தீர்வை, வரி. அறிந்து கொள்வோம் பகுதி - 66

 அறிந்து கொள்வோம்

பகுதி - 66


தீர்வை, வரி.


பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ராஜாக்களுக்கு வருமானம் இப்படி கிடைத்தது.


1.யுத்தத்தில் ஜெயித்த ராஜாக்களிடத்திலிருந்து வாங்கும் கப்பம். - 2 நாளா.17:11.


2.வியாபாரிகள் கொடுக்கும் ஆயம். சாமான்களுக்கு வாங்க பட்ட வாரி.இதை ஆயக்காரன் மக்களிடம் வாங்குவார்கள்.


3.பிரஜைகள் செலுத்தும் பல வரிகள். (தானி.11:20;

எஸ்4:13. தீர்வை சகாயம். எஸ்தர் 2:18)


4.ஜனங்கள் பல தடவைகளில் செய்யும் அமஞ்சி வேலை. (1 இரா.5:13, 9;21, 10:14; 2 இரா.23:33; எஸ்றா 4:13, 7:24).


புதிய ஏற்பாட்டுக்காலத்தில் ஜனங்கள் கொடுக்க வேண்டிய வரிகள் பல  இருந்தது.


  • Telos.தெலாஸ்


ரோமர்கள் ஒவ்வொரு நாட்டிலும் பட்டணத்திலும் வியாபாரிகள் கொண்டு வந்த வர்த்தகத்தின்மேல் வரி வசூலிக்கும்படிக்கு ஆயக்காரரை  ஏற்படுத்தியிருந்தார்கள். கலிலேயா நாட்டில் இந்த வரி ஏரோது ராஜாவுக்குக் கொடுக்கப்படும். இந்த வரிக்குத் 'தீர்வை' என்னும் பெயர் சொல்லப்பட்டிருக்கிறது. மத்.9:9, 17:25; ரோம.13:7.


  • Phoros. பாராஸ்


இது இத்தேசத்துத் தீர்வை வரி போலவே  நிலத்தீர்வை. ரோமராயனுக்குக் கொடுக்கப்பட்ட இந்தத் தீர்வைக்கு வரி என்று சொல்லலாம். ரோ.13:7.


  • கென்சாஸ். தலைவரி.


(மத். 17:25, 22:17; மாற்.12:14).இதுவும் ரோமராயனுக்குச் செலுத்தப் பட்டது. இதற்காகத்தான் வரிக்காசைக் கொடுக்க வேண்டும். இதற்கு 'வரி' என்றே பெயர்.


  • Didrachmon. டிடிராக்மொன்

(மத்.17:24- ல் சொன்ன இந்த 'வரிப்பணம்' எருசலேம் தேவாலயத்து தேவஸ்தானத்துக்கு ஒவ்வொரு இஸ்ரவேலனும் வருடந்தோறும் செலுத்தவேண்டிய அரைச் சேக்கல்.- 'ஸ்தாத்திரயநாணயம்' 

யாத்.30:13.

இது ரோமர்களால் ஏற்படுத்தப்படாமல், யூதர்களே ஏற்படுத்திக்கொண்ட ஒரு தலை வரி.


மேற்கூறிய இவ்வரிகளைத்தவிர பல நாட்டிலும் ஊர்களிலும் வேறு விதமான வரிகளும் இருந்தன…..


Post a Comment

0 Comments