வாஞ்சை அறிந்து கொள்வோம் பகுதி- 46

 அறிந்து கொள்வோம்

பகுதி- 46


வாஞ்சை 


"வாஞ்சித்தல்" என்றால் "முழு இருதயத்தோடும் விரும்புதல்" என்று அர்த்தம்.


நீதி: 13:19 

"வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது'' 

 

நாம் விரும்பியதைப் பெறும்போது, அது

ஜீவவிருட்சத்தைப் பெறுவதுபோல இருக்கும் (நீதி. 13:12).


ரோமர் 1:11-ல்

பவுல் தான் ரோமாபுரியின் விசுவாசிகளைக் காண வாஞ்சிப்பதாகக் கூறியிருக்கிறார்.

 இங்கே வாஞ்சிப்பதைக் குறிக்க epipothes என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகமான விருப்பத்தைக் குறிக்கிறது.


ரோமர் 10:1-ல்

இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட வேண்டும்

என்பதே எனது இருதயத்தின் விருப்பம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். இங்கே விருப்பத்தைக் குறிக்க eudokia என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.


 எவைகளை வாஞ்சிக்க வேண்டும்?


1.நாம் தேவனுடைய நியாயங்களை வாஞ்சிக்க வேண்டும் - சங். 119:20.


2. நாம் தேவனை வாஞ்சிக்க வேண்டும் ஏசா 26:9. அவரைத் தவிர நமக்கு வேறு விருப்பம் இருக்கக்கூடாது - சங். 73:25.


3. நாம் அதிகாலையில் அவரை தேட வேண்டும். நம் ஆத்துமா அவரை வாஞ்சிக்க வேண்டும் - சங். 63:1.


4. தேவனுக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வாஞ்சிக்க வேண்டும் - பிர. 12:13. 


5. கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மீது வாஞ்சையோடு இருக்க வேண்டும்.

 சங். 84:2


6. தேவனுடைய வல்லமையையும், அவருடைய மகிமையையும் காண வாஞ்சிக்க வேண்டும் - சங். 63:2.


7. நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள வாஞ்சை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

 2 கொரி.5:2.


8.சக விசுவாசிகளின் நலனைக்குறித்து வாஞ்சை உள்ளவர்களாக இருக்க வேண்டும் - பிலி. 2:26.


 9. மற்றவர்கள் மீது வாஞ்சையாயிருந்து தேவனுடைய சுவிசேஷத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

1தெச.2:8.


10. தேவனுடைய இரட்சிப்புக்காக நாம் தவித்து, அவருடைய வசனத்துக்காக காத்திருக்க வேண்டும் - சங். 119:81.





Post a Comment

0 Comments