சங்கீத விளக்கம்
10-ம் சங்கீதம்
(துன்மார்க்கனின் முதல் சங்கீதம்)
பிரிவு
1.துன்மார்க்கனை தண்டிக்க
வேண்டும் என்று கர்த்தரிடம்
ஏறேடுக்கப்படும் முதலாவது
விண்ணப்பம்.
துன்மார்க்கனின்
22 பாவங்கள் - (10:1-11)
2.துன்மார்க்கனை தண்டிக்க
வேண்டும் என்று கர்த்தரிடம்
ஏறேடுக்கப்படும் இரண்டாவது
விண்ணப்பம்.
அத்துடன் நீதிமான்
ஒடுக்கப்படும் போது அவனுக்கு
உதவி புரிய வேண்டும் என்று கர்த்தரிடம்
ஏறேடுக்கப்படும் விண்ணப்பம்
(10:12-18)
செப்துவஜிந்து பதிப்பில் ஒன்பதாவதுசங்கீதமும், பத்தாவது சங்கீதமும் சேர்த்து ஒரே சங்கீதமாய் இருக்கிறது.
எபிரெய பாஷையிலுள்ள சங்கீத
புஸ்தகத்தில், ஒன்பதாவது சங்கீதமும்,பத்தாவது சங்கீதமும் தனித்தனி சங்கீதமாய்
கொடுக்கப்பட்டிருக்கிறது.
தாவீது துன்மார்க்கருடைய
துர்க்குணத்தை பற்றி கர்த்தரிடத்தில்
முறையிடுகிறார். கர்த்தரோ துன்மார்க்கருக்கு
விரோதமாக உடனடியாக எழும்பி வராமல் தாமத்தப்படுத்துகிறார் என்று தாவீது வருத்தத்தோடு ஜெபம் பண்ணுகிறார்.
(சங் 10:1-11). கர்த்தர் தம்முடைய
பிள்ளைகளை விடுவிப்பதற்காக,
துன்மார்க்கருக்கு விரோதமாய் எழும்பி
வருமாறு தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம் பண்ணுகிறார். கர்த்தர் ஏற்ற வேளையில் தம்முடைய ஜனங்களைச்இரட்சிக்க வருவார் என்று தாவீது விசுவாசித்து ஆறுதலடைந்திருக்கிறார்.
துன்மார்க்கனுடைய சுபாவம்
(சங் 10 : 1-6)
கர்த்தர், என் தூரத்தில்
நிற்கிறார்???
கர்த்தாவே, என் தூரத்தில்
நிற்கிறார்? - ஆபத்து நேரிடுகிற
சமயங்களில் நீர் ஏன்
மறைந்திருக்கிறீர்? (சங் 10:1)
தாவீது எல்லா சூழ்நிலைகளும்
கர்த்தரை நம்பியிருக்கிறார். கர்த்தருடைய கிருபையை எதிர்பார்த்து ஜீவிக்கிறார். தனக்குத் துன்பங்கள் வரும்போது,கர்த்தருடைய சமுகத்தை தன்னோடு கூட இருந்து தன்னைப் பாதுகாக்கும் என்று விசுவாசிக்கிறார். ஆனாலும் தனக்குஆபத்தான சில வேளைகளில் கர்த்தர் தன்னோடு கூடயிராமல் தன்னை விட்டு
தூரத்திலே நிற்பதாக வருத்தப்படுகிறார்.
தேவனுடைய கிருபையுள்ள பிரசன்னம்
தன்னை விட்டு தூரமாய்
அகன்று போனது போல தாவீது
வருத்தப்படுகிறார்..
தாவீது தன்னுடைய வருத்தத்தில்
"கர்த்தாவே, என் தூரத்தில் நிற்கிறீர்" என்று கேட்கிறார். தன்னைக் குறித்துச் கர்த்தருக்கு கரிசனை இல்லாதது போல் தன் இருதயத்தில் வேதனைப் படுகிறார். சத்துருக்கள் தேவனுடைய நாமத்திற்கு விரோதமாகவும்,அவருடைய ஜனங்களுக்கு விரோதமாகவும்
தீங்கு செய்கிறார்கள். ஆனால் கர்த்தர்
தம்முடைய ஜனங்களைச் பாதுகாப்பதற்கு உடனே வராமல், தூரத்திலே நிற்பதாக
தாவீது வருத்தப்படுகிறார் மேலும் தனக்கு ஆபத்து நேரிடுகிற சமயங்களில் கர்த்தர் தன்னை பாதுகாக்க வராமல், அவர் மறைந்திருக்கிறார் என்று தாவீது
வருத்தப்படுகிறார்.
தேவன் ஒருபோதும் தம்முடைய
பிள்ளைகளை கைவிடுகிறவரல்ல. ஆபத்து காலத்தில் நமக்கு உதவி புரியாமல் அவர் நம்மை விட்டு தூரத்தில் நிற்கிறவருமல்ல, நமக்கு உதவி புரிய வராமல் மறைந்திருக்கிறவருமல்ல.
