உபாகமம் || பழைய ஏற்பாட்டின் புத்தக சுருக்கம் ||

 OT Book Summary


பழைய ஏற்பாட்டின் 

புத்தக சுருக்கம்


உபாகமம்


 இது "உபாகமம்" என்று அழைக்கப்பட காரணம் என்ன….

ஆங்கிலத்தில் “Deuteronomy” என்னும் சொல்லானது கிரேக்க சொல்லான

Deuteronomion” என்னும் சொல்லிலிருந்து வந்தது. இதற்கு "இரண்டாம் சட்டம்” அல்லது "மீள் உரைக்கப்பட்ட சட்டம்” என்று பொருள்.

இந்தப் புத்தகம் “”நினைவுகூர்தலின் புத்தகம்" என்றும் அழைக்கப்படுகிறது.


இஸ்ரவேலரின் தலைவனாயிருந்த 120 வயதான மோசேயின் பிரியாவிடை செய்திகளின் தொடர் உரைகள் உபாகமத்தில் இடம்பெற்றுள்ளன.


புத்தகத்தின் ஆசிரியர்


தோரா அல்லது ஐந்நூல் (மேசேயின் 5 புத்தகங்கள்) இதில் ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள உபாகமத்தை எழுதியவர் மோசே என்பது பாரம்பரிய நம்பிக்கை


"மோசே எழுதினார்" என்றே உபாகமத்தில் பல தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது (1:2, 4:44, 29:1)


புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும், பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் உபாகமத்திலிருந்து மேற்கோள்கள் காட்டியுள்ளனர்.

இதை மோசேயிடமிருந்து வந்ததாகவே அவர்கள் குறிப்பிடுகின்றனர். 

(1இரா 2:3, 2இரா 14:6, எஸ்றா 1:7, மல்கியா 44, மத்தேயு 19:7).


எழுதப்பட்ட காலம்: கிமு 1407-1406

அதிகாரங்கள் : 34 

வசனங்கள் : 957


வரலாற்றில் இப்புத்தகத்தின் இடம்


  • உபாகமமானது இஸ்ரவேல் ஜனங்கள் ஒரே தேசமாக 40 ஆண்டுகள் அலைந்து திரிந்ததின் முடிவில் எழுதப்பட்டது.

  • உபாகமம் சுமார் 1 மாத காலத்தின் சம்பவங்களை கொண்டது.

  • இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட சம்பவங்கள் கானானாகிய வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு 40 நாட்களுக்கு முந்தியவை.

  • இந்த வேளையில் இஸ்ரவேலர் யோர்தானின் கிழக்கே. மோவாபின் சமவெளியில் எரிகோ பட்டணத்திறகு எதிரே பாளயமிறங்கியிருந்தார்கள்.

(உபா 1:2, 29:1)

  • எகிப்திலிருந்து குழந்தைகளாக புறப்பட்டவர்கள் இப்போது வாலிபவயதுள்ளவர்களாகி வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பை கைப்பற்றி அதிலே குடியேற தயாராக இருந்தார்கள்.




உபாகமத்திற்கு முன்பு நடந்த

 பிரதான நிகழ்வுகள்


யாத்திராகமம் 


15-ம் நாள் -1-ம் மாதம் -1-ம் வருடம்


முதலாம் மாதமாகிய நிசான் மாதத்தின் (மார்ச்-ஏப்ரல்) பதினைந்தாம் நாளில் எகிப்தைவிட்டு புறப்பட்டார்கள்.

 (எண். 33:3, யாத். 12:2,15)


1-ம் நாள் 3-ம் மாதம் -1-ம் வருடம்


மூன்றாம் மாதமாகிய சீவான் மாதத்தின் (மே-ஜீன்) முதலாம் தேதியில் இஸ்ரவேலர்கள் சீனாய்

வனாந்தரத்தை அடைந்தார்கள்.

(யாத் 19:1)


1-ம் நாள் -1-ம் மாதம் - 2-ம் வருடம் 


இரண்டாம் வருடத்தில், முதலாம் மாதமாகிய நிசான் மாதத்தின் (மார்ச்-ஏப்ரல்) முதலாம்

தேதியில் ஆசரிப்புக்கூடாரம் நிறுவப்பட்டது.

 (யாத் 4:17)


லேவியராகமம்


தேவனாகிய கர்த்தரின் மகிமையானது ஆசரிப்புக்கூடாரத்தை நிரப்பியதற்கும், ஜனங்கள் வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பை நோக்கி பயணிக்க ஆயத்தமானதற்கும் இடையேயான ஒரு மாத இடைவெளியில், நிசான் மாதத்தில் (மார்ச்-ஏப்ரல்) லேவியராகமம் வழங்கப்பட்டது.

 (எண்:1. யாத் 40:17)


எண்ணாகமம்


1-ம் நாள் - 2-ம் மாதம் - 2-ம் வருடம் 


இரண்டாம் வருடத்தில், இரண்டாம் மாதம் ஐயார் அல்லது சீப் மாதத்தின் (ஏப்ரல்-மே) முதலாம் தேதியில் ஜனங்கள் தொகையிடப்பட்டதோடு எண்ணாகமம் ஆரம்பிக்கிறது.

