிருந்தவன்.பின்னர் சோலோன்(Solon) என்பவன் இதை அதிகாரப் பூர்வமானதாக்கினான். அந்த உச்ச நியாயவிசாரணை மன்றம் (supreme tribunal) மார்ஸ் மலையில் உள்ள இந்த திறந்த வெளியில் கூடிவரும்.


"அரியோபகஸ்" என்பது அத்தேனே பட்டணத்தின் உள் அரணின்(Acropolis) வடமேற்குக் கோடியில் இருந்த பாறாங்கற்களாலான(Areopagas) நீண்டுகிடக்கும் சுமார் 60 அடி உயரமான பள்ளத்தாக்கு போன்ற ஒரு குன்று. இது தான் மார்ஸ் மேடை. "மார்ஸ்" என்பது கிரேக்கர்களின் கடல் மற்றும் யுத்த தெய்வம். சூரியனைச் சுற்றும் 8 ஆவது கோளின்(planet) பெயரும் இதுதான். 


மார்ஸ் கடவுளின் மகள் "அலிசிப்பே"(Alicippe) என்பவளை நெப்டியூனின் மகன் "ஹலிரோத்தியுஸ்"(Halirrhothius) என்பவன் பலவந்தம் செய்ததினிமித்தம் 12 கடவுள்களை நீதிபதிகளாக வைத்து அவர்கள் முன்னிலையில் அவனை மார்ஸ் இங்கே கொல்ல முயன்றான்.

என்று கிரேக்கக்கதை இவ்விதமாகச் சொல்லுகிறது.


பவுல் அத்தேனே பட்டணத்தின் சந்தை வெளியில்(agora) தினந்தோறும் சம்பாஷித்தான். அவனை இந்த மார்ஸ் மேடைக்கு அழைத்துச்சென்று பவுலின் கருத்தைக் கேட்டனர். இவ்விடத்தில் நியாயாதிபதிகள் கூடிவருவது வழக்கம். பவுல் தேவ பக்தி நிறைந்த அத்தேனருக்கு இதின் நடுவிலே நின்று அவர்களால் அறியப்படாதிருந்த மெய்யான தெய்வத்தைப்பற்றியும், உயிர்த்தெழுதல்பற்றியும் உபதேசித்தான்.

சிலர் அவனைப்பற்றிக்கொண்டு விசுவாசிகளானார்கள்.அவர்களில் மார்ஸ்மேடை நியாயாதிபதிகளில் ஒருவனான "தியொனீசியு" என்பவனும், "தாமரி" என்கிற ஸ்திரீயும், வேறு சிலரும் இருந்தனர்.(அப்17:22).


இரு நபர்கள் குறித்த சிறு குறிப்பு


🌾தியொனீசியு (Dionysius)


பெயரின் பொருள்:-

(கிரேக்க மதுக்கடவுளுக்கு அற்பணிக்கப்பட்ட, திராட்சத் தெய்வம். களியாட்டுச் செய்பவர், பிரகாசமான தெய்வம் அல்லது சூரியன், தெய்வீகமாகத் தொடப்பட்ட, தெய்வீகமாகக் குத்தப்பட்ட, திராட்சைஆலைக்கு அற்பணிக்கப்பட்டவன்)


அத்தேனே பட்டண மார்ஸ்மேடை நியாயாதிபதிகளில் (Areopagite) ஒருவனான இவன் பவுலின் பிரசங் கத்தினால் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டான்.(அப்17:34) அத்தேனே பட்டணத்தின் முதல் கண்காணி என இவன் கருதப்படுகிறான். 

அங்கு இவன் இரத்தச்சாட்சியாக மரித்தான் என சொல்லப் படுகிறது. முன் நாட்களில் இவன் கிரேக்க மதுக்கடவுளாகிய "பாக்கஸின்" பக்தனாயிருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.



🌾தாமரி (Damaris) 


பெயரின் பொருள்:-

(பண்பார்ந்த,கனிவான,மட்டமைதி; கிடாரி, நுகஞ்சுமக்கும் மனைவி)


பவுல் அத்தேனேயில் மார்ஸ்மேடையில் பிரசங்கித்த போது விசுவாசியான சகோதரி. இவள் தியொனீசியு வின் மனைவி என்று நம்பப்படுகிறது. (அப்17:34).



நளதம் (Spikenard) // வெள்ளைக்கல் பரணி (Alabaster box) // அறிந்து கொள்வோம் பகுதி -155 //

அறிந்து கொள்வோம் பகுதி -155 நளதம் (Spikenard) மற்றும் வெள்ளைக்கல் பரணி (Alabaster box)  விவிலிய நூலில் வரும் நளதம் என்னும் தைலம் மணம் மிகுந்...