நாம் எப்போதுமே வெளிப்பிரகாரமான தோற்றத்தை வைத்து நியாயந்தீர்க்கிறோம். நம்முடைய
அவிசுவாசத்தினாலே நாமே தேவனை விட்டு விலைபோய்விடுகிறோம். இதைப்
புரிந்துகொள்ளாமல் தேவன் நம்மை விட்டு தூரத்தில் நிற்பதுவும், அவர் நமக்கு மறைந்திருப்பதாகவும் அவருடைய சமூகத்தில்
முறையிடுகிறேம்.. நம்முடைய அவிசுவாசம் நம்மை தேவனிடமிருந்து பிரித்துவிடுகிறது. தேவன் நமக்கு அருகில் வந்தால், நாமே
நம்முடைய அவிசுவாசத்தினாலே அவரை விட்டு தூர விலகி
போய்க் கொண்டிருக்கிறோம்.
துன்மார்க்கன்
துன்மார்க்கன் தான் பெருமையில் சிறுமைப்பட்டவனைக் கொடூரமாகத் துன்பப்படுத்துகிறாய்;
அவர்கள் நினைத்த சதிமோசங்களில்
அவர்களே அகப்படுவார்கள் (சங் 10:2).
துன்மார்க்கன் சிறுமைப்பட்டவனுக்குக்
தீங்கு செய்கிறான். தன்னுடைய இருதயத்தில்துன்மார்க்கன் பெருமை படுகிறான். அவன் சிறுமைப்பட்டவன் கொடூரமாகத் துன்பப்படுத்துகிறாய். கர்த்தர்துன்மார்க்கனுடைய
துர்க்கிரியைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார். தாவீதும்
அவனுடைய துன்மார்க்கத்தை கவனித்துக் மனதில் வேதனை படுகிறான்.. அவர்கள்
சிறுமைப்பட்டவர்களை கொடூரமாகத்
துன்பப்படுத்துவது பார்த்து தாவீது
ஆச்சரியப்படுகிறார். துன்மார்க்கருடைய
துர்க்கிரியைகளையெல்லாம் தாவீது பரலோகப் பிதாவினிடத்தில் ஒப்புவிக்கிறார்
நாம் துன்மார்க்கருக்கு விரோதமாக
தீங்கு செய்யக் கூடாது. அவர்களுடைய
துன்மார்க்க குணங்களையும் அவர்களிடத்தில் சொல்லக்கூடாது. துன்மார்க்கரை கண்டிப்பதினால், நமக்கு நன்மை உண்டாவதற்கு பதிலாக தீமையே உண்டாகும். நாம் துன்மார்க்கருடைய
துர்க்குணங்களைக் குறித்து
பேசவேண்டு மென்றால், அவற்றைக் குறித்து துன்மார்க்கரிடத்தில் பேசாமல், அதைக் கர்த்தரிடத்தில் சொல்ல வேண்டும்.
துன்மார்க்கரின் தீய சுபாவங்களை
கர்த்தருடைய சமுகத்தில் பணிவோடு
விண்ணப்பம் பண்ண வேண்டும்.
துன்மார்க்கனை நம்முடைய சுயமுயற்சியால் திருத்த முடியாது. அவர்களை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கும் போது,
கர்த்தரானவர் தம்முடைய
சர்வ வல்லமையினால் அவர்களைத்
திருத்துவார். கர்த்தரால் மாத்திரமே
செய்யக்கூடிய காரியங்கள், நம்மாலும்
செய்ய முடியும் என்று நினைத்து முயற்சி
பண்ணக்கூடாது.
தாவீது துன்மார்க்கனை பற்றி
கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணுகிறார்.
"துன்மார்க்கன் பெருமையினால்
சிறுமைப்பட்டவன் கொடூரமாகத்
துன்பப்படுத்துகிறாய்” என்று முறையிடுகிறார்
.
தாவீது துன்மார்க்கனுக்கு விரோதமாக
இரண்டு காரியங்களை சொல்லுகிறார்.
அவையாவன:
1.பெருமை
2. துன்பப்படுத்துவது.
துன்மார்க்கனுடைய இருதயத்தில்
பெருமை இருப்பதால்தான் அவன்
சிறுமைப்பட்டவனை துன்பப்படுத்துகிறன்.
இருதயத்தின் பெருமையே அவனுடைய
துர்க்குணத்திற்கு காரணம். தேசத்தின்
தலைவர்களும், சபையின் தலைவர்களும் மனத்தாழ்மையோடு இருக்க வேண்டும். அவர்களிடத்தில் பெருமை காணப்படும் போது,
அவர்கள் ஜனங்களை அன்பாய் ஆளுகை செய்வதற்கு பதிலாக, கொடூரமாக ஆளுகை செய்வார்கள். அவர்களுடைய ஆளுகைக்கு கீழ்
கொடுங்கோல் ஆட்சியில் இருக்கும்.
தாவீது கர்த்தருடைய சமுகத்தில்
துன்மார்க்கனை பற்றி முறையிடும்போது,
கர்த்தருடைய சமூகத்தில் ஒரு சிறிய
ஜெபத்தையும் ஏறெடுக்கிறார். "துன்மார்க்கர் நினைத்த சதிமோசங்களில் அவர்களே
அகப்படுவார்கள்" என்று சொல்லுகிறார்.
