முதன் முதலில் அறிந்து கொள்வோம் பகுதி-7

 அறிந்து கொள்வோம்

பகுதி-7


முதன் முதலில்



  • தேவன் முதலாவது நாள் சிருஷ்டித்தது “வெளிச்சம்”.

ஆதி 1:3.


முதலாவது சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் “ஆதாம்”.  - ஆதி 2:19


  • முதலாவது சிருஷ்டிக்கப்பட்ட மனுஷி “ஏவாள்”. – ஆதி 3:20.


முதலாவது கப்பல் கட்டியவன் “நோவா”. – ஆதி 6:14-22.


  • முதலாவது பிறந்த மனிதன் “காயீன்”. – ஆதி 4:1.


முதல் தேசம் - ஆவிலா ஆதி 2:11


  • முதல் மலை - அரராத் ஆதி 8:4


ஆடு மேய்த்த முதல் பெண் - ராகேல் ஆதி 29:6


  • முதலாவது கொலைக்காரன் “காயீன்”. – ஆதி 4:8.


கழுதையை மேய்த்த முதல் மனிதன் - ஆனாகு ஆதி 36:24


  • முதல் பராக்கிரமசாலி - நிம்ரோத் ஆதி 10:8


திருடிய முதல் பெண் - ராகேல் ஆதி 31:19


  • தன் வஸ்திரத்தை கிழித்து கொண்ட முதல் மனிதன் - ரூபன் ஆதி 37:29


பிறக்கும் முன் பெயரிடப்பட்ட முதல் மனிதன் - இஸ்மவேல். ஆதி 16:11


  • முதல் தோட்டக் காரன் - ஆதாம் ஆதி 2:15


சிரித்த முதல் பெண் - சாராள் ஆதி 18:12


  • விருந்து பண்ணின முதல் மனிதன் - ஆபிரகாம் -ஆதி 21:8


இரண்டு பெண்களை விவாகம் பண்ணின முதல் மனிதன் - லாமேக்கு ஆதி 4:19


  • காணிக்கை பெட்டி செய்த முதல் மனிதன் - ஆசாரியனாகிய யோய்தா

       2 இராஜா 12:9


முதலில் நிலம் வாங்கியது - ஆபிரகாம் ஆதி 23:16-18


  • முதலாவது கர்த்தருக்கு காணிக்கை கொண்டு வந்தவன் “காயீன்”. – ஆதி 4:3.


முதலாவது கடைசியுமான ஜலபிரளயம் நோவா காலத்தில் வந்தது. – ஆதி 7:11,12.


  • முதலாவது தேவனுடைய உடன்படிக்கையின் அடையாளம் “வானவில்” – ஆதி 9:12-17.


முதலாவது திராட்சத்தோட்டத்தை உண்காக்கின மனிதன் “நோவா”. – ஆதி 9:20


  • கோபம் கொண்ட முதல் மனிதன் - காயீன் ஆதி 4:5


முதலாவது எழுதப்பட்டுள்ள பறவை “காகம்”. – ஆதி 8:7.


  • முதலாவது எழுதப்பட்டுள்ள மிருகம் “பசுமாடு”(கிடாரி). – ஆதி 15:9.


முதலாவது இரட்டை பிள்ளைகள் பெற்றவள் “ரெபேக்காள்”. – ஆதி 25:21-27.


  • முதலாவது தசமபாகம் கொடுத்தவன் “ஆபிரகாம்”. – ஆதி 14:18-20, எபி 7:1-4.


தேவனால் முதலாவது பெயர் மாற்றப்பட்டவன் “ஆபிராம்”(ஆபிரகாம்) – ஆதி 17:5.


  • பிறந்த நாள் கொண்டாடி விருந்து பண்ணின முதல் மனிதன் - பார்வோன் ஆதி 40:20


முதலாவது தீர்க்கதரிசி “ஏனோக்” ஆகும். – யூதா 14,15. (ஆபிரகாம் ஆதி 20:7)


  • முதல் நியாயாதிபதி - ஒத்னியேல் நியா 3:9,10


முதலாவது இஸ்ரவேலின் இராஜா “சவுல்”. – 1 சாமு 10:1.


  • முதலாவது “அல்லேலூயா” என்ற வார்த்தை சங் 104:35-ல் வருகிறது.


இந்தியாவிற்கு முதலாவது சுவிசேஷம் கொண்டு வந்தவர்கள் இயேசுவின் சீடர்களான தோமாவும், பர்தெலெமேயுவுமே.


  • முதலாவது இயேசு செய்த அற்புதம் கானா ஊர் கலியாண வீட்டில் நடந்தது – யோவா 2:1-11.


இயேசு சிலுவையில் பேசின முதலாவது வார்த்தை “பிதாவே இவர்களுக்கு மன்னியும்” என்பதே – லூக் 23:24.


  • உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது பார்த்தது “மகதலேனா மரியாளே”. – மாற் 16:9,10.


நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.


  • தேவன் மனிதனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” 

ஆதி 3:9.


இஸ்ரவேலரின் முதல் மாதத்தின் பெயர் “ஆபிப்” (நிசான்). யாத் 12:12, 13:4, உபா 16:1, எஸ்தர் 3:7.


  • மரணத்தை சந்தித்த முதன் முதலாக மனிதன் - ஆபெல் ஆதி 4:8


கோபம் கொண்ட முதல் மனிதன் - காயீன் - ஆதி 4:5


  • கானானுக்குள் அடியெடுத்து வைத்த முதல் ஊரின் பெயர் - கில்கால் - யோசு 4:19 - 20


பேதுருவை ஆண்டவர் முதல் முதலாய் சந்தித்த இடம் - கெனசரேத் கடல் - லூக் 5:1


  • ஆதி திருச்சபையின் முதல் முதலில் அனுப்பப்பட்ட மிஷனரிமார்கள் - பவுலும் பர்னபாவும் - அப் 13:2….



Post a Comment

0 Comments