வேதாகம துணுக்குகள்

 


 வேதாகம துணுக்குகள்



* "தள்ளப்பட்ட வேதம்" அல்லது "தள்ளுபடி வேதாகமம்" (Appocrypha)

 எனப்படுவது யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத,

கிரேக்க மொழியில் எழுதப்பட்ட 

7 ஆகமங்கள் (புத்தகங்கள்) ஆகும். கத்தோலிக்க வேதத்தில் இதனை இணைத்துள்ளனர்.


  •  சீகன் பால்கு ஐயர் அவர்கள் மரித்தப்பின் அவர் விட்டு சென்ற பழைய ஏற்பாட்டின் ஒரு சில ஆகமங்களை பெஞ்சமின் ஸ்கல்ட்ஸ் என்பவர் மொழிப்பெயர்த்து முடித்தார்.


* சீகன் பால்கு ஐயர் தமிழ்நாட்டில் உள்ள தரங்கம்பாடியில் தன் ஊழியங்களை செய்து, ஒரு சபையை கட்டியுள்ளார். அத்திருச்சபையில் இன்றும் ஆராதனை நடக்கிறது.


  •  ஜெர்மனியிலிருந்து வந்த மிஷினரியான சீகன் பால்கு ஐயர் என்பவர் தான் தமிழ் மொழியில் வேதத்தை மொழிப்பெயர்த்தவர்.


* 2இராஜாக்கள் 19-ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும் கொண்டுள்ளது.


  •  இயேசுவின் பிறப்பில் பரிசுகள் கொண்டு வந்த மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள்.


1. மெல்கொயர் – பரிசு பொன்.


2. காஸ்பர் – பரிசு வெள்ளை போளம்.


3. பால்தாஜர் – தூபவர்க்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.



*வேத பண்டிதர்கள்  சொல்கிறார்கள் இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவர்கள் பெயர்கள்..


1. திஸ்மாஸ்

2. கெஸ்டாஸ்

 என்று கண்டு பிடித்துள்ளனர்.



* வேதத்தில் நான்கு விதமான பிறப்பு உள்ளது .


1. மண்ணிலிருந்து ஆதாம்.

2. எலும்பிலிருந்து ஏவாள்.

3. தகப்பனும் தாயும் சேர்ந்து பிள்ளைகள்.

4. கன்னியின் மூலமாய் இயேசு கிறிஸ்து.



  •  மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அந்நூலின் ஆசிரியரான மாற்குதான் என்று பரம்பரையாக நம்பி வருகின்றனர்.


*சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.


*சாஸ்திரிகள் கிழக்கிலே கண்ட நட்சத்திரத்தை குறித்து 

மத்தேயு 2 –ம் அதிகாரத்தில் காண்கிறோம். இதே கால கட்டத்தில் வாழ்ந்த சீன (China) வானசாஸ்திரிகள் அப்படி ஒரு நட்சத்திரத்தை கண்டதாக குறிப்பு எழுதி வைத்துள்ளதை, சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.


  •  வேதத்தில் ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. 

(2 நாளா 20:7, ஏசா 41:8, யாத் 2:23)


*கலகம் செய்பவர்களுக்கு மட்டுமே சிலுவை மரணம் கொடுத்தனர். ரோமர் குடியுரிமை பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.


* நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.


  •  இயேசு கிறிஸ்துவின் உவமைகள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் வேதத்திலே மிக பழமையான மற்றும் முதலாவதாக வரும் உவமை நியாய 9:8-15-ல் உள்ள உவமையாகும்.


* தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.


  • யோர்தான் நதியின் உடைய மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.


  • * “தேவன்” என்கிற வார்த்தை எஸ்தர் மற்றும் உன்னதப்பாட்டு ஆகிய புத்தகங்களில் கிடையாது.


*தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா? “What hath God wrought?”

 Num 23:23 அதாவது “தேவன் என்னென்ன செய்தார்?”

 எண் 23:23.


  • *மோசே குழந்தையாக  இடப்பட்ட நைல் நதியின் மொத்த நீளம் 3218.6 கி.மீ ஆகும். இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.


  •  ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (தற்போதைய பெயர் யூப்பிரடிஸ்) என்னும் நதியின் மொத்த நீளம் 2880 கி.மீ.


*ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “இதெக்கேல்” என்னும் நதியின் நீளம் 1844.2 கி.மீ.


  • யோர்தான் நதி 3 முறை இரண்டாக பிரிந்தது


1. யோசு 4:7,19.


