Daily Devotion
உலகத்தை ஜெயிப்போம்!
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். (1 யோவான் 5:4)
உலகத்தை வெல்வது 2 வகை உண்டு.
1) போரிட்டு வெல்வது!
மாசிடோனியா மாவீரன் அலெக்சாண்டர். அவர் தான் இறக்கும் நிலையில் தனது கல்லறையில், *உலகத்தை வென்ற அலெக்சாண்டர், உலகத்தை விட்டுப் போகும்போது ஒன்றும் கொண்டு செல்லவில்லை* என்று எழுதுமாறு வேண்டினார்.
அவர், ஒன்றும் கொண்டு செல்லவும் இல்லை. தன் வாழ்வின் முடிவில் ஒன்றும் பெறவும் இல்லை!
2) இந்த உலகத்துக்கு அடிமையாகாமல் அதனை வெல்வது!
இவ்வுலகில் கணக்கிட முடியாத பாவங்கள் உண்டு! இச்சைகள் உண்டு! அவற்றுக்கு அடிமையாகாமல் இந்த உலகத்தை வெல்ல, பரிசுத்த வேதத்தில் வாக்களிக்கப்பட்டு உள்ளது. அந்த வாக்கை நம்பி, ஆண்டவராகிய இயேசுவை நம்பினவர்கள் இந்த உலகத்தை ஜெயிக்கிறார்கள்.
இவர்களும் போகும்போது கையில் ஒன்று கொண்டு செல்லப் போவதில்லை. ஆனால், கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்து, அநேக ஆத்துமாக்களைக் கொண்டு செல்ல இவர்களால் முடியும். அங்கே தேவ சமூகத்தின் நிலையான பெருமகிழ்ச்சி இவர்களுக்கே உரியது! அதனை நிறைவாய் பெறுவார்கள்!
நாம் இதில் எந்த வகை என சிந்திப்போம்!!
*இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?* (1 யோவான் 5:5)
சிந்திக்க: *ஆண்டவரின் பெயரைச் சொல்லி, அகிலத்தை அன்பால் வெல்வோம்! ஆமென்!*
From -GRACE INDIA MINISTRIES
0 Comments