Sunday, 27 April 2025

அறிந்து கொள்வோம் - பகுதி -142 || இந்திய மொழிகளில் வேதாகம மொழிப்பெயர்ப்புகள் || கன்னட பைபிள் மொழிபெயர்ப்பு ||

அறிந்து கொள்வோம் 

பகுதி -142


இந்திய மொழிகளில் வேதாகம மொழிப்பெயர்ப்புகள் 


கன்னட பைபிள் மொழிபெயர்ப்பு 


கர்நாடகாவில் பேசப்படும் மொழியான கன்னட மொழியில் 1809 ம் ஆண்டில் புதிய ஏற்பாடு மாத்திரம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. செராம்பூரிலிருந்த மிஷினரிகள் இந்த மொழிபெயர்ப்பை செய்தார்கள். தெலுங்கு மொழிபெயர்ப்பு அச்சிட்ட காலத்திலேயே கன்னட மொழி வேதாகமத்தையும் அச்சிட செராம்பூர் சங்கத்தார் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஆனால், 1812ம் ஆண்டில் இந்த அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தெலுங்கு வேதாகம மூலப் பிரதிகள் எரிந்த சமயத்தில் கன்னட மொழி பிரதிகள் தீயில் அழிந்து விட்டன.இதன் பின்னர் மீண்டுமாக கன்னட மொழிபெயர்ப்பு ஆரம்பித்து, 1823ம் ஆண்டில் அதை அச்சிட்டார்கள்

இவர்கள் வெளியிட்ட இதே சமயத்தில் 1810ம் ஆண்டில் பெல்லாரி என்னும் இடத்தில் மிஷினரிப் பணிசெய்த லண்டன் மிஷினரி சங்கத்தைச் சேர்ந்த ஜோன் ஹேன்ட்ஸ் என்பவர் முதல் மூன்று சுவிசேஷங்களையும் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இவர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகள் 1820ல் சென்னையில்லுள்ள அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 1831 ம் ஆண்டில் இவர் பழைய ஏற்பாட்டை கன்னடத்தில் மொழி திருப்பம் செய்தார். இவரைத் தொடர்ந்து பேசல் என்னுமிடத்தில் மிஷினரியாகப் பணிசெய்த ஜி.எஸ்.செய்கல் என்பவர் கன்னடப் புதிய ஏற்பாட்டை திருத்தி வெளியிட்டார். என்றாலும் மொழியாக்கத்தில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதைத் திருத்தும் பணிகள் 1891 ல் ஆரம்பிக்கப்பட்டு, 1907 ம் ஆண்டில் புதிய ஏற்பாடு முழுவதும் திருத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 1934ம் ஆண்டில் முழு வேதாகமமும் திருத்தப்பட்ட பதிப்பாக வெளிவந்தது. இந்த மொழிபெயர்ப்பு தான் இன்றைக்கு வரைக்கும் பயன்படுத்தப்படுகிறது.




Thursday, 24 April 2025

அறிந்து கொள்வோம் - பகுதி -141 || இந்திய மொழிகளில் வேதாகம மொழிப்பெயர்ப்புகள் || தெலுங்கு பைபிள் மொழிபெயர்ப்பு ||

அறிந்து கொள்வோம் 

பகுதி -141


இந்திய மொழிகளில் வேதாகம மொழிப்பெயர்ப்புகள் 


தெலுங்கு பைபிள் மொழிபெயர்ப்பு 


தெலுங்கு மொழியில் வேதாகமம் 1727ம் ஆண்டிலேயே மொழித்திருப்பம் செய்யப்பட்டு விட்டது. இதை ஜெர்மனியிலிருந்து வந்திருந்த மிஷினரியான பெஞ்சமின் குண்ட்ஸ் என்பவர் மொழி திருப்பம் செய்திருந்தார். இவர் 1732 ல் பழைய ஏற்பாட்டையும் மொழித்திருப்பம் செய்திருந்தார். என்றாலும் அவர் மொழிதிருப்பம் செய்திருந்த பிரதிகள் அச்சிடுவதற்காக ஜெர்மனியிலுள்ள ஹாலேக்கு அனுப்பப்பட்டு அங்கே பிரதிகள் காணாமல் போய் விட்டன. இதன் பின்னர் 1795 ல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டோட்ஸ் என்பவர் வேதாகமத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தார். இவரது மரணத்திற்குப் பிறகு இவர் பணியாற்றிய கம்பெனியில் இவரது இந்த மொழிபெயர்ப்புக் காகிதங்கள் தேவையற்ற குப்பைகள் என்று கருதப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டன. 