 (எண் 1-2)


* 2-ம் நாள் - 2-ம் மாதம் - 2-ம்வருடம்


இரண்டாம் வருடத்தில், இரண்டாம் மாதமாகிய ஐயார் அல்லது சீப் மாதத்தின் (ஏப்ரல்-மே) இருபதாம் தேதியில் சினாய்

வனாந்தரத்திலிருந்து மேகமானது ஜனங்களை வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பை நோக்கி நடத்தும்படி முன் சென்றது.(எண் 10:11)


காதேஸ்பர்னெயாவில்  ஜனங்கள் பாவம் செய்தார்கள் அதினால் 40 ஆண்டு காலம் வரைந்தரந்தில்

திரியவேண்டும் என்ற தண்டனை வழங்கப்பட்டது (எண் 14:1-33)


எண்ணாகமம் 38 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்களின் சம்பவங்களை உள்ளடக்கியது. (எண் 1:1: உபா 1:3 இரண்டையும் ஒப்பிடவும்)


1-ம் நாள் 5-ம் மாதம் 40-ம் வருடம் 


நாற்பதாம் வருடத்தின், ஐந்தாம் மாதமாகிய அபி அல்லது ஆப் மாதத்தின் (ஜீலை-ஆகஸ்ட்) முதலாம் தேதியில்

ஓர் என்னும்

மலையில் ஆரோன் தனது 123 -ம் வயதில் மரித்தான் (எண் 33:38-39).



உபாகமம் 


I-ம் நாள், 11-ம் மாதம், 40-ம் வருடம்


40-ம் வருடத்தின், 11-ம் மாதமாகிய சேபாத் மாதத்தின் (ஜனவரி -பிப்ரவரி) முதலாம் தேதியில் பயணம் தொடங்கிய புதிணோராம் நாளில் - போர்தான் நதியின் கிழக்கில் உபாகமம் ஆரம்பமாகிறது. (உபா |:3)


உபாகமம்: 

ஒரு பார்வை


வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்பை சுதத்தரித்துக் கொள்வதே இஸ்ர்வேலருக்கு முன்னிருந்த பிரதான பணி.மோசே 120 வயது தனது மரணம் சீக்கிரத்தில் நேரும் என்று அறிந்திருந்தான்.ஆகவே அடுத்த தலைமுறையினருக்கு தேவனுடைய உடன்படிக்கையை விளக்கவும், அதற்கு கீழ்படிந்திருக்க வேனாடியதின் அவசியத்தை உணர்த்தவும், தனக்கு அடுத்து ஜனங்களை வழிநடத்துபவனாக யோசுவாவை நியமிக்கவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தினான். 


உபாகமம் இரண்டவது நியாயப்பிரமானம் அல்ல. அது சீனாய் மலையருகே வழங்கப்பட்ட மூல

நியாயப்பிரமாணத்தின் சேர்க்கையும், விரிவாக்கமும்


இந்தப் புத்தகத்தில் மோசேயின் இறுதி மூன்று பிரசங்ககளும், இரண்டு தீர்க்கதரிசன பாடல்களும் இடம்பெற்றுளிளன. 


முதலாவது பிரசங்கம்

 1:1- 4:3


இந்த பிரசங்கத்தில் தற்போது உள்ள நாள்வரையுள்ள நாற்பது ஆண்டுகாய் வானாந்தர அலைந்து திரிதல்

மீண்டும் நினைவுகொள்ளப்பட்டு, அதன் முடிவில் நியாயப்பிரமாணத்தை (அல்லது உபதேசங்களை) கைக்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்த அறிவுரை சொல்லப்படுகிறது. நியாயப்பிரமாணம் பின்னாட்களில் மோசேயின் நியாயப்பிரமாணம்' என்று அழைக்கப்பட்டது.


இரண்டாவது பிரசங்கம்

 4:44-26:19


இரண்டாவது பிரசங்கத்தில் இஸ்ரவேலர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட யெகோவா தேவனுடைய கட்டளைகளையும். உபதேசங்களையும் பின்பற்றி நடப்பதை பொறுத்தே அவர்கள் சுந்தரிக்கும் தேசத்தில்

வாழமுடியும் என்பது நினைவூட்டப்படுகிறது.


மூன்றாவது பிரசங்கம் 

 27- 30.


இந்த மூன்றாவது பிரசங்கம் ஒருவேளை இஸ்ரவேலர்கள் உண்மையில்லாமல் நடந்து தங்கள் சுதந்திரமாய் பெற்ற தேசத்தை இழப்பார்களானால், அவர்கள் மனந்திரும்பும் பட்சத்தில் அதை மீண்டும் பெற்றுக்கொள்வார்கள் என்ற ஆறுதலை தருகிறது.முன்னர் நிலத்தை கைப்பற்ற முடியாமல் தோற்றுப்போனதின் பின்னணியை கொண்டு பார்க்கையில் இந்த பிரசங்கங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை (உபா 1:19–46)


இப்போது வாக்களிக்கப்பட்ட தேசத்தின்  எல்லைகளருகே வந்துவிட்டதால் இம்முறை ஜனங்கள் கீழ்ப்படிந்து நடப்பதை மோசே உறுதி செய்ய விரும்புகிறார்.


ஜனங்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் பிரவேசித்த பின்பு முன்செய்த தவறுகளை மீண்டும் செய்யாதிருக்க எச்சரிக்கிறார்.


முற்பிதாக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் காணான் தேசத்தை சுதந்தரிப்பதனால் நிறைவேறும்.


ஆனால் ஜனங்கள் விக்கிரக வழிபாட்டில் விழுத்தாலோ அல்லது நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளத்

தவறினாலோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட நிலத்தைவிட்டு வெளியேற்றப்படுவார்கள்.


கடைசி நான்கு அதிகாரங்கள்


  • அதிகாரம் 31

தலைமைத்துவம் மோசேயிடமிருந்து யோசுவாவிற்கு மாறும் நிகழ்வுகளை நினைவுகூருகிறது


  • அதிகாரம் 32 

மோசேயின் பாடல்.


  • அதிகாரம் 33 

மோசேயின் ஆசீர்வாதம்


  • அதிகாரம் 34

மோசேயின் மரணம் 

நேபோ மலையில்.

Taken from Pr.Thamas Raj Notes.




Post a Comment

0 Comments