அறிந்து கொள்வோம் || பகுதி -103 || சிலுவையும் கள்ளர்களும்

அறிந்து கொள்வோம்

பகுதி -103


சிலுவையும் கள்ளர்கள்

இயேசுவின் சிலுவைக்கும் யூதாசுக்கும் எப்படி நெருங்கிய தொடர்புண்டோ. அதேப் போல கொல்கொதா மலைக்கும் இரண்டு கள்ளர்களுக்கும் நிறைய தொடர்புண்டு. அந்த இரண்டு காளர்களைக் குறித்து துணுக்குகளோடும். வசனங்களோடும், சிந்தித்து தியானப்போம்.

வலதுபுறத்துக் கள்ளன்:

(பெயர் – திஸ்மாஸ்)

1.லூக்கா 23:40 ஆக்கினையை அறிந்தவன். 

*செப் 3:15 -ஆக்கினையை அகற்றுவார்.

2.லூக்கா 23:40 -தேவனுக்குப் பயப்படுகிறவன். 

*அப் 10:22 கொர்நேலிலியு தேவனுக்குப் பயந்தவன்.

3.லூக்கா 23:41 -தக்கப் பலனைக் குறித்து அறிந்தவன். 

*வெளி 22:12 பலன் என்னோடே கூட வருகிறது.

4.லூக்கா 23:41 இயேசு தகாததை நடப்பிக்கவில்லை (இயேசுவை குறித்துச் சாட்சி சொன்னான்) 

*மத் 3:11- என்னிலும் வல்லமையுள்ளவர்.

5.லூக்கா 23:41 கடிந்துக்கொண்டான். (எச்சரித்தான்) 

*யோவான் 8:11 நீ போ இனிப்பாவம் செய்யாதே.

6.லூக்கா 23:42 ராஜ்யத்தில் நினைத்தருளும் (பரலோகத்துக்காக ஜெபித்தான்)

*மத் 10:32,33 இயேசுவை அறிக்கைச் செய்தான் பரலோகம் கிடைத்தது.



இடதுபுறத்துக் கள்ளன்:

 பெயர் – ஹெஸ்பாஸ்

1.லூக்கா 23:39 - இயேசுவை நீ என்றான். [இயேசுவை தன்னுடைய அடிமையைப் போல நினைத்தான்)  

*மத்தேயு 26:62 பிரதான ஆசாரியனும் இயேசுவை நீ என்றான்.

2.லூக்கா 23:39 கிறிஸ்துவானால் (இயேசுவோ என்று சந்தேகப்பட்டான்)

 *மத் 14:31 ஏன் சந்தேகப்பட்டாய்.

3.லூக்கா 23:39 உன்னையும் [இயேசுவை அவமரியாதை செய்தான்) 

*மத்தேயு 26:61 இவன் சொன்னான் என்றார்கள் (இயேசுவை)

4.லூக்கா 23:39 இரட்சித்துக்கொள் (இரட்சிப்பைக்குறித்தும் கிண்டல் செய்தான்) 

 அப் 16:17 குறிசொல்லுகிற பெண் பவுலையும் கிண்டல் பண்ணினாள்.

5.லூக்கா 23:39 இகழ்ந்தான் (இயேசுவைத் திட்டினான்) 

*மத்தேயு 26:74 பேதுருவும் இயேசுவைத் திட்டினான்.






Post a Comment

0 Comments