1805 ம் ஆண்டில் செராம்பூரிலிருந்த மிஷினரிகள் வேதாகமத்தை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தனர். 1811 ம் ஆண்டு இதன் அச்சுவேலைகள் நடந்தது. என்றாலும் 1812 ல் இந்த அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அச்சிடப்பட்ட பக்கங்களும், மொழிபெயர்ப்பு மூலப்பிரதிகளும் கருகிவிட்டன.

1804ல் லண்டன் மிஷினரி சங்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ் க்ரான் ஒகஸ்டஸ் என்பவர் தெலுங்கு மொழிபெயர்ப்பை ஆரம்பித்து, அவரும் முடிக்க முடியாமல் 1808 ம் ஆண்டில் மரித்தார். அதன் பின்பு டெஸ்கிராஞ்சஸ் என்பவர் இந்த மொழிபெயர்ப்பு வேலைகளை ஆரம்பித்து, 1810 வரை கொரிந்தியரின் புத்தகம் வரை மொழிமாற்றம் செய்தார். இவரும் மரித்துவிட, எட்வர்ட் பிரிட்ஜெட் என்பவர் இதன் மீதிப்பகுதியை மொழிமாற்றம் செய்தார்.

1844 ல் ஒரு மொழிபெயர்ப்புக் குழு ஆரம்பிக்கப்பட்டு, 1854-ல் தான் தெலுங்கு மொழியில் வேதாகமம் வெளிவந்தது. 1857-ம் ஆண்டில் புதிய ஏற்பாடும், 1878 ல் பழைய ஏற்பாடும் வெளிவந்தது. இது மறுபடியும் 1911-ல் ஒரு முறையும், 1953 -ல் ஒரு முறையுமாக திருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.




Tuesday, 22 April 2025

அறிந்து கொள்வோம் பகுதி -140 || இந்திய மொழிகளில் வேதாகம மொழிப்பெயர்ப்பு || ஹிந்தி பைபிள் மொழிபெயர்ப்பு |

அறிந்து கொள்வோம் 

பகுதி -140

இந்திய மொழிகளில் வேதாகம மொழிப்பெயர்ப்பு


ஹிந்தி பைபிள் மொழிபெயர்ப்பு


இந்தியாவில் பல்வேறு விதமான மொழிகள் பேசப்பட்டாலும், பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி ஹிந்தி மொழியாகும். இந்த மொழியில் வேதாகமம் 1800 ம் ஆண்டிலேயே மொழித்திருப்பம் செய்யப்பட்டது. ஆனால் கல்கத்தாவில் ஆரம்பிக்கப்பட்ட ஃபோர்ட் வில்லியம் கல்லூரியில் பணி செய்த டாக்டர் ஹென்றி கோல்ப்ரூக் என்பவர் முதன் முதலாக இந்தி மொழியில் நான்கு சுவிசேஷங்களை மாத்திரம் மொழி பெயர்ப்புச் செய்து வெளியிட்டார். 

இது 1806ம் ஆண்டில் புழக்கத்திற்கு வந்தது. இதே காலகட்டத்தில் செராம்பூரிலிருந்த மிஷினரிகளும் ஹிந்தி மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மொழி பெயர்த்த வேதாகமம் 1811 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இவர்கள் வெளியிட்ட வேதாகமம் புதிய ஏற்பாடு முழுமையும் அடங்கியதும். முழுவேதாகமம் வெளியாகும் வரை சிலகாலம் இந்தப் புதிய ஏற்பாடு மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து பழைய ஏற்பாட்டின் நூல்கள் பகுதி பகுதியாக ஹிந்தியில் மொழித்திருப்பம் செய்யப்பட்டன. இவர்களுடைய இந்த மொழிபெயர்ப்பு ஆக்ராவிலிருந்த மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத மொழியமைப்பு கொண்டிருந்ததால், பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்த சேம்பர்லியன் என்பவர் இந்த வேதாகமத்தை மேலும் ஒருமுறை திருத்தி வெளியிட்டார். ஆனால், அந்த மொழிபெயர்ப்பிலும் குறைகள் காணப்பட, இன்னொரு மொழி பெயர்ப்பை 1848ல் பாப்டிஸ்ட் சங்கத்தைச் சேர்ந்த வில்லியம் யேட்ஸ் என்பவர் மொழி பெயர்க்க ஆரம்பித்தார். இடையில் இவர் மரித்துவிட, இவரது பணியை வெஸ்லி என்பவர் முடித்தார். இந்தப் பதிப்பு ஜோன் பார்சன் என்பவரால் திருத்தம் செய்யப்பட்டு   1868 ல் வெளியிடப்பட்டது. 