இருதயத்தில் பெருமையுள்ளவர்கள்
அழிந்து போவார்கள். அவர்கள் பிறருக்குக் நன்மையான காரியங்களை செய்ய நினைப்பதற்கு பதிலாக, சதி மோசங்களை நினைப்பார்கள். அவர்கள் நினைத்த சதிமோசங்கள் அவர்களுக்கு தீங்குகளை தரும்.
துன்மார்க்கனின் பாவங்கள்
1. பெருமை நிறைந்தவன் (சங் 10:24)
2. சிறுமைப்பட்டவன்
துன்பப்படுத்துகிறவன்.(சங் 10:2)
3. நீதிமானுக்கு கண்ணிகளை
வைக்கிறான்.
4. நீதிமானுக்கு விரோதமாக தீங்கு
நினைக்கிறான்.
5. தன் திட்டங்களில் பெருமை
பாராட்டுகிறேன் (சங் 10:3)
6. பேராசைபடுகிறான்.
7. தேவனை மறுதலிக்கிறேன் (சங் 10:4)
8. தேவனுடைய மார்க்கத்தை
ஏற்றுக்கொள்ளமாட்டான் (சங் 10:5)
9. பாவம் செய்ய விரும்புகிறான்.
10. தேவனுடைய நியாயத்தீர்ப்புகளுக்கு
குருடனாயிருக்கிறான்.
11. எதிராளிகள் மீது சீறுகிறான்.
12. தான் இச்சித்தது கிடைத்ததால்
பெருமைபடுகிறான் (சங் 10:6)
13. தேவதூஷணம் சொல்லுகிறான்
(சங் 10:7)
14. மற்றவர்களை வஞ்சிக்கிறான்.
15. மற்றவர்களை ஏமாற்றுகிறான்.
16. தீவினையும் அக்கிரமம் பேசுகிறான்.
17. பிறருக்கு எதிராக சதி செய்கிறான்.
(சங் 10:8)
18. குற்றமற்றவன் கொல்கிறான்
19. திக்கற்றவனுக்கு அநியாயம்
செய்கிறான்.
20. ஏழைக்கு எதிராக சதி பண்ணுகிறான்
(சங் 10:9)
21. அக்கிரமம் செய்கிறான் (சங் 10:10)
22. தன் பாவங்களில் நிம்மதியடைகிறான்.
(சங் 10:11)
கர்த்தரை
அசட்டைபண்ணுகிறவன்
துன்மார்க்கன் தான் உள்ளம்
இச்சித்ததைப் பெற்றதால் பெருமை
பாராட்டி, பொருளை அபகரித்து
தன்னைத்தான் போற்றி, கர்த்தரை
அசட்டைபண்ணுகிறான் (சங் 10:3).
துன்மார்க்கன் தன்னுடைய
சுயவல்லமையிலும், சுயபுத்தியில்,
சுயபராக்கிரமத்திலும் பெருமைப்படுகிறான்.
தன்னுடைய சுயமுயற்சியால் தனக்கு
ஜெயமுண்டாயிற்று என்று
ஆணவமாயிருக்கிறான். தன்னுடைய உள்ளம் இச்சித்ததை அவன் பெற்றுக்கொண்டதினால் அவனுடைய இருதயம் பெருமைப்படுகிறது.
துன்மார்க்கன் தேவனை
மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக தன்னையே மகிமைப்படுத்துகிறான். தன்னால் எல்லாம் செய்ய முடியும் என்று ஆணவமாய் இருக்கிறான்.
துன்மார்க்கனுடைய சுபாவமும்
பரிசுத்தவான்களின் சுபாவமும்
வித்தியாசமாக இருக்கிறது. பரிசுத்தவான்கள் கர்த்தருக்குப் பயந்து
வாழ துடிக்கிறார்கள்.
துன்மார்க்கன்
தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு விரோதமாக எதிர்த்து நிற்கிறார். கர்த்தர் தம்முடைய நீதியினால் எல்லோரையும் நியாயந்தீர்ப்பார்.
துன்மார்க்கனுடைய இருதய
பெருமையினிமித்தம், அவனை
கர்த்தர் தண்டிப்பார்.
துன்மார்க்கனுடைய கண் பல
காரியங்களை இச்சிக்கிறது. தான் இச்சித்த காரியத்தை அவன் பெற்றவுடன் அவனுடைய
இருதயம் பெருமைப்படுகிறது.
அவர் தன்னை தானே பெருமை பாராட்டுகிறான்.
துன்மார்க்கன் உலகப்பிரகாரமான
காரியங்கள் மீது ஆசை வைக்கிறான். உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை.துன்மார்க்கனுக்கு உலக காரியங்கள் தான் தேவனை விட பெரிதாக தெரிகிறது.
துன்மார்க்கனுக்கு உலகப்பிரகாரமான
ஆசீர்வாதமே முக்கியமானதாக தெரிகிறது. இதற்காகவே அவன் பணத்தை சம்பாதிக்கிறான்.
முடிவில் அந்தப் பணம் அவனுக்கு
விக்கிரகமாக மாறிவிடுகிறது.
