Daily Devotion
*பெயர் சொல்லும் தேவன்!*
உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே... (ஏசாயா 45:3)
ஒருவருக்கு அவரது பெயர் எவ்வளவு முக்கியம்? ஆனால், குழந்தைகளுக்கு பெயரே சூட்டாத கிராமம் ஒன்று இன்றும் இருக்கிறது.
இந்தியாவின் மேகலாயாவில், ’கோங் தோங்’ என்ற கிராமம்! இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் வழக்கம் காலகாலமாக இல்லை. அதற்குப் பதிலாக ஒரு இசை மெட்டை, அந்தக் குழந்தையின் தாய் உருவாக்குவாராம். அது குக்கூ போன்ற சிறிய வடிவத்திலும் இருக்கும், சற்று நீளமான இசை வடிவத்திலும் அமையும். அந்த ராகம் தான், அந்த மெட்டுதான் அந்தக் குழந்தைக்கு பெயர். பெரியவர்கள் ஆன்பிறகும் அதே மெட்டுதான் பெயராம். இசையாய் அவர்களை அழைத்துக் கொஞ்சும்போது எவ்வளவு அழகாக இருக்கும் பாருங்கள்!
நம் ஆண்டவரும் நம்மைப் பெயர் சொல்லி அழைத்துப் பேசுகிற தேவன்! அனேகரை அவர் பெயர் சொல்லி அழைத்தார். ஒரு சர்வவல்ல தேவன், தகுதியில்லா நம் பெயரைச் சொல்லி அழைப்பதும், நம்மை அறிந்திருப்பதும் நமக்கு எவ்வளவு மேன்மை! நாம் அவரை அழகான இசையோடு பாடுகிறோம். உயர்த்துகிறோம். ஆ... இது அழகான உறவு! மகிழ்ச்சியான வாழ்வு!!!
தியானிக்க: *தேவன் நம்மைப் பெயர்சொல்லி அழைப்பவர் மட்டுமல்ல! கஷ்டங்களைப்
பெயர்த்தெடுக்கிறவர் கூட! ......ஆமென்!
Taken From -GRACE INDIA MINISTRIES
1 Comments
Amen. Praise God...
ReplyDelete