ஆதியாகம் || பழைய ஏற்பாட்டின் புத்தக சுருக்கம் ||

 O T Book Summary

பழைய ஏற்பாட்டின்

புத்தக சுருக்கம்


ஆதியாகம்- அர்த்தம்


கிரேக்க மொழியில் - "Genesis" என்ற வார்த்தைக்கு "ஆரம்பம், அல்லது

தொடக்கம்" என்று பொருள்படும். எபிரேய மொழியில் "Bereshit" என்ற வார்த்தைக்கு "ஆதியிலே" என்று பொருள்.


இது பல ஆரம்பங்களின் புத்தகமாக கருதப்படுகிறது.


அவையாவன:-


1.பிரபஞ்சத்தின் ஆரம்பம்

2.உயிர்களின் ஆரம்பம்

3.மனித குலத்தின் ஆரம்பம்

4.ஓய்வு நாளின் ஆரம்பம்

5.திருமணத்தின் ஆரம்பம்

6.பாவத்தின் ஆரம்பம்

7.மரணத்தின் ஆரம்பம்

8.மீட்பின் ஆரம்பம்

9.தீர்க்கதரிசனத்தின் ஆரம்பம்

10.குடும்பத்தின் ஆரம்பம்

11.மொழியின் ஆரம்பம்

12.பலியிடுதலின் ஆரம்பம்


புத்தகத்தின் ஆசிரியர்


இந்த புத்தகத்தை எழுதியவர் மோசே என்பது பாரம்பரியமாய் நம்பப்படுகிறது.மோசேயால் எழுதப்பட்ட முதல் ஐந்து புத்தகங்களை எபிரேய மொழியில் . "தோரா" (Torah) என்ற அழைப்பார்கள்.

"தோரா" என்பதற்கு - "கற்பித்தல்" "கொள்கை" - "அறிவுறுத்துதல்"  என்று பொருள்படும்.

கிறிஸ்தவ வேத அறிஞர்கள் எபிரேய வேதாகமத்தின் ஐந்து புத்தகங்களையும் 'Pentateuch' அதாவது “ஐந்நூல்" என்ற பொதுப்பெயரால் அழைப்பார்கள்.


பிற தகவல்கள்


  • கி.மு. 1450 - 1410  ஆகிய காலப்பகுதியில் எழுதப்பட்டது.


  • 50 அதிகாரங்களை கொண்டது.


  • 1553 வசனங்களை கொண்டது.


  • வரலாற்றுக் காலவரிசை படி

அதின் சம்பவங்கள் மோசே பிறப்பிற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முந்தியவை.


  • வேதாகமத்தின் எந்த புத்தகத்தின் கால அளவை காட்டிலும் ஆதிக அளவில் நடந்த சம்பவங்களை ஆதியாகமம் பதிவு செய்துள்ளது.


  • மீதியான 65 புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள கால அளவிலும் அதிக கால அளவிலான சம்பங்களை ஆதியாகம் கொண்டுள்ளது.


  • 4100 ஆண்டுகால வரலாற்றை பற்றி வேதாகமத்தில் பதிவிடப்பட்டுள்ளது.


  • ஆதியாகமத்தில் மட்டும் 2286 ஆண்டு  கால  சம்பவங்கள் குறித்து உள்ளது.


  • யாத்திராகமம் முதல் வெளிப்படுத்தல் வரை 1814 ஆண்டு கால சம்பவங்கள் உள்ளது.


  • ஆதியாகமத்தின் 1ம் அதிகாரம் முதல் 11ம் அதிகாரம் வரை 2000 ஆண்டுகள் நடந்த சம்பவங்கள் பதிவிடப்பட்டுள்ளது.


புவியியல் அமைப்பு


இந்த புத்தகத்தில் தற்கால எகிப்து, இஸ்ரவேல், பாலஸ்தீனம், லெபனான். சிரியா, ஈரான், ஈராக் ஆகிய நிலப்பரப்புகள் சொல்லப்படுகின்றன.

வேதாகமமானது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றை கொண்டுள்ளதால் பேரரசுகள் மாறும்போது இடங்களின் பெயர்கள் மாறுவதோடு அதன் புவியியல் எல்லைகளும் மாறிவிடும். 