2. 2 இரா 2:8.


3. 2 இரா 2:13,14.


  • * வேதத்தில் சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக உயரமான மலை அரராத் மலை. இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.



*தங்கள் முகம் பிரகாசித்த 

3 பேர்கள்

1. மோசே – யாத் 35:28-30

2. இயேசு – மத் 17:2

3.ஸ்தேவான் – அப் 6:25; 7:55,56


*வேதாகமத்திலே 3 நபர்களுக்கு “இயேசு” என்னும் பெயர் இருக்கிறது.


1. நம்முடைய தேவன் இயேசு – மத் 1:21.

2. கள்ள தீர்க்கதரிசியான பர்யேசு – அப் 13:6.

3. யுஸ்து என்னப்பட்ட இயேசு – கொலோ 4:11.


  • * “அப்பா பிதாவே” என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முறை வருகிறது 

(மாற் 14:36, ரோம 8:15;

 கலா 4:6.


* லேவியராகமத்தில் “தேவனாகிய கர்த்தர்” என 21 தடவை வருகிறது.

(லேவி 11:44; 18:4,30; 19:3,4,10,25,31,34,36; 20:7,24; 23:22,43; 24:22; 25:17,38,55; 26:1,13,44.)


  • * யோபுவுக்கு 2 முறை 7 குமாரரும் 3 குமாரத்திகளும் பிறந்தார்கள் – யோபு 1:2, 42:13.


* ‘எலியா’ என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது


1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.

2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.

3. ஆரீமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:21.

4. ஏலாமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:26.


*ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வர வைத்தவர்கள் 

3 பேர்கள்

1. எலியா – 1 இராஜ 18:37,38.

2. தாவீது – 1 நாளா 21:25,26.

3. சாலொமோன் – 2 நாளா 7:1.


  • “ஜீவ விருட்சம்” என்ற வார்த்தை, வேதத்தில் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் 3 முறையும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தலில் 3 முறையும் வருகிறது. (ஆதி 2:9; 3:22,24. வெளி 2:7; 22:2, 14.)


* சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை கொண்டுள்ளது 

(சங் 15,70,93,100,125.)


  •  யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.


*  இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்த ஒரே பெண் நியாயாதிபதி தெபொராள் ஆகும் – (நியா 4:4.)


  • பேய் என்ற வார்த்தை பழைய ஏப்பாட்டில் 3 முறை வருகிறது –

( லேவி 17:7; உபா 32:17; 2 நாள 11:15.)


*3 விதமான கிறிஸ்துக்கள்


a. இயேசு கிறிஸ்துக்கள் – எபி 13:8

b. அநிதிக் கிறிஸ்து – 1 யோவான் 2:18,22

c. கள்ளக் கிறிஸ்துக்கள் – மத் 24:24; மாற் 13:22.



  • வேதத்தில் பாட்டு பாடின பெண்கள் மொத்தம் 5.


a. மிரியாம் – யாத் 15:20-22

b. தெபொராள் – நியா5:1-31

c. அன்னாள் – 1 சாமு 2:1-10

d. எலிசபெத் – லூக் 1:42-45.

e. மரியாள் – லூக் 1:45-55.


* தமிழ் புதிய ஏற்பாடு கி.பி

 1714 –ம் ஆண்டு தரங்கம்பாடியில் சீகன் பால்கு ஐயர் என்பவரால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.


  •  ஹென்றி பாவர் என்பவர் தலைமையில் முழுவேதாகமும் திருத்தப்பட்டு சரியான முறையில் அச்சடிக்கப்பட்டு கி.பி.1871-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது இன்று வரை அநேக தமிழ் கிறிஸ்தவர்களின் கரங்களில் தவழுவதும் இந்த மொழிப்பெயர்ப்பே.


* வேதம் கி.பி.1228-ம் ஆண்டு ஸ்டிபன் லாங்டன் என்பவரால் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.


  • * வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. 

(2 நாளா 20:7, ஏசா 41:8, யாக் 2:23).


 * கிரேக்க மொழியில் மொத்தம் 24 எழுத்துக்கள் உள்ளன. இதில் முதல் எழுத்து “அல்பா” கடைசி எழுத்து “ஒமேகா” ஆகும் (வெளி 1:8-ல் நம் தேவனின் நாமமும் இதுவே).


