அறிந்து கொள்வோம்
பகுதி- 46
வாஞ்சை
"வாஞ்சித்தல்" என்றால் "முழு இருதயத்தோடும் விரும்புதல்" என்று அர்த்தம்.
நீதி: 13:19
"வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது''
நாம் விரும்பியதைப் பெறும்போது, அது
ஜீவவிருட்சத்தைப் பெறுவதுபோல இருக்கும் (நீதி. 13:12).
ரோமர் 1:11-ல்
பவுல் தான் ரோமாபுரியின் விசுவாசிகளைக் காண வாஞ்சிப்பதாகக் கூறியிருக்கிறார்.
இங்கே வாஞ்சிப்பதைக் குறிக்க epipothes என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகமான விருப்பத்தைக் குறிக்கிறது.
ரோமர் 10:1-ல்
இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட வேண்டும்
என்பதே எனது இருதயத்தின் விருப்பம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். இங்கே விருப்பத்தைக் குறிக்க eudokia என்ற கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எவைகளை வாஞ்சிக்க வேண்டும்?
1.நாம் தேவனுடைய நியாயங்களை வாஞ்சிக்க வேண்டும் - சங். 119:20.
2. நாம் தேவனை வாஞ்சிக்க வேண்டும் ஏசா 26:9. அவரைத் தவிர நமக்கு வேறு விருப்பம் இருக்கக்கூடாது - சங். 73:25.
3. நாம் அதிகாலையில் அவரை தேட வேண்டும். நம் ஆத்துமா அவரை வாஞ்சிக்க வேண்டும் - சங். 63:1.
4. தேவனுக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள வாஞ்சிக்க வேண்டும் - பிர. 12:13.
5. கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மீது வாஞ்சையோடு இருக்க வேண்டும்.
சங். 84:2
6. தேவனுடைய வல்லமையையும், அவருடைய மகிமையையும் காண வாஞ்சிக்க வேண்டும் - சங். 63:2.
7. நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள வாஞ்சை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
2 கொரி.5:2.
8.சக விசுவாசிகளின் நலனைக்குறித்து வாஞ்சை உள்ளவர்களாக இருக்க வேண்டும் - பிலி. 2:26.
9. மற்றவர்கள் மீது வாஞ்சையாயிருந்து தேவனுடைய சுவிசேஷத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
1தெச.2:8.
10. தேவனுடைய இரட்சிப்புக்காக நாம் தவித்து, அவருடைய வசனத்துக்காக காத்திருக்க வேண்டும் - சங். 119:81.
0 Comments