அதன் விளைவாக வேதாகமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயர் அந்த பெயர் தவிர்ந்த வேறு பெயர்களால் அழைக்கப்படுவதும், மொழிகளால் மாற்றமடைவதும், எழுத்துக்கள் திரிந்து மாற்றம் அடைவதால் உச்சரிப்பு மாறுவதும் உண்டு.


ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்கள் "பண்டைய கிழக்கு அருகாமை" என்று அழைக்கப்படும் பெரும் நிலப்பரப்பில் நிகழ்ந்த சம்பவங்களை விவரிக்கின்றது. அதிலே முதன்முதலாக சொல்லப்படும் புவியியல் பகுதி - "ஏதேன் தோட்டம்". நான்கு நதிகள் பாயும் பகுதி தற்காலத்தில் "ஈராக்'" நாடு,

இன்று அந்த நதிகளில் இரண்டு டைகிரஸ், யூபிரட்டஸ் என்று அறியப்படுகிறது.


மேசியாவைக் குறித்த தீர்க்கதரிசனங்கள்


1.ஆதி 3:15 - ல் இயேசு ஸ்திரியின்வித்து.


2.ஆதி 4:25-ல்  சேத்தின் வழிவந்தவர்      (ஆதாமிலிருந்து) ஆதியாகமம் 9:26-27- சேமின் வழிவந்தவர் (நோவாவிலிருந்து).


3.ஆதி 21:12 -ஈசாக்கின் சந்ததி.


4.ஆதி 25:23 - யாக்கோபின் சந்ததி.


5.ஆதி  49:10 - யூதாவின் வம்சம்.



ஆதியாகமத்தில் உண்மையாய் உடைக்க பட்ட  7 உலக தத்துவங்கள்


1. "ஆதியிலே தேவன்"- கடவுள் இல்லை என்ற நாத்திக வாதத்தை இந்த வசனம் மறுத்துரைக்கிறது. 


2. "ஆதியிலே தேவன்" - இது பலதெய்வங்கள் உண்டு என்ற வாதத்தை மறுத்துரைக்கிறது.


3. "ஆதியிலே தேவன்". மனிதனே இப்பிரபஞ்சத்தின் மையமானவன் என்ற வாதத்தை மறுத்துரைக்கிறது. 


4. "ஆதியிலே தேவன் சிருஷ்டித்தார்" எல்லாம் விதிப்படி நடக்கிறது என்ற வாதத்தை மறுத்துரைக்கிறது.


 5. "ஆதியிலே தேவன் சிருஷ்டித்தார்" பரிணாம வளர்ச்சியினால் உருமாற்றம் உண்டானது என்ற வாதத்தை மறுத்துரைக்கிறது.


6. "தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்" - பொருள்முதல்வதம் (பொருட்கள் அழிவதில்லை. உருவாக்கப்படுவதில்லை அவை எப்போதும் இருக்கின்றன) என்ற வாதத்தை மறுத்துரைக்கிறது.


7. "தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்": "இயற்கையனைத்தும் இறைவனே" என்ற வாதத்தை மறுத்துரைக்கிறது.



அதிகாரங்களின் சுருக்கம்:


அதிகாரம் 1 


 *படைப்பின் விவரிப்பு: 

1ம் நாள் : வெளிச்சம், இரவும் பகலும் 

2ம் நாள் - : ஆகாயவிரிவு 

3ம் நாள் : காய்ந்த தரையும், புல்புண்டுகளும் 

4ம் நாள் -  : வானத்தின் ஒளியூட்டிகள் 

5ம் நாள் - : மீன்களும், பறவைகளும் 

6ம் நாள் - : நிலத்தில் வாழும் மிருகங்களும், மனிதனும்.


அதிகாரம் 2 


  • 7ம் நாள் தேவன் ஓய்ந்திருத்தல் 

  • ஏதேன் தோட்டத்தில் ஆணும் பெண்ணும் 

  • படைப்பின் சில விவரிப்புக்கள் 

  • முதலாவது பெண் 

  • நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்.


அதிகாரம் 3 


  • பாவத்தின் ஆரம்பம் 

  • விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியை புசிக்க ஆதாமும், எவாளும் சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டு  நல்வாழ்வை இழத்தல்.

