அறிந்து கொள்வோம்
பகுதி-13
சங்கீதம் 35-ல் உள்ள
தாவீதின் விண்ணப்பங்கள்
1. கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடும் (சங் 35:1).
2. எனக்காக யுத்தம் பண்ணும்.
3. கேடகத்தையும், பரிசையையும் பிடித்து கொள்ளும் (சங் 35:2).
4. எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.
5. ஈட்டியையோங்கி அவர்களை மறியும் (சங் 35:3).
6. என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்து நில்லும்.
7. நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும்
8. என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள் (சங் 35:4).
9. அவர்கள் வெட்கப்பட்டுப்போகும்படி செய்யும்
10. அவர்களை தோற்கடியும்.
11. அவர்கள் கலங்கும்படி செய்யும்.
12. காற்று முகத்தில் பறக்கும் பதரைப் போலாவார்களாக
(சங் 35:5).
13. கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக.
14. அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருக்கும்படிச் செய்யும் (சங் 35:6).
15. கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக.
16. அவன் நினையாத அழிவு அவனுக்கு வரட்டும் (சங் 35:8).
17. அவன் வைத்த வலை அவனையே பிடிக்கட்டும்
18. என்னை அழிக்க வெட்டிய குழியில், அவனே விழுந்து அழிவானாக
19. சீக்கிரமாய் என்னை விடுவியும் (சங் 35:17).
20. அவர்களிடமிருந்து என் ஆத்துமாவை தப்புவியும்.
21. எனக்கு அருமையானதை சிங்கக் குட்டிகளுக்கு தப்புவியும்.
22. வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமல் செய்யும் (சங் 35:19)
23. முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமல் இருப்பார்களாக.
24. கர்த்தாவே, மவுனமாயிராதேயும் (சங் 35:22)
25. எனக்குத் தூரமாகாதேயும்.
26. எனக்கு நியாயஞ்செய்யும் (சங் 35:23)
27. என் வழக்கைத் தீர்க்க எழுந்தருளும்.
28. விழித்துக்கொண்டு எழுந்தருளும்.
29. கர்த்தாவே நியாயம் விசாரியும் (சங் 35:24)
30. நீதியின் படி என்னை நியாயம் விசாரியும்.
31. என்னைக் குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்.
32. அவர்கள் தங்கள் இருதயத்திலே, இதுவே நாங்கள் விரும்பின அழிவு என்று சொல்லாதபடி செய்யும் (சங் 35:25).
33. அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடி செய்யும்.
34. அவர்கள் வெட்கி போகும்படி செய்யும் (சங் 35:26).
35. எனக்கு
நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள்
நாணும்படி செய்யும்.
36. வெட்கத்தால் அவர்களை மூடும்படி செய்யும்.
37. எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள்.
0 Comments