பழைய ஏற்பாட்டின் புத்தக சுருக்கம்
லேவியராகமம்
ஆங்கிலத்தில் "Leviticus" என்று பெயர் இது பண்டைய கிரேக்க மொழியில் இஸ்ரவேலின் ஆசாரிய கோத்திரமாகிய "லேவி" கோத்திரத்தை குறிக்க பயன்பட்ட சொல்லான "Aeuitikóv", "Leuitikon" என்னும் சொல்லிலிருந்து இந்த Leviticus எடுக்கப்பட்டது
இந்த புத்தகத்தில் அதிகமான பகுதிகளில் ஆசாரியர்களுக்கான சட்டதிட்டங்கள் சொல்லப்படுவதால் இதை "ஆசாரியர்களுக்கான நியாயப்பிரமாணம்" என்று அழைப்படும்.
இங்கு உள்ள சட்டங்களை ஆசாரியர்கள் கைக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.
புத்தகத்தின் ஆசிரியர்
இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே என்பது பாரம்பரிய நம்பிக்கை.
தோரா - சட்டப் புத்தககத்தின் மூன்றாவது புத்தகம் இது.
பிற தகவல்கள்
27 அதிகாரங்களையும்
659 வசனங்களையும் கொண்டது.
லேவியராகமத்தின் 27 அதிகாரங்களில் 56 தடவை இந்த சட்டங்கள் தேவனால் மோசேக்கு கொடுக்கப்பட்டதை பற்றி சொல்லுகிறது.
லேவியராகமத்தில் எந்த இடப்பெயர்வும் சொல்லப்படவில்லை. இஸ்ரவேலர் சீனாய் மலையருகே தங்கியிருந்தார்கள்.
பரிசுத்தமுள்ள தேவனை பாவியானான மனிதன் எவ்வாறு அணுகமுடியும் என்பதே லேவியராகமத்தின் பிரதான கருப்பொருள்.
லேவியராகமத்தில் பரிசுத்தத்தை பற்றி கருத்துக்கள் 87 தடவைகள்
குறிப்பிடப்படுகிறது.
வரலாற்றுக் காலவரிசைகள்.
1.பஸ்கா - வருஷத்தின் 1-ம் மாதம் 14ம் நாளில் ஆசரிக்கப்பட்டது (யாத்.12:2).
2.யாத்திரை ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் கழித்து சீனாய் மலையருகில் ஆசரிப்புக்கூடாரம் நிறுவப்பட்டது.
(யாத். 40:2,17).
3.ஒரு மாதம் கழித்து சீனாய் மலையருகிலிருந்து வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பிற்கு செல்ல தேசம் ஆயத்தப்பட்டது (எண்.1:1)
ஆக ஆசரிப்புக்கூடாரம் நிறுவப்பட்டதற்கும். சீனாய் மலையருகிலிருந்து ஜனங்கள் வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பிற்கு புறப்பட்டதற்கும் இடையேயான ஒரு மாத காலத்தில் லேவியராகமத்தின் காரியங்கள் மோசேக்கு கொடுக்கப்பட்டதாக கணிக்கலாம்.
புத்தகத்தின் உள்ளடக்கம்
1.காணிக்கைகளும், பலிகளும் (1-7)
2.ஆசாரியர்களின் அபிஷேகம் (8-10)
3.சடங்குகளுக்கான சுத்தீகரிப்பு (11-15)
(பிரமியம், தோல் வியாதிகள். சரீரத்தில் உண்டாகும் கட்டிகளை தொடுதல், இறந்தவர்களின் உடலை தொடுதல், குறிப்பிட்ட உணவுகளை உண்ணல்)
4.பாவநிவாரண நாள் - பாவநிவாரண பலி (16).
5.இரத்தத்தால் உண்டாகும் சுத்தீகரிப்பு (17)
6.தார்மீக பரிசுத்தம் (18-20)
(ஏழைகள் பராமரிப்பு, பாலியல் ஒழுக்கம், சமூக நீதி).
7.ஆசாரியர்களுக்கான தகுதிகள் (21-22).