  • தேவனின் நியாயத்தீர்ப்பு 

  • மனித இனத்தின் மீதான தண்டனை 

  • முதலாவது ஆடை 

  • ஏதேனிலிருந்து துரத்திவிடப்படுதல்.


அதிகாரம் 4 


  • காயினும், ஆபேலும் 

  • முதலாவது கொலை 

  • தேவன் காயினை சபித்தல் 

  •  காயீனின் சந்ததியும், குடும்ப வரலாறும்.

  • சேத் மற்றும் ஏனோஸின் பிறப்பு.


அதிகாரம் 5 


  • ஆதாம் முதல் நோவா வரை வம்சவரலாறு.

  •  ஏனோக்கின் பரிசுத்தமும் தேவனோடு சஞ்சரித்தலும் 

  •  ஏனொக்கு எடுத்துக்கொள்ளபடுதலும்


அதிகாரம் 6 


  • பேழை கட்டப்படுதல் 

  • பூமியில் துன்மார்க்கம் பெருகுதல் 

  •  நோவா பேழையை உருவாக்க பணிக்கபடுதல்.


அதிகாரம் 7 


  • வெள்ளம் பெருகுதல் 

  • பேழைக்குள் பிரவேசித்தல் 

  • உலகம் முழுவதையும்

வெள்ளம் சூழ்ந்தது

மாம்சமான யாவும் அழிக்கப்பட்டது.


அதிகாரம் 8 


  • வெள்ளத்தின் முடிவு 

  • அரராத் மலையில் பேழை நிற்றல் 

  • வெளியே விடப்பட்ட

காகமும், புறாவும் 

  • கர்த்தரின் வாக்குத்தத்தம்.


அதிகாரம் 9 


  • நோவாவின் குடும்பம் 

  • முழு மனித குலத்திற்கான அறிவுறுத்தல்கள் 

  • வானவில் உடன்படிக்கை 

  • நோலா வெறித்திருந்தல் 

  • நோவாவின் மரணம்



அதிகாரம் 10 


  • நோவாவின் வம்சவரலாறு.

  • நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு. 

  • முதல் அரசன் நிம்ரோத் மற்றும் கானானிய வழித்தோன்றல்கள். 


அதிகாரம் 11 


  •  பாபேல் கோபுரம் 

  • உலகம் முழுவதும் பேசப்பட்ட ஒரே மொழி 

  • தேவன் மொழியை தாறுமாறாக்குதல் 

  •  சேம் முதல் ஆபிராம் வரை 

  • தேராகு, ஆபிராம், லோத்து ஊர் என்னும் இடத்திலிருந்து ஆரானுக்கு இடம்பெயர்தல் 



அதிகாரம் 12


  • ஆபிராம் அழைக்கப்படுதல் 

  • ஆபிராம் ஆரானை விட்டு கானானுக்கு போதல் /

  • எகிப்தில் ஆபிராமும், சாராயும் 

 பார்வோனுக்கு பயந்து ஆபிராம் சாராயை சகோதரியை போல நடத்துதல்.


அதிகாரம் 13 


  • ஆபிராம் கானானுக்கு செல்லுதல் 

  • ஆபிராமும், லோத்தும் பிரிதலும் லோத்துசோதோமை தெரிந்துகொள்ளலும்.

  • ஆபிராமுக்கு தேவன் அளித்த மூன்றாவது வாக்குத்தத்தம்.


அதிகாரம் 14 


  • ராஜாக்களோடு யுத்தம் 

  • சோதோமின் ராஜாவோடு இணைந்திருந்த ராஜாக்களுக்கெதிராக நான்க ராஜாக்கள் யுத்தம் செய்தல் 

  • ஆபிராம் லோத்தை மீட்டுக்கொள்ளுதல் 

  • மெல்கிசேதேக்கு ஆபிராமை ஆசிர்வதித்தல்.


அதிகாரம் 15 


  • ஆபிராமுக்கு வாக்குதத்தங்கள் அருளப்பட்டது. 