துன்மார்க்கன் தன்னுடைய உலக ஐசுவரியங்கள் சிநேகித்து, அவற்றோடு
ஐக்கியமாயிருக்கிறான். கர்த்தரை விட்டு
விலகிப் போய் கர்த்தரோடு
அவனுக்கு அன்புமில்லை, ஐக்கியம் மில்லை. கர்த்தரோ, அவனுக்கு தம்முடைய ஆசீர்வாதங்களுக்கு பங்குமில்லை, சாத்தியமில்லை என்று சொல்லி, அவனை தண்டித்துவிடுகிறார்.
கர்த்தர் துன்மார்க்கனை தம்முடைய
சத்துருவாகப் பாவிக்கிறார். இருதயத்தில் பெருமையுள்ளவன் தன்னைத்தானே பெருமை பாராட்டுகிறான் . தன்னுடைய
சுய முயற்சியும், சுய புத்தியையும்,
சுயபராக்கிரமத்தையும் பெருமையோடு
நினைத்துப் பார்க்கிறான்..
"கனம்பொருந்தியவானய் இருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். இதுதான் அவர்களின் வழி , இதுதான்
அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள்
சந்ததியார் அவர்கள் சொல்லை
மெச்சிக் கொள்ளுகிறார்கள்".
(சங் 49:12,13).
துன்மார்க்கன் பொருளை
அபகரித்துக் கொள்கிறான். தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளுவான். கர்த்தரை
அசட்டைபண்ணுகிறன். இவனுக்கு
சுயபலம், சுய முயற்சியும், சுயபராக்கிரமமும்
முக்கியமான தாய் தெரியும். கர்த்தருடைய கிருபையும், அவனுடைய இரக்கமும் தனக்குத்
தேவையில்லை என்று நினைத்து, கர்த்தரே அசட்டைபண்ணுகிறவன்.
துன்மார்க்கன் தேவனைத்
தேடான்
துன்மார்க்கன் தான் கர்வத்தினால்
தேவனை தேடான்; அவன்
நினைவுகளெல்லாம் தேவன்
இல்லை என்பதே (சங் 10:4).
துன்மார்க்கன் தன்னுடைய இருதய
பெருமையினால் கர்த்தரை
அசட்டைபண்ணுகிறான். கர்த்தருடைய
ஆலோசனைகளை புறக்கணித்து விடுகிறான்.அவனுடைய நினைவுகள் எல்லாம் தேவன் இல்லை என்பதேயாகும்.அவனுடைய கிரியைகளிலும் தேவன் இல்லை.
கர்த்தர் துன்மார்க்கனுடைய உள்ளத்தில்
வாசம் பண்ணுவதில்லை. துன்மார்க்கன் தான் கர்வத்தினால் தேவனைத் தேடுவதில்லை.அவனுடைய நினைவுகளெல்லாம், "தேவன்
இல்லை” என்பதாய் இருக்கிறது.
மனுஷனுடைய இருதயத்தின் பெருமை
வரும்போது அவன் கர்த்தரை
அசட்டை பண்ணிவிடுவேன்.
தன் பெருமையில் சிறுமைபட்டவனை
துன்பப்படுத்துவான். பிறருக்கு விரோதமாக சதிமோசங்களை நினைப்பான். பிறருடைய
பொருளை அபகரித்தல் கொள்ளுவான்.
தன்னைத்தானே போற்றி தன்னைப்
பெருமைப்படுத்துவேன். துன்மார்க்கனுடைய
தீயசுபாவங்களுக்கு அவனுடைய
உள்ளத்தின் பெருமையே முக்கிய காரணம்.
மனுஷர் தேவன் தேடவில்லை யென்றால் அதற்கு ஒரே
காரணம் தான் உண்டு. தங்களுக்கு தேவன் தேவையில்லை என்று இவர்கள்
தீர்மானிக்கிறார்கள்.தங்களுடைய
சரீர முயற்சியும், சுயபுத்தியும், சுக பராக்கிரமம் போதும் என்று நினைக்கிறார்கள்.
இவர்களுடைய இருதயத்தின் பெருமையால் தேவனே இவர்களுக்கு முக்கியமானவராக தெரியவில்லை. தேவன் தங்களுக்கு தேவை
இல்லையென்று நினைக்கிறார்கள்.
தேவனுடைய கட்டளைகளுக்கும், அவருடைய நியாயத்தீர்ப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் அவற்றை
அசட்டை பண்ணுகிறார்கள்.
துன்மார்க்கனுடைய வழிகள்
அவன் வழிகள் எப்போதும்
கேடுள்ளவைகள்; உம்முடைய
நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு
எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கிறது;
தன் எதிராளிகளெல்லார்மேலும்
சீறுகிறான் (சங் 10:5).
துன்மார்க்கனுடைய வழிகள்
எப்போதும் கேடுள்ளவைகளா இருக்கிறது.துன்மார்க்கரிடத்தில் தேவனுடையநியாயத்தீர்ப்பு பற்றி சொன்னாலும், அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதில்லை.
தேவன் இல்லையென்று
அவர்கள் தங்கள் இருதயத்தில்
நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.
துன்மார்க்க பாதையில் சென்றால்
கர்த்தருடைய தண்டனை அவர்கள் மீது வரும் என்று அவர்களுக்கு எச்சரித்து
சொன்னாலும், அவர்கள் எச்சரிப்பின்
வார்த்தைக்கு செவி கொடுப்பதில்லை.