8.ஏழு வருடாந்தரப் பண்டிகைகள் (23-25)
9.ஆசீர்வாத வாக்குத்தத்தங்களும், தண்டனைகளும் தேவனுக்கு நேர்ந்துகொண்ட மனிதரை. உடைமைகளை மீட்கும் விதம் (26-27)
வருடாந்தரப் பண்டிகைகள் (லேவி.23-25)
1. பஸ்கா பண்டிகை - (லேவி 23:4-8)
எகிபதின் கடைசி வாதையில் சங்காரதூதன் இஸ்ரவேலரின் பிள்ளைகளை அழிக்காமல்
அவர்களது வாசல்நிலைகளில் பூசப்பட்டிருந்த ஆட்டின் இரத்தத்தை கண்டு "கடந்து போனதை" நினைவுகூரும் பண்டிகை இது.
இஸ்ரவேலர் ஈசோப்புக் கொத்தை எடுத்துக் கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து,
அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளித்தார்கள். (யாத் 12)
2. புளிப்பில்லா அப்பப்பண்டிகை லேவி 23:6
பஸ்கா பண்டிகையின் ஆரம்பத்திற்கு பின் ஏழு நாட்கள் ஆசரிக்கப்படும் பண்டிகை இது.
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து தீவிரமாக வெளியேறியதால் அவர்களது அப்பங்களுக்கு புளிப்பு இடுவதற்கு சமயமிருக்கவில்லை. எனவே
இந்த நாட்களில் தாங்கள் எகிப்தில் அனுபவித்த துன்பங்களையும், அதிலிருந்து தேவன்
தங்களை விடுவித்ததையும் நினைவுகூர புளிப்புள்ள எதையும் புசியாதிருந்தார்கள்.
3.முதற்பலன்களின் பண்டிகை.
லேவி 23:10
தேவன் தந்தருளின யாவற்றிற்காகவும் நன்றி செலுத்த யூதர்கள் கொண்டாடும் 3 அறுவடையின் பண்டிகையில் இந்த
முதற்பலன்களின் பண்டிகையும் ஒன்று. அன்று இஸ்ரவேலர் இந்த பண்டிகையை கொண்டாடியபோது இது ஒரு முக்கியமான நாளாக மாறப்போகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
4. வாரங்களின் பண்டிகை அல்லது பெந்தெகொஸ்தே பண்டிகை.
லேவி 23:16
அறுவடையின் பண்டிகைகளில் இரண்டாவது பண்டிகை. முதற்பலன்களின் பண்டிகை முடிந்து சரியாக ஏழு வாரங்களின் முடிவில் இந்த பண்டிகை ஆசரிக்கப்படும்.ஆகையால் 50 - வது நாட்களை குறிக்கும் சொல்லான பெந்தெகொஸ்தே என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறது.
பாரம்பரியமாக தேவனுக்கு காணிக்கையாக தானிய விளைச்சலின் முதற்பலனையும், இரண்டு
புளிப்புள்ள அப்பங்களையும் கொண்டுவருவார்கள்.
5.எக்காளப் பண்டிகை.
லேவி 23:24
மிக நேர்த்தியான விதத்தில் தேவன் தமது ஜனங்களை ஓய்வெடுக்க கட்டளையிடுகிறார்.
இந்த நாளில் வழக்கமாக செய்யப்படும் வேலைகள் செய்ய நடைவிதிக்கப்பட்டது.
இந்த நாளில் ஆண்களும் பெண்களும் ஆகாரங்களை காணிக்கையாக செலுத்துவார்கள்
6. பாவநிவாரண நாள்.
லேவி.16, 23:26-32
நிவாரணம் செய்வது என்றால் செய்த தவறுகளுக்காக பிராயச்சித்தம் செய்தல்
இது யூதர்கள் தங்கள் இருதயங்களையும், எண்ணங்களையும், வாழ்க்கையையும் தேவனுக்கு முன்பாக செம்மைப்படுத்த தங்களை தாழ்த்தி தேவனிடத்திற்கு மனந்திரும்பும் ஒரு அற்புதமான நாள்.
