Wednesday, 27 March 2024

புதன் || பாடுகளின் வாரம் ||

 பாடுகளின் வாரம் - புதன்



புதன் அன்று நடந்த 2 நிகழ்வுகள்


🌿இயேசு அபிஷேகம் பண்ணப்படுதல்

🌿யூதாஸ் வெளியேறுதல்


புதன்கிழமையை ஏன் ( Spy Wednesday)

உளவு புதன்? என்று அழைக்கிறார்கள்.


மத்தேயு 26. 14-16, லூக்கா 14.10 - 11 இந்த வசனங்களின் படி, இயேசுவின் அபிஷேகத்திற்கு பின்பு புதன் கிழமை அன்றே யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுக்க வகை தேடிச் சென்றான். ஆகவே தான் உளவாளி புதன் ( Spy Wednesday என்று அறியப்படுகிறது.


யூதாஸ் கற்பிக்கும் பாடல்கள்


யூதாஸ் என்றால் கர்த்தரின் துதி என்று அர்த்தமாகும்.இவர் காரியோத்து என்ற ஊரை சேர்ந்தவர். இயேசுவின் சீடர்கள் பன்னிருவரில் யூதாஸ் மட்டுமே யூதேயாவைச் சேர்ந்தவர்.நன்கு கல்வி கற்றவர்,ரோம பேரரசை எதிர்க்கும் ஒரு புரட்சியாளன்.


1.பண ஆசையுள்ள யூதாஸ்

யோவான் 12:3,6,மாற்கு 14:11.


பண ஆசை ஒருவனை அழிவுக்கு

இட்டுச் செல்லும். யூதாஸ் முப்பது

வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டான்.

அழியாத விண்ணக வாழ்வை

இழந்தான்.பணி செய்பவர்களின் கூட்டத்தில் இருப்பதால் மீட்பு வராது. சீடர்களிலேயே நிர்வாகத் திறமையுடைய யூதாஸ் பொருளாளராய் இருந்தார்.அது அவரைக் காப்பாற்றவில்லை.


2.இருமுகமுள்ள யூதாஸ்

(மத்தேயு 26:25 லூக்கா 22:48)


யூதாஸ் சீடர்களிடையே நல்லமதிப்பு பெற்றிருந்தான்.சீடர்கள் யாரும் அவனை சந்தேகப்படாத அளவுக்கு அவர்களிடம் நற்சான்றிதழ் பெற்றிருந்தான்.

ஆனால் பரலோக வாழ்வை இழந்தான்.



3.மனந்திரும்பாத யூதாஸ் 

(மத்தேயு 27:3,அப்போ 1:18)


மனஸ்தாபப்பட்ட யூதாஸ் மனந்திரும்பாமல் மடிந்து போனான். பேதுரு மறுதலித்தும், மனஸ்தாபப்பட்டு, மனங்கசந்து அழுது மனம் திரும்பினார். இயேசுவின் போதனைகளைக் கேட்பதோ, அற்புதங்களைப் பார்ப்பதோ ஒரு மனிதனை நல்லவனாய் மாற்றாது. நம்பிக்கை வேண்டும்.எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தினால் மீட்பு வராது. உங்களுள் ஒருவன் பிசாசாய் இருக்கிறான்' என்றும் 'அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு' என்றும் இயேசு எச்சரித்திருந்தார்.இருந்த போதும் யூதாசு செவிசாய்க்கவில்லை.?



நன்றி:மேயேகோ….




No comments:

Post a Comment

நளதம் (Spikenard) // வெள்ளைக்கல் பரணி (Alabaster box) // அறிந்து கொள்வோம் பகுதி -155 //

அறிந்து கொள்வோம் பகுதி -155 நளதம் (Spikenard) மற்றும் வெள்ளைக்கல் பரணி (Alabaster box)  விவிலிய நூலில் வரும் நளதம் என்னும் தைலம் மணம் மிகுந்...