அவர்களுடைய வழிகள் எப்போதும்
கேடுள்ளவைகளாயிருக்கிறது.
தேவனுடைய வார்த்தையில்
உண்மை இருப்பதாக துன்மார்க்கன்.
ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை.
தேவனுடைய நியாயத்தீர்ப்புகள்
துன்மார்க்கனுடைய பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாக இருக்கிறது. அவனால் தேவனை தரிசிக்கவும் முடியவில்லை.அவன் தேவனுடைய நியாயத்தீர்ப்பு பற்றி சிந்தித்துப் பார்க்கவும் முடியவில்லை
அவர்களுடைய மனக்கண்கள் தேவனுடைய காரியங்களை காணக்கூடாதபடி மங்கி போயிருக்கிறது,
தேவனுடைய நியாய தீர்ப்பை பற்றியும்,
துன்மார்க்கனுக்கு தேவன் கொடுக்கப்போகும் தண்டனைகளை பற்றியும் தன்னிடத்தில் எச்சரித்து சொல்லுகிற எல்லோரையும்
துன்மார்க்கன் எதிராளிகளாகப் பாவிக்கிறான்.
தனக்கு நல்ல ஆலோசனைகள் சொன்ன
எல்லோர் மீதும் சீறுகிறான். அவர்கள் மீது கோபப்படுகிறான். இவனுடைய பார்வைக்கு நன்மை தீமையாய் தெரிகிறது.
நல்ல ஆலோசனை தூர் ஆலோசனையாகத்
தெரிகிறது. நல்லார் தீயாவராகத்
தெரிகிறார்கள், சிநேகிதர்கள் எதிராளிகளாகத் தெரிகிறார்கள். இவனுடைய வழிகளும்,
சிந்தனைகளும், செயல்களும் எப்போதும் கேடுள்ளவைகளாகவே இருக்கிறது.
தேவனுடைய நியாயத்தீர்ப்பு பற்றி இவன் சிந்திப்பது மில்லை. தேவனுக்கு இவன் பயப்படுவதுமில்லை.
துன்மார்க்கன்
தன் இருதயத்தில்
சொல்லிக்கொள்கிறான்
நான் அசைக்கப்படுவதில்லை,
தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு
என்னைத் அணுகுவதில்லை என்று தன்
இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான்
(சங் 10:8).
துன்மார்க்கன் தற்காலத்தில் தாண்
அனுபவித்து வரும் வசதிகளும், ஆடம்பர
வாழ்க்கையும் நித்தியமானது - என்று
நினைக்கிறான். "தான்
அசைக்கப்படுவதில்லை" என்று
துன்மார்க்கன் தன் இருதயத்தில்
சொல்லிக்கொள்கிறான். தன்னை ஒரு
தீங்கும் அணுகுவதில்லையென்று தன்
இருதயத்தில் சொல்லிக்கொண்டு
இறுமாப்பு இருக்கிறான். தனக்கு மாத்திரமல்ல தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு
தன்னை அணுகாது என்று
ஆணவத்தோடிருக்கிறான். ஐசுவரியமும்
சம்பத்துகளும் தனக்கு நிலைத்திருக்கும்
என்பது இவருடைய பெருமையான
சிந்தனை.
துன்மார்க்கன் தன் இருதயத்தில்
தனக்குப் பிடித்த வார்த்தைகள்
சொல்லி, தனக்குத்தானே
சந்தோஷப்படுகிறான். இவனிடத்தில்
ஐசுவரியம் ஏராளமாக குவிந்திருக்கிறது.
இவை தனக்கும் தன்னுடைய
சந்ததியருக்கும் தாராளமாகப் போதும் என்று ஆணவத்தோடிருக்கிறான். வறுமை, பசி, பஞ்சம், பட்டினி, தீங்கு ஆகிய எதுவும் தலைமுறை தலைமுறைதோறும் தன்னை
அணுகுவதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான்.
பாபிலோன் செழித்திருந்தபோது
இப்படித்தான் பெருமையாக பேசிற்று.
"என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேன்"
(ஏசா 47:7) என்று தன்னைப்பற்றி
பெருமையுடன் சொல்லிற்று. இந்த
வாக்கியத்திற்கு, "நான் எந்நாளும்
குமரியாய் இருப்பேன்" என்று பொருள்.
பாபிலோன் தேசம் தன்னுடைய அழகிலும், ஆடம்பரத்தில் இறுமாப்பாய்
இதுபோல ஆணவமாகப் பேசிற்று.
"நான்ராஜஸ்திரீயாகிய வீற்றிருக்கிறாள். நான் கை பெண்ணல்ல, நான் தூக்கத்தைக் காண்பதில்லை"
(வெளி 18:7) என்று
பாபிலோன் தேசம் தன் இருதயத்திலே
பெருமையாய் எண்ணிற்று. பாபிலோன் தேசம் தன்னை மகிமைப்படுத்தி செல்வச்செருக்காய் வாழ்ந்ததே எப்படியோ அவ்வளவாய்
வேதனையும் துக்கமும் அந்த தேசத்திற்கு கொடுக்கப்பட்டது.
தேவனுடைய நியாயத்தீர்ப்பு
புரிந்துகொள்ளாமல், பாபிலோன் தேசம்
தன்னுடைய இருதயத்தில் பெருமையினாலும் அகந்தையினால் தனக்குத்தானே பெருமையாய் பேசிற்று. அதுபோலவே துன்மார்க்கனும் "நான்
அசைக்கப்படுவதில்லை, தலைமுறை
தலைமுறைதோறும் தீங்கு என்ன
அணுகுவதில்லை ' என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான்.
அழிவுக்கு சமீபமாய்
வந்திருக்கிறார்கள், அழிவிலிருந்து விலகி ஓட்டுவதற்கு பதிலாக, அழிவை நோக்கி வேகமாய் ஓடுகிறார்கள். இவர்களுடைய பெருமையும் ஆசையும் இவர்களுடைய அழிவுக்கு காரணம்.
தங்கள் இருதயத்தின் பெருமையால் இவர்கள் தேவனுக்கும் அவருடைய ஆலோசனைகளுக்கும் எதிர்த்து
நிற்கிறார்கள். கீழ்ப்படிதல் என்ற
வார்த்தைக்கு இவர்களுடைய ஜீவியத்தில்இடமில்லாமல் போயிற்று. தங்களுடைய இருதயத்தை நற்குணத்தால் நிரப்புவதற்கு
பதிலாக துர்க்குணத்தில் நிரப்புகிறார்கள்.
பிறருக்கு உதவி செய்வதற்கு பதிலாக,
பிறருக்கு தீங்கு செய்கிறார்கள்.
சிறுமைப்பட்டவனுக்குக் உதவி செய்வதற்கு பதிலாக, அவளை கொடூரமாக துன்பப்படுத்துகிறவர்கள்.
துன்மார்க்கனுடைய வஞ்சகம்
(சங் 10 : 7-11)
சங் 10:7. அவன் வாய் சபிப்பினாலும்
கபடத்தினாலும் கொடுமையிலும்
நிறைந்திருக்கிறது; அவர் நாவின் கீழ்
தீவினையும் அக்கிரமமும் உண்டு.
சங் 10:8. கிராமங்களின்
ஒளிப்பிடங்களில் பதிவிருந்து,
மறைவிடங்களில் குற்றமற்றவன்
கொல்கிறான்; திக்கற்றவர்களை
பிடிக்க அவன் கண்கள்
நோக்கிக்கொண்டிருக்கிறது.
சங் 10:9. தன் கெபியிலிருக்கிற
சிங்கத்தை போல் மறைவில்
பதிவிருக்கிறான்; ஏழையை பிடிக்க
பதிவிருந்து, ஏழையைத் தன்
வலைக்குள் இழுத்துப்
பிடித்துக்கொள்ளுகிறான்.
சங் 10:10. திக்கற்றவர்கள் தன்
பலவான்கள் வாயில் விழும்படி அவன்
பதுங்கி கிடக்கிறான்.
சங் 10l1. தேவன் அதை மறந்தான் என்றும்,அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதை காணமாட்டேன் என்றும்,
தன் இருதயத்திலே சொல்லிக்கொள்கிறான்.
துன்மார்க்கனுடைய வாய்
அவன் வாய் சபிப்பினாலும்
கபடத்தினாலும் கொடுமையிலும்
நிறைந்திருக்கிறது; அவர் நாவின் கீழ்
தீவினையும் அக்கிரமம் உண்டு.
கிராமங்களின் ஒளிப்பிடங்களில்
பதிவிருந்து, மறைவிடங்களில்
குற்றமற்றவன் கொல்கிறான்;
திக்கற்றவர்களை பிடிக்க அவர்
கண்கள் நோக்கிக் கொண்டிருக்கிறது
(சங் 10:7,8).
துன்மார்க்கர் கொடுமையானவர்கள்.
கசப்பானவர்கள். அவர்களுடைய வாய்
சபிப்பினாலும் கபடத்தினாலும்
நிறைந்திருக்கிறது. துன்மார்க்கர் ஒருபோதும் உண்மை பேசுவதில்லை. துன்மார்க்கனுடைய நாவின் கீழ் தீவினையும் அக்கிரமம்
நிரம்பியிருக்கிறது. இவர்கள் வஞ்சகமான எண்ணம் உள்ளவர்கள்.
துன்மார்க்கர் குற்றமற்றவனை
கொல்வதற்காக ஒளிப்பிடங்களில்
பதிவிருக்கிறார்கள். மறைவான இடங்களில் குற்றமற்றவனை கொள்ளுகிறார்கள்.
ஏசுவைப்போல தந்திரமுள்ள
வேட்டைக்காரனாயிருக்கிறார்கள். இவர்கள் ஒளிப்பிடங்களில் பதிவிருப்பதற்கு
காரணமுண்டு. தங்களுடைய
துர்ச்செய்கைகளை நினைத்து வெட்கப்பட்டு,குற்றமற்றவன் மறைவிடங்களில்
கொல்வதில்லை. தேவனுடைய நியாயத்தீர்ப்பு தங்கள் மீது வருமோ என்று பயந்து இவர்கள்
ஒளிப்பிடங்களில் பதிவிருப்பதில்லை.
குற்றமற்றவன் தப்பித்து
ஓடிப்போய்விட கூடாது என்பதற்காகவே
துன்மார்க்கன் ஒளிப்பிடங்களில்
பதிவிருக்கிறான். துன்மார்க்கன் தன்னுடைய துர்க்குணம் வெளிப்பட்டு விடுமோ என்று ஒருபோதும் கவலைப்படுவதில்லை.
தன்னுடைய துர்க்குணத்தில் இவன்
பெருமைப்படுகிறேன். இவனிடத்தில்
வஞ்சகம் நிரம்பியிருக்கிறது. இவன்
தேவனுக்கு " பயப்படுவதில்லை
மனிதனுக்கும் பயப்படுவதில்லை. தன்னுடைய தூர் செய்கைகளை தேவன்
நினைவுகூர மாட்டார் என்று, அவற்றை
மறந்து விட்டார் என்றும் இறுமாப்பாய்
சிந்திக்கிறான்.
துன்மார்க்கனுடைய கண்கள்
திக்கற்றவர்களை பிடிக்க
நோக்கிக் கொண்டிருக்கிறது. அவர்களைப் பிடிப்பதற்காக துன்மார்க்கன் கிராமங்களின் ஒளிப்பிடங்களில் பதிவிருக்கிறான். தனக்கு சாதகமான அந்த
இடத்தில் அவன் குற்றமற்றவனை
கொன்று போடுகிறான். குற்றமற்றவனுக்குத்
தன்னுடைய சதிசெயல் தெரிந்துவிட்டால்
அவன் தப்பித்து விடுவான் என்று
நினைத்துத்தான், சதிகாரன்
ஒளிப்பிடங்களில் பதிவிருக்கிறான்.
மறைவிடங்களில் மறைவாய்க்
கன்னி வைக்கிறான்.
ஏழைகளையும் குற்றமற்றவர்களையும்
பாதுகாக்க வேண்டிய அவர்கள் அவர்களை ஒடுக்க கூடாது. அவர்களை கொன்று போடக்கூடாது. பாதுகாக்க வேண்டியவர்கள் அழிக்கிறவர்களாக இருந்தால் தேவனுடைய
கோபம் அவர்கள் மீது வரும். ஆனால்
துன்மார்க்கர் தேவனுடைய
கோபத்தை பற்றிய, அவருடைய
நியாய தீர்ப்பை பற்றியோ சிறிதும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இவர்களுக்கு தங்களுடைய
சுய சந்தோஷம் முக்கியமானதாய் இருக்கிறது. தங்களுடைய ஆசைகளை
நிறைவேற்றுவதற்கு இவர்கள் எதையும்
செய்வதற்குத் துணிந்திருக்கிறார்கள். நீதி, நியாயம், நேர்மை ஆகியவற்றை பற்றியும் இவர்கள் கவலைப்படுவதில்லை.
துன்மார்க்கன் பதுங்கிக் கிடக்கிறான்
தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப் போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையை பிடிக்கபதிவிருந்து,ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்து கொள்கிறது. திக்கற்றவர்களை தன் பலவான்களின் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான். தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதை காண மாட்டார் என்று, தன் இருதயத்திலே
சொல்லிக்கொள்கிறான் (சங் 10:9-11).
துன்மார்க்கன் தான் கெபியிலிருக்கிற
சிங்கத்தைப் போல மறைவில் பதிவிருக்கிறான்.ஏழையை பிடிப்பதற்கு பதிவிருக்கிறான்.ஏழையை தன் வலைக்குள் இழுத்து
பிடித்துக்கொள்கிறான். - ஏழைகளை
தங்களுடைய - அதிகாரத்திற்குள்ளும்,
ஆளுகைக்குள்ளும் சிறைப்பிடிக்கிறான்.
துன்மார்க்கன் ஏழையை துன்பப்படுத்தி
அவனைக் கொன்று போடுகிறான்.
துன்மார்க்கர் உயிருள்ள ஜீவன்களை
வேட்டையாடுகிறார்கள். ஏழைகளுக்கு உதவி செய்ய கர்த்தரைத் தவிர வேறு
ஒருவருமில்லை. தேவனுடைய பிள்ளைகள் அநேகர்
உலகப்பிரகாரமான அதிகாரமும்
செல்வாக்கும் அற்றவர்களாய் இருக்கிறார்கள்.
துன்மார்க்கன் கர்த்தருடைய
பிள்ளைகளை பதிவிருந்து
பிடித்துக்கொள்கிறான். கர்த்தருடைய
பிள்ளைகள் மீது தன்னுடைய வலையை
வீசுகிறான். தன்னுடைய வலைக்குள் விழுந்த ஏழைகளை இழுத்துப் பிடித்து கொள்கிறான்.துன்மார்க்கன் தன்னுடைய சுய ஆதாயத்திற்காக கர்த்தருடைய பிள்ளைகளைத் துன்பப்படுத்துகிறான்.
கர்த்தருடைய பிள்ளைகள் தேவ சாயலாக இருக்கிறார்கள். துன்மார்க்கன் தேவனுக்கும், அவருடைய சாயல் இருக்கிற பரிசுத்தவான்களுக்கும்
விரோதியாய் இருக்கிறான். கர்த்தருடைய பிள்ளைகளை தன்னுடைய சத்துருவைப்போல
பாவிக்கிறான். ஒரு குற்றமும் செய்யாத
பரிசுத்தவான்களை துன்மார்க்கன் மறைவில் பதிவிருந்து தன் வலைக்குள் பிடித்து இழுத்துக்கொள்ளுகிறான்.
கெபிக்குள் இருக்கிற சிங்கம் இரத்த
வெறியோடு இருக்கும். தன்னுடைய வெறியைத் தீர்த்துக்கொள்வதற்காக அது மறைவிலே பதிவிருக்கும். பலவீனமான ஒரு
மிருகத்தை பிடித்து சிங்கம் தன்னுடைய
இரத்த வெறியை தீர்த்துக் கொள்ளும்.
தன்னுடைய இரையைப பிடிப்பதற்குத்தான் சிங்கம் மறைவிலே பதிவிருக்கிறது. அதுபோலத்தான் துன்மார்க்கரும் ஏழைகளை பிடிப்பதற்காகத்தான் தங்களைத்
தாழ்த்துகிறார்கள். மாய்மாலமான வேஷம் போடுகிறார்கள். எப்படியாவது ஏழைகளை பிடித்துக்கொள்ள வேண்டுமென்பது தான்
அவர்களுடைய ஆசை. ஏழைகள் தங்களுக்கு அருகாமையில் வர வேண்டுமென்பதற்காக
துன்மார்க்கர் மறைவிடங்களில்
பதிவிருக்கிறார்கள்.
ஏழைகள்
திக்கற்றவர்களாக இருக்கிறார்கள்.
துன்மார்க்கர் பலவான்களாயிருக்கிறார்கள்.
திக்கற்றவர்கள் தங்கள் கையில் விழும்படி துன்மார்க்கன் பதுங்கிக் கிடக்கிறான். இவர்கள் தேவனுக்குப் பயந்து, அல்ல
திக்கற்றவர்களுக்கு பயந்து பதுங்கி
கிடைக்கவில்லை. தங்களுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காகவே இவர்கள் பதூங்குகிறார்கள்.
கபடத்தினாலும் கொடுமையிலும்
நிறைந்திருக்கும் துன்மார்க்கர், தங்களுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக, எதையும்
செய்வதற்குத் துணிந்திருப்பார்கள்.
இவர்களுடைய ஆலோசனைகளையெல்லாம்
துர் ஆலோசனைகளாகவே இருக்கும்.
இவர்களுடைய வழிகளெல்லாம்
கேடுள்ளவைகளாகவே இருக்கும்.
தங்களுடைய தூர் ஆலோசனைகளை
நிறைவேற்றுவதற்கு துன்மார்க்கர் எதையும்செய்வதற்குத் துணிந்தவர்களாயிருப்பார்கள்.
துன்மார்க்கரிடத்தில் தேவனைப்பற்றிய
நினைவு எதுவுமில்லை. தங்களுடைய
துர்ச்செய்கைகளை தேவன் நினைவில்
வைத்திருப்பார் என்று இவர்கள்
நம்புவதில்லை . தேவன் தங்களுடைய
துன்மார்க்கம் கிரியைகளை மறந்தார்
என்றும், அவர் தம்முடைய முகத்தை
மறைத்து, ஒருக்காலும் அதை காண மாட்டார் என்றும் துன்மார்க்கன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான். துன்மார்க்கனுடைய உள்ளத்தில் தெய்வ பயம் இருக்கு மென்றால் அவன் துணிகரமாக தீங்கு செய்ய மாட்டான்.
துன்மார்க்கன் திக்கற்றவர்களுக்கு
தீங்கு செய்யும் முன்பாக, அவன்
தன்னுடைய இதயத்திலிருந்து
தெய்வ பயம் நீக்கி போடுகிறான்.
தேவனைப்பற்றிய விசுவாசத்தை
அகற்றிப்போடுகிறான். தேவனுடைய
நியாயத்தீர்ப்பு பற்றிய
சிந்தனைகளையெல்லாம் தன்னுடைய
இதயத்திலிருந்து அழித்து போடுகிறான்.
தெய்வபயம் இல்லாதவர்கள் மாத்திரமே
பிறருக்குத் துணிகரமாய்த் தீங்கு செய்ய
முடியும். தேவன் இல்லையென்று
சொல்லுகிறவர்கள் மாத்திரமே தேவனுடைய பிரமாணத்துக்கு விரோதமாய் துணிகரமாக
எழும்பி நிற்பார்கள்,
"தேவன் தன்னுடைய துர்க்கிரியைகளை
மறந்தார்" என்று துன்மார்க்கன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொண்டு, மேலும் மேலும் துர்க்கிரியைகளை நடப்பிக்கிறான்.
குற்றமற்றவர்கள் மறைவிடங்களில்
கொல்கிறான். ஏழைகளுக்கு விரோதமாக கிராமங்களின் ஒளிப்பிடங்களில் பதிவிருக்கிறான். ஏழையைத் தன் வலைக்குள் இழுத்து பிடித்து கொள்கிறான்.
தன்னுடைய வஞ்சகமான எண்ணத்தினால்,
தன்னுடைய மாம்சத்தின் இச்சைகளை
நிறைவேற்றுகிறான்…….
0 Comments