அறிந்து கொள்வோம்
பகுதி -56
சிங்கம் (உருவகம்)
1. கெர்ச்சிக்கிற ஒரு மிருகம்
(வெளி 10:3)
பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பரிப்பார்கள் (துதி) சங் 132:16. நீதிமான்களின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பிர சத்தம் உண்டு
(சங் 118:15).
2.பின்னடையாது -நீதி 30:30.
தேவ ஜனங்கள் அவிக்குரிய வாழ்க்கையில் பின்னடைய கூடாது.
விசுவாசத்தினாலே
நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் - எபி 10:38. பாடுகளில், உபத்திரங்களில் பின் வாங்கி போய் விட கூடாது.
3.தைரியமான மிருகம் -நீதி 28:1
நாமும் சிங்கத்தை போல தைரியமாக இருக்க வேண்டும். நம்முடைய இருதயம் குற்றமற்றதாக இருந்தால் தைரியம் காணப்படும்.1 யோ 3:21
விசுவாசத்தினால் நமக்கு தைரியம் கிடைக்கும்- எபேசி 3:12.
4. பலமானது -நியாதி 14:18.
நாமும் ஆவிக்குரிய வாழ்க்கையில் பலமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் பலத்தின் மேல் பலன் அடைந்து தேவ சந்நிதியில் வந்து காணப்படுவார்கள் - சங் 84:7.
5. அதன் கெபி ஆகாரத்தினால் நிரம்பி இருக்கும் -நாகூம் 2;12.
தேவபிள்ளைகளுக்கு ஆகாரம் வேத வசனம் (உபா 8:3)வேத வசனங்களை நமது உள்ளத்தில் சேர்த்து வைத்து கொள்ள வேண்டும். அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தை பார்க்கிலும் அதிகமாய் காத்து கொண்டேன்.யோபு 23:12.
6.சிங்கம் தன் குட்டிகளுக்கு ஆகார குறைவு இல்லாதபடி பார்த்துக் கொள்ளும்.
அது போல நமது பரம தகப்பன் நமது தேவைகளை எல்லாம் தருகிறார், சந்திக்கிறார். (பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளை கொடுக்க அறிந்திருக்கும் போது - மத் 7:11.
7. பயப்படாது
தேவ பிள்ளைகளாகிய நாம் இந்த உலகத்தில் பயப்பட கூடாது. ஏன் இப்படி பயப்பட்டிர்கள், ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று என்றார். மாற்கு 4:40 விசுவாசம் குறைந்தால் பயம் வரும்.
8. மறைவிடத்தில் தங்கும்-புல 3:10.
மறைவிடம் தாழ்மையை குறிக்கும். நமது பேச்சு, உடை, கிரியை அனைத்திலும் தாழ்மையை வெளிபடுத்த வேண்டும்.
9. பிசாசு சிங்கம் போல நம்மை விழுங்க சுற்றி வருகிறான்.
சிங்கங்கள் வாயை அடைத்தார்கள்.
எபி 11:33.
சிங்கத்தின் வாயில் இருந்து இரட்சிக்கபட்டேன்.
2 தீமோ 4:17 -பிசாசை நாம் ஜெயிக்க வேண்டும்.
10.காட்டுக்கு ராஜா.
நாமும் 1000 வருஷ அரசாட்சியில் ராஜாவாக இந்த உலகத்தை ஆளுவோம் வெளி 1:6.
0 Comments