அறிந்து கொள்வோம்
பகுதி -43
மீதியான் / மீதியானியர்
"மீதியான்" என்ற எபிரெய பெயருக்கு "சண்டை"என்று பொருள்.
பழைய ஏற்பாட்டில் "மீதியான்" என்ற பெயரில் ஒரு நபரும் ஓர் இடமும் உள்ளது.
1. ஆபிரகாம், கேத்தூராள் ஆகியோரின் குமாரன்.
(ஆதி 25:1-6).
மீதியானுக்கு நான்கு குமாரர்கள் இருந்தார்கள் (1நாளா 1:33). வேதாகமத்தில் மீதியான் பற்றி வேறு எந்த விவரமும் இல்லை.
ஆபிரகாமின் இரண்டாம் குடும்பத்தில் மீதியான் முக்கியமானவன். மீதியான் மற்றும்அவருடைய குடும்பத்தாரை பற்றி வேதாகமத்தில் 67 இடங்களில் கூறப்பட்டுள்ளது.
ஏசா மீதியானை வென்றான்.
(ஆதி 36:35),
மோசே மீதியானுடைய தேசத்திற்குத் தப்பி ஓடிப்போய், அங்கு மீதியானிய ஸ்திரீ ஒருத்தியை திருமணம் செய்து கொண்டான்.(யாத் 2.15-16; யாத் 31; யாத் 4:19; யாத் 18:1)
மீதியானியர் இஸ்ரவேலுக்கு ஒரு
கண்ணியாக இருந்தார்கள்.
(எண் 2:51-15)
அவர்களுடன் யுத்தம் பண்ணும் படி தேவன்இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்டார். (எண் 25.16-18; எண் 31: 1-20),
பல நூற்றாண்டுகளாக,
இஸ்ரவேலர்கள் மீதியானியரோடு அடிக்கடி யுத்தம் பண்ணினார்கள். (யோசு 13:21;நியா 6:1-2; நியா 7.8-25; நியா நியா 9:17),
கிதியோன் மீதியானியரை
முறியடித்தான். மீதியானியருடைய வீழ்ச்சி, “மீதியானியரின் நாளில்" "the day of Median"
என்று அழைக்கப்படுகிறது.
(ஏசா 9:4; ஏசா 10:26; சங் 83:9).
ஆபிரகாமின் குமாரன். கெத்தூராளுக்குப் பிறந்தவன்.
(ஆதி 25:2-4).
மோசேயின் காலத்தில் மீதியானியர்கள் இஸ்ரவேல் புத்திரருக்குப் பலத்த சத்துருக்களாய் இருந்தார்கள்.
(எண் 22:4-7; எண் 25:15-18; எண் 31:3-12; யோசு 13:21)
மோசே மீதியானிய ஸ்திரீயை
விவாகம் பண்ணியிருந்தார்.
(யாத் 2:15-31; யாத் 4.19; யாத் 181-27).
இவர்களுக்குஇடையே காணப்பட்ட விரோதத்திற்கு காரணம்கூறப்படவில்லை.
எண் 31- வது அதிகாரத்தின் படி மீதியானியர் உடைய தேசம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் திரும்பவும் பலுகிப் பெருகினார்கள்
திரளான ஜாதிகளுக்குத் தலைவர்களானார்கள். கிதியோனின் நாட்களில் மீதியானியர் இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக எழும்பி வந்தார்கள்.
(நியா 6:1-8:28; நியா 9.17; ஏசா 9:4;
ஏசா 10.26)
2. மீதியான் சந்ததியார் சுதந்தரித்த தேசம்.
இது யோர்தான் நதிக்கும்
சவக் கடலுக்கும் கிழக்கே அமைந்துள்ளது.
"மீதியானியர்" என்னும் எபிரெய பெயருக்கு -
"சண்டை " "strife" என்று பொருள்.
பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இஸ்ரவேல் புத்திரருக்கு சத்துருவாக இருந்த இவர்கள் மீதியானின் சந்ததியில் வந்தவர்கள். மீதியான் ஆபிரகாமின் குமாரன்
ஆகையினால் இவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடே தூரத்து உறவுக்காரர்கள் எபிரெயஜனங்களோடு இவர்கள் சிநேகமாக இருப்பதற்கு பதிலாக சத்துருவாக இருந்தார்கள்.
ஆபிரகாம் மீதியானின் குமாரர்களை கிழக்கு தேசத்திற்கு அனுப்பினார்.
(ஆதி 25.6)
அதன் பின்பு பழைய ஏற்பாட்டுக்காலத்தில் அவர்கள் கிழக்கத்திப்பத்திரர் என்று
அழைக்கப்பட்டார்கள்.
(நியா 6:3,33)
மீதியானியர்கள் இஸ்மவேலரோடு மிகவும் நெருக்கமாக இருந்தார்கள்.
(ஆதி 37:28; நியா8.24).
மீதியானியர்கள் யோசேப்பை அவனுடைய சகோதரனிடமிருந்து விலைக்கு வாங்கி அவனை எகிப்து தேசத்தில் மறுபடியும் விற்றுவிட்டார்கள்.
(ஆதி 37:25-36)
மோசே மீதியானிய ஸ்திரீயை விவாகம் பண்ணினான். (யாத் 2:15), சிப்போராளும், எத்திரோவும் மீதியானியர்கள் (யாத் 2.21; 31). இவர்களுடைய காலத்திற்கு பின்பு இஸ்ரவேலரும் மீதியானியரும் சிநேகமாக இருக்கவே இல்லை.
மோசேயின் காலத்திற்கு பின்பு மீதியானியர்கள் இஸ்ரவேலருக்கு தொடர்ந்து சத்துருவாக இருந்தார்கள். அவர்கள் மோவாபியரோடு சேர்ந்து கொண்டு, இஸ்ரவேலை
சபிப்பதற்கு, பிலேயாமை கூலிக்கு அமர்த்தினார்கள் (எண் 22:47).
இஸ்ரவேல் புத்திரர் கானானை சுதந்தரிப்பதற்கு முன்பு
மோவாப் மீதியானியர்கள்
விக்கிரகாராதனையையும், வேசித்தனத்தையும் செய்து வந்தார்கள். அவர்கள் மூலமாக
இஸ்ரவேல் புத்திரரில் சிலர் அவர்களோடு சேர்ந்து வேசித்தனம் பண்ணினார்கள்.அதனால் தேவனுடைய ஜனங்கள் மீது கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு வந்தது எண் 25:1-9)
மீதியானியர் வேறு பிரிக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள்.
(எண் 25:16-18).
நியாயாதிபதிகளின் காலத்தில்,
கி மு 1100-ம் வருடத்தில் மீதியானியர் இஸ்ரவேலருக்கு பிரச்சனையாக இருந்தார்கள் பாலஸ்தீன தேசத்தின் மீது யுத்தம் பண்ணினார்கள். இஸ்ரவேல் புத்திரர் மலைப்பிரதேசத்துக்கு துரத்தப்பட்டார்கள். அவர்களுடைய கால்நடைகளும் தானியங்களும் கொள்ளையிடப்பட்டன.
(நியா 6.1-6).
மீதியானியருடைய கரங்களிலிருந்து இஸ்ரவேலரை விடுவிப்பதற்காக தேவன்கிதியோனை எழுப்பினார். கிதியோனும் எப்பிராயீமரும் மீதியானியரை முறியடித்தார்கள்
(நியா 7:24-25).
அவர்களை யோர்தான் நதிக்கு அப்பால் துரத்தினார்கள். (நியா 8.10-12)
கிதியோனுடைய வெற்றி பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பிற்பகுதியிலும் விவரித்துக் கூறப்பட்டிருக்கிறது.
(சங் 83:9,11; ஏசா 9:4; 10:26)...
1 Comments
Very nice information
ReplyDelete