  • 400 ஆண்டுகால அடிமைவாழ்வு முன்னுரைக்கப்படுதல் 

  • கானான் மீண்டும் வாக்களிக்கப்பட்டு அடையாளத்தினாலும், தரிசனத்தினாலும் உறுதிப்படுத்தபடுதல். 


அதிகாரம் 16 


  • ஆகார் கருவுறுதல் 

  • ஆகார் வனாந்திரத்திற்கு ஓடிப்போதலும் திரும்பிவருதலும் 

  • ஆபிராமுக்கும், ஆகாருக்கும் இஸ்மவேல் பிறத்தல் 

  • ஆகாரும், தேவனுடைய தாதனும்


அதிகாரம் 17


  • ஆபிராம் ஆபிரகாமாகுதல் 

  • சாராய் சாராளாகுதல் 

  • விருத்தசேதன உடன்படிக்கை 

  • ஆபிரகாமின் குடும்பத்தினர் விருத்தசேதனம்பண்ணப்படுதல் 

  • உடன்படிக்கையின் அடையாளம்


அதிகாரம் 18


  • தேவனும் இரண்டு தூதர்களும் ஆபிரகாமிடத்தில் வருதல் 

  • தேவன் மனிதஉருவில் ஆபிரகாமிற்கு தரிசனமாதல் 

  • சாாளுக்கு ஒரு குமாரனை வாக்குபண்ணுதலும், அவள் நகைத்தலும். 

  • ஆபிரகாம் தேவனிடத்தில் சோதோமுக்காக வேண்டுதல் செய்தல்.


அதிகாரம் 19


  • சோதோம் கொமோராவின் அழிவு 

  • சோதோமில் லோத்துவை இரண்டு தூதர்கள் சந்தித்தல் 

  • தீயவர்களான சோதோமியர்களுக்கு குருட்டாட்டம் பிடிக்க செய்தல் 

  • சோதோம் கொமோரா அழிக்கப்படுதல் 

  • லோத்தின் மனைவி உப்புத்தூணகுதால். 

  • லோத்துவும் அவனது குமாரத்திகளும் 

  • முறையற்ற உறவினால் தோன்றிய மோவாப் மற்றும் அம்மோன் சந்ததிகள்.


அதிகாரம் 20


  • ஆபிரகாம் கேராரிலே குடியிருத்தல். 

  • ஆபிரகாம் அபிமேலேக்கை ஏமாற்றுதல்.

  • அபிமேலேக்கிடமிருந்து சாராள் காப்பாற்றபடுதல். 


அதிகாரம் 21


  • ஈசாக்கின் பிறப்பு 

  • ஈசாக்கு இஸ்மவேலினால் பரிகசிக்கப்படுதல் 

  • சாராளுக்கும் ஆகாருக்கும் இடையே முறுகல்நிலை உண்டாதல் 

  • ஆகாரும், இஸ்மவேலும் வெளியேற்றபடுதல் 

  • இஸ்மவேல் பெரியவனாதல் 

  • ஆபிரகாம் அபிமேலேக்கோடு உடன்படிக்கை செய்தல்


அதிகாரம் 22


  • தேவன் ஆபிரகாமை சோதித்தல் 

  • ஈசாக்கு பலியிடப்பட்டது.

  • ரெபெக்காளின் குடும்பம்


அதிகாரம் 23


  • சாரானின் மரணமும் அடக்கமும் 

  • மக்பேலா குகை வாங்கப்படுதல் 

  • சாராள் அடக்கம் செய்யப்படுதல்


அதிகாரம் 24


  • ஆபிரகாமின் வேலைக்காரன் ஈசாக்கிற்கு பெண்ணைக் கண்டுபிடித்தல் 

  • ஈசாக்கு. ரெபெக்காளின் திருமணம்


அதிகாரம் 25


  • ஆபிரகாமின் மறுதிருமணம் 

  • ஆபிரகாமின் மரணம்  

  • ஏசா பிறப்பு அவன் தனது சேஷ்டபுத்திரபாகத்தை இழத்தல்


அதிகாரம் 26


  • ஈசாக்கு கேராருக்கு போதலும், ரெபெக்காளை குறித்து பொய் சொல்லுதலும் 

  • ஈசாக்கு அபிமேலேக்கோடு உடன்படிக்கை செய்தல் 

  • பஞ்சம் ஏற்படுதலும் துரவுகள் தோண்டப்படுதலும்

  • ஏசாவின் மனைவிகள்.