ஆசரிப்புகூடாரத்திற்குள் பிரவேசிக்கு முன்பாக ஆரோன் தண்ணீரில் முழுகி அவனுக்கான விஷேட உடையை அணிந்து (வச 4) பின்பு தனக்காவும் தனது வீட்டாருக்காகவும் பாவநிவாரண பலியாக ஒரு காளையை பலியிட வேண்டும் (வச 6,11)
முதலாவது பலியாக்கப்பட்ட ஆட்டின் இரத்தம் உடன்படிக்கைபெட்டியின் மேல் தெளிக்கப்படும்.
இது அடுத்த ஒரு வருடத்திற்கு தேவனுடைய கோபம் அவர்கள் மீது வராதபடிக்கு தேவ கோபத்தை தணிக்கும்.
இரண்டாவது ஆடு ஜனங்களின் பாவங்கள் தூரமாய் விலக்கப்பட்டு இனிமேல் நினைக்கப்படாமல் போகும் என்பதற்கான அடையாளமாக வனாந்திரத்திற்கு போகும்படி விடப்படும்.போக்காடாக விடப்படும் வெள்ளாடு .
7. கூடாரப் பண்டிகை
லேவி 23:34
பாவநிவாரண நாளை தொடாந்து கூடாரப் பண்டிகை ஆசரிக்கப்படும்.
40 அண்டுகள் வனாந்தரத்தில் பயணித்தபோது தேவன் தங்களை பராமரித்ததையும்,
பாதுகாத்ததையும் நினைவுகூர்ந்து ஆசரிக்கும் பண்டிகை.
தாங்கள் வனாந்திரத்தில் வாழ்ந்ததைபோலவே தற்காலிக கூடாரங்களை அமைத்து ஏழு நாட்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.
தேவனாகிய கர்த்தரும் அவர்களோடு வனாந்தரத்தில் ஆசரிப்புக்கூடாரத்தில் தங்கியிருந்தால், தேவன் தங்கள் மத்தியில் இருப்பதை நினைவுகூர்ந்து இந்த பண்டிகையை ஆசரிப்பார்கள்.
புத்தகத்தின் நோக்கம்.
1.இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நினைவுகூர்வதற்காக.
காணிக்கைகளும் தேவன் அருளிய நன்மைகளையும், ஏற்ற வேளையில் அவர் காண்பித்த கிருபையையும் நினைவுகூர உதவியது.
பண்டிகைகளும் தாங்கள் யாரென்பதையும், தங்கள் தேவன் எவ்வளவு நல்லவர் என்பதையும் நினைவுகூர உதவியது.
2.செல்வாக்கு பெற்றிருக்ககூடிய தவறான எண்ணங்களை எல்லாம் களைவதற்காக.
இஸ்ரவேலர் 400 ஆண்டுகள் எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்ததால் அவர்களின் மனதில் செல்வாக்கு பெற்றிருக்ககூடிய எகிப்தியரின் பலதெய்வ வழிபாடுகள், விக்கிரகங்களை மதிக்கும் பழக்கம் மற்றும் எகிப்தியப் கலாச்சாரங்களை முற்றிலும் களையவதற்காக...
3.அவர்களது தேவனும், இராஜாவுமானவரை அறியவும் அவரை மற்றவர்களுக்கு பிரதிபலிக்க
அவரது பரிசுத்தம், அவரது நீதி, அவரது இரக்கத்தை வெளிப்படுத்த..
4.சட்டங்களால் மக்கள் வாழ்வில் ஒழுங்கு காணப்படுவதற்க..
சரியானதும், பொறுப்பள்ளதுமான வாழ்க்கையை வாழ
உண்ணவேண்டிய உணவு, ஆடைகளுக்கான நூல். தலைமயிர் மற்றும் தாடி கத்தரிக்க
வேண்டிய முறைகள் வரை சொல்லப்படுகிறது.
5.பரிசுத்த தேவனோடுள்ள உறவை தக்கவைப்பதற்காக, புதுப்பிப்பதற்காக
பாவமுள்ளவர்களானாலும், மீட்கப்பட்ட ஜனங்களாக தேவனோடு உள்ள உறவை இழந்துவிடாதிருக்க தேவையான அறிவுறுத்தல்களையும், சட்டங்களையும் வழங்கி அவர்களுக்கு வழிகாட்டுவதே இந்த புத்தகத்தின் நோக்கம்…
வேதாகமத்தின் வேறு எந்த புத்தகத்தை காட்டிலும் லேவியராகமத்தில்தான் “பரிசுத்தம்" என்ற
சொல் அதிகமாக பயன்படுத்தபட்டுள்ளது.