இதன் திருத்திய பதிப்பு 1874 ல் வெளியானது இதுவே ஹிந்தியில் அங்கீகரிக்கப்பட்ட வேதாகமமாக இருந்தது, அதன் பின்னர் வட இந்திய வேதாகமச் சங்கத்தார் 1905 ல் வெளியிட்ட திருத்திய வேதாகமப் பதிப்பே சுமார் 60 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்துவந்தது. இதையும் திருத்தி எளிமையான சொற்களுடன் 1955 ல் வெளியிடப்பட்ட வேதாகமமே ஹிந்தி மொழியில் இன்றளவும் பயன்பாட்டில் இருக்கிறது. இதைத் திருத்தம் செய்தவர் வி.டி.திவாரி என்பவராவார்.



Monday, 21 April 2025

அறிந்து கொள்வோம் || பகுதி - 139 || அழுகையின் பள்ளத்தாக்கு

 

அறிந்து கொள்வோம் 

பகுதி - 139


அழுகையின் பள்ளத்தாக்கு

( The valley of BACA) 


பொருள்:- weeping,weeper.

அழுதல்; அழுகிறவர்,கண்ணீர் வடிக்கிறவர்.

ஆங்கிலத்தில் "BACA" என்று சொல்லப்பட்ட இந்த இடம் எதுவென்று, எங்கோ என்று கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் இந்த பெயரில் பாலஸ்தீனத்தில் ஒரு இடம் இருக்கிறது என்கிறார்கள்.

பலரின் கருத்து என்னவென்றால் சீயோன் மலைக்குக் கீழேயுள்ள இன்னோம் பள்ளத்தாக்கு தான் இது என்றும் இன்னோம் பள்ளத்தாக்கும் ரெப்பாயிம் பள்ளத்தாக்கும் பிரியும் இடத்தில் இது இருக்கிறது என்றும் சொல்லுகின்றர்கள். 


இங்கு இருக்கும் ஒருவகை செடியின் இலைகளைப் பறிக்கும்போது கண்ணில் கண்ணீர் சுரப்பதுபோன்ற ஒரு திரவம் சுரக்கும், வட்டவடிவப் பெரிய பழங்கள் காய்க்கும் குங்கிலிய வகைப்புதர்ச்செடி இருப்பதாகக் கூறப்படுகிறது.

கண்ணீர் போன்று பிசினை வடியப்பண்ணும் weeper என்னும் பெயருடைய மரத்தை BACA என்னும் இவ்வார்த்தை குறிக்கிறது .


இந்தப்பள்ளத்தாக்கில் இருந்து புறப்பட்டு வரும் 5 நீரூற்றுகள் வெகுதூரமாக கடைசி மட்டும் பாய்ந்து செல்லாமல் கண்ணிலிருந்து வடிந்து கன்னங்களிலேயே (மறைந்து) சுவறிப்போகும், கண்ணீர்போல குறுகிய தூரத்திலேயே காய்ந்து சுவறிப் போய்விடும் என்று சொல்லப்படுகிறது. நாம் அடிக்கடி துயரத்தால் திரும்பத் திரும்பக் கண்ணீர் வடிக்கும் போது அது வழிந்தோடி நமது கன்னங்களிலேயே சுவறிப் போகிறதை இந்த அழுகையின் பள்ளத்தாக்கு சுட்டிக்காட்டுகிறது. குங்கிலியப் பிசின் வடிக்கும் குங்கிலிய மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்கு என்றும் மூலபாஷை விளக்கமளிக்கிறது.


எப்படியே சீயோனுக்குச் செல்லும் வழியில் குறுக்கிடும் இப்பள்ளத்தாக்கு கண்களில் கண்ணீர் வடியப்பண்ணும் அளவுக்குக் கடப்பதற்கு மிகவும் கஷ்டமானதும் பலத்தின்மேல் பலம் அடையப்பண்ணும் என்பதும் குறிப்பிடத்தக்கது (சங்84:6) 






தூதாயீம் கனி (Mandrake) || அறிந்து கொள்வோம் || பகுதி -154 ||

அறிந்து கொள்வோம்  பகுதி -154 தூதாயீம் கனி (Mandrake) தாவரவியல் பின்னணி இதன் அறிவியல் பெயர் Mandragora officinarum. எபிரேய மொழியில் ' தூத...