அதிகாரம் 27


  • ஈசாக்கு முதிர்வயதாகி ஏசாவிடம் வேட்டையாடி சமைத்துக்கொண்டுவர கேட்டல். 

  • யாக்கோபு ஏசாவைப்போல நடிப்பு.

  • ஏசா ஈசாக்கின் ஆசிர்வாதத்திற்காக கெஞ்சுதல் 

  • ஏசா ஈசாக்கை விரோதித்தல்.


அதிகாரம் 28 


  • ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து ஆரானில் குடியிருக்கும் லாபானிடம் அனுப்பிவிடுநல் 

  • ஏசா மீண்டும் திருமணம் செய்தல் 

  • யாக்கோபு வானத்தின் நுனியை எட்டியிருந்து ஏணியை சொப்பனத்தில் காணுதலும், வாக்குத்தத்தம் பெறுதலும்


அதிகாரம் 29 


  • யாக்கோபு லாபானை சந்தித்தல் 

  •  யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்படுதல் 

  • யாக்கோபு லேயாளையும், ராகேலையும் திருமணம் செய்தல் 

  • லேயாளுக்கு ரூபன், சிமியோன். லேவி யூதா பிறப்பு ‌


அதிகாரம் 30 


  • ராகேல் தனது வேலைக்காரியான பில்காளை யாக்கோபுவிற்கு மனைவியாக்குதல் 

  • யாக்கோபின் குடும்பமும் ஆஸ்தியும் பெருகுதல் 

  • சில்பாள் காத்தையும் ஆசேரையும் பெறுதல் 

  • லேயாள் இசக்காரையும், செபுலோனையும் பெறுதல் 

  • ராகேல் யோசேப்பை பெறுதல்


அதிகாரம் 31


  • யாக்கோபு இரகசியமாக லாபானை விட்டு கானானுக்கு புறப்படுதல் 

  • ராகேல் தனது தகப்பனின் சுருபங்களை திருடிக்கொள்ளல் 

  • லாபான் யாக்கோபை தொடர்ந்துபோய் அவனை கண்டுபிடித்தல் 

  • லாபானும் யாக்கோபும் உடன்படிக்கை செய்துகொள்ளல்


அதிகாரம் 32 


  • யாக்கோபு தூதனோடு போராடுதல்

  • யாக்கோபு ஏசாவை சந்திக்க ஆயத்தப்படுதல்

  • யாக்கோபு தேவனோடு போராடுதல் 

  •  யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுதல்


அதிகாரம் 33 


  • யாக்கோபும் ஏசாவும் மீண்டும் இணைதல் 

  • யாக்கோபு ஏசாவை சந்தித்தபின் சீகேமில் குடியேறுதல்


அதிகாரம் 34 


  • ஏமோரின் குமாரனாகிய சீகேம் தீனாளோடு பலவந்தமாய் சயனித்தல் 

  • யாக்கோபின் குமாரர் சீகேம் ஊரார் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள கட்டயப்படுத்தி அதை தங்களுக்குசாதகமாய் பயன்படுத்தி அவர்களை வெட்டிப்போட்டு பட்டணத்தையும் கொள்ளையிடுதல் 


