அறிந்து கொள்வோம்
பகுதி -142
இந்திய மொழிகளில் வேதாகம மொழிப்பெயர்ப்புகள்
கன்னட பைபிள் மொழிபெயர்ப்பு
கர்நாடகாவில் பேசப்படும் மொழியான கன்னட மொழியில் 1809 ம் ஆண்டில் புதிய ஏற்பாடு மாத்திரம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. செராம்பூரிலிருந்த மிஷினரிகள் இந்த மொழிபெயர்ப்பை செய்தார்கள். தெலுங்கு மொழிபெயர்ப்பு அச்சிட்ட காலத்திலேயே கன்னட மொழி வேதாகமத்தையும் அச்சிட செராம்பூர் சங்கத்தார் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஆனால், 1812ம் ஆண்டில் இந்த அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தெலுங்கு வேதாகம மூலப் பிரதிகள் எரிந்த சமயத்தில் கன்னட மொழி பிரதிகள் தீயில் அழிந்து விட்டன.இதன் பின்னர் மீண்டுமாக கன்னட மொழிபெயர்ப்பு ஆரம்பித்து, 1823ம் ஆண்டில் அதை அச்சிட்டார்கள்
இவர்கள் வெளியிட்ட இதே சமயத்தில் 1810ம் ஆண்டில் பெல்லாரி என்னும் இடத்தில் மிஷினரிப் பணிசெய்த லண்டன் மிஷினரி சங்கத்தைச் சேர்ந்த ஜோன் ஹேன்ட்ஸ் என்பவர் முதல் மூன்று சுவிசேஷங்களையும் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இவர் மொழிபெயர்த்த புதிய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகள் 1820ல் சென்னையில்லுள்ள அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 1831 ம் ஆண்டில் இவர் பழைய ஏற்பாட்டை கன்னடத்தில் மொழி திருப்பம் செய்தார். இவரைத் தொடர்ந்து பேசல் என்னுமிடத்தில் மிஷினரியாகப் பணிசெய்த ஜி.எஸ்.செய்கல் என்பவர் கன்னடப் புதிய ஏற்பாட்டை திருத்தி வெளியிட்டார். என்றாலும் மொழியாக்கத்தில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதைத் திருத்தும் பணிகள் 1891 ல் ஆரம்பிக்கப்பட்டு, 1907 ம் ஆண்டில் புதிய ஏற்பாடு முழுவதும் திருத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 1934ம் ஆண்டில் முழு வேதாகமமும் திருத்தப்பட்ட பதிப்பாக வெளிவந்தது. இந்த மொழிபெயர்ப்பு தான் இன்றைக்கு வரைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
0 Comments