Friday, 23 July 2021

மெத்தூசலா அறிந்து கொள்வோம் பகுதி - 65

 அறிந்து கொள்வோம்


பகுதி - 65


மெத்தூசலா


மெத்தூசலா என்றால்

“ஈட்டியின் மனிதன்” என்றும்

"இவனுடைய மரணம் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவரும்" என்றும் இந்த பெயருக்கு அர்த்தம் சொல்லுகிறார்கள்.


மெத்தூசலா இதுவரை வாழ்ந்தவர்களிலேயே நீண்ட காலம் உயிர் வாழ்ந்தவன். இவன் தன்னுடைய 969ஆம் வயதில் மரித்தான் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது.

(ஆதி. 5:21-27; 1 நாளா. 1:3; லூக்கா 4:37).


  • இந்த மெத்தூசலா ஏனோக்கின் குமாரன், லாமேக்கின் தகப்பன், நோவாவின் பாட்டனார்.


  • இவனுடைய தகப்பனாகிய ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்து மரிக்காமல் நேரடியாக எடுத்து கொள்ளப்பட்டான் என்றும் பார்க்கிறோம். இவன்

ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான் என்று யூதா 1:14, 15 வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.


  • இந்த ஏனோக்கு ஒரு  தீர்க்கதரிசியாக இருந்தபடியால் தனது குமாரனுக்கு "மெத்தூசலா" என்று பெயரிட்டு, அவனுடைய மரணத்துக்குப் பிறகு தேவனுடைய நியாயத்தீர்ப்பு வரும் என்று முன்னறவித்தான் என்றும் சிலர்  விளக்குகிறார்கள்.


  • மெத்தூசலா ஜலப்பிரளயம் உண்டகும்  முன்பு அதே வருடத்தில் மரித்திருக்க வேண்டும்.


  • யூதா பாரம்பரியத்தின் இவன் உலகம் சிருஷ்டிக்கப்பட்ட பிறகு 1656ஆம் ஆண்டு செஷ்வான் மாதம் 11ஆம் நாளில் மரித்தான் என்று நம்பப்படுகிறது.

ஜலப்பிரளயத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக இவன் மரித்து இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.


ஜலப்பிரளயத்துக்குப் பிறகு மனிதனின் சராசரி வாழ்நாட்கள் குறைந்து விட்டது என்பது நமக்கு நன்கு அறியப்பட்ட விஷயம்……,






No comments:

Post a Comment

காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) // விழிப்புணர்வு பதிவு

ஒரு விழிப்புணர்வு பதிவு    காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño)   காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) என்பது உலகையே அச்சுறுத்தும் ஒரு ...