  • * நம்முடைய வேதாகமத்திலே மொத்தம் 1189 அதிகாரங்கள் உள்ளன. இதில் 1000-வது அதிகாரம் யோவான் எழுதின சுவிசேஷம் 3-ம் அதிகாரமாகும்.


 * சமீபத்தில் சவக்கடலிலிருந்து எடுக்கப்பட்ட வேதாகம தோல் சுருள்களில் 151,152,153 மற்றும் 154 ஆகிய 4 சங்கீதங்கள் அதிகமாய் உள்ளன.


  • * தற்போது இருக்கும் 150 சங்கீதங்களும் எஸ்றாவால் தொகுக்கப்பட்டவைகளாகும்.


* சங்கீதம் 119 –ல் ஒவ்வொரு 8 வசனங்களின் மேல் வரும் தலைப்புகளான ஆலேப், பேய்த் போன்றவைகள் எபிரேய மொழியில் உள்ள 22 எழுத்துக்கள் ஆகும்.


  • * புதிய ஏற்பாட்டில் மட்டும் சங்கீதங்களை 36 தடவை மேற்கோள் காட்டியுள்ளனர், ஆசிரியர்கள்.


* சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 223 பாவங்களை குறித்து படிக்கலாம்.


  • * சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 413 கட்டளைகளும் 97 வாக்குத்தத்தங்களும் 281 ஆசீர்வாதங்களும் உள்ளன.


* சங்கீத புத்தகத்தில் ஏறக்குறைய 160 வசனங்களை நிறைவேறின தீர்க்கதரிசனங்களும் ஏறக்குறைய 274 வசனங்களில் இனி நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்களும் உள்ளன.


  • * “சேலா “ என்கிற வார்த்தை வாத்தியங்களை ஒரு சில விநாடிகள் வாசிக்காமல் நிறுத்தவும், அந்த பாடல் வரியிலுள்ள கருத்துக்களை சில விநாடிகள் தியானிக்கவும் பயன் படுத்தப்படுகிறது.


 * பழைய ஏற்பாட்டில் நீளமான அதிகாரம் சங்கீதம் 119 புதிய ஏற்பாட்டில் லூக்கா 1….


  • ஒவ்வொரு 1½ நொடிக்கும் இரண்டு பரிசுத்த வேதாகமம் கொடுக்கப்படுகிறது


*ஒரு நிமிடத்தில் 80 பரிசுத்த வேதாகமம் கொடுக்கப்படுகிறது


  • ஒரு மணி நேரத்தில் 4,800 பரிசுத்த வேதாகமம் கொடுக்கப்படுகிறது 


*ஓர் நாளில் 1,152,000 பரிசுத்த வேதாகமம் கொடுக்கப்படுகிறது


  • ஓர் மாதத்தில் 35,712,000 பரிசுத்த வேதாகமம் கொடுக்கப்படுகிறது 


*ஓர் வருடத்தில் 4,28,544,000 பரிசுத்த வேதாகமம் கொடுக்கப்படுகிறது 


  • ஆங்கிலத்தில் மட்டும் ஓர் வருடத்தில் சுமார் 1 கோடி பரிசுத்த வேதாகமங்கள் புதிதாக அச்சிட படுகிறது. 


*பரிசுத்த வேதாகமம் சுமார் 

2,426 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது 


  • சுமார் 1,200க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பு நடந்துகொண்டிருக்கிறது

இது மொழிகள் சுமார் 95% உலக மக்கள்தொகையை உள்ளடக்கி உள்ளது 


  • சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட மொழிகளின் உருவ எழுத்துக்களை வேதாகம மொழிபெயர்போர் கண்டு பிடித்து உள்ளனர்,


*2,426 மொழிகளில் சுமார் 1,00,000 மேற்பட்ட தடவை புதிய பதிப்புகள் வந்துள்ளது 


  • ஆங்கிலத்தில் மட்டும் சுமார் 900 விதமான பதிப்புகள் வெளிவந்துள்ளது


*பரிசுத்த வேதாகமம் மட்டுமே 2000 வருடமாக உலகத்தில் அதிகமானோரால் படிக்கப்பட்டுள்ளது


  • 98% உலக நாடுகளில் உள்ள ஒரே புத்தகம் பரிசுத்த வேதாகமம் மட்டுமே.


*சுமார் 77% மொத்த உலக ஜனத்தொகை கைபேசியில் பரிசுத்த வேதாகமத்தை பதிவிறக்கம் (APPs) செய்துள்ளனர்


தொடரும்…..

Post a Comment

1 Comments