சங்கீதம் 35-ல் உள்ள தாவீதின் விண்ணப்பங்கள்

 அறிந்து கொள்வோம்

பகுதி-13



சங்கீதம் 35-ல் உள்ள

தாவீதின் விண்ணப்பங்கள்


    1. கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடும் (சங் 35:1).

    2. எனக்காக யுத்தம் பண்ணும்.

    3. கேடகத்தையும், பரிசையையும் பிடித்து கொள்ளும் (சங் 35:2).

    4. எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.

    5. ஈட்டியையோங்கி அவர்களை மறியும்  (சங் 35:3).

    6. என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நில்லும். 

    7. நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்

    8. என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள் (சங் 35:4).

    9. அவர்கள் வெட்கப்பட்டுப்போகும்படி செய்யும்

    10. அவர்களை தோற்கடியும்.

    11. அவர்கள் கலங்கும்படி செய்யும்.

    12. காற்று முகத்தில் பறக்கும் பதரைப் போலாவார்களாக 

(சங் 35:5).

    13. கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.   

    14. அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருக்கும்படிச் செய்யும்        (சங் 35:6).

    15. கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.

    16. அவன் நினையாத அழிவு அவனுக்கு வரட்டும் (சங் 35:8).

    17. அவன் வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்

    18. என்னை அழிக்க வெட்டிய குழியில், அவனே விழுந்து அழிவானாக

    19. சீக்கிரமாய் என்னை விடுவியும்  (சங் 35:17).

    20. அவர்களிடமிருந்து என் ஆத்துமாவை தப்புவியும்.

    21. எனக்கு அருமையானதை சிங்கக் குட்டிகளுக்கு தப்புவியும்.

    22. வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமல் செய்யும் (சங் 35:19)

    23.  முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமல் இருப்பார்களாக.

    24. கர்த்தாவே, மவுனமாயிராதேயும் (சங் 35:22)

    25. எனக்குத் தூரமாகாதேயும்.

    26. எனக்கு நியாயஞ்செய்யும் (சங் 35:23)

    27. என் வழக்கைத் தீர்க்க எழுந்தருளும்.

    28. விழித்துக்கொண்டு எழுந்தருளும்.

    29. கர்த்தாவே நியாயம் விசாரியும்  (சங் 35:24)

    30. நீதியின் படி என்னை நியாயம் விசாரியும்.

    31. என்னைக் குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்.

    32. அவர்கள் தங்கள் இருதயத்திலே, இதுவே நாங்கள் விரும்பின அழிவு என்று சொல்லாதபடி செய்யும் (சங் 35:25).

    33. அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடி செய்யும்.

    34. அவர்கள் வெட்கி போகும்படி செய்யும்  (சங் 35:26).

    35. எனக்கு

 நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள்

 நாணும்படி செய்யும்.

    36. வெட்கத்தால் அவர்களை மூடும்படி செய்யும்.

    37. எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.

Post a Comment

0 Comments