அதிகாரம் 35 


  • யாக்கோபு பெத்தேலுக்கு போகுதல் 

  • தேவன் யாக்கோபுக்கு வாக்குத்தத்தம் செய்து பெயரை இஸ்ரவேல் என்று மாற்றுதல் 

  • பெஞ்சமின் பிறத்தல் 

  • ஈசாக்கின் மரணம்


அதிகாரம் 36 


  • ஏசாவின் வம்சவரலாறு


அதிகாரம் 37


  • யோசேப்பு அவனது மூத்த சகோதரர்களால் அடிமையாக விற்கப்படுதல்


அதிகாரம் 38 


  • யூதா தனது மருமகளோடு தகாத உறவுகொள்ளல்


அதிகாரம் 39 


  • யோசேப்பு எகிப்திற்கு கொண்டுபோகபட்டு போத்திபாரினால் விலைக்கு வாங்கப்படுதல் 

  • யோசேப்பு போத்திபாரின் மனைவிக்கு உடன்பட மறுத்தல் 

  • போத்திபாரினால் யோசேப்பு சிறைக்கு அனுப்பப்படுதல் 


அதிகாரம் 40 


  • பார்வோனின் வேலைகாரர்களின் சொப்பனங்கள் விளக்கப்படுதல் 

  • பார்வோனின் வேலைகாரர்களான ரொட்டிசுடுபவனும், திராட்சைரசம் கொடுப்பவனும் குற்றம் செய்ததால் சிறையில் தள்ளப்படுதல் 

  • அவர்களது சொப்பனங்களும் விளக்கங்களும்

  • திராட்சைரசம் கொடுப்பவன் விடுவிக்கப்படுதலும், ரொப்டிசுடுபவன் கொல்லப்படுதலும்


அதிகாரம் 41 


  • பார்வோனின் சொப்பனங்கள் விளக்கப்படுதல் 

  • யோசேப்பு சொப்பனங்களை விளக்குதல் 

  • யோசேப்பு எகிப்தின் அதிகாரியாக்கப்படுதல் 

  • ஏழு வருடங்கள் செழிப்பும் எழு வருடங்கள் வறட்சியும் உண்டாகுதல்


அதிகாரம் 42


  • யாக்கோபின் குமாரரின் முதல் எகிப்திய பயணம் 

  • யாக்கோபின் பத்து குமாரர் தானியம் வாங்க எகிப்திற்கு செல்லுதல் 

  • யோசேப்பு அவர்களை உளவாளிகள் என்று குற்றஞ்சாட்டுதல் 

  • பெஞ்சமினை அழைத்துவரவேண்டும் என்ற நிபந்தனையுடன் வீடுவிக்கபடுதல்


அதிகாரம் 43 


  • யாக்கோபின் குமாரரின் இரண்டாம் எகிப்திய பயணம் 

  •  யோசேப்பின் வீட்டில் விருந்து 

  • பெஞ்சமின் மீது தயவு


அதிகாரம் 44 


  • யோசேப்பு வெள்ளிப்பாத்திரத்தை திருடியதாக சகோதரரை குற்றம் சாட்டுதல் 

  • யூதா பெஞ்சமீனுக்காக கெஞ்சுதல்


அதிகாரம் 45


  • யோசேப்பு தன்னை வெளிப்படுத்துதல் 

  • யோசேப்பின் சகோதரர் கானானுக்கு திரும்பிப்போதல்


அதிகாரம் 46 


  • யாக்கோபின் குடும்பம் எகிப்திற்கு போதல் 

  • எகிப்திற்கு போனவர்களின் பெயர்ப்பட்டியல்


அதிகாரம் 47 


  • யோசேப்பின் தகப்பனையும், சகோதரர்களையும் பார்வோன் சந்தித்தல் 

  • யாக்கோபு கோசேனில் குடியேறுதல் 

  • யோசேப்பு பார்வோனுக்காக முழு எகிப்தின் விளைச்சலையும் கொள்ளுதல்


அதிகாரம் 48 


  • யாக்கோபு யோசேப்பின் குமாரர்களான மனாசேயையும், எப்பிராயிமையும் ஆசீர்வாதம் பண்ணுதல்.


அதிகாரம் 49 


  • யாக்கோபு தனது 12 குமாரரையும் அழைந்தல் 

  •  யாக்கோபு தனது குமாரர்கள் மீது ஆசிர்வாதம் கூறுதல் 

  •  யாக்கோபு தனது அடக்கத்தை குறித்து கட்டளை கொடுத்தல் 

  •  யாக்கோபின் மரணம்


அதிகாரம் 50 


  • யோசேப்பு யாக்கோபை கானானில் அடக்கம் செய்தல் 

  •  தன்னிடத்தில் மன்னிப்பை எதிர்பார்த்த தனது சகோதரர்களிடம் பட்சமாய் பேசுதல் 

  •  யோசேப்பு தனது சகோதரர்களை மன்னித்தல் 

  •  யோசேப்பின் மரணம்



Taken from Pr. Thomas Raj Notes

Post a Comment

2 Comments