லேவியராகமத்தில் தனிமனித ஒழுக்கத்தின் மிகச்சிறிய காரியங்கள் முதல்கொண்டு
சட்டதிட்டங்கள் சொல்லப்படுவதால் ஒருவேளை நமக்கு அது தாங்கமுடியாததும், விருப்பமற்றதுமான புத்தகமாக காணப்படலாம் ஆனால் இஸ்ரவேலருக்கோ "உயிர் காப்பான்" போன்றது. அது
ஏனென்றால் தேவனுடைய சமூகத்தில் பிழைத்திருக்க என்ன செய்யவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்திருப்பது மிக நன்று.
லேவியராகமத்தில் ஆவிக்குரிய பரிசுத்தத்தின் அடையாளக்குறியாக சரீர குறையின்மை காண்பிக்கப்படுகிறது.
லேவி 1:1 காத்தர் “ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து" மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி:
எண் 1:3 காத்தர் சீனாய் வளாந்தரத்திலிருக்கிற "ஆசரிப்புக் கூடாரத்திலே" மோசேயை நோக்கி:
6.அவர்கள் சுதந்தரிக்கபோகும் நிலத்திற்கான ஆயத்தப்படுதற்காக
அவர்களது நிலங்களும், கால்நடைகளும் ஆசீர்வதிக்கப்படுவதற்காக
மழைக்காகவும்,
எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக
7.வரப்போகும் இரட்சகருக்கான ஒத்திகை பஸ்கா பண்டிகை:
இயேசு நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி அவரது மரணத்தினால்
நம் மீது வரவேண்டிய நியாயத்தீர்ப்பை கடந்துபோக பண்ணினார்.
புளிப்பில்லா அப்பப்பண்டிகை இயேசுவின் பாவமில்லாத வாழ்க்கைக்கு அடையாளம். அவரே நமது பாவங்களுக்கான பரிபூரண பலி.
முதற்பலன்களின் பண்டிகை இந்த “மூன்றாம் நாள்” ஆசரிப்பின் நாளிலேதான் இயேசு
மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
1 கொரி 15:20-ல் பவுல் கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து நித்திரையடைந்தவர்களில்
முதற்பலனானார் என்றார்.
வாரங்களின் பண்டிகை /பெந்தெகொஸ்தே பண்டிகை
சபை உருவான நாள் - பெந்தெகொஸ்தே நாள் 3000 ஆத்துமாக்கள் அறுவடை செய்யப்பட்ட நாள்.
இரண்ட புளிப்புள்ள அப்பங்களால் அடையாளப்படுத்தபட்ட யூதர்களுக்கும். யூதரல்லாத புறவினத்தாருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்ட நாள்.
எக்கானப் பண்டிகை எக்காளத்தின் தொனி சபை எடுத்துக்கொள்ளப்படுதலை அல்லது இயேசு தனது மணவாட்டிக்காக திரும்ப வருவதை (1 கொரி 15:52) குறிக்கிறது.
பாவநிவாரணநாளின் பண்டிகை காளையும், வெள்ளாடும் பாவநிவாரணபலிகள்.
போக்காடாக விடப்படும் வெள்ளாடு இஸ்ரவேல் ஜனங்களின் சகல பாவங்களையும் சுமந்ததாக வனாந்தரத்திற்கு போகவிடப்படும். இயேசுவும் நமது பாவங்களை தம்மீது சுமந்து நமக்காக பாளையத்திற்கு புறம்பே பலியானார்.
கூடாரங்களின் பண்டிகை இயேசு தற்காலிக கூடாரம்போன்ற மனித சரீரத்தில் இந்த
பூமியில் வந்து வாழ்ந்து தம்மைதாமே பலியாக்கினார்.
Taken from Pr.Thomasraj Notes….
0 Comments