அறிந்து கொள்வோம்
பகுதி - 106
சேஷ்டபுத்திரபாகம்
பரிசுத்த வேதாகமத்தில் சேஷ்டபுத்திரபாகத்தின் ஆசீர்வாதங்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதன் விவரம் வருமாறு:
1.குடும்ப சுதந்தரவீதம். (ஆதி 25:5)
2.குடும்ப தலைமை ஸ்தானம்.(ஆதி 24:65; ஆதி 25:5; ஆதி 27:29,37)
3.தகப்பனின் ஆசீர்வாதம் .(ஆதி 27:4, 27-38).
4.குடும்பத்தலைவரும், ஆசாரியரும் (ஆதி 26:25; ஆதி 35:3-7)
5.குடும்ப நிலங்கள் எல்லாவற்றிலும் விசேஷித்த சுதந்தரம் (ஆதி 25:5-6; ஆதி 27:28,37; ஆதி 28:4; ஆதி 35:12)
6.சந்ததி பலுகிப்பெருகுதல். (ஆதி 13:16; ஆதி 15:5; ஆதி 17:2,5; ஆதி 22:17; ஆதி 26:4,24; ஆதி 28:3,14; ஆதி 32:12; ஆதி 35:11)
7.விசேஷித்த பராமரிப்பு (ஆதி 12:2-3; ஆதி 26:3-4,24; ஆதி 27:28;ஆதி 28:15)
8.தனிப்பட்ட ஆசீர்வாதங்கள்.(ஆதி 12:2; ஆதி 22:17; ஆதி 26:3)
9.பெரிய பெயர் (ஆதி 12:2; ஆதி 27:28-29,37)
10.எல்லா தேசங்களுக்கும் ஆசீர்வாதம். (ஆதி 12:2-3; ஆதி 18:18; ஆதி 22:18; ஆதி 26:4; ஆதி 28:14)
11. நித்திய சுதந்தரம்(ஆதி 13:15; ஆதி 17:7-8)
12. ஆபிரகாமின் உடன்படிக்கையில் விசேஷித்த நபர். (ஆதி 17:7,19; ஆதி 26:3-4; ஆதி 28:4,13-15)
13.மேசியாவின் "தகப்பன்" (ஆதி 12:3; ஆதி 21:12; ஆதி 22:17; ஆதி 26:5; ஆதி 28:14; ரோமர் 9:7;)
14.பல தேசங்களுக்குத் தகப்பன். (ஆதி 17:5; ஆதி 18:18; ஆதி 35:11)
15.ராஜாக்களுக்கு தகப்பன். (ஆதி 17:6; ஆதி 35:11)
16.நித்திய இயற்கையான சந்ததி (ஆதி) 17:7-8,19; 2சாமு 7; ஏசா 9:6-7;ஏசா 59:21; லூக்கா 1:31-32)
17.விசேஷித்த தேவனாக யெகோவாவைப் பெற்றிருப்பது. (ஆதி 17:7-8; ஆதி 28:15; ஆதி 32:9,12)
18.விரோதிகள்மீது அதிகாரம். (ஆதி 22:17; ஆதி 27:29)
19.தேசங்களின்மீது தலைமை (ஆதி 27:29)
20.பொருளாதார ஆசீர்வாதங்கள்.(ஆதி 12:7; ஆதி 13:15; ஆதி 15:18; ஆதி 26:3-4; ஆதி 27:28-29,37; ஆதி 28:13; ஆதி 35:12)
21.ஆபிரகாமின் ஆவிக்குரிய ஆசீர்வாதம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல். (ஆதி) 28:4; ரோமர் 4; கலா 3:14)
22.விரோதிகள்மீது சாபம். (ஆதி 12:3; ஆதி 27:29)
🔯மூத்தவனுக்குச் சேஷ்டபுத்திரபாகத்து ஆசீர்வாதங்கள் கொடுக்கப்படுவதினால் அவனுடைய மற்ற சகோதரர்கள் அவன்மீது பொறாமைபடுவதற்கு வாய்ப்புள்ளது.
🔯மூத்தவனுக்கு இரட்டிப்பான சுதந்தரவீதம் கிடைக்கும். (உபா 21:15-17).
🔯சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போடலாம். (ஆதி 25:29-34; ஆதி 27:36; எபி 12:16; ரோமர் 9:12-13)
🔯மூத்தவனுடைய பாவத்தின்நிமித்தமாக சேஷ்டபுத்திரபாகம் மாற்றப்படும். (1நாளா 5:1-2) அல்லது தேவன் அதை நிறுத்தி வைப்பார். (ஆதி 25:23; ஆதி 48:15-20; 1இராஜா 2:15; 1நாளா 26:10).
ஆனால் ஏசாவோ, “”இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு"(ஆதி 25:32) என்று சொல்லிவிடுகிறான்.
0 Comments