அறிந்து கொள்வோம்
பகுதி -26
பாசான்
(Bashan)
பாசான் கலிலேயாக் கடலுக்குக் கிழக்கே இருக்கும் ஒரு நாடு. இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலிருந்து வரும் போது,
ஓகூ என்பவன் அந்த பச்சானுக்கு ராஜாவாய் இருந்தான்.
(எண்.21:33;உபா.29:7)
யோர்தானுக்கு கிழக்கே இருக்கிற மனாசேயின் பாதிக் கோத்திரத் துக்குப் பாசான் தேசம் பங்கிடப்பட்டு இருந்தது.
இதில் இரண்டு ஊர்கள் லேவியர்களின் அடைக்கல பட்டிணமாய் கொடுக்கப்பட்டது. (யோசு.21:27)
சீரிய ராஜாவாகிய ஆசகேல்
ஏகூ இஸ்ரவேலின் ராஜாவாக இருந்த காலத்தில் இந்த பாசான் தேசத்தைப் பாழாக்கினான்.
(2 இரா.10:32-33)
இந்தத் பாசான் தேசம் உயர்ந்த மலையின் மேல் இருந்தது. சங்.68:15.
பாசான் தேசத்தில் உள்ள கர்வாலி மரங்கள் மிகப் பெரிதாய் இருந்தது.
(ஏசா.2:13; எசே.27:6; சக.11:2).
இங்கு வளரும் மாடுகளும், வெள்ளாட்டுக்கடாக்களும் பெரியவைகளாய் இருந்தன.
உபா.32:14; எசே.39:18.
பாசானிலுள்ள எருதுகள் கொடூரத்துக்கும் அநியாயத் துக்கும் உவமைகள்.
சங்.22:12. ஆமோஸ்.4:1.
பாசானில் உள்ள அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றாகிய கோலான் ஒரு விசேஷித்த ஊர்.
உபா.4:42-43.
2 Comments
Thank you for sharing
ReplyDeleteWelcome Ayya
Delete