அறிந்து கொள்வோம்
பகுதி -44
மெகிதோ
சாரோன் சமபூமிக்கும் யெஸ்ரயேல் சம பூமிக்கும் இடையிலுள்ள இந்தக் கோட்டை உள்ளது ,கர்மேல்மலைக்குத் தென்கிழக்கே 20 மைல் தூரத்தில் இருந்தது.
பூர்வ காலத்தில் கானான்தேசத்தில் வாழ்ந்து வந்த கானானியர்கள் இந்த விசேஷமான கோட்டையை கட்டினார்கள். மனாசே கோத்திரத்திற்கு இந்த பகுதி விடப்பட்டு இருந்தது.பின்பு சிலகாலம் கானானியர் இந்த பகுதியில் வாழ்ந்தார்கள். பாராக் இந்த கோட்டை அருகில் தான் சிசெராவை ஜெயித்தான்.
யோசு.12:21, 17:12, நியா.1:27, 5:19.
சாலொமோன் இதன் அலங்கத்தை பழுது பார்த்து சீர்படுத்தினார்.
1 இரா.9:15.
அகசியா மற்றும் யோசியா ராஜாக்கள் இங்கு தான் மரித்தார்கள்.
2 இரா.9:27, 23:29.
‘அர்மெகெதோன்' என்பதற்கு "மெகிதோவின் மலை' என்று அர்த்தம் தருகிறார்கள். மெகிதோவில் பல யுத்தங்கள் நடந்ததினால், ஆவிக்குரிய விதமான யுத்தம் இவ்விடத்தில் நடப்பதாக வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. வெளி.16:16.
1 Comments
Super information
ReplyDelete