ரோமர் 16 ஆம் அதிகாரம் தரும் முக்கிய தகவல் அறிந்து கொள்வோம் பகுதி-49

அறிந்து கொள்வோம்

பகுதி-49



ரோமர் 16 ஆம் அதிகாரம் தரும்

முக்கிய தகவல்


பத்து சீஷர்கள்


(ரோம 16:8-12)


    1. அம்பிலி

    2. உர்பான்  

    3. ஸ்தாக்கி 

    4. அப்பெல்லே 

    5. அரிஸ்தொபூலு 

    6. ஏரோதியோன்  

    7. நர்கீசு  

    8. திரிபேனாள் 

    9. திரிபோசாள் 

    10. பெர்சியாள் 


ஏரோதியோன் என்ற நபர் பவுலின் மூன்றாவது உறவினன். 

மாற்கு 15:21 ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறவன் ரூபுவாக இருக்கலாம். இவனுடைய தாய் பவுலுக்கும் தாயைப் போன்றவள்.


பத்து பெயர்கள்

(ரோம 16:14-15)


    1. அசிங்கிரீத்து 

    2.  பிலெகோன் 

    3. எர்மா 

    4.  பத்திரொபா 

    5. எர்மே

    6.  பிலொலோகு 

    7.  யூலியாள்  

    8.  நேரே 

    9. நேரேயின் சகோதரி  

    10. ஒலிம்பா.



எட்டு ஸ்திரீகள்

ரோம 16

    1. பெபேயாள் 

    2. பிரிஸ்கில்லாள் 

    3. மரியாள்  

    4. திரிபேனாள் 

    5. திரிபோசாள் 

    6. பெர்சியாள்  

    7. யூலியாள் 

    8. நேரேயின் சகோதரி.


இவர்கள் அனைவருமே கர்த்தருடைய ஊழியக்காரிகள். சபையின் பெண் மூப்பர்கள். தீர்க்கதரிசினிகள். இவர்கள் கர்த்தருக்குள் பிரயாசப்பட்டவர்கள். இவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்கள். ஆதித்திருச்சபையில் பெண் தீர்க்கதரிசினிகளும் இருந்தார்கள். 


இந்த நிருபத்தில் பவுல் ரோமாபுரியிலுள்ள பரிசுத்தவான்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது, பரிசுத்தவான்களின் அட்டவணையில் பேதுருவின் பெயர் காணப்படவில்லை. திருச்சபை வரலாற்று ஆசிரியர்கள் இதைப் பற்றி எழுதும்போது பவுல் ரோமருக்கு நிருபம் எழுதியபோது பேதுரு ரோமாபுரியில் இருந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால் பவுல் பேதுருவின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆகையால் இந்த நிருபம் எழுதப்படும்போது பேதுரு ரோமாபுரியில் இருந்திருப்பதற்கான வாய்ப்பில்லை. 


அக்காலத்தில் சமாதானம், நட்பு, சகோதர சிநேகம் ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்வதற்காக ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்தும் வழக்கம் இருந்தது. கிறிஸ்தவ விசுவாசிகள் மட்டுமல்லாமல், கிழக்கு தேசங்களில் உள்ள ஜனங்கள் மத்தியில், இந்தப் பழக்கம் பொதுவாக இருக்கிறது. பரிசுத்த முத்தத்தைப் பற்றிய குறிப்பு ரோமர் 16:16;  1 கொரி 16:20; 2 கொரி 13:12; 1தெச 5:26;  1 பேதுரு 5:14 ஆகிய வசனங்களில் காணப்படுகிறது.


தற்காலத்தில் ஏராளமான சபைப் பிரிவினர்கள் இருக்கிறார்கள். தங்களுடைய சபைப் பிரிவிற்கு அவர்கள் கொடுத்திருக்கும் பெயர் வேதாகமத்தின் பிரகாரம் சரியானது என நிரூபிக்கிறார்கள். தங்களுடைய சபையே ஆதித்திருச்சபை என்று கூறுவதே அவர்களுடைய நோக்கம். சபையின் பெயர் எதுவாக இருந்தாலும், சபையின் அங்கத்தினர்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டு, ஆவியானவருடைய வரங்களினாலும், ஆவியின் கனியினாலும் நிறைந்திருந்து, கர்த்தருக்காக ஊழியம் செய்ய வேண்டும். இந்த அடையாளத்தை வைத்துதான், ஒரு திருச்சபை கிறிஸ்துவின் சபையா?, இல்லையா? என்பதை முடிவு பண்ண வேண்டும். பெயரை வைத்து முடிவு பண்ண முடியாது.



Post a Comment

1 Comments

  1. மிக அருமையான பதிவு

    ReplyDelete