Wednesday, 27 March 2024

வியாழக்கிழமை - பாடுகளின் வாரம்

 வியாழக்கிழமை - பாடுகளின் வாரம்


வியாழனின் சிறப்புகள்


🌿இது புனித வாரத்தின் ஐந்தாவது நாளாகும்.


🌿இந்த நாள் கடைசியாக இயேசு தனது சீடர்களுடன் கழித்த நாளாகும்.


🌿புதிய உடன்படிக்கையின் அடையாளமாக திருவிருந்து நிறுவப்பட்ட நாள்.


சிறப்பு பெயர்கள்


🌿புனித வியாழன் (புனித வியாழன்)


🌿 பெரிய வியாழன் (பெரிய வியாழன்)


🌿வியாகுல வியாழன் (துன்பம் வியாழன்)


🌿கட்டளை வியாழன் (மவுண்டி- கட்டளை)


🌿உடன்படிக்கை வியாழன் (உடன்படிக்கை வியாழன்)


வியாழனன்று நடைபெற்ற சம்பவங்கள்


1.இயேசுவின் இறுதி அருளுரை


2.சீடர்களின் கால்களைச் சுத்தம் செய்தல்


3.இயேசுவின் கடைசி இராவுணவு


4.கெத்சமனே ஜெபம்


5.இயேசுவின் கைது


7.இயேசுவின் விசாரணைத் தொடக்கம்.




நன்றி: மேயேகோ



புதன் || பாடுகளின் வாரம் ||

 பாடுகளின் வாரம் - புதன்



புதன் அன்று நடந்த 2 நிகழ்வுகள்


🌿இயேசு அபிஷேகம் பண்ணப்படுதல்

🌿யூதாஸ் வெளியேறுதல்


புதன்கிழமையை ஏன் ( Spy Wednesday)

உளவு புதன்? என்று அழைக்கிறார்கள்.


மத்தேயு 26. 14-16, லூக்கா 14.10 - 11 இந்த வசனங்களின் படி, இயேசுவின் அபிஷேகத்திற்கு பின்பு புதன் கிழமை அன்றே யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுக்க வகை தேடிச் சென்றான். ஆகவே தான் உளவாளி புதன் ( Spy Wednesday என்று அறியப்படுகிறது.


யூதாஸ் கற்பிக்கும் பாடல்கள்


யூதாஸ் என்றால் கர்த்தரின் துதி என்று அர்த்தமாகும்.இவர் காரியோத்து என்ற ஊரை சேர்ந்தவர். இயேசுவின் சீடர்கள் பன்னிருவரில் யூதாஸ் மட்டுமே யூதேயாவைச் சேர்ந்தவர்.நன்கு கல்வி கற்றவர்,ரோம பேரரசை எதிர்க்கும் ஒரு புரட்சியாளன்.


1.பண ஆசையுள்ள யூதாஸ்

யோவான் 12:3,6,மாற்கு 14:11.


பண ஆசை ஒருவனை அழிவுக்கு

இட்டுச் செல்லும். யூதாஸ் முப்பது

வெள்ளிக்காசுக்கு ஆசைப்பட்டான்.

அழியாத விண்ணக வாழ்வை

இழந்தான்.பணி செய்பவர்களின் கூட்டத்தில் இருப்பதால் மீட்பு வராது. சீடர்களிலேயே நிர்வாகத் திறமையுடைய யூதாஸ் பொருளாளராய் இருந்தார்.அது அவரைக் காப்பாற்றவில்லை.


2.இருமுகமுள்ள யூதாஸ்

(மத்தேயு 26:25 லூக்கா 22:48)


யூதாஸ் சீடர்களிடையே நல்லமதிப்பு பெற்றிருந்தான்.சீடர்கள் யாரும் அவனை சந்தேகப்படாத அளவுக்கு அவர்களிடம் நற்சான்றிதழ் பெற்றிருந்தான்.

ஆனால் பரலோக வாழ்வை இழந்தான்.



3.மனந்திரும்பாத யூதாஸ் 

(மத்தேயு 27:3,அப்போ 1:18)


மனஸ்தாபப்பட்ட யூதாஸ் மனந்திரும்பாமல் மடிந்து போனான். பேதுரு மறுதலித்தும், மனஸ்தாபப்பட்டு, மனங்கசந்து அழுது மனம் திரும்பினார். இயேசுவின் போதனைகளைக் கேட்பதோ, அற்புதங்களைப் பார்ப்பதோ ஒரு மனிதனை நல்லவனாய் மாற்றாது. நம்பிக்கை வேண்டும்.எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தினால் மீட்பு வராது. உங்களுள் ஒருவன் பிசாசாய் இருக்கிறான்' என்றும் 'அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு' என்றும் இயேசு எச்சரித்திருந்தார்.இருந்த போதும் யூதாசு செவிசாய்க்கவில்லை.?



நன்றி:மேயேகோ….




Tuesday, 26 March 2024

இயேசுவிடம் கேட்கப்பட்ட 4 கேள்விகள் ||பாடுகளின் வாரம் - செவ்வாய்க்கிழமை

 பாடுகளின் வாரம் - செவ்வாய்க்கிழமை



இயேசுவிடம் கேட்கப்பட்ட 4 கேள்விகள் 



செவ்வாய்கிழமை ஏறக்குறைய 18 விதமான காரியங்கள் 4 நற்செய்தி நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக இயேசுவிடம் 4 கேள்விகள் கேட்கப்பட்டன. யோவான் நற்செய்தியில் எந்த ஒரு கேள்வியும் சொல்லப்படவில்லை.


இயேசுவின் பதில்கள் கற்பிக்கும் பாடங்கள்


1.எந்த அதிகாரத்தினால் இவைகளை செய்தீர்?


மத்தேயு 21:23 to 27,மாற்கு 11:27 to 33

லூக்கா 21;1 முதல் 8 வரை


🔥தேவையில்லாமல் பதில்கூற வேண்டாம்.


(கேள்வியின் நோக்கம் / நோக்கம் பொறுத்து பதில் சொல்ல வேண்டும்)


2.இராயனுக்கு வரி கொடுக்கலாமா?


மத்தேயு 22:15 to 22, மாற்கு 12:13 to 17

லூக்கா 20:20 முதல் 26 வரை


🔥பட்சபாதம் இல்லாத பதிலாக இருக்க வேண்டும்.


3.உயிர்த்தெழுதல் எப்படி இருக்கும்?


மத்தேயு 22:23 to 33,மாற்கு 12:18 to 27

லூக்கா 20:27 முதல் 40 வரை.


🔥உண்மையை தெரிந்தால் சொல்ல வேண்டும்.


4.பிரதான கற்பனை எது?


மத்தேயு 22:34 to 40,மாற்கு 12:28 to 34

🔥பிறருக்கு பிரயோஜனமுண்டாக பதில் இருக்க வேண்டும்.



நன்றி:- மேயேகோ….



அத்தி மரம் || பாடுகளின் வாரம் - திங்கட்கிழமை ||

 பாடுகளின் வாரம் - திங்கட்கிழமை 

அத்தி மரம் 


திங்கள் அன்று நடந்த 3 நிகழ்வுகள்


🌿அத்தி மரம் சபிப்பு 

🌿ஆலய சுத்திகரிப்பு 

🌿ஆலயத்தில் சுகமளித்தல்


அத்திமரம் இயல்புகள் & பண்புகள்


34 முறை அத்திமரம் என்ற வார்த்தை வேதத்தில் வருகிறது. அத்தி என்ற வார்த்தை 64 முறை வருகிறது.


In English fig என்றும் In Hebrew Tena பெயர் உண்டு.


முதல் முறையாக வேதத்தில் வரும் மரம் ஆதி 3.7, இது 35 அடி உயரம் வரை வளரும். அத்தி மரம் பூக்காமல் காய்க்கும்

மரம். (உன்னத.2.13).

ஏழைகளின் பழம் என்று அழைக்கப்படுகிறது. அத்தி பழம். 1 kg - 20 to 40 Rs. மதுரமான பழம்.


அத்திமரம் கற்பிக்கும் பாடங்கள்


 1.அத்தி மரம் சுக வாழ்வின் அடையாளம் (1 இராஜா 4.25 மீகா 4.4 சகரியா 3.10)


2.அத்தி மரம் தேவ கோபத்திற்கு அடையாளம் (சங்கீதம் 105.33 ஓசியா 2.12 ஆமோஸ் 4.9)


3.அத்தி மரம் விசுவாசத்தின் அடையாளம் ( மத்தேயு 21.19,மாற்கு 11.13 - 20) விசுவாசத்தை சீடர்களுக்கு கற்றுக் கொடுக்கவே இயேசு சபித்தார்.


4.அத்தி மரம் கனி கொடுத்தலின் அடையாளம் (நியாயதி 9.10, 11

லூக்கா 13.6)


5.அத்தி மரம் வருகையின் அடையாளம்

(மத்தேயு 24.32, வெளி 6.13)


வசந்த காலம் என்பது மார்ச்,ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வரும்.




நளதம் (Spikenard) // வெள்ளைக்கல் பரணி (Alabaster box) // அறிந்து கொள்வோம் பகுதி -155 //

அறிந்து கொள்வோம் பகுதி -155 நளதம் (Spikenard) மற்றும் வெள்ளைக்கல் பரணி (Alabaster box)  விவிலிய நூலில் வரும் நளதம் என்னும் தைலம் மணம் மிகுந்...