அறிந்து கொள்வோம்
பகுதி -103
சிலுவையும் கள்ளர்கள்
இயேசுவின் சிலுவைக்கும் யூதாசுக்கும் எப்படி நெருங்கிய தொடர்புண்டோ. அதேப் போல கொல்கொதா மலைக்கும் இரண்டு கள்ளர்களுக்கும் நிறைய தொடர்புண்டு. அந்த இரண்டு காளர்களைக் குறித்து துணுக்குகளோடும். வசனங்களோடும், சிந்தித்து தியானப்போம்.
வலதுபுறத்துக் கள்ளன்:
(பெயர் – திஸ்மாஸ்)
1.லூக்கா 23:40 ஆக்கினையை அறிந்தவன்.
*செப் 3:15 -ஆக்கினையை அகற்றுவார்.
2.லூக்கா 23:40 -தேவனுக்குப் பயப்படுகிறவன்.
*அப் 10:22 கொர்நேலிலியு தேவனுக்குப் பயந்தவன்.
3.லூக்கா 23:41 -தக்கப் பலனைக் குறித்து அறிந்தவன்.
*வெளி 22:12 பலன் என்னோடே கூட வருகிறது.
4.லூக்கா 23:41 இயேசு தகாததை நடப்பிக்கவில்லை (இயேசுவை குறித்துச் சாட்சி சொன்னான்)
*மத் 3:11- என்னிலும் வல்லமையுள்ளவர்.
5.லூக்கா 23:41 கடிந்துக்கொண்டான். (எச்சரித்தான்)
*யோவான் 8:11 நீ போ இனிப்பாவம் செய்யாதே.
6.லூக்கா 23:42 ராஜ்யத்தில் நினைத்தருளும் (பரலோகத்துக்காக ஜெபித்தான்)
*மத் 10:32,33 இயேசுவை அறிக்கைச் செய்தான் பரலோகம் கிடைத்தது.
இடதுபுறத்துக் கள்ளன்:
பெயர் – ஹெஸ்பாஸ்
1.லூக்கா 23:39 - இயேசுவை நீ என்றான். [இயேசுவை தன்னுடைய அடிமையைப் போல நினைத்தான்)
*மத்தேயு 26:62 பிரதான ஆசாரியனும் இயேசுவை நீ என்றான்.
2.லூக்கா 23:39 கிறிஸ்துவானால் (இயேசுவோ என்று சந்தேகப்பட்டான்)
*மத் 14:31 ஏன் சந்தேகப்பட்டாய்.
3.லூக்கா 23:39 உன்னையும் [இயேசுவை அவமரியாதை செய்தான்)
*மத்தேயு 26:61 இவன் சொன்னான் என்றார்கள் (இயேசுவை)
4.லூக்கா 23:39 இரட்சித்துக்கொள் (இரட்சிப்பைக்குறித்தும் கிண்டல் செய்தான்)
அப் 16:17 குறிசொல்லுகிற பெண் பவுலையும் கிண்டல் பண்ணினாள்.
5.லூக்கா 23:39 இகழ்ந்தான் (இயேசுவைத் திட்டினான்)
*மத்தேயு 26:74 பேதுருவும் இயேசுவைத் திட்டினான்.
0 Comments