9- ம் சங்கீதம் .சங்கீத விளக்கம்

 சங்கீத விளக்கம்


9- ம் சங்கீதம்


 "தேவனுடைய நியாயத்தீர்ப்புக்காக ஜெபமும் துதியும்"


பிரிவுகள்:


வசனம். 1-2 துதி.

வசனம் .3-6 என் துதி?

வசனம். 7-8 நியாயத்தீர்ப்பு. 

வசனம் .9-10 கர்த்தரே தஞ்சம்,

வசனம் 11-12 துதித்து அறிவியுங்கள். 

வசனம். 13-14 தனக்காக ஜெபம், 

வசனம்.15-17 துன்மார்க்கரின் முடிவு.

வசனம். 18 எளியவன். 

வசனம்.19-20 நியாயத்தீர்ப்புக்காக வேண்டுதல். 


வசன விளக்கம்


1,2 வசனம்


கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன், உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.


உம்மில் மகிழ்ந்து களிகூருவேன், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன்


கர்த்தரை முழு இருதயத்தோடும் துதித்து அவரைப்பற்றி மற்றவர்களிடம் விவரமாகக் கூறிய தாவீதைப்போன்று நாம் துதிக்கிறோமா? அவருடைய அதிசயங்களை மற்றவர்களுக்கு

விவரமாக எடுத்துரைக்கிறோமா? அவர் நமக்குச் செய்த அதிசயங்களை நாம் விவரிக்க விவரிக்க அவ்வாறு விவரிப்பதற்காக அதிசயங்களை மேலும் அவர் நமக்குச் செய்வார்.


4 ம் வசனம்


நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய்ச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்


மற்றவர்கள் நம்மைத் தவறாகப் புரிந்துகொள்ளும்போதும் தவறாகக் குற்றஞ்சாட்டும்போதும், நமது செயல்களும் கருத்துகளும் புறக்கணிக்கப்படும்போதும் கர்த்தரைத் தேடுவோம். அவர் யாவற்றையும் சரி செய்வார்.


7-12 -ம் வசனம்.


இப்பகுதியில் வரும் கர்த்தரின் செயல்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எழுதித் தியானித்து நன்றி செலுத்துங்கள் ! இப்பகுதியில் நாம் நம்புவதற்கேற்ற வாக்குறுதிகள் உண்டு, அவற்றை வேதத்தில் அடிக்கோடிடலாம். சிக்கலான நேரங்களில் கர்த்தர் நமக்கு அடைக்கலம் தருகிறவர், நம்மை அவர் கைவிடுவதில்லை என்பவற்றிற்காக ஊக்கமாக நன்றி செலுத்துவோமாக. கர்த்தர் நியாயத்தீர்ப்பு செய்யும் நாள் உண்டு என்பதைக் கருத்திற்கொண்டு வாழ்வோமாக.


12 ம் வசனம்.


இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார், சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார். 


கர்த்தருடைய பிள்ளைகளுக்கு எதிராகச் செயல் புரிகிறவர்களுக்கு நியாயத்தீர்ப்பு உண்டு. இரத்தப்பழிகளைக் குறித்து கவனமாக விசாரித்துத் தீர்மானிக்கப்படும்.


13 ம் வசனம்


மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு...


கர்த்தரின் ஒரு பெயர்: "மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தர்" என்பதாகும். இப்பெயரைச் சொல்லித் துதித்து இந்த வசனத்திலுள்ள இருவித வாசல்களைத் தியானித்து பார்க்கலாம்.


14 ம் வசனம்.


தேவரீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். 


தேவன் தனக்கு உதவி செய்யவேண்டும் என்று வேண்டிக்கொள்கிற அநேகர் தனக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கேட்கின்றனர். தாவீதோ கர்த்தருடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு மட்டுமின்றி அவருடைய துதியை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுகிறதற்காகவும் தனக்கு உதவி கேட்கிறார். கர்த்தர் உமக்குச் செய்கிற நன்மைகளை எடுத்துக்கூறி ஊழியம் செய்கிறேமா???  நம்முடைய விண்ணப்பங்களின் நோக்கம் என்ன?


15 ம் வசனம். 


ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழந்தார்கள், அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக் கொண்டது. 


மக்கள் செய்யும் தீமை அவர்களுக்குப் பின்  அவர்கள் குடும்பத்திற்கும் கேடு விளைவிக்கும். இந்த அநேகர் உணராமல் இருக்கிறார்கள், 


16 ம் வசனம்.


கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார், துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக் கொண்டான்.


 "இகாயோன்" என்பது "தியானி"என்ற பொருள் தரும்.


17 ம் வசனம்.


துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். 



கர்த்தர் நல்லவர் என்பது உண்மைதான். ஆனால் நரகம் என்று ஒன்று இருக்கிறது என்று கூறி பாவத்தில் இருப்பவர்களை எச்சரிப்போமாக 


18 ம் வசனம்.


எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை, சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை. 



அரசாங்கங்கள், அதிகாரிகள், செல்வந்தர்கள் போன்றவர்கள் எளியவர்களை மறக்கலாம். தேவனையும் இப்படி பட்ட மக்களை நினைப்பவர்கள் கெட்டு போவதில்லை. 


19-20  ம் வசனம்

இந்த விண்ணப்பங்களை ஏறெக்கலாம்.


20 ம் வசனம்


ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா.) 


கர்த்தருடைய மகத்துவத்தை உணராததால் அவருக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராக அநேகர் செயல்படுகின்றனர். கர்த்தருக்கு முன்பாகத் தாங்கள் எல்லாவிதத்திலும் மிகவும் குறைந்தவர்கள் என்பதையும் திடீரென மரணமடைய நேரிடலாம் என்பதையும் நினைவிற்கொண்டால் அவ்வாறு செய்யமாட்டார்கள்….





Post a